இடுகைகள்

Guru Charithram 50

படம்
  அத்தியாயம் -41 சித்த முனிவரின் கால்களின் அடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்டபடி இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் 'குருவே என்னுடைய சந்ததியை சேர்ந்த சாயம்தேவா என்ற ஒரு பிராமணர் ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு குருசேவை செய்ததாகக் கூறுவார்கள்.அவருடைய கதை உங்களுக்குத் தெரிந்தால் அதை எனக்குக் கூறுவீர்களா?' என்று கேட்டார். அதைக் கேட்ட சித்த முனிவர்  நமத்ஹரகாவுக்கு கூறத் துவங்கினார். 'நமத்ஹரகா, சாயம்தேவா  என்பவர் உன்னுடைய பாட்டனாரின்  சகோதரர் ஆவார். அவர் மீது ஸ்வாமிகளுக்கு மெத்த அன்பு உண்டு. ஸ்வாமிகளை  அவர் தனது குருதேவராக ஏற்றுக் கொண்டு இருந்தவர். ஸ்வாமிகள் சென்ற இடங்களுக்கு  எல்லாம் சாயம்தேவாவும் சென்று  முடிந்த அளவு அவருக்கு சேவகம் செய்தவர். இந்த நிலையில் ஸ்வாமிகள் கனக்பூருக்கு செற்று தங்கி  இருந்தபோது அதைக் கேள்விப்பட்ட சாயம்தேவாவும் கனக்பூருக்கு சென்று  அவரை வணங்கினார். சாயம்தேவாவை  கண்டதும் மனம் மகிழ்ந்து போன ஸ்வாமிகள் அவர் தலை மீது தன் கையை வைத்து 'சாயம்தேவா, நீ பல  ஜென...

Guru Charithram - 49

படம்
  அத்தியாயம் -40 சித்த முனிவர் கூறினார் ''அது போலவே கந்தர்வபுரத்தில் சொர்ணக கோத்திரத்தை சார்ந்த நரஹரி என்ற பிராமணன் ஒருவர் இருந்தார்.  அவருக்கு திடீர் என வெண் குஷ்டம் வந்து விட்டது. அதனால் பெரும்  மனத் துயரம் அடைந்த நரஹரி  ஸ்வாமிகளிடம்  சென்று அவரை நமஸ்கரித்து விட்டு 'மகாத்மா, நீங்கள் கடவுளின் அவதாரம். எனக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. திடீர் என வெண்குஷ்டம் வந்து என்னுடைய வாழ்க்கையையே சீர்குலைத்து  விட்டது. நான் வேதங்களை  நன்கு கற்று அறிந்தவன்  என்றாலும்  இந்த வியாதி உள்ளதினால் என்னை யாருமே  எந்த சடங்குக்கும் அழைக்க விரும்புவது இல்லை. என்னை பார்த்தாலே முகத்தை சுளிக்கிறார்கள். விலகி ஓடுகிறார்கள்.   உணவுக்கே பஞ்சம் வந்து விட்டது. சரி பிட்ஷை எடுத்தாவது உண்ணலாம் என்றால் என் குரலைக் கேட்டாலே கதவை திறப்பது இல்லை. நான் செல்லாத புனித இடங்கள் இல்லை என்று கூட சொல்லலாம். பல விரதங்கள் இருந்து  ஹோமங்களையும்  செய்து இருக்கின்றேன். எனக்கு ஏற்பட்டு உள்ள  இந்தக் கொடுமைகளை  எல்லாம் பார்க்கும்போது நான் எதற்க்காக உயி...

