Village Deities and Bhootha worship (Tamil)

காலம் காலமாக இந்தியாவின் பல கிராமங்களிலும் உள்ள கிராம மக்கள் கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பல்வேறு பூதங்களை வழிபாடு செய்தவண்ணம் இருக்கிறார்கள். கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பல்வேறு பூதங்களுக்கு தம் மீது உள்ள கோபம் காரணமாக தமது சக்திகளை கொண்டு அவை அதி பயங்கரமான நோய் நொடிகளை பரப்பி, அகால மரணங்களை நிகழ்த்தி, குடும்பங்களின் ஒற்றுமையை சிதைத்து கிராமத்தில் நிம்மதியை அழிக்க முயலும் என மக்கள் நம்பியதினால் அவற்றின் சீற்றங்களை தணிப்பதற்கு அவைகளை ஆராதித்து வழிபடுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களில் பெரும்பான்மையோர் வேளாண்மை மற்றும் கைத்தொழில்களில் ஈடுபட்டு கிராமங்களில் வசிக்கும் சமூகத்தினர் ஆவர். ஆனால் இப்படிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பூதங்களை வழிபடுவது இந்திய கிராமங்களில் மட்டுமே நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்ல, இப்படிப்பட்ட நம்பிக்கைகள் வனப் பிரதேசங்களையும், மலைப் பகுதி வாழ் மக்களையும் அதிகம் கொண்டுள்ள ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் சில இடங்களில் உள்ளன என்பதே உண்மை நிலை ஆகும். காலமாக இருந்து வரும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான இப்படிப்பட்ட வழிபாட்டு முறை...