Garudazhvaar -2

2 காத்ரு பல விதங்களிலும் வினிதாவுக்கு தொல்லைகளை தந்தாள். ஒருமுறை அவளை தன்னுடைய ஆயிரம் நாகக் குழந்தைகளையும் தன்னையும் தூக்கிக் கொண்டு கடலுக்குள் சென்று அங்கு விட வேண்டும் என்று ஆணையிட்டாள். வேறு வழி இன்றி சுமக்க முடியாமல் அந்த நாகங்களை சுமந்து கொண்டு அதை வினிதா செய்ய வேண்டியதாயிற்று. தன் தாயாரின் கஷ்டத்தை கண்ட கருடன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைத்தார். தன்னுடைய தாயாரை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்யுமாறு காத்ருவிடம் கேட்க அதற்கு காத்ரு ஒரு நிபந்தனை போட்டாள். கருடன் தேவலோகத்துக்குச் சென்று அங்கிருந்து அமிர்தத்தைக் கொண்டு வந்து தந்தால் அவருடைய தாயாரின் அடிமைத்தனத்தை விலக்குவதாக வாக்கு கொடுத்தாள். ஆகவே கருடன் தேவலோகத்துக்குச் சென்று அமிர்தத்தைக் கொண்டு வரக் கிளம்பினார். கருடன் தனது தாயாரிடம் சென்று தனக்கு ஆசி கூறுமாறு கேட்டார். ஆகவே அவருடைய தாயார் அவருக்கு ஆசிர்வாதம் அளித்து சந்திர சூரியர்களை அவருக்கு உதவுமாறு வேண்டிக் கொள்ள, அவர்களும் (சந்திர சூரியன்கள்) கருடனின் இரண்டு இறகுகளுக்கும் பாதுகாப்புக் கொடுப்பார்கள் என்றும்...