இடுகைகள்

Badrinath - Ketharnath Temples - 8

படம்
முன் ஒரு காலத்தில் கைலாய மலையில் பரமசிவன் தனது மனைவியான பார்வதியுடன் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் காட்சி தந்து கொண்டு இருந்தார்.  பல்வேறு இடங்களிலும் இருந்து வந்திருந்த பல ரிஷிகள் அங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டுச் சென்றார்கள். அந்த நேரத்தில் பிருங்கி எனும் மாபெரும் முனிவரும் அங்கு வந்து இருந்தார்.  அவர் சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்.  சிவபெருமான் பார்வதிக்கு அனைவரும் பூஜை புனஸ்காரங்கள்  செய்து முடித்தப் பின் அனைவரும் சிவபெருமான் மற்றும் பார்வதியை வழிபடத் துவங்க பிருகு முனிவர் மட்டும் சிவபெருமானை மட்டுமே வணங்கி விட்டு பார்வதியை வணங்காமல் சென்றார். அதற்கான காரணத்தை அந்த முனிவரிடம் கேட்டபோது  பிருகுவும் சிவன் வேறு, பார்வதி வேறு என்று தான் கருதுவதால் சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் தாம் வணங்குவதில்லை என்றும் கூற அதனால் கோபமுற்ற பார்வதியும் அவருக்கு சாபம் தந்தார்.  அது மட்டும் அல்ல அங்கிருந்து கோபமாக எழுந்து சென்று விட்டார். அவர் மனதில் ஒரு ஏக்கம் ஏற்பட்டது.  சிவனுடன் சேர்ந்து பிரபஞ்சத்தையே  படைத்த பராசக்தியான ...

Badrinath - Ketharnath Temples - 7

படம்
கேதார்னாத் மான்மியம் பத்ரினாத்துக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கேதார்னாத்துக்கும் செல்லாமல் போக மாட்டார்கள். பத்ரி விஷ்ணு பகவான் அருள் புரியும் தலம் என்பதைப் போலவே கேதார்னாத் சிவபெருமான் அருள் புரியும் தலமாகும்.  திருமால் நரநாராயணராக கேதார்னாத்தில் சிவபெருமானை வேண்டித் தவம் இருக்க அவர் திருமாலுக்குக் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு நாராயணரும் சிவபெருமானை அந்த இடத்திலேயே ஜோதிர்லிங்கமாக  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டு இருக்க வேண்டும் என்ற தமது ஆசையை வெளிப்படுத்த, அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் தான் அங்கயே ஜோதிர் லிங்க வடிவத்தில் இருப்பேன் என்று அவருக்கு உறுதி கூறினார். அத்தகைய புனித தலத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் சிவபெருமானின் ஆலயத்தை ஸ்தாபனம் செய்தார். அங்கு சிவபெருமானை தியானித்தபடி விஷ்ணுவும் அமர்ந்து இருக்கிறார் என்பது ஐதீகமாகும். இன்னொரு கதையின்படி  பார்வதி சிவனுடன் ஐக்கியமாகி தானும் அவர் அவதாரத்தில் பாதியானவள் என்பதை உலகிற்கு  நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக கேதார்னாத்துக்குச்  சென்று தவம் இருந்து சிவபெருமானின் அருள...

