மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 7

--சாந்திப்பிரியா -- 7 103) முதல் நாள் முதல் ஒன்பது நாள் வரையிலான சடங்குகள் சஞ்சயனம்:- தகனத்தைத் தொடர்வது சஞ்சயனம் என்பது. சஞ்சயனம் என்பது இறந்தவர்களின் எரிந்து போன சரீரத்தின் எலும்பு பாகங்களை எடுத்து வந்து அதை பால் நிரப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிநிலையில் சென்று கரைப்பது. மின்சார அடுப்பில் உடலை தகனம் செய்தால் இதை முதல் நாளிலேயே செய்து விடுவார்கள். ஆனால் மயானத்தில் விறகு அடுக்கி விறகை எரித்து தகனம் செய்தால் அதை இரண்டாம் நாள் அன்று செய்வார்கள் ( இதன் தாத்பர்யத்தை பாகம் 4, பத்தி 59 மற்றும் பாகம் -5, பத்தி 65ல் ஏற்கனவே விளக்கி உள்ளேன்) . a) கல் ஊன்றுதல் :- சஞ்சயனம் முடிந்ததும் குளித்து விட்டு ஈர வேஷ்டியுடன் ஆசமனம் பண்ணிய பின் தர்ப்பைப் புல்லை மோதிரம் போன்று பவித்திரம் செய்து அதை அணிந்து கொண்டு, பத்து நாட்களும் இறந்தவர் வாழ்ந்திருந்த இடத்துக்கே சென்றுவிட்டு திரும்பும் ஜீவனை சாஸ்திரிகள் மந்திர சக்திகள் மூலம் அங்கேயே அவர்களால் பூமியில் புதைக்கப்படும் ஒரு கல்லில் செலுத்தி அ...