இடுகைகள்

Mathura Kali Amman

படம்
2012 ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை திரு பாலசுப்ரமணியன் என்பவர் எழுதி உள்ள புது செய்திகளுடன் மீண்டும் வெளியிடப்படுகிறது    மதுர காளி அம்மன் சாந்திப்பிரியா   (படம் நன்றி: http://drlsravi.blogspot.com/2010/07/siruvachur-madura-kaliamman-and.html )  திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு தெற்குப் பகுதியில் உள்ள சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் மதுர காளி அம்மன் ஆலயம். சென்னையில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம். இது காஞ்சி பரமச்சாரியாளான ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகளின் குலதெய்வம் என்கிறார்கள்.  இந்த ஆலயம் உள்ள இடத்தின் மலையின் பெயர் மதிர மலை என்பார்கள். இந்த ஆலயத்தில் உள்ள காளி தேவி ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பஸ்வாமி என்ற இரண்டு காவல் தேவதைகளுடன் இந்த ஊரைக் காத்து வருவதான ஐதீகம் உள்ளது. ஆலயத்தின் தல விருஷம் மதுர மரம். ஆலயம் 1000 அல்லது 1500 வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள். இந்த ஆலயம் குறித்து பல சுவையானக் கதைகள் உள்ளன . ஆனால் அவற்றுக்கு ஆதாரம் இல்லை என்றாலும் வாய்மொழிக் கதை...

Pachchaiyamman temple, Tiruvannamalai

படம்
-சாந்திப்பிரியா- பச்சையம்மன்  திருவண்ணாமலையில் புறநகர் பகுதியில் உள்ள பச்சையம்மன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். பல இடங்களில் உள்ள முக்கியமாக முருகனும் வள்ளி தேவியும் உள்ள ஆலயங்களிலும் பார்வதி தேவி பச்சையம்மனாக வழிபடப்படுகிறார். அது போலவேதான் இந்த ஆலயத்திலும் பார்வதி தேவியை பச்சையம்மனாக வழிபடுகிறார்கள். அவளது சிலை சுதை ஓவிய வடிவில் அமைந்துள்ளது. சுதை ஓவியம் என்பது சுண்ணாம்புக் கலவையை காரைப்பூச்சு போல சுவர் மீது பூசி  அதன் மீது ஓவியம் வரைவதைக்  குறிக்கும்.  சுதை சிற்பங்கள் எனப்படும் சுண்ணாம்புக் காரை பூச்சு மீது உருவாக்கப்பட்ட ஆலய சிற்பங்கள் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பழக்கத்தில் இருந்துள்ளது. அந்தக் கலவையைக் கொண்டு வண்ண ஓவியம் வரைவது எளிதல்ல. அவற்றின்  நிறம் காலப்போக்கில் சற்று மங்கலாகுமே தவிர சிற்பங்கள் எளிதில் பழுதடைவது  இல்லை. இந்த ஆலயத்தைக் குறித்து இரண்டு கருத்துக்கள் உள்ளன. முன் காலத்தில் இது அந்த கிராமத்துக்கு காவலாக இருந்த கிராம தேவதை வழிபாட்டுத் தலமாக அமைந்து இருந்தது என்றும்,...

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 13

படம்
  --சாந்திப்பிரியா -- 13 (-37)   ஒருவருடைய தந்தை மரணம் அடைந்து விட்டார். அதனால் அவரது மகன்களுக்கும் மகளுக்கும்  பத்து நாள் தீட்டு வந்துள்ளது. அப்போது பத்து நாட்களுக்குள் அவர்களது தாயாரும் மரணம் அடைந்து விட்டால்  அவர்களுக்கு மொத்தம் எத்தனை நாள் தீட்டு உண்டு? சாதாரணமாக தந்தை இறந்து பத்து நாட்களுக்குள் தாயார் இறந்து விட்டால் தந்தைக்காக அனுஷ்டிக்கும் தீட்டுக் காலமான பத்து நாட்களுக்கு மேல் தாயார் மரணத்துக்காக ஒன்றரை நாள் தீட்டு உண்டு. அதாவது தாயார் இரவில் இறந்து விட்டால் பத்து நாட்களுக்கு மேல் இரண்டு இரவு மற்றும் ஒரு பகல் அல்லது  தாயார் பகலில் இறந்து விட்டால்  இரண்டு பகல் மற்றும் ஒரு இரவு தீட்டு உண்டு. அதாவது 13 ஆம் நாள் சுபஸ்வீகாரத்தோடு இரண்டு தீட்டும் போய் விடும். இது பொது முறை என்றாலும் இது குறித்து  வீட்டில்  சடங்கு செய்யும் சாஸ்திரிகளிடம் கேட்டு அவர் கூறுவது போல செய்ய வேண்டும். ஆனால் தாயார்  இறந்து பத்து நாட்களுக்குள் தந்தை  இறந்து விட்டால் சாதாரணமாக தாயாருக்காக  அனுஷ்டிக்கும் தீட்டுக...

