இடுகைகள்

Neelamadhava-Puri Jagannathar - 2

படம்
2 இதற்கிடையில் வடக்கு நோக்கி சென்று கொண்டு நீலமாதவாவை தேடி அலைந்த வித்யாபதி, 'நீலாத்ராரி' எனும் மலைப் பகுதியை அடைந்தார். அங்கு சென்று மலை அடிவாரத்தில் தங்கியவர் மேல் பகுதி மலை மீது வினோதமான காட்சியில் இருந்த மக்களை காண நேரிட்டது. அவர்கள் அனைவருக்கும் நான்கு கைகள் இருந்தன. ஒரு கையில் சங்கு, இன்னொன்றில் சக்கரம், மூன்றாவதில் தாமரை மலர் மற்றும் நான்காவதில் கதை போன்றவை இருந்தன. அதில் இருந்தே அவர்கள் வைஷ்ணவர்கள் என்பதும் தெரிந்தது. தாம் ஒருவேளை நீல மாதவா தங்கி உள்ள தேவலோகத்தில் நுழைந்து விட்டோமா என்று எண்ணியபடி மலை மீது ஏறி செல்லத் துவங்கினார். நேரம் ஆக ஆக பசியாலும் தாகத்தினாலும் களைத்துப் போன அவர் சென்ற வழியில் விஸ்வாசு என்பவரை சந்திக்க நேரிட்டது. வித்யாபதியின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட விஸ்வாசு அவர் வந்த நோக்கத்தைக் கேள்விப்பட்ட பின், தானும் நீல மாதவாவை குறித்துக் கேள்விப்பட்டு உள்ளதாகவும், ஆகவே தன்னுடன் வந்து தன் வீட்டில் தங்கி இருந்து கொண்டு நீல மாதவாவை தேடுமாறும், அவருக்கு ப்ராப்தம் இருந்தால் நீல மாதவாவை அவர் சந்திக்க முடியும் என்றும் கூறி விட்டு அவரை தனது வீட்டுக்கு அழ...

Neelamadhava-Puri Jagannathar - 1

படம்
1 எந்த ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள மூல தெய்வங்களின் சிலைகளை எந்த காரணத்தைக் கொண்டும் மாற்றி அமைக்க மாட்டார்கள். தினமும் செய்யப்படும் பூஜைகள் மற்றும் மந்திர ஒலிகளினால் மேலும் மேலும் அந்த சிலைகளுக்கு சக்தி ஏறுகிறது என்பது ஐதீகம். கற்சிலைகளையோ அல்லது உலோகங்களினால் செய்யப்பட்ட சிலைகளையோ மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏன் என்றால் இயற்கையின் காரணத்தால் அவை உடைந்து அல்லது பழுதடைந்து போகலாமே தவிர அவை அழிவது இல்லை. அதனால்தான் ஆலயங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் கும்பாபிஷேக விழாவில் ஹோமங்கள் வளர்த்து, மந்திரங்கள் ஓதி ஆலய சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் செய்து ஏற்கனவே உள்ள சிலைக்கு மேலும் சக்தியூட்டுவார்கள். விக்ரகங்களை பீடத்தில் ஸ்திரமாக வைக்க, பீடத்துக்கும் விக்ரகத்துக்கும் இடையில் உள்ள பகுதியில் அஷ்டபந்தனம் அதாவது கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதி லிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டு வகை மருந்துகள் கலந்த கலவையைச் சாற்றுவது வழக்கம். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டு வகை மருந்துகளை பூசுவத...

கூந்தலூர் முருகன்

படம்
சாந்திப்பிரியா   சென்னையில் இருந்து மாயவரம் மற்றும் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது பூந்தோட்டம்.  அதன் அருகில் உள்ளதே கூந்தலூர் எனும் சிறு கிராமம். கும்பகோணத்துக்கு தென் கிழக்கே சுமார் 10 அல்லது 12 கிலோ தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளது கூந்தலூர் ஆலயம். நாச்சியார் கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் சாலையில் சென்றோ அல்லது நாச்சியார் கோவிலில் இருந்து 10 கி.மீ தொலைவு பயணித்தோ இங்கு செல்லலாம். சென்னையில் இருந்து மாயவரம் செல்லும் பல பேருந்துகள் கூந்தலூர் வழியே செல்கின்றன. கூந்தலூரில் உள்ள ஆயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான முருகன் ஆலயம் இது ஆகும்.  சனி மற்றும் செவ்வாய் கிரக தோஷங்களை நிவர்த்திக் கொள்ளும் பரிகாரத் தலம் இது. அருணகிரிணாதர் பாடியது போல 'சிலம்பு ஏந்தி, காலிலும் கையிலும் சலங்கையும் தண்டையும் கட்டி, வலிமையான தோளுடன் காட்சி தரும் முருகப் பெருமான் என் முன்  நின்றிருந்தால், நாளோ, பூர்வ ஜென்ம வினையோ அல்லது  கோளின் (கிரஹம்) தாக்கமோ, எதுதான் என்னை என்ன செய்ய முடியும்' என்று கூறியதைப் போல சனி பகவானின் கிரக தோஷங்களும்...

கீழ்சூரியமூலை- சூர்யகோடீஸ்வரர்

படம்
-சாந்திப்பிரியா- கும்பகோணத்தின் அருகில் உள்ள கஞ்சனூருக்கு அருகில் உள்ளது கீழச்சூரியமூலை என்றொரு சிற்றூர். அங்குள்ள சூர்ய கோடீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த ஆலயம் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் சூரிய பகவான் தினமும் காலை முதல் மாலைவரை சிவபெருமானை வணங்கித் துதிப்பதாக ஐதீகம் உள்ளது.  அப்படி துதிப்பதின் மூலமே சூரிய  ஒளிக்கதிர் சக்தி குறையாமல் கிடைப்பதாகவும் ஐதீகமுள்ளதாம். இந்த ஆலயத்தின் புராணக் கதை என்ன? உலகில் உள்ள அனைவரும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசனம் செய்து பல பயன்களை அடைகிறார்களே, ஆனால் தன்னால் மட்டும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் சூரிய பகவானுக்கு ஏற்பட அவர் தன்னுடைய சீடரும் மாமுனிவருமான யாக்கியவல்லவரிடம் தனது மன வருத்தத்தையும் வேதனையையும் எடுத்துரைத்தார்.  அதைக் கேட்டு வேதனை அடைந்த அந்த மாமுனிவரும், அவருக்கு ஆறுதல் கூறி விட்டு, சூரிய பகவானுக்காக தானே சிவபெருமானை வழிபட்டு அதன் மூலம் சூரியனுக்கு   தன்னால் ஆன உதவியை செய்வதாக வாக்குறுதி கொடுத்தப் பின் தினமும் சிவபெருமானின் சன்...