Village Deities - 5

கிராம தேவதைகள் - 5 புன் னை நல்லூர் மாரியம்மன் புன்னை நல்லூர் மாரியம்மன் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] தஞ்சாவூருக்கு அருகில் உள்ளதே புன்னைநல்லூர் என்ற இடம். சோழர்கள் ஆண்ட காலத்தில் இங்கு ஒரு மாரியம்மன் ஆலயம் இருந்துள்ளது. ஆனால் அது காலப் போக்கில் மறைந்து விட்டதின் காரணம் விளங்கவில்லை. 1680 ஆம் ஆண்டு தஞ்சாவூரை வெங்கோஜி என்ற மராட்டிய மன்னன் ஆண்டு வந்தார். அவர் சமயபுரம் மாரியம்மனை பெரிதும் போற்றி வணங்கியவர். ஒருநாள் இரவு அவர் சமயபுரத்துக்கு கிளம்பிச் சென்றார். நேரம் அதிகமாகி ஆலயம் மூடப்பட்டு விட்டதினால் சமயபுரம் ஆலயத்தின் வாசலில் படுத்து உறங்கி விட்டார். அவர் கனவில் மாரியம்மன் தோன்றி தன்னை வணங்க இனிமேல் அவர் சமயபுரத்துக்கு வரத் தேவை இல்லை எனவும், தான் புன்னை நல்லூரில் ஒரு புற்றில் புதைந்து இருப்பதாகவும் கூறினாள். அவர் காலையில் எழுந்து உடனேயே புன்னை நல்லூருக்கு கிளம்பிச் சென்று மாரியம்மன் கூறிய இடத்தில் இருந்த புற்றை கண்டு பிடித்து அதை தோண்டி மாரியம்மனை எடுத்தார். பிறகு அங்கேயே அவளுக்கு மா...