Raghuvamsam- 2
   ரகுவம்சம்-2   - சாந்திப்பிரியா -             அதைக்  கேட்ட திலீபனும் தான் தெரியாமல் செய்து விட்ட தவறை எண்ணி வருந்தினார்.    'குருவே, அந்த சாபம் விலக நான் இப்போது என்ன செய்ய வேண்டும். எனக்கு  நீங்கள்தான் வழிகாட்டி உதவ வேண்டும்' என்று கேட்க  வசிஷ்ட முனிவர் கூறினார்  ' திலீபா, அந்த சாபம் விலக வேண்டும் எனில் நீ செய்ய வேண்டியது அந்த  காமதேனு பசுவின் கோபத்தைக் குறைப்பதுதான். ஆனால் இப்போது அந்த காமதேனுப்  பசுவும் தேவலோகத்தில் இல்லை.  அது வருண பகவான்  செய்யும் ஒரு யாகத்தில்  கலந்து கொள்ள பாதாளத்துக்கு சென்றுள்ளது. இப்போது அதன் மகளான,  சின்னக்  கன்றுக் குட்டியாக உள்ள நந்தி எனும்  பசு தாய் காவல் இன்றி அங்கும்  இங்கும் அலைந்தவாறு  தனியாக தேவலோகத்தில் தவித்தபடி உள்ளது.  ஆகவே நீ  தேவலோகத்துக்கு கிளம்பிச் சென்று காமதேனுப் பசு திரும்பி வரும்வரை அதன்  கன்றான  நந்தினிக்கு  சேவை செய்து  கொண்டு அதற்கு பாதுகாப்பாக இருந்து  வரவேண்டும். அப்போது காமதேனு பசு வந்து  அந்தக் காட்சியை  கண்டு மனம்  மகிழ்ந்து உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரியும்.  ஆகவே  உடனடியாக நீ தேவலோகத்துக்க...