இடுகைகள்

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 7

படம்
7 குலதெய்வ வழிபாட்டில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன. அவற்றில் ஆண்  மற்றும் பெண் தெய்வங்கள் என்று பார்த்தால் ஆண்களை விட பெண் தெய்வங்களே  அதிகம் உண்டு.  ஆண்களை விட பெண் தெய்வங்களில் அதிக அவதார தெய்வங்கள்  உண்டு. அதன் காரணமும் புராணங்களில் இருந்து அறிந்திடலாம். எந்த ஒரு யுத்தத்திலும் ஆண் தெய்வத்தை விட அதிகமாக யுத்தங்களில் பங்கேற்றவை பெண் தெய்வங்கள் ஆகும். தேவலோகத்தை துன்புறுத்தி வந்த, ரிஷி முனிவர்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்திருந்த பல அரக்கர்களையும் அசுரர்களையும் அழித்தது பெண் தெய்வங்களே. அவை பல ரூபங்களை எடுத்து யுத்தம் செய்துள்ளன. அதன் காரணம் ஆண்  தெய்வங்களை விட பெண் தெய்வங்கள் அதிக சக்தி வாய்ந்தவை என்பதாகும். யோக சக்தி நிறைந்தவை. மாந்த்ரீக சக்தி கொண்டவை. இதன் காரணம் பரப்பிரும்மனின் மூல சக்தியே பெண் சக்தியாகும். அதுவே ஒரு தாயாரைப் போல படைப்பைக் கொடுக்க வல்லது என்பது பரப்பிரும்ம  தத்துவம். இதற்கான உதாரணங்கள் காளி தேவி, மஹிஷாசுர மர்தினி,  தசவித்தியாவின் பத்து தேவிகள், சப்த கன்னிகைகள்,  அஸ்வாரூடா தேவி,  துர்க்கை, ஜ்வாலமுகி, சின்னமஸ்...

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 6

படம்
6 ஒரு குலம் என்பது அந்தந்த வழிக் குடும்ப பாரம்பரியத்தைக் குறிக்கும். அந்த கால வம்சத்தினர் தமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை வைத்துக் கொண்டு இருந்தார்கள். தமக்கு காவல் தேவை, தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் போன்றவற்றுக்காக குல தெய்வ வழிபாட்டை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இருந்தார்கள். மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடையவேண்டும், பின்னோர் செழிக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும் என்ற நம்பிக்கைகள் பரவி இருந்தன.   ஒவ்வொரு வம்சத்தினரும் தமது கிராமங்களில், காட்டுப் பகுதிகளில், நகரங்களை விட்டு வெகு தொலைவில் அவரவர்கள் குடி இருந்த பகுதிகளில் இருந்த ஏதாவது ஒரு இடத்தில் இருந்த ஆலயத்தில் சென்று குல தெய்வத்தை வழிபட்டார்கள். ஆனால் காலம் மாறிக் கொண்டே இருக்க  மெல்ல மெல்ல முன்னர் நான் கூறிய நிலைகளினால் குல தெய்வ வழிபாடுகளும்  மறையத் துவங்கி இருந்தன. அது கலி காலத்தின் ஆரம்ப நிலையையே குறித்தது. ...

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 5

படம்
5 பிரும்ம நியதி புரிந்து கொள்வது கஷ்டமானது அல்ல. ஆனால் இந்தகால கணணி போல அவர் அந்த காலத்திலேயே சில கணக்குகளை வகுத்திருந்தே படைப்புக்களை ஏற்படுத்தி இருந்தார். அதாவது இன்னென்ன இடத்தில் இன்னின்ன தெய்வம், அல்லது தேவதை அல்லது தெய்வ கணம் அல்லது தெய்வமாக்கப்பட்ட ஆத்மாக்கள் அவதரிக்க வேண்டும். அந்த இடத்தில் தம்மை தெய்வமாக ஏற்றுக் கொண்ட பரம்பரையினருக்கு அருள் புரிந்து கொண்டும், ஆறுதல் தந்தவரும், அவர்கள் குலத்தைக் காத்துக் கொண்டும் இருக்க வேண்டும். அந்த இடத்தில் அந்த குறிப்பிட்ட தெய்வ மற்றும் தேவதைகளை வணங்க வேண்டிய பரம்பரையினர் அந்த தெய்வங்களை மதிக்காமல் வேறு ஏதாவது  தெய்வத்தையோ, அல்லது தேவதையையோ அல்லது தெய்வ கணம் அல்லது தெய்வமாக்கப்பட்ட ஆத்மாக்களையோ ஆராதித்தாலும் அங்கு பாத்யை  உள்ள தெய்வ அல்லது தெய்வ கணங்களைத் தவிர வேறு எந்த தெய்வமும்  அந்தப் பரம்பரையினருக்கு  அருள் புரியலாகாது என்ற கண்டிப்பான நியமங்கள் வரையுறுக்கப்பட்டு  இருந்தன. இதை மீறும் தேவகணங்களும், தெய்வங்களும் நாளடைவில் தமது சக்தியை இழக்கும். பெயரளவில் மட்டுமே தெய்வமாக தோற்றம் தந்தாலும் அவர்களுக்...

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 4

படம்
  4   இதன் இடையே ஆரியர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் வந்து அங்காங்கே தங்கலானர்கள்.  அந்தணர்களாக கருதப்பட்ட ஆரியர்கள்  இந்தியாவுக்குள்  வந்த காலத்தில் நகரங்கள் என்பதே மிகக் குறைவானதாகும். அனைத்து பகுதிகளுமே அருகருகில் இருந்த கிராமங்களாகவே இருந்தன. ரிக்வேத காலத்தில் கூட கிராமங்கள் ஒன்றுடன் ஒன்று அதிக தூரத்தில் அமையாமல் பாதுகாப்பிற்காக அருகருகிலேயே அமைந்திருந்தன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து உள்ளார்கள். அதுவே பிற்காலத்திலும் தொடர்ந்து கொண்டிருந்துள்ளது. காலம் நகர்ந்து கொண்டே இருந்தாலும் பண்டை காலத்தில் நகரங்களை விட கிராமப் பகுதிகளே அதிகம் இருந்தன என்பதினால் பெரும்பாலான மக்கள் விவசாயத் தொழிலை மேற்கொண்டவாறு கிராமப்புறங்களிலேயே வசித்து வந்தார்கள். அந்த இடங்களில் அந்தணர்கள் மற்றும் அந்தணர்கள் அல்லாதவர்கள் என்ற இரு பிரிவினரும் வசித்து வந்தார்கள் என்றாலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே பகுதியில், ஒன்றாக  சேர்ந்து வாழ்ந்திடாமல் தனித் தனி பிரிவாக ஒருவருக்கொருவர் தள்ளி இருந்த இடங்களிலேயே வசித்து வந்தார்கள். அதன் காரணமும் ஜாதி பேத...

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 3

படம்
  3 மகாபாரத காலத்தைப் போல அல்லாமல் இராமாயண காலத்திலும் சிவ வழிபாடுகள் இருந்துள்ளன. அதனால்தான் ராமபிரான் ராமேஸ்வரத்தில் வந்து கடற்கரையில் சிவபெருமானை பூஜித்ததான புராணக் கதைகள் உள்ளது. இந்த வழிபாட்டில் ஒரு முக்கிய செய்தியை   கவனிக்க வேண்டும். சிவபெருமானை ராமபிரான் பூஜித்தது என்பது சிவபெருமானின் உருவத்தைக் காட்டும் சிலையை அல்ல. சிவபெருமானை பிரதிபலிக்கும் சிவலிங்கத்தை ராமபிரான் மண்ணினால் செய்து கடற்கரையில் பிரதிஷ்டை செய்து லிங்க வடிவிலான சிலையை பூஜித்தாராம். ஆனால் எந்த புராணங்களிலும் சிவபெருமானை வேறு எந்த உருவவிலும்  வழிபாடு செய்துள்ளதாக செய்திகள் கிடையாது. ராமபிரான் மட்டும் அல்ல  கிருஷ்ணர், ஹனுமான், விஷ்ணு, பிரும்மா, போன்ற பல தெய்வங்கள் கூட சிவபெருமானை லிங்க உருவில் பூஜித்ததான கதைகள் பல புராணங்களில் உள்ளன. அந்த தெய்வங்கள் அப்படி வழிபட்டதிற்கு  ஒரு அடிப்படை காரணம்   உண்டு.   ''சிவபெருமானே பரப்பிரும்மன் எனும் சக்தியில் இருந்து வெளி வந்தவர். அவர் தனிப்பட்ட சக்தியைக் கொண்டு அவதரிக்கவில்லை. அவர் பரப்பிரும்மனின் சக்தியுடன் வெளி வந்தவர். அ...