Guru Charithram - 48

படம்
  அத்தியாயம் -39 சித்த முனிவர் கூறினார் ''அது போலவே சொர்ணக கோத்திரத்தை சார்ந்த சோமநாத் என்ற ஒரு பிராமண தம்பதியினர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார்கள். அவருடைய மனைவியின் பெயர் கங்காதேவி என்பது. அவளுக்கு அறுபது வயது ஆயிற்று. கணவனும் மனைவியும் வாழ்நாள் முழுதும் பகட்டு இல்லாமல் தர்ம நெறிகளைக் கடைபிடித்தபடி நேர்மையாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவருமே  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை அனுதினமும் சென்று தரிசித்து வணங்குவார்கள். ஒரு நாள் எப்போதும் போல அவரை சந்தித்தப் பின் பூஜைகளை செய்து விட்டு கிளம்பியபோது  அவர்களை அழைத்த ஸ்வாமிகள் கேட்டார்  'அம்மணி, தினமும் நீங்கள் இருவரும் சிரத்தையுடன் இங்கு வந்து என்னை வணங்கிய பின் பூஜையையும் செய்து விட்டுப் போவதைக் கண்டு மனம் மகிழ்கிறேன். உனக்கு ஏதேனும்  மனதில் குறை இருந்தால் அதைக் கூறு. நான் அதை நிவர்திப்பேன்' என்று நேரடியாகவே கூறினார். ஸ்வாமிகளுக்கு அவர்களது மனக் கவலை அவர்கள் கூறாமலேயே தெரியாதா என்ன? ஆனாலும் வேண்டும் என்றேதான் அப்படிக் கேட்டார். அவர்கள் தம் வாயாலேயே தமது குறைகளை கூற வேண்டும் என்றே விரும்பினார். அதைக் கேட்...

Guru Charithram - 47

படம்
  அத்தியாயம் -38 ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் சரித்திரத்தை சித்த முனிவர் கூறிக் கொண்டே இருக்கையில் தரையில் அமர்ந்தபடி அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் 'ஸ்வாமி, உண்மையைக் கூறினால் ஆனந்தத்தின் எல்லை எந்த அளவு என் மனதில்  வியாபித்து உள்ளது என்பதைக் கூற முடியாத நிலையில்  இருக்கிறேன். நான் உங்களை சந்தித்தது என்னுடைய பூர்வ ஜென்ம புண்ணியம்தான் என்றே கூற வேண்டும். இல்லை என்றால் இத்தனை மகிமையான கதைகளை யார் மூலம் கேட்டு இருப்பேன்? ஆகவே ஸ்வாமி  தயவு செய்து ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மகிமைகள் இன்னும் எத்தனை கூற முடியுமோ அத்தனையையும் கூறினால் அளவற்ற மகிழ்ச்சி அடைவேன்' என்றார். அதனால் ஆனந்தம் அடைந்த சித்த முனிவரும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி  ஸ்வாமிகளின் சரித்திரத்தை  தொடர்ந்து கூறலானார். 'கங்காபுரம் என்ற ஊரில் பாஸ்கரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு ஏழை பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் கருநெல்லி மரத்தடியில் அமர்ந்து இருக்கும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் சென்று அவரை நமஸ்கரித்து விட்டு வருவார். அதை அவர் தனது தினசரி வாழ...

Guru Charithram - 46

படம்
  அத்தியாயம் -37 ஸ்வாமிகள் தொடர்ந்து கூறினார்  ' வீட்டை நன்கு பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பூஜை அறையை தினமும் பெருக்கி சுத்தமாக துடைக்க வேண்டும். அதன் பின் ஸ்வாமிக்கு எதிரில் அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். எந்த வீட்டில் ஸ்வாமி அறை சுத்தமாக இருக்கிறதோ அங்கு லஷ்மி தேவி வந்து வாசம் செய்வாள். ஸ்வாமி அறையில் மரத்தினால் ஆன அல்லது கல்லில் ஆன ஸ்வாமி சிலையை வைத்து வழிபடலாம். ஸ்வாமிக்கு எதிரில் சிறிய விளக்கில் எண்ணை ஊற்றி திரி போட்டு அதை எரிய விட வேண்டும். ஸ்வாமிக்கு தினமும் பூக்களைப் போட்டு பூஜிக்கலாம். சிவனுக்கு வில்வ மாலை, விஷ்ணுவிற்கு துளசி மாலை, மகாலஷ்மி, பார்வதிக்கு தாமரைப் பூ மற்றும் வினாயகருக்கு அருகம் புல் போன்றவற்றை போட்டு பூஜிக்கலாம். சிவனுக்கு துளசி மாலை போடுவதையும், விஷ்ணுவிற்கு வில்வ மாலைப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். விசேஷ பூஜைகள் அல்லது சடங்குகளை செய்தப் பின் மதியம் அன்னதானம் செய்வது விசேஷம். குறைந்தது  இரண்டு அல்லது மூன்று பேருக்கு போஜனம் செய்விக்கலாம். வசதியானவர்கள் அதற்கும் மேலும் அன்னதானம் செய்யலாம். வீட்...