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 12

படம்
  --சாந்திப்பிரியா -- 12 (-23) அடுத்த கேள்வி, இரவு நேரத்தில் ஒருவர் இறந்து விட்டால் அந்த குடும்பத்தினருக்கு தீட்டுக் காலம் எப்போது துவங்கும் என்பதாகும்? சாஸ்திரங்களின்படி சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகைகளுக்கு முன்னர் ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்தது முதல் நாள் கணக்கில் அடங்கும். சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகை என்பது பூமியில்  இரவு 1 மணி 30 நிமிடத்தைக் குறிக்குமாம். ஆகவே ஒரு குடும்பத்தில் இரவு 1.30 மணி வரை நேரத்தில் யாராவது இறந்து விட்டால் அவரது மரணம் முதல் நாளைய கணக்கில் சேரும். 1.30 மணிக்கு மேல் இறந்தால் மறுநாள் கணக்கில் சேருமாம். பூமியில் மறுநாள் விடியற்காலை என்பது இரவு 12 மணிக்கு  பிறப்பதாக நாம் கணக்கிடுகிறோம் என்றாலும், சாஸ்திரங்களின்படி பூமியில் இரவு 12 மணி ஆகும்போது தேவலோகத்தில் அப்போதைய நேரம் இரவு 11.50 ஆக இருக்குமாம். ஆகவே தேவலோகத்தில் இரவு 12 மணியாக இருக்கும்போது பூமியில் அப்பொழுதைய நேரம் 1.30 மணியாகும். தேவலோகக் கணக்கின்படி காலை ஆறு மணி என்பது தேவலோகத்தில் விடியற்காலை 4 மணி 30 நிமிடமாகுமாம். அப்போது அங...

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 11

படம்
  --சாந்திப்பிரியா -- 11   (-19) எந்த ஒரு தீட்டுக் காலமும் காலை 8 மணி 24 நிமிடங்களில் இருந்துதான் விலகும் என்கிறது சாஸ்திரம். அதற்கு மேல்தான் தீட்டு விலகும் என்பதினால் தீட்டை விலக்கிக் கொள்ள காலையில் 8 மணி 24 நிமிடங்களுக்குப் பிறகுதான் குளிக்க வேண்டும், அதற்கு முன்னால் குளித்தால் தீட்டு விலகியதாக எடுத்துக் கொள்ள முடியாது, அது தொடரும் என்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் இதை நடைமுறையில் வைத்திருக்க முடியவில்லை என்பதினால் விடியற்காலை ஐந்து மணிக்கு மேல் குளிப்பதில் தோஷம் இல்லை என்பதாக பண்டிதர்கள் கூறுவார்கள். ஆகவே இது விஞ்ஞான அடிப்படையில் எழுந்துள்ள நியதி அல்ல, ஓரளவிற்கு ஆன்மிகம் மற்றும் தர்ம நெறி முறைகளின் அடிப்படையில் அமைந்ததே என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். (-20)  அது சரி, 8 மணி 24 நிமிடங்கள் என்பது என்ன கணக்கு என்ற கேள்வி எழலாம்?  இந்த நேரம் மிக முக்கியமானது. அதை புரிந்து  கொள்ள முதலில் இவற்றை படியுங்கள்.  சாஸ்திரங்களின்படி ஒரு நாள் என்பது அறுபது நாழிகை ஆகும். அதில் பகல் நேரம் 30 நாழிகை கொண்டதாகவும், இரவு நேரம் 30 நாழிகையையும் கொண்டதா...