இடுகைகள்

குலதெய்வம்

படம்
     இந்த வருடம் ஜனவரி மாதக் கடைசியில் திரு கே.வீ. பதி என்பவர் 'What is 'Kula Deivam'? How is it different from other Deivams?' என்ற கேள்வியை என்னிடம் எழுப்பி இருந்தார். அவருக்கு உடனடியாக நான் கீழ் கண்ட பதிலை அனுப்பி இருந்தேன். ''ஐயா, ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒவ்வொரு தெய்வத்தை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு இருப்பார்கள். அதாவது நம்முடைய ஐம்பது தலைமுறைக்கு முன்னர் இருந்த நம்முடைய தாத்தாவுக்குத் தாத்தா என நீண்டு கொண்டு போகும் பெரும் பெரும் பெரிய தாத்தா (இருபது தலைமுறையின் தாத்தா) வணங்கி வழிபாட்டு வந்திருந்த தெய்வத்தையே அவர் வழி வருபவர்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். அவர் குடும்பத்தில் பிறக்கும் ஆண் மகன்கள் மூலம் பெருகும் ஆண் வழி குடும்பத்தினர் அனைவருமே அதே தெய்வத்தைத்தான் வணங்கி வருவார்கள். எந்த ஒரு குடும்பத்தில் ஆண் மகனே இல்லையோ அதோடு அந்த குடும்பத்தின் வம்சம் பெருகுவது இல்லை என்பதினால் குலதெய்வம் முடிந்து விடும் என்பார்கள். ஏன் என்றால் பெண்கள் புகுந்த வீட்டுக்குச் சென்றதும் அவர்கள் அந்தக் குடும்பத்தின் குல தெய்வத்தையே ஏற்...

Guru Charithram -Some information

படம்
  குரு பரம்பரை   குரு சரித்திரம் - சில விவரங்கள்  சாந்திப்பிரியா குரு பரம்பரை என்பது  தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார்.  இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை  நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாகவும் அவருடைய சிஷ்யராகவும் பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார். அதன் விளைவாகவே தத்தாத்திரேய குரு பரம்பரை உருவாகி மேலும் பல குரு பரம்பரைகள் துவங்குவதற்குக் காரணம் ஆயிற்று.  தத்தாத்திரேயரே தத்தாத்திரேயராகவும், ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார். இவர்களி...

Guru Charithram - 61

படம்
  அத்தியாயம் - 52 இப்படியாக சித்த முனிவர் ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி ஸ்வாமிகளைப்  பற்றிய  கதைகளை கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி  ஸ்வாமிகள்  மறைந்து போனக் கதையைக்  கேட்டதும் அப்படியே தன்  நிலை மறந்து  சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார். உடல் முழுதும் வியர்வையினால் நனைந்தது.  கண்களில்  இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியபடி இருந்தது. அப்படியே சமாதி நிலையில் அமர்ந்து இருந்த  நமத்ஹரகாவை தட்டி எழுப்பினார் சித்த முனிவர். ''மகனே, நீ மேன்மையான  தியான நிலையை அடைந்து  ஞான வழிக்கு செல்லத் துவங்கி விட்டாய். ஆகவே இனி நிச்சயமாக உனக்கு முக்தி கிடைக்கும். தத்தாத்திரேயரின்  அவதாரமான  ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி  ஸ்வாமிகளின் மகிமைகளைக் குறித்து நான் கூறிய அனைத்தையும் நீ ஆழ்ந்த கவனத்துடன் கேட்டாய். அது உன்னோடு நின்று விடக் கூடாது. என்னுடைய குருநாதரின் அமிர்தம் போன்ற மேலான மகிமைக் கதையை நான் எப்படி உனக்குக் கூறினேனோ அது போலவே நீயும் இந்த மண்ணில் வாழ்ந்து வரும்வரை உன்னை குருவாக ஏற்று...

Guru Charithram - 60

படம்
  அத்தியாயம் - 5 1 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ''நமத்ஹரகா, தன்னுடைய வாழ்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்து விட்ட ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீசைலத்துக்கு  கிளம்பிச் சென்றபோது அவர் தங்களை தவிக்க விட்டு செல்லக் கூடாது என்றும், அப்படி அவர் சென்று விட்டால் தாம் அனைவருமே தாய் தந்தை அற்ற குழந்தைகளைப் போல அநாதைகளாகி விடுவோமா   என்று கதறிக் கொண்டு அவர் போவதை தடுத்தார்கள். ஆனால் அவரை அங்கிருந்து செல்லக் கூடாது என்று நிர்பந்தம் செய்தவர்களிடம் கூறினார் 'பக்தர்களே, நீங்கள் யாரும் துக்கப்படத் தேவை இல்லை. நான் இங்கிருந்து ஒரேடியாக சென்று விடப் போகிறேன் என்று நான் எப்போது கூறினேன்? நான் இங்குதான் தங்கி இருப்பேன், ஆனால் உங்கள் கண்களுக்கு புலப்படாமல் இருப்பேன் என்றல்லவா சொன்னேன். என்னுடைய ரூபமாக என்னுடைய பாதுகைகள் இங்கு  இருக்கும். நான் தினமும் அதிகாலை அம்ரஜா நதிக்கு சென்று அங்கு குளித்தப் பின் கான்பூரில் உள்ள என்னுடைய மடத்துக்கு  வந்து நீங்கள் அளிக்கும் பிட்ஷைகளை ஏற்றுக் கொள்வேன். அதன் பின் அந்த நெல்லி மரத்தடியில் வந்து அமர்ந்து கொள்வேன். அங்கு வந்...