Guru Charithram - 45

படம்
  அத்தியாயம் -36   குருதேவருடைய சரித்திரத்தை சித்த முனிவர் கூறிக் கொண்டே இருக்க அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா 'அவர் கூறுவதைக் கேட்கும்போதே தன்னுடைய அறியாமையை விலக்கிக் கொண்டு வருகின்றது என்பதால் இன்னமும் எத்தனைக் கதைகளைக் கூற முடியுமோ அவற்றையும் கூறுமாறு' சித்த முனிவரிடம் வேண்டிக் கொண்டார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து போன  முனிவரும் மேலும் சில கதைகளைக் கூறத் துவங்கினார். ''கந்தர்வபுரத்தில் மெத்தப் படித்த பண்டிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய குணம் என்ன என்றால் யாரிடமும் எதையும் யாசகமாகப்  பெறக்கூடாது  என்பதை தம் வாழ்கையின் முக்கியக் கோட்பாடாக வைத்து இருந்தார். ஆனால் அதில் அவருடைய மனைவிக்கு கருத்து வேறுபாடு  இருந்தது. அவள் பொருளாசைக் கொண்டவள். சுகமாக வாழ நினைத்தவள். அவளுடைய குறை  என்ன என்றால்  நம்மை சுற்றி உள்ள அனைவருமே அனைத்து சுகபோகங்களையும் பெற்றுக் வாழ்ந்து வருகையில் நாமோ அன்றாடம் காய்ச்சிகளைப்  போல அல்லாடிக் கொண்டு வறுமையில் அல்லவா உழன்று கொண்டு இருக்கிறோம். நம்முடைய கொள்கையினால் நமக்கு என்ன விசேஷமான பலன் க...

Guru Charithram - 44

படம்
  அத்தியாயம் -35   சித்த முனிவர் இன்னும் கூறினார் ''அதன்  பிறகு சாவித்திரி ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் கேட்டாள் 'ஸ்வாமி தயவு செய்து எங்களுடைய வரும் காலம் எப்படி இருக்கும் என்பதைக் கூறுவீர்களா? தயவு செய்து எங்களுடைய நல் வாழ்விற்கு ஏதேனும் மந்திரோபதேசம் செய்வீர்களா?'. அதைக் கேட்ட குரு கூறினார் 'உனக்கு எந்த உபதேசமும் மந்திரமும் தேவை இல்லை. ஒரு பெண்ணுக்கு மந்திரோபதேசம் செய்தால் தவறு நிகழ வாய்ப்பு உள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு கதையைக் கூறுகிறேன் கேள்' எனக் கூறி விட்டு அந்தக் கதையைக்  கூறலானார். 'பல காலத்துக்கு முன்னால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அவ்வப்போது யுத்தம் மூண்டு விடும். அந்த யுத்தம் நடக்கும் போதெல்லாம் இராக்ஷசர்களுக்கு பக்கபலமாக இருந்தவாறு சஞ்சீவி மந்திரம் ஓதி யுத்தத்தில் உயிர் இழக்கும் ராக்ஷசர்களை சுக்ராச்சாரியார் பிழைக்க வைத்துக் கொண்டே இருந்ததினால் தேவர்களால் ராக்ஷசர்களை எளிதில் அழிக்க முடியவில்லை. இப்படியாக சுக்ராச்சாரியார் செய்து வந்த காரியத்தினால் தேவர்களால் இராட்சசர்களின் படை பலம் குறைவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனா...