இடுகைகள்

Lakshmi Hayagreevar Pooja

படம்
கோயம்பத்தூர் மருதமலை சாலை நவாவூர் பிரிவு அருகில் உள்ள பாலாஜி நகரில் செயல்பட்டு வருவது 'ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சாரிடபள் டிரஸ்ட்' என்பதாகும். இந்த டிரஸ்ட் வேத பாட சாலை ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தில் அவர்கள் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவருக்கு சன்னதி அமைத்து அதில் மூலவரின் சிலை ஒன்றை நிர்மாணிக்க உள்ளார்கள்.  இந்த டிரஸ்டுக்கு சிருங்கேரி சாரதா பீடம், காஞ்சி மடம் மற்றும் தத்தாத்திரேயரின் வழித்தோன்றலான அவதூதரான ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் பாததுளி ஸ்ரீ துர்கா பிரசாத் ஆனந்த ஸ்வாமிகள் போன்றவர்களின் அருளாசியும் உண்டு. இந்த வேத பாடசாலையில் கல்வி, கேள்வி, ஞானம் மற்றும் செல்வத்தை அள்ளித் தரும் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் பஞ்சலோக விக்ரகம் உள்ளது. இங்குள்ள ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தை அவதூதரான ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் நிறுவியதாக கூறுகிறார்கள். அவருடைய சமாதி சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில்  உள்ளது. இதே  டிரஸ்டின்  நிர்வாகத்தில் உள்ள புவனேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிலையையும் பிரதிஷ்டை செய்ய உள்ளார்கள்.  தற்போது டிரஸ்ட் அலுவலகத்தில்...

Tree Worship

படம்
  முன் காலத்தில் மக்கள் இயற்கையை கடவுளாக பாவித்து வழிபட்டு வந்துள்ளார்கள்.  நீர், நெருப்பு ஆகாயம் என அனைத்தையும் இறைவீகமாகவே கருதியவர்கள் ஆலயங்களில் காணப்பட்ட ஸ்தல விருட்ஷங்களையும் கடவுளின் அவதாரங்களாகவே கருதி ஆலயங்களில் அந்த மரங்களை வழிபட்டு வந்துள்ளார்கள். அதன் காரணம் ஒவ்வொரு ஆலயத்துக்கும் அதிகாரபூர்வமாக  ஒரு ஸ்தல விருஷம் இருந்துள்ளது என்பதினால் அந்தந்த தல விருட்ஷங்கள் அங்குள்ள தெய்வத்துடன் சம்மந்தப்பட்டதாக இருந்துள்ளது என்ற நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தது. இதுவே பின் காலத்தில் இயற்கை வழிபாடு என  உருமாறியது. ''ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள தலவிருட்ச மரங்களின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், உச்சிப் பகுதியில் சிவன் என மும்மூர்த்திகளும் குடியிருப்பர். அதன் கிளைகளிலும் இலைகளிலும் அவர்களால் படைக்கப்பட்ட தேவ, தேவதைகள் வசிக்கின்றனர். தெய்வங்கள் அந்த மரத்தில் காலைப் பொழுதில் தங்கி இருக்கின்றனர். மாலைப் பொழுதில் அவர்கள் சென்ற பின் சித்தர்களும், யட்சர்களும் அதில் வந்து தங்கிடுவர்'' என்கிறது  கருடபுராணம். மர வழிபாட...