Guru Charithram - 59

படம்
  அத்தியாயம் - 5 0 சித்த முனிவர் நமதஹரகாவுக்கு இன்னொரு கதையையும் கூறினார் ''தன் வாழ்க்கையில் பல வசதிகள் பெற்று வாழ வேண்டும் என வேண்டிக் கொண்ட ஒரு வண்ணானுக்கு எப்படி ஸ்வாமிகள் கருணை புரிந்தார் என்பதை முன்னமே கூறினேன் அல்லவா, அவன் மரணம் அடைந்தப் பின் அதற்க்கு அடுத்த ஜென்மத்தில் பீதார் எனப்படும் இடத்தில் ஒரு  முஸ்லிம் அரசனாகப் பிறந்தான். பீதாரை ஆண்டுவந்த அந்த முஸ்லிம் மன்னன் பூர்வ ஜென்மத்தில் ஸ்வாமியின் பக்தனாக இருந்ததினால் நேர்மையான வாழ்க்கையை மேற்கொண்டு அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்துக் கொண்டு நடு நிலையாக ஆட்சி செய்தான்.  ஆனால் சில  முஸ்லிம் பிரிவினர் அந்த மன்னன் இந்துக்களையும் முக்கியமாக பிராமணர்கள் மற்றும் குருமார்களையும் தம் சமயத்தினருடன் சேர்த்து பாரபட்ஷம் இல்லாமல் நடத்துவதை  ஏற்றுக் கொள்ள முடியாமல் அதைப் பற்றி குறை கூறினார்கள். ஆனால் அவர்களுடைய கருத்து எதையுமே அந்த மன்னன் ஏற்கவில்லை. தன்னைப் பொருத்தவரை அனைவரும் ஒன்றே என்ற கொள்கையில் இருந்து தடம் புரண்டு ஆட்சி செய்ய விரும்பவில்லை.  தம்மிடம் குறைக் கூறியவர்களிடம் மன்னன் கூறினார் 'என்னை...

Guru Charithram - 58

படம்
  அத்தியாயம் - 49 நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ' முனிவரே ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்கை பற்றிய பெரும்பாலான கதைகளை நீங்கள் எனக்கு மிக அழகாக எடுத்துரைத்து வந்துள்ளீர்கள். குருவை மதித்து நடப்பது கல்பதாரு விருட்ஷத்தை அடைந்தது போன்றது. சத்குரு, சத்குரு என்கிறார்களே அந்த சத்குருவின் தன்மை என்ன, மகிமை என்ன என்பதை எனக்கு விளக்குவீர்களா?' அதைக் கேட்ட சித்த முனிவர் அதை விளக்கும் ஒரு கதையைக் கூறினார். 'நமத்ஹரகா, நீ உண்மையிலேயே பேரானந்த நிலை என்பதென்ன என்பதைக் குறித்து மிக நல்ல கேள்வியைத்தான் கேட்டாய். பேரானந்த நிலையே சத்குருவைக் காண்பது. அதை அறிந்து கொள்வதின் மூலம் விவேகத்தைப் பெற்று அறியாமையை விலக்கிக் கொள்ள முடியும். ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமான் பார்வதியுடன் அமர்ந்து கொண்டு இருந்தபோது பார்வதி தேவி சிவபெருமானிடம் கேட்டாள் 'பரப்பிரும்மனே, தயவுசெய்து பிரும்மனை அடையும் வழிக்கான மந்திரோபதேசம் எதுவும் இருந்தால் அதை எமக்கு போதிப்பீர்களா?' சிவபெருமான் அதற்குக் கூறினார் 'தேவி இதுவரை வேறு எவருமே கேட்காத ஒரு கேள்வியை நீ ஒருவள் மட்டுமே என்னிடம் இ...

Guru Charithram - 57

படம்
  அத்தியாயம் - 48 சித்தமுனிவர் கூறிய கதையை கேட்ட நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார்  'சித்த முனிவரே. எனக்கு மனதில் ஒரு சின்ன சந்தேகம். எதற்காக ஸ்வாமிகள்  கனக்பூரில்  தங்க முடிவு செய்தார்? அதற்கு சித்த முனிவர்  கூறலானார் ''ஒரு நாள் தன்னுடைய சிஷ்யர்கள் மற்றும் கிராமத்தினரை அழைத்த ஸ்வாமிகள் அனைவரையும் உடனடியாக  புனித யாத்திரை மேற்கொள்ளத் தயாராக இருக்குமாறு கூறினார். அதற்கு அவர்கள் 'ஸ்வாமி  வெளியூருக்குச்  செல்வதென்றால்  எங்களுக்கு சிறிது நேரம் வேண்டுமே. நாங்கள் வீட்டுக்குச் சென்று பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு, துணிமணிகளை எடுத்து வர வேண்டும்' என்றதும்  ஸ்வாமிகள் கூறினார் 'எதற்காக நீங்கள் துணிமணிகளை எடுத்துக் கொண்டு வர வேண்டும்? கங்கை, பிரயாகை, கயா என்ற மூன்றும் சங்கம் எனும் பெயரில் இங்கேயே உள்ள நிலையில் அந்த நதிக்கு சென்று குளிக்கவே நான் புனித யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்றபோது நீங்கள் எதற்காக வெளியூர் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?' என்று கூறிவிட்டு வீட்டுக்குச் செல்லக் கிளம்பியவர்களை  தடுத்து நிறுத்தின...