Ashwarooda Devi (T)

அஸ்வாரூடா தேவி என்பவள் பார்வதியின் சக்தியான திரிபுரசுந்தரி தேவியின் சக்தியில் இருந்து வெளியான தேவி ஆவாள். அஸ்வாரூடா தேவி எதற்காக படைக்கப்பட்டாள்? ஒருமுறை தனது தந்தை தக்ஷன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட பார்வதி தேவி அங்கு அவரால் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொண்டாள். இறந்து விட்ட மனைவியின் உடலை தனது தோளில் சுமந்துகொண்டு உலகெங்கும் கோபத்துடன் சுற்றி ஒடத் துவங்கிய சிவபெருமானின் கோபத்தை தணிக்க எண்ணிய மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தினால் சிவபெருமானின் தோளில் இறந்து கிடந்த பார்வதியின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீழ்த்த, அவள் உடலின் பாகங்கள் உலகெங்கிலும் பல இடங்களில் விழுந்தது. பின்னர் அவள் உடலின் பாகங்கள் விழுந்த இடங்களில் பார்வதிக்கு ஆலயங்கள் எழும்ப, அந்த ஆலயங்கள் சக்தி பீடங்களாயிற்று. அதனால் கோபம் தணிந்த சிவபெருமான் மீண்டும் தவத்தில் அமர்ந்து விட்டார். அதே நேரத்தில் விதியினால் ஏற்பட்டு இருந்த இந்த நிலை முடிவுற்றதும் தனது கணவருடன் மீண்டும் சேர வேண்டும் என்று எண்ணிய பார்வதியின் ஆத்மாவும் ஹிமயமலையில் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டது. இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டு இருந...