இடுகைகள்

Temples in Malwa Region - 16

படம்
சாந்திப்பிரியா                                                        -  16 - விக்ரமாதித்தியன் ஆலயம்  மன்னன் விக்கிரமாதித்தியன் ஆட்சியில் இருந்தபோது அவர்  தவறாது ஹரிசித்தி ஆலயத்துக்கு வந்து பூஜைகளை செய்வாராம். விக்ரமாதித்தனின் 32 பதுமைகளுடன் கூடிய சிம்மாசன ஆலயம் ஹரிசித்தி ஆலயத்தில் இருந்து பத்து மீட்டர் தள்ளி உள்ளது. அந்த காலத்திலேயே மனிதராக வாழ்ந்து வந்திருந்த ஒரு மன்னனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டு இருந்ததை வியப்புடன் பார்த்தோம். ஆனால் அவர் மனிதரல்ல விக்ரமாதித்தியன் மனித உருவில் வந்த ஒரு தேவ கணம் என்பதாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டு உள்ளது என்கிறார்கள். விக்ரமாதித்தியன் தேவலோக அதிபதியான இந்திரனின் மகனான கந்தர்வசேனனின் மகன் ஆவாராம். அவர் தனது ஐந்தாவது வயதிலேயே பன்னிரண்டு ஆண்டுகள் தவம் இருந்துள்ளார். அவருடைய வம்சத்தினர் ஆயிர...

Temples in Malwa Region - 15

படம்
சாந்திப்பிரியா                                                        -  15 - ...........ஹரிசித்தி   ஆலயம்  எனக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என நான் நினைத்திருந்த சிலரே எதிராக சிலர் சதி செய்து கொண்டு என் மீது வீணான பழிகளை சுமத்திக் கொண்டு  வாழ்க்கையில் நான் தோற்கடிக்கப்பட வேண்டும், அவமானப்பட வேண்டும் என்றும் நான் வாழ்க்கையில் அழிந்து   விட வேண்டும் எனவும்  ஆசைப்பட்டுக் கொண்டு, அதற்கான காலத்தை எதிர்பார்த்தபடி இருந்தார்கள். என்னை பல விஷயங்களிலும் சிலர் ஏமாற்றிக் கொண்டு இருப்பதையும் (அனைத்திலும் சில உறவினர்களையும் சேர்த்தே என்றாலும் அவர்களைப் பற்றிக் கூற முடியாத சூழ்நிலை )  கூறி விட்டு இனியாவது என்னை அவர்களுடன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறினார் ( அவர்கள் யார் என்பதை கோடிட்டுக் காட்டினார் ). என் ம...

Temples in Malwa Region - 14

படம்
சாந்திப்பிரியா                                                        -  14 - ஹரிசித்தி   ஆலயம் அடுத்து அங்கிருந்துக் கிளம்பி ஒய்வு எடுத்தப் பின் மாலையில் நாங்கள் சென்றது ஹரிசித்தி எனும் ஆலயம். இதுவும் தாந்த்ரீக சித்திகளைத் தரும், நம்மை சுற்றி உள்ள தீய சக்திகளை விரட்டி அடிக்கும் ஆலயம். பகலாமுகி ஆலயம் போலவே மிகவும் சக்தி வாய்ந்தது. மிகப் புராதமானது. அரசன் விக்ரமாதித்தியனால் கட்டப்பட்டது. மினால்பூர் என்று சொல்லப்படும் மியானி என்னும் இடத்தில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவால் கட்டப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்த ஹர்சித்தி மாதா கோவிலுக்குச் சென்று தேவியின் ஆசியைப் பெற்று வந்து உஜ்ஜயினியில் ஸ்வயம்புவாகத் தோன்றிய ஹரிசித்தி தேவிக்கு விக்ரமாதித்தியன் ஆலயம் எழுப்பினார் என்று சொல்கிறார்கள். மியானி என்னும் இடம் குஜராத்தில் போர்பந்தரிலிருந்து முப...

Temples in Malwa Region - 13

படம்
சாந்திப்பிரியா                                                        -  13 - சின்ன சின்ன ஆனால் புராணப் பெருமைகளைக் கொண்ட ஆலயங்கள்  'சார் தாம்'  ஆலயம் ஹிந்துக்களாகப் பிறந்தவர்கள் தத்தம் வாழ்க்கையில் ஒருமுறையாவது துவாரகா, பத்ரிநாத், ஜகன்னாத் பூரி மற்றும் ராமேஸ்வரம் என்கின்ற நான்கு முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை தரிசனம் செய்துவிட்டு வர வேண்டும் என்று ஆதி சங்கரர் அறிவுறுத்தி உள்ளதான கதை உண்டு.  அதற்குக் காரணம் நான்கு திசைகளில், வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ள பத்ரிநாத் பெருமான் (விஷ்ணு),  பூரி  ஜகன்னாத் (விஷ்ணு அவதாரம்), த்வாரகா (கிருஷ்ணர் பலராமன் ) மற்றும் சிவபெருமானின் ராமேஸ்வரம் உள்ள   அந்த நான்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை அந்த நான்கு இடங்களுக...

Temples in Malwa Region - 12

படம்
சாந்திப்பிரியா                                                        -  12 - சிந்தாமணி வினாயகர் ஆலயம்  அடுத்து அங்கிருந்துக் கிளம்பி நேராக உஜ்ஜயினியில் சிப்ரா நதிக்கரையில் இருந்த சிந்தாமணி வினாயகர் ஆலயத்துக்குச் சென்றோம். உஜ்ஜயினி நகரம் பல ஆலயங்களைக் கொண்டுள்ள மிகப் பழமையான நகரம். இங்குள்ள பல ஆலயங்கள் மந்திர தந்திர சக்திகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள். சிப்ரா நதிக் கரையில் அமந்துள்ள இந்த வினாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள வினாயகர் தானாகத் தோன்றிய ஸ்வயம்பு வினாயகர். அவருக்கு இருபுறத்திலும் அமர்ந்துள்ளவர்கள் அவருடைய மனைவிகளான ரித்தி மற்றும் சித்தி என்பவர்கள். ஸ்வயம்புவாகத் தோன்றியதாக கூறப்படும் சுமார் ஐந்து அடி நீளமும் மூன்று அல்லது நான்கு அடி பருமனும் உள்ள இந்த வினாயகரின் காலம் தெரியவில்லை....