இடுகைகள்

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 7

படம்
  --சாந்திப்பிரியா -- 7 103)  முதல் நாள் முதல் ஒன்பது   நாள் வரையிலான சடங்குகள்  சஞ்சயனம்:-  தகனத்தைத் தொடர்வது சஞ்சயனம் என்பது. சஞ்சயனம் என்பது இறந்தவர்களின் எரிந்து போன சரீரத்தின் எலும்பு பாகங்களை  எடுத்து வந்து அதை பால் நிரப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிநிலையில் சென்று கரைப்பது. மின்சார அடுப்பில் உடலை தகனம்  செய்தால் இதை முதல் நாளிலேயே செய்து விடுவார்கள். ஆனால் மயானத்தில் விறகு அடுக்கி விறகை எரித்து தகனம் செய்தால் அதை இரண்டாம் நாள் அன்று  செய்வார்கள் ( இதன் தாத்பர்யத்தை பாகம் 4, பத்தி 59 மற்றும் பாகம் -5, பத்தி 65ல் ஏற்கனவே விளக்கி உள்ளேன்) . a) கல் ஊன்றுதல் :- சஞ்சயனம் முடிந்ததும் குளித்து விட்டு ஈர வேஷ்டியுடன்  ஆசமனம் பண்ணிய பின்   தர்ப்பைப் புல்லை மோதிரம்  போன்று பவித்திரம் செய்து அதை அணிந்து கொண்டு, பத்து நாட்களும் இறந்தவர் வாழ்ந்திருந்த  இடத்துக்கே சென்றுவிட்டு திரும்பும் ஜீவனை சாஸ்திரிகள் மந்திர சக்திகள் மூலம் அங்கேயே அவர்களால் பூமியில் புதைக்கப்படும் ஒரு கல்லில் செலுத்தி அ...

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 6

படம்
  --சாந்திப்பிரியா -- 6 84) வஸுக்களிடம் இருந்து யமகணங்களின் கட்டுப்பாட்டிற்கு ஆத்மா போய்  விட்டாலும் பத்து நாட்களுக்கு மேலாக அடுத்த இரண்டு நாட்களும் அந்த ஆத்மாவை அங்கு இருந்தவாறு மீதமுள்ள சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்குமாம் அந்த யம கணங்கள்.  அதனால்தான் பன்னிரண்டு நாட்களும் கல் ஊன்றிய இடத்தில் செய்யப்படும் சடங்குகளில்  செய்யப்படுபவற்றை  அந்த ஆத்மாவானது ஏற்றுக் கொள்கிறதாம். கல் ஊன்றிய பிறகு தினமும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு தண்ணீராலும்  தர்ப்பணம் பண்ண வேண்டும். எள்ளும் தண்ணீரும் தர்பைப் புல்லின் மீது பட்டவாறு  சமர்பிக்கப்படுகிறது.  அதன் பின்னர் சாதத்திலான பிணடம் சமர்ப்பிக்க வேண்டும். கர்மாவில் அரிசி சாதம், தர்பை, எள் மற்றும் தண்ணீர் என்பன முக்கியமானவை ஆகும். வஸுக்களிடம் இருந்து ஆத்மாவை அழைத்துக்  கொண்டு செல்லும் யமதூதர்கள்   யமராஜரிடம் அவரை சமர்ப்பிக்கிறார்கள்  85) மரணம் அடைந்தவர் உடலில் இருந்து வெளியேறும்  ஜீவன் எனப்படும் ஆத்மா அந்த உடலை சுற்றி...

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 5

படம்
  --சாந்திப்பிரியா -- 5 64)  மேலே தொடரும் முன் பாகம் - 4, பத்தி 59 தில் கூறப்பட்டு உள்ள தகனம் மற்றும் சஞ்சயனம் குறித்த சின்ன விளக்கம். உடலை எரிப்பதை  எதற்காக செய்கிறார்கள் என்பதை ஆன்மீக கண்ணோட்டத்தில் எத்தனை அழகாக கூறி உள்ளார்கள்.  மயானத்தில் வசிப்பவர் சிவபெருமான். அவர் விரும்பி தனது உடலில் பூசிக் கொள்வது சாம்பல். ஆரம்பமும் அவரே (பரபிரும்மன்) , முடிவும் அவரே என்பதைப் போல படைப்பையும்,  அழிக்கும் செயலையும் தன்னுள் அடக்கி வைத்து உள்ளவர். ஆகவே அவர் இயக்கத்தில், பிரும்மாவினால்  படைக்கப்பட்ட உயிரானது முடிவாக மயானத்தில் சிவபெருமான் பூசிக்கொள்ளும் சாம்பலாக உருமாறுவத்தின்  மூலம் ஜீவன் முடிந்தப் பின் சாம்பலாகி சிவனையே சென்று அடைந்து விடுகிறது.  சாம்பல் என்பதில் உள்ள வார்த்தைகள் சாம்ப அதாவது சாம்பசிவன் எனும் பரமசிவனையும், பல் அதாவது காய் முற்றி  பழமாகிய பின்னர் அழுகி விடுகிறது, அதாவது முடிவை எட்டியது என்ற தத்துவத்தைக் காட்டும் சாம்ப+பல் =சாம்பல் எனும் சொல் ஆகும். ஆகவே உயிருடன் இருந்தபோது பலருக்கும் பயன்பட்ட அந்த ஜீவனின் உடலானது, வாழ்வு முடிந்த...

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 4

படம்
 --சாந்திப்பிரியா -- 4 48) மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகளை அடுக்கி வைத்து தயார் செய்யப்பட்டுள்ள சிதை மேடையை  இடபக்கமாக ஒருமுறை அல்லது மூன்று முறை சுற்றிய பின் பூத உடலின் தலைப் பகுதி தெற்கு திசையில் இருக்கும்படி பாடையை சிதை மேடை மீது வைப்பார்கள்.  அதாவது உடலின் தலைப் பகுதியானது மயானத்தை நோக்கி வைக்கப்படும். சிதையில் பூதவுடல் வைக்கப்பட்டதும் பாடையுடன் சேர்த்துக் கட்டி இருந்த கட்டுகள் எல்லாம் அவிழ்க்கப்பட அந்த உடலில் உள்ள மேற்போர்வையைத் தவிர அதன் கீழ் உள்ள அரைஞாண் கயிறுவரை அனைத்தையும் எடுத்து விடுவார்கள். அதாவது போர்வையின் கீழ் உள்ள உடல்,  நிர்வாண நிலையில் வெற்றுடம்பாக இருக்கும். 49) அதன் பின் அங்குள்ள புரோகிதர் மந்திரங்கள் ஓதி சில சடங்குகளை செய்தபின், பங்காளிகள் மீண்டும் சவத்தின் வாயில் வாய்க்கரிசி போடுவார்கள். கர்மாவை செய்ய வந்துள்ளவர் தனது இடது தோளில் சுட்ட களிமண்ணினால் செய்யப்பட்ட ஒரு காலி மண் குடத்தை ஏந்திக் கொண்டு முதலில் சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து அதில் கும்ப நீரை கொட்டிய பின், மேலும் அதில் அரிசி, ச...