Lord Yama- God of Death- Tamil

akjHkuh[h; rhe;jpg;gphpah நீதியைக் காக்கும் கடவுள், நியாயத்தைத் தரும் கடவுள் அல்லது மரணத்தின் கடவுள் என்று யம தருமராஜரைக் குறித்துக் கூறுவார்கள். கருமை நிறத்துடன் பயங்கரமான உருவைக் கொண்டவரே யமன் ஆவார். அவருக்கு வேத காலத்தில் ஆலயங்களில் ஆராதனை இருந்ததில்லை என்பார்கள் என்றாலும் இறந்தவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில ஆலயங்களில் யமராஜனுக்கு வழிபாடு செய்வார்கள். வேத நம்பிக்கையின்படி இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட போது முதன் முதலில் மரணம் அடைந்தவர் யமராஜன் என்பதினால் அவரையே இறந்தவர்களைக் காக்கும் பொறுப்பிற்கான அதிபதியாக நியமித்தார்கள் என்பதான கதை உள்ளது. ஆனால் தேவலோகத்தில் மரணம் சம்பவிப்பது நம்பமுடியாத கூற்றல்லவா என்பதினால் வேத பண்டிதர்களின் கூற்றின்படி யமன் இறந்ததாக கூறப்படுவது மனிதர்கள் இறப்பது போன்ற நிலை அல்ல என்றும், தமது சாந்தமான தேவலோக உடலை அகோர உருவமாக மாற்றிக் கொண்ட நிலை என்பார்கள். இந்த நிலை பூமியிலே மனித இயக்கங்கள் துவங்குவதற்கு முன்னர் ஏற்பட்டது என்று கூறுகிறார்கள். புராணங்களின் கூற்றின்படி மூன்று யுகங்கள் யமன் ...