இருதயாலீஸ்வரர் ஆலயக் கதை

நாயன்மார் எனும் சிவனடியார்கள் மொத்தம் அறுபத்தி மூன்று பேர்கள் ஆவர். அவர்கள் வாழ்ந்திருந்தக் காலம் கி.பி 400-1000 என்பதாகும். அந்த அறுபத்தி மூன்று நாயன்மார்களைக் குறித்த குறிப்புக்கள் பெரிய புராணத்தில் காணப்படுகின்றது. சிவனடியார்களான அந்த நாயன்மார்களுக்கு அனைத்து சிவாலயங்களிலும் சிலைகள் உள்ளதைக் காணலாம். தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் ஆலயத்தில் அவர்களை கௌரவிக்கும் விதத்தில் அறுபத்தி மூவர் எனும் விழாவே ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது என்பதில் இருந்தே அவர்களது பெருமையைப் புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட நாயன்மார்களில் ஒருவரே பூசலார் என்பவர். பரம ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர், பெரும் சிவபக்தர். அவர் தினமும் வீட்டருகில் இருந்த சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத்தை தரிசனம் செய்து அதை பூஜித்தப் பின்னரே வீடு திரும்புவார். ஆனால் அந்த ஆலயமோ மேல்கூரை இல்லாத ஆலயம் ஆகும். மேல்கூரை இல்லாததினால் அந்த சிவலிங்கம் மீது மழை காலத்தில் பெய்த மழை நீர் விழுந்து ஓட, வெயில் காலத்தில் வெயில் அதன...