இடுகைகள்

Village Deities - 5

படம்
கிராம தேவதைகள் - 5    புன் னை நல்லூர் மாரியம்மன்   புன்னை நல்லூர் மாரியம்மன் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] தஞ்சாவூருக்கு அருகில் உள்ளதே புன்னைநல்லூர் என்ற இடம். சோழர்கள் ஆண்ட காலத்தில் இங்கு ஒரு மாரியம்மன் ஆலயம் இருந்துள்ளது. ஆனால் அது காலப் போக்கில் மறைந்து விட்டதின் காரணம் விளங்கவில்லை. 1680 ஆம் ஆண்டு தஞ்சாவூரை வெங்கோஜி என்ற மராட்டிய மன்னன் ஆண்டு வந்தார். அவர் சமயபுரம் மாரியம்மனை பெரிதும் போற்றி வணங்கியவர். ஒருநாள் இரவு அவர் சமயபுரத்துக்கு கிளம்பிச் சென்றார். நேரம் அதிகமாகி ஆலயம் மூடப்பட்டு விட்டதினால் சமயபுரம் ஆலயத்தின் வாசலில் படுத்து உறங்கி விட்டார். அவர் கனவில் மாரியம்மன் தோன்றி தன்னை வணங்க இனிமேல் அவர் சமயபுரத்துக்கு வரத் தேவை இல்லை எனவும், தான் புன்னை நல்லூரில் ஒரு புற்றில் புதைந்து இருப்பதாகவும் கூறினாள். அவர் காலையில் எழுந்து உடனேயே புன்னை நல்லூருக்கு கிளம்பிச் சென்று மாரியம்மன் கூறிய இடத்தில் இருந்த புற்றை கண்டு பிடித்து அதை தோண்டி மாரியம்மனை எடுத்தார். பிறகு அங்கேயே அவளுக்கு மா...

Village Deities - 4

படம்
கிராம தேவதைகள் - 4 கற்குன்றின் மீதுள்ள மாவூத்து வேலப்பர் ஆலயம் செல்லும் முகப்பு    மாவூத்தூ  வேலப்பர் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] தமிழ்நாட்டில் தேனீ மாவட்டத்தில் ஆண்டிப்பட்டியில் இருந்து பத்தொன்போது கிலோ தொலைவில் உள்ளதே மாவூத்தூ கிராமம். அங்குள்ள மலையில் வேலப்பர் ஆலயம் உள்ளது. அது மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும். பலியார் என்ற இனத்தவர் அங்கு வந்து பூமிக்கு அடியில் வளரும் கிழங்குகளை எடுத்துச் செல்வது உண்டு. அப்படி ஒருமுறை அவர்கள் வந்தபோது அவர்களுக்கு பூமியில் ஒரு முருகன் சிலை கிடைத்தது. அதை அவர்கள் அங்கேயே பிரதிஷ்டை செய்து வைத்து பூஜை செய்து தமது குல தெய்வமாக வழிபட்டனர். அங்கு ஒரு மாங்காய் மரமும் உள்ளது. அதன் அடியில் இருந்து வழியும் ஊற்றினால் அங்கு தண்ணீர் பஞ்சமே இல்லை என்பதினால் அதை மாவூத்தூ என்று அழைகின்றனர். அந்த நீரில் குளித்தால் அனைத்து தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளும் விலகுமாம். அந்த ஊற்று தண்ணீரை ஆலயத்துக்கு மட்டுமே உபயோகிக்கின்றனர். அதனருகில் கருப்பண்ணஸ்வாமி ஆலயம் உள்ளது...

Village Deities - 3

படம்
கிராம தேவதைகள் - 3       3 படம் : http://www.pbase.com/neuenhofer/image/121939141 மேலே உள்ள படம் சேலத்தின் அருகில் உள்ள மாலூர் எனும் கிராமத்தில்  காணப்படும் கிராம தேவதையான  கருப்பஸ்வாமியின் சிலைகள்     [ இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'  (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம  தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி  தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப்  பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து  கிராம தேவதைகள்  என்ற புத்தகத்தை  வெளியிட்டு உள்ளார்.  அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில்  உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார். அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ] சமணமலை ஐயனார்  நாகமலை கருப்பஸ்வாமி [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] தமிழ்நாட்டில் மதுரைப் பகுதியில் ஒரு காலத்தில் ஜைன மதம் தலை த...

Village Deities - 2

படம்
கிராம தேவதைகள் -2   படம் : http://www.pbase.com/neuenhofer/image/122496652 மேலே உள்ள படம் சேலத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில்  காணப்படும் மாரியம்மன் என்ற பெயரில் உள்ள கிராம தேவதையின் சிலை [ இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'  (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம  தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி  தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப்  பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து  கிராம தேவதைகள்  என்ற புத்தகத்தை  வெளியிட்டு உள்ளார்.  அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில்  உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார். அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ] மூலன்குடி  'பொய் சொல்லா  மெய்யார்'  மற்றும் 'பத்திர காளி' [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பொன்னமராவதிக்கு அருகில் உள்ளதே மூலன்குட...