Badrinath - Ketharnath Temples - 6

படம்
இத்தனை மகிமை வாய்ந்த பத்ரினாத் ஆலயம்  அமைப்பு எப்படியானது? அங்கு சென்று அவரை எப்படி வணங்குவது என்பதை எனக்கு விளக்குவீர்களா என அருந்ததி வசிஷ்டரிடம் கேட்க வசிஷ்டர் தொடர்ந்து கூறத் துவங்கினார்.   பத்ரினாத்  ஆலயத்தின் எதிரே அமைந்துள்ள இரண்டு பர்வதங்களில் நர மற்றும் நாராயணன் என்ற இரண்டு முனிவர்கள் தவம் இருந்தார்கள் அவர்கள் வேறு யாரும் அல்ல கிருஷ்ணரின் இரண்டு அவதாரங்களே. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணராக அவதரித்தவரும் அந்த யுத்தத்தில் பங்கு கொண்ட அர்ஜுனனுமே அவர்கள் ஆகும். அந்த இருவரும் தவம் இருந்த அந்த இந்த இரண்டு மலைகளையும் நர நாராயண மலையென்று அழைக்கின்றனர். நரநாராயணர்கள் என்பவர்கள் ஒருவரே ஆவார். அவரே விஷ்ணு பகவான். அவர் பத்ரினாத்தின் மலையின் அடிவாரத்தில் வெகு காலமாக தவத்தில் இருந்தபோது அவரை வெயிலும் மழையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தலை மீது ஒரு குடையைப்  பிடித்துக்  கொண்டு பாதுகாப்பாக நின்று கொண்டு இருந்தாள். ஒவ்வொரு யுகத்திலும்  நல்லவற்றைக் காக்க தாம் அவதாரம் எடுப்பேன் என பெருமாள் கிருஷ்ணாவதாரத்தில் கூறி இருந்தார்.  ஆகவே தானே...

Badrinath - Ketharnath Temples - 5

படம்
'ஸ்வாமி நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு பயமாக உள்ளது. எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் வர வேண்டும். அவை வராமல் தடுக்க என்ன உபாயம் உள்ளது?' என்று ஜனமேஜயன் கேட்டதும் வியாசர் கூறினார் 'ஜனமேஜயா உன் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் நீ பெற்று உள்ள சாபங்கள்தான். உன்னால் அவற்றை தடுத்து நிறுத்திக் கொள்ள முடியாது. அதற்குக் காரணம் நீ அழித்த சர்பங்களில் மகாவிஷ்ணுவிற்கு படுக்கையாக உள்ள ஆதிசேஷனின் வம்சாவளியினரும் அடக்கம். ஆகவே மகாவிஷ்ணுவின் சாபமும் உனக்கு உள்ளது. அது போலவே உன் சந்ததியினரால் விரட்டி அடிக்கப்பட்டு காயமுற்ற நாயும் பூர்வ ஜென்மத்தில் மஹா விஷ்ணுவின் உண்மையான பக்தையாக இருந்து சில காரணங்களினால் நாயாகப் பிறந்து இருந்தது.  விஷ்ணுவின் பரம பக்தையான அதன் தாய் கொடுத்த சாபமும் சேர்ந்து உள்ளதினால் உனக்கு சாப விமோசனமும் மகாவிஷ்ணுவின் அவதாரமான பத்ரினாதர் மூலமே கிடைக்கும் என்பது விதியாகும். ஆகவே நீ எச்சரிக்கையாக இருந்து பிராமணரைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷத்தை ஒரு பெண்ணால் அடையாமல் இருக்க முடியுமா என்று முயன்று பார். ஆனால் அது மிகவும் கடினம். நீ ஒரு காட்டுக்குச் சென்று அங்கு ஒரு பெண்ணின் மோக...

Badrinath - Ketharnath Temples - 4

படம்
இந்த பத்ரினாத்  தலத்தின் மகிமையைக் கூறும் இன்னொரு கதையும்  உண்டு.  அது என்ன? மகாபாரத யுத்தம் முடிந்து அனைவரும் ஊருக்குத் திரும்பினார்கள். பீஷ்மர், யுதிஷ்டர், தருமர், அர்ஜுனன் என அனைவரும் மறைந்து  விட்டார்கள்.  அவர்களின் சந்ததியினர் ஒவ்வொருவராக அரியணை ஏறிக் கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் பரீட்சித்து மன்னனின் மகனும், அர்ஜுனனின் பேரனுமான ஜனமேஜெயன் என்பவர் ஆட்சிக்கு வந்தார்.  அவர் அவ்வப்போது தானே தனக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டு அதனால் தவிப்பது உண்டு. தன் தந்தையைக் கொன்ற பாம்புகளின் வம்சத்தையே அழிக்க முடிவு செய்து சர்ப்ப யாகம் செய்து பாம்புகளை அழித்தார். நாக அரசன் தக்சகனையும் கொன்றபோது அவனது ராஜகுருவான அஸ்திகா என்பவரே அவனது வெறித்தனமான செயல்களை தடுத்து நிறுத்தி அவனுக்கு புத்திமதிகளைக் கூறி அதை தடுத்து நிறுத்தினார். ஜனமேஜெயன் அடிக்கடி யாகங்கள் மற்றும் வேள்விகளை செய்வது உண்டு. இந்தப் பழக்கம் அந்த கால ராஜாக்களுக்கு நிறையவே இருந்தது. இப்படி இருந்த நிலையில் ஒருமுறை ஜனமேஜயன் குருக்ஷேத்திரத்தில்  ஒரு பெரிய யாகத்தை  நடத்திக் கொண்டு...

