இடுகைகள்

Garudazhvaar -2

படம்
  2 காத்ரு பல விதங்களிலும் வினிதாவுக்கு தொல்லைகளை தந்தாள். ஒருமுறை அவளை தன்னுடைய ஆயிரம் நாகக் குழந்தைகளையும் தன்னையும் தூக்கிக் கொண்டு கடலுக்குள் சென்று அங்கு விட வேண்டும் என்று ஆணையிட்டாள். வேறு வழி இன்றி சுமக்க முடியாமல் அந்த நாகங்களை சுமந்து கொண்டு அதை வினிதா செய்ய வேண்டியதாயிற்று. தன் தாயாரின் கஷ்டத்தை கண்ட கருடன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைத்தார்.  தன்னுடைய தாயாரை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்யுமாறு காத்ருவிடம் கேட்க அதற்கு காத்ரு ஒரு நிபந்தனை போட்டாள். கருடன் தேவலோகத்துக்குச் சென்று அங்கிருந்து அமிர்தத்தைக் கொண்டு வந்து தந்தால் அவருடைய தாயாரின் அடிமைத்தனத்தை விலக்குவதாக வாக்கு கொடுத்தாள். ஆகவே கருடன் தேவலோகத்துக்குச் சென்று அமிர்தத்தைக் கொண்டு வரக் கிளம்பினார். கருடன் தனது தாயாரிடம் சென்று தனக்கு ஆசி கூறுமாறு கேட்டார். ஆகவே அவருடைய தாயார் அவருக்கு ஆசிர்வாதம் அளித்து சந்திர சூரியர்களை அவருக்கு உதவுமாறு வேண்டிக் கொள்ள, அவர்களும் (சந்திர சூரியன்கள்) கருடனின்  இரண்டு இறகுகளுக்கும்  பாதுகாப்புக் கொடுப்பார்கள் என்றும்...

Garudazhvaar - 1

படம்
1 நான் போன வருடம் கும்பகோணத்தில் நாச்சியார் கோவிலுக்குச் சென்று இருந்தபோது ஒரு அதிசயமான விஷயத்தைக் கேள்விப்பட்டேன். அங்குள்ள கருடப் பெருமானை கல் கருடன் என்று கூறுகிறார்கள். திருவிழாக் காலங்களில் ஊர்வலத்தில் ஸ்வாமி புறப்படுவதற்கு முன்னால் அந்த கல் கருட வாகனத்தை நான்கு பேர் மட்டும் சுமந்து கொண்டு செல்வார்களாம். நடக்க நடக்க அதை நான்கு பேர் சுமக்க முடியாமல் போய் விடுவதினால் இன்னும் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து ஆறு பேர், ஏழுபேர் அதை தூக்குவார்களாம். எப்படி அந்த வாகனம் மேலும் எடையை அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது அதிசயம். அது முதலே கருடனைக் குறித்து எழுத நினைத்திருந்து இப்போதுதான் அதற்கு வேளை வந்துள்ளது. கருடனின் பிறப்பு விசித்திரமானது. பிரும்மாவின் பேரரான காஷ்யப முனிவருக்கு வினதா மற்றும் காதரு என்பவர்கள் தொண்டு புரிந்து வந்தார்கள். சில புராணங்களில் அவர்களை கஷ்யபரின் மனைவிகள் என்றும் கூறி உள்ளார்கள். அவர்களது சேவையைக் கண்டு மகிழ்ந்த காஷ்யபர் அவர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க காதரு தனக்கு ஆயிரம் நாகங்கள் (பாம்புகள்) பிறக்க வேண்டும் என்று கேட்க, வினதாவோ...

Temples in Malwa Region - 20

படம்
சாந்திப்பிரியா                                                        -  20 - வழியில்  சில  ஆலயங்கள்  சித்தவட்டை  தரிசித்தப் பின்னர் உஜ்ஜயினியில் இருந்துக் கிளம்பி தேவாஸ் சென்று  மதியம் அங்கிருந்துக் கிளம்பி இந்தூருக்குச் சென்றோம். வழியில் மீண்டும் பிலாவலி சிவன், பஞ்சமுக ஹனுமான் ஆலயம், காளி தேவியின் ஒரு ஆலயம் போன்றவற்றுக்குச் சென்று  பின்னர் இந்தூரில் இருந்த  ஒரு அனுமான் ஆலயம், கீதாபவன்  போன்ற  ஆலயங்களுக்கு சென்றப் பின் மாலை பெங்களூருக்கு  பயணித்தோம். இப்படியாக எங்கள் பயணம் இனிதே முடிந்தது. நான்கு வேதங்களையும் தன்  கையில்  வைத்து உள்ள பஞ்ச முக ஹனுமான் நர்த்தனம் ஆடும் காளி  தேவி சாமுண்டி தேவி  (இளையவள்) சாமுண்டி தேவி  ( மூத்தவள் )...

Temples in Malwa Region - 19

படம்
சாந்திப்பிரியா                                                        -  19 - சித்தவட்  ஆலயம்    அங்கிருந்துக் கிளம்பி நாங்கள் அடுத்துச் சென்றது சித்தவட் எனும்   ஆலயம். அதன் காலமும் பல ஆயிரம் முற்பட்டது என்கிறார்கள். இந்த ஆலயம் உஜ்ஜயினியின் இன்னொரு எல்லையில் சிப்ரா நதிக்கரையில்தான் உள்ளது.  கங்கைக்கு   யாத்திரை செய்து இறந்தவர்களுக்கு சிரார்தங்களை  செய்து இறந்து போனவர்களுடைய ஆத்மாக்களை மோட்ஷம் பெற வழி வகுப்பது போலவேதான்   இங்கு வந்து  இறந்தவர்களுக்கு சிரார்த்தம் செய்வார்கள். அதை பிரேத ஷீலா  என்கிறார்கள்.  அதாவது பிரேதங்களுக்கு விடுதலை தரும் இடம் என்பதாகும்.  கங்கைக்கு செல்வதும், கயா, விருந்தாவன் மற்றும் நாசிக் போன்ற இடங்களுக்கு  சென்று இறந்தவர்களுக்கு இறுதி கார்யங்கள...

Temples in Malwa Region - 18

படம்
சாந்திப்பிரியா                                                        -  18 - திரிவேணி சங்க  சனீஸ்வரர் ஆலயம்    மறுநாள் காலை  கிளம்பி முதலில் நேராக திரிவேணி சங்கத்தில் உள்ள சனீஸ்வர தேவர் ஆலயத்துக்கு சென்றோம். உஜ்ஜயினியி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஏழு அல்லது எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உஜ்ஜயினியின் எல்லையில்  இந்தூருக்கு செல்லும் பாதையில் உள்ள இந்த திரிவேணி சங்க சனி ஆலயத்தில் இரண்டு சனி தேவர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் ஏழரை நாட்டு சனி தேவர் மற்றும் இரண்டாமவர் இரண்டரை ஆண்டு சனிஸ்வரர். அவர்களோடு வினாயகரும் காட்சி தருகிறார்.   இப்படியாக  ஒரே சன்னதியில் மூவரும் இருப்பது வேறு  எங்கும் கிடையாது. அவர்களது சன்னதியை சுற்றி உள்ள தனித் தனி சன்னதிகளில் மற்ற நவக்கிரக தேவர்கள் அமர்ந்து உள்ளார்கள...