Village Deities -1

படம்
கிராம தேவதைகள் படம்  பற்றிய விளக்கம் :     கும்பகோணத்துக்கு  அருகில் உள்ள சித்தாடி எனும்  கிராமத்தில் கத்தாயி அம்மன் எனும் ஆலயம் உள்ளது.  பலருக்கும் குல தெய்வ  ஆலயமான  அது  முருகனின் மனைவியான  வள்ளி தேவியின் ஆலயம் .  அந்த ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில்  உள்ள கிராம தேவதைகளின் சிலைகள்  மேலே உள்ளவை. முன்னுரை  கேரளாவின் சேலக்காரா எனும் ஊரை சேர்ந்த திரு P.R. ராமச்சந்தர் என்பவர் Indian Institute of Horticultural Research என்ற அலுவலகத்தில் விஞ்ஞானியாக பணியில் இருந்தப் பின்னர் 2000 மாவது ஆண்டில் ஒய்வு பெற்றுள்ளார். அவருடைய வயது 70துக்கும் அதிகம். எழுதுவது அவருடைய ஒரு பொழுதுபோக்கு.தற்போது அவர் கர்நாடகாவின் பெங்களூரில் வசித்து வருகிறார். பல ஸ்தோத்திரங்கள், கர்நாடக கீர்த்தனைகளின் அர்த்தங்கள், கேரளாவின் ஆலயங்கள், குழந்தைகளுக்கான கதைகள் மற்றும் கிராம தேவதைகள் என பல படைப்புக்களை ஆங்கிலத்தில் தந்துள்ளார்.      திரு P.R. ராமச்சந்தர் அவருடைய கிராம தேவதைகளின் தொகுப்பை தமிழாக்கம...

Thirupoovana Mahathmiyam - 10

படம்
தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் புத்தமதமும் பிற  மதங்களும் பெருமளவு தலை தூக்கத் துவங்கி இருந்தன. தென் பகுதிகளில் ஆண்டு வந்த மன்னர்களில் பாண்டிய வம்சத்து மன்னர்கள் இந்து மதத்தை விட்டு விலகி புத்த மற்றும் சமண மதக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொள்ளத் துவங்கினார்கள் அதனால் பல பிரச்சனைகள் தோன்றலாயின. அந்த நிலையில் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னன் பெருமளவு பிற சமய மாறுதலுக்கு காரணமாக அமைந்தபோது அங்கிருந்தவர்கள் திருநாவுக்கரசரை  பாண்டிய நாட்டுக்கு வந்து அங்கு நிலவிய சூழ்நிலையை மாற்ற உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானின் பக்தரான திருநாவுக்கரசரும் மதுரையை நோக்கி வரலானார். அவர் திருப்பூவண எல்லையை அடைந்தபோது வைகை ஆற்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது.   வைகை ஆற்றை நோக்கிச் சென்றவர் நிலை தடுமாறினார். அதற்க்குக் காரணம் அந்த ஆற்று மணலைக் கடக்க முயன்றபோது அவர் எங்கு நோக்கினாலும் அந்த மணல் பகுதி அனைத்துமே சிவலிங்கங்களை கொண்ட பூமியாகவே காட்சி அளித்தன.  அவரால் அந்த மண்ணில் நடந்து செல்ல முடியவில்லை....

Thirupoovana Mahathmiyam - 9

படம்
சூதகர் தொடர்ந்து கூறலானார் ''நீங்கள் அனைவரும் ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். சாதாரணமாக தேவி ஆலயங்களை தவிர வேறு எந்த ஆலயத்துக்கு சென்றாலும் முதலில் விநாயகரை வணங்கியப் பின்னர் அங்குள்ள ஆலய தேவியை வணங்கிய பின்னரே மூலவர் யாராக இருந்தாலும் - சிவன், விஷ்ணு போன்றவர்கள்- அவர்களை வணங்குவார்கள்.  இது விதியல்ல என்றாலும் ஒரு நடைமுறையாக இருந்துள்ளது என்பதின் காரணம் தாயே முதல் தெய்வம் என்பார்கள். திருப்பூவாணத்திலோ கணபதியை துதித்தப் பின்னர் முதலில் சிவபெருமானை வணங்கித் துதித்தப் பின்னர்தான் தேவியையும் மற்றவர்களையும் வணங்க வேண்டும். அப்படி செய்யாமல் தேவியை முதலில் வணங்குபவர்களுக்கு ஒரு அந்தணனைக் கொன்றது போன்ற கொடிய பாபங்கள் வந்து சேரும்.   இந்த தரிசன விதி வந்ததின் காரணம் ஒரு மன்னன் செய்த தவறினால் சிவபெருமான்   கோபம்   அடைந்து  அப்படி ஒரு விதியை நிர்ணயித்தார் என்பதே.  அந்தக் கதையைக் கேளுங்கள் '' எனக் கூறி விட்டு அந்தக் கதையை கூறத் துவங்கினார். ''பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பகுதியில் ஆட...