Thiruparasalur Veeratteswar Temple - 1

சாந்திப்பிரியா - I - மேலே கூறப்பட்டு உள்ள வீரபத்திரர் தியான ஸ்லோகத்தின் அர்த்தம் என்ன என்றால் ''மரகத மணி போன்ற ஒளியுடையவர், கிண்கிணி அணிந்த காதினர் , சூரியன், சந்திரன், நெருப்பு இவை மூன்றையும் முக்கண்களாய் கொண்டவர், சூலம், தண்டம் ஆகியவற்றை ஏந்தியவரான அழகிய வீரபத்திரரை வணங்குவோம்'' என்பது. மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதையில் சென்று செம்பொன்னார் கோயில் எனும் சிற்றூரை அடைந்தால் அங்கிருந்து சிறு பாதை ஒன்று பரசலூர் என்ற கிராமத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம். அங்கு சென்றால் திருப்பறியலூர் என்ற சிற்றூர் வரும். அதை கீழ்பரசலூர் என்றும் கூறுகிறார்கள். அங்குள்ளது வீரட்டேஸ்வரர் கோவில் எனும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். அதுவே வீரபத்திரருக்கு அமைந்துள்ள தனிக் கோவில் என்கிறார்கள். அனைத்து ஆலயங்களிலும் வீரபத்திரருக்கு தனி சன்னதி இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இங்கு மட்டுமே இவ்வளவு பெரிய அளவில் தனி ஆலயம் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முந்தைய கால ஆலயம் ஆகும் . இந்த ஆலயத்தின் வரலாறு தட்ஷனுடன் சம்மந்த...