இடுகைகள்

இருதயாலீஸ்வரர் ஆலயக் கதை

படம்
  நாயன்மார் எனும் சிவனடியார்கள் மொத்தம் அறுபத்தி மூன்று பேர்கள் ஆவர். அவர்கள் வாழ்ந்திருந்தக் காலம்  கி.பி 400-1000 என்பதாகும். அந்த அறுபத்தி மூன்று நாயன்மார்களைக் குறித்த குறிப்புக்கள் பெரிய  புராணத்தில் காணப்படுகின்றது.  சிவனடியார்களான அந்த நாயன்மார்களுக்கு அனைத்து  சிவாலயங்களிலும் சிலைகள் உள்ளதைக் காணலாம். தமிழ்நாட்டின் சென்னையில்  உள்ள கபாலீஸ்வரர் ஆலயத்தில் அவர்களை கௌரவிக்கும் விதத்தில் அறுபத்தி மூவர் எனும் விழாவே ஒவ்வொரு வருடமும்  நடைபெறுகிறது என்பதில் இருந்தே அவர்களது  பெருமையைப் புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட நாயன்மார்களில் ஒருவரே பூசலார் என்பவர்.  பரம ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர், பெரும் சிவபக்தர். அவர் தினமும் வீட்டருகில் இருந்த சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத்தை தரிசனம் செய்து அதை பூஜித்தப் பின்னரே வீடு திரும்புவார். ஆனால் அந்த ஆலயமோ மேல்கூரை இல்லாத ஆலயம் ஆகும்.  மேல்கூரை இல்லாததினால் அந்த சிவலிங்கம்  மீது மழை காலத்தில் பெய்த மழை நீர் விழுந்து ஓட, வெயில் காலத்தில் வெயில் அதன...

வெள்ளையம்மா சரித்திரம்

படம்
வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடையூரின் பழங்காலத்திய பெயர் நட்டூர் என்பதாகும். காங்கேயத்தை தமது குலதெய்வ  பிரதான பூமியாக கருதும் இவர்கள் காடையூர், நல்லூர், ஊத்துக்குளி, மோரூர், இளம்பிள்ளை, மோழிப்பள்ளி, பொள்ளாச்சி, புதன்சந்தை, ஏழூர், தொழுவூர், தோளூர், போன்ற ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர். வெள்ளாள கவுண்டர் சமூகத்தில் இந்த சமூகத்தினருக்கு மற்ற பிரிவினரை விட அதிக மரியாதையும், மதிப்பும் உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள். அது மட்டும் அல்ல அவர்களது முக்கியமான வீட்டு விழா என்பது காது குத்தும் சடங்காகும். அதை அவர்கள் பெரும் விழாவாக கொண்டாடி சீர்வரிசைகளை செய்வதினால்தான் அவர்களை முழுமையான காதைக் கொண்டவர்கள் எனக் கருதி அவர்களை முழுக் காதன் என்பார்கள். காங்கயம் அருகில் உள்ள காடையூரில் முழுக்காதவர்களின் குல தெய்வமான வெள்ளையம்மா வின் சன்னதி   புகழ் பெற்ற காடையீஸ்வரர் கோவிலில்  உள்ளது.  காடையூர் என்ற பெயர...

The origin of Sringeri Saradha Peedam

படம்
சிருங்கேரி சாரதா பீடம்  ஸ்தாபிக்கப்பட்ட வரலாறு சாந்திப்பிரியா     பகவான் ஸ்ரீ ஆதி சங்கரர் வடநாட்டில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கு சங்கர மடங்களை ஸ்தாபனம் செய்தப் பின் தென் நாட்டு யாத்திரையை மேற்கொண்டு கொண்டு இருந்தார். அப்போது சிருங்கேரி அருகில் துங்கா நதிக்கரையில் அமர்ந்திருந்த அவர் அந்த நதிக் கரையில் ஒரு நாகமும் தவளையும் இருந்ததைக் கண்டார். அடுத்து ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கர்ப்பிணித் தவளை ஒன்று ஒரு குஞ்சை பிரசவித்து இருந்தது. கடுமையான வெய்யிலினால் தாய் தவளையும் அதன் குஞ்சுத் தவளையும் தவிப்பதைக் கண்ட நாகம் ஓடோடி அதன் அருகில் சென்று அவற்றின் மீது வெயில் படாமல் இருக்குமாறு குடைப் போல தன் தலையை விரித்து படமெடுத்து நின்றது. சற்று நேரம் கழிந்தப் பின் அதன் பின் அந்த தவளையும் நாகமும் அங்கிருந்து சென்று விட்டன. தவளையை கண்டால் அதைப் பிடித்து விழுங்கி விடும் நாகம் அதற்குக் குடை பிடித்து நின்ற இடம் தெய்வீகம் நிறைந்த இடமாக இருக்க வேண்டும் என அந்த அதி அற்புதமான காட்சியைக் கண்ட சங்கரர் நினைத்தார். சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்து தமது ...

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship -12

படம்
12 குல தெய்வ வழிபாடு என்பது எத்தனை முக்கியமானது என்பதை வலியுறுத்தும் இன்னொரு முக்கியமான கதையையும் சமாதியாகி விட்ட காஞ்சி மகாபெரியவா வாழ்க்கை சரித்திரத்தில் இருந்து அறிய முடிகிறது. ............ ''பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, ''சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார். பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார். குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர். சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” சாமி… வியாபார வி...

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 11

படம்
11 குலதெய்வத்தைக் குறித்த சந்தேகத்துக்கான விடையை திரேதா யுகத்தில் ஏகலவ்யனகரா என்ற ராஜ்யத்தை ஆண்டு வந்த ஸ்ருதாதாரா என்ற கந்தர்வ புருஷனுக்கு சிவபெருமானே கூறியதான கதை உண்டு. திரேதா யுகத்தில் ஏகலவ்யனகரா என்ற ராஜ்யத்தை ஸ்ருதாதாரா என்ற கந்தர்வ புருஷன் ஆண்டு வந்தான். அவன் பரம்பரையினர் சிவபெருமானின் பக்தர்கள். வம்சவம்சமாக சிவபெருமானை வழிபட்டு வந்தார்கள். பெரும் கொடையாளிகளாகவும் இருந்தார்கள். பூமியை ஆண்டாலும் அவர்களால் கந்தர்வ லோகத்திலும் இருக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் அவனுடைய பாட்டனார் காலத்தில் அவர்கள் சிவ வழிபாட்டை மறந்து தாமே கந்தர்வ புருஷர்கள், இனி அவர்கள் யாரையும் வழிபடத் தேவை இல்லை, தாங்கள் செய்யும் தர்மமும், தானமும் தங்களைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் பல காலம் சிவபெருமானின் நினைவே இல்லாமல் இருந்து விட்டார்கள். அவருக்கு செய்ய வேண்டிய பாராம்பரிய வழிபாடுகளை மறந்தனர்.  இப்படியாக இருந்த பரம்பரையில் அவர்களின் பின் வழியில் வந்த வம்சத்தை சேர்ந்தவனே ஏகலவ்யனகரா ராஜ்யத்தை ஆண்டு வந்த ஸ்ருதாதாரா எனும் இன்னொரு கந்தர்வ புருஷன். அவனுக்கு சத்யதாரா மற்றும் சீலாதாரா என்ற இரண்டு மகன்...