Badrinath - Ketharnath Temples - 3

படம்
வசிஷ்டர் தொடர்ந்து கூறலானார். 'விஷ்ணுரதி எனும் நாரதர் வாழ்ந்திருந்த பூமிக்கு தென் பகுதியில் இருந்த இன்னொரு நகரத்தில் சங்கரகுப்தன் எனும் வைசியன் வாழ்ந்து வந்தான். அவன் வியாபாரம் செய்து பெரும் பொருள் சம்பாதித்தான். குணத்தால் நல்லவன் யாருக்கும் தீங்கு இழைக்காதவர் என்ற நற்பெயருடன் இருந்து வந்தார். அவனுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு எதுவும் இல்லை என்பதினால் மனம் புழுகினான். அவனுடைய மனைவியும் வாழ்கையை வெறுத்து வாழ்ந்து வந்தாள். ஒருநாள் இருவரும் சேர்ந்து தமது சந்தானங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்குக் கொடுத்து விட்டு  துறவறம் போய்  விடலாம் என முடிவு செய்தார்கள். ஆகவே ஒருநாள் அவர்கள் தமது வீட்டில் பெரிய பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அதில் அந்த ஊரில் இருந்த பண்டிதர்கள் அனைவரையும் அழைத்து போஜனம் செய்விக்கச் சொன்னார்கள். அதன் பின் கணவனும் மனைவியும் சேர்ந்து அனைவரிடமும் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் பட்டியல் போட்டுக்  கொடுத்து அவற்றை விற்றும், வேறு ஏற்பாடு செய்து கொண்டும் சமமாக பங்கு செய்து கொள்ளுமாறு கூறினார்கள். திடீர் என அவர்கள் செய்ய முன்வந்த க...

Badrinath - Ketharnath Temples - 2

படம்
வசிஷ்டர் தனது மனைவி அருந்ததிக்குக் கூறினார் '' தன் மீது உண்மையான பக்தி கொண்டவர்களுக்கு மகாவிஷ்ணு எப்படி பரிபூரணமான அருளைத் தருகிறார் என்பதை விளக்கும் விஷ்ணுரதியின் கதை பத்ரிநாத் எத்தனை புண்ணிய இடம் என்பதை தெளிவாகக் கூறும். அதைக் கேள் ''. வசிஷ்டர் தன்  மனைவி அருந்ததிக்கு   பத்ரிநாத்தின் மகத்துவம் பற்றிக் கூறினார்  முன் ஒரு காலத்தில் இந்த பூமியில் விஷ்ணுமனஸ் எனும் ஒரு ஏழை பிராமணன், சாஸ்திர சம்பிரதாயங்களைக் நன்கு கற்றறிந்திருந்தவர் வசித்து வந்தார்.  அவர் வைஷ்ணவ பக்தர்.  வாழ்வதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தவரினால் பிட்சை எடுத்தே  குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.  அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவர் மிகப் பெரிய வைஷ்ணவ பக்தர் என்பதினால் தனக்குப் பிறந்த மகனுடைய பெயரையும் விஷ்ணுரதி என வைத்திருந்தார். பிறந்த மகன் வளரத் துவங்கியதும், விஷ்ணுமனஸ் அவனுக்கு  விஷ்ணுவின் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும்  கற்றுக் கொடுத்து வளர்த்தார். தன்னைப் போலவே தன்  மகனும் வறுமையில் வாடிக் கொண்டு பிட்ஷை எடுத்தே வாழ்வ...