இடுகைகள்

Chithambara Manmiyam -12

படம்
சாந்திப்பிரியா பாகம்-12 காளியின் கர்வபங்கம் அடங்கியக் கதை   ஒரு முறை சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகின்றது. நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை ' சக்தி இல்லையேல் சிவனும் இல்லை' என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சபித்து விடுகிறார். சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி அழுது புலம்பி தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொள்ள சிவன் கூறினார் ' இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களின் சார்ப்பில் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். அப்போது நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். அங்கு  உன்னுடன் சேர்ந்து நடனமாடி உன்னை என்னுடன் மீண்டும் அழைத்துக் கொள்வேன்'. காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களை துன்புறுத்தி வரலானான். தேவர்களும் ரிஷி முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் ...

Chithambara Manmiyam - 11

படம்
சாந்திப்பிரியா பாகம்-11 சோழ மன்னன் அமைத்த ஆலயம் காலம் ஓடியது. வியாக்கிரபாத முனிவர் ஆணைப்படி இரண்யவர்மர் நடராஜப்  பெருமானுக்கு (அங்கு நடனம் புரிந்த சிவபெருமானுக்கு - அது தனிக் கதை ) திருவம்பல ஆலயத்தையும், திருமூலாடேஸ்வரருக்கு ஒரு திருக்கோவிலும், தில்லை வாழ் அந்தணர்களுக்கு வீடுகளும் கட்டுவித்து அவர்களைக் குடியேற்றினார். பதஞ்சலி முனிவரைக் கொண்டு சிவகணப்படி நியமங்களை எழுதச் செய்து அதை யானை மேல் ஏற்றி தில்லைக்  கோவிலை வலம்  வரச் செய்தப் பின் கனகசபைக்கு எடுத்துச் சென்று  பூஜா விதிகளை அமைத்தார். நித்ய பூஜை, ஆண்டு பூஜை,  ஆணி உற்சவம், பவித்திரம் சாத்துதல்,  ஆடி நீர் விளையாட்டு உற்சவம், மார்கழி மற்றும் தைபூச திருப்பாவாடை போன்றவற்றை விதிப்படி செய்ய ஏற்பாடுகளை செய்தார். இப்படியாக சோழ மன்னன் இரண்யவர்மானால்  சிவாலயம் அமைக்கப்பட்டு இருந்தாலும், பூமியிலே முதன் முதலாக தோன்றிய திருக் கோவிலாக சிதம்பரமே இருந்தது என்பதின் காரணம் கட்டிடம் என்ற அமைப்பில் அங்கு சிவாலயம்  சோழ மன்னன் காலத்தில் தோன்றினாலும், அந்த தில்லை வனத்தில் காலம...

Cithambara Manmiyam - 10

படம்
சாந்திப்பிரியா பாகம்-10 இரண்யவர்மர்  சோழ மன்னனான கதை தில்லையில் இருந்த மூவாயிரம் அந்தணர்களும் அந்தர்வேனிக்கு சென்றார்கள். இரண்யவர்மனும்  வியாக்கிரபாத முனிவரது இரண்டாவது மகனைப் போலவே  இருந்து கொண்டு அனைவருக்கும் தொண்டு செய்து கொண்டு இருந்தவண்ணம் அவர்களுடன் இருந்து வந்தார். இப்படி இருக்கையில் கெளட தேசத்தில் ஆட்சியில் இருந்த மனு மன்னன் மரணப் படுக்கையில் இருந்தார். ஆகவே தனது ராஜ்யத்தை மூத்தக் குமாரனான சிங்கவர்மனிடம்  ஒப்படைக்க விரும்பினார்.  அவர் சிவபெருமானின் அருளினால் தில்லையில் உடல் கோளாறு நீங்கி சேவை செய்து கொண்டு இருந்த நிலை அவர் செவியையும் எட்டி இருந்தது என்பதினால் இனி ராஜ்ய பாரத்தை தனது மூத்த மகனான சிங்கவர்மர்  எனும் இரண்யவர்மர்  ஏற்க வேண்டும்  என எண்ணினார். ஆனால் அவர் இருந்த  இடத்துக்கு தம்மால் செல்ல முடியவில்லை என்பதினால் வசிஷ்ட முனிவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டு சுவர்க்கத்தை அடைந்தார். மனு மன்னன் மரணம் அடைந்தப் பின் அவரது இறுதிக் கிரியைகளை இளைய மகன்கள் மூலம் செய்து கொடுத்தப் பின், தற்...

Chithambara Manmiyam - 9

படம்
சாந்திப்பிரியா பாகம்-9 சிங்கவன்மர் இரண்யவர்மர் ஆனக் கதை அதன் பின் ஒருநாள் அந்த வேடனிடம் தான் பூமியிலே உள்ள சிவ ஸ்தலங்களை வழிபட்டுக் கொண்டு இருப்பதாகவும் அந்தப் பகுதியை சுற்றி வேறு எங்கும் வழிபடும் தலம் உள்ளதா எனக் கேட்டார்.  அவனும் அவரை தில்லை வனத்துக்கு அழைத்துப் போவதாகவும், அங்கு உள்ள  முனிவரை சந்தித்தால் அந்த இடத்தின் மேன்மையை அவர் கூறுவார் என்று கூறியப் பின்  யோகத்திலே அமர்ந்திருந்த வியாக்கிரபாத முனிவர் இருந்த இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றான். வியாக்கிரபாத முனிவரைக் கண்ட சிங்கவர்மர்  அவரை நமஸ்கரித்து கண்களில் கண்ணீர் தழும்ப அவரிடம் தனது வரலாற்றை எடுத்துரைத்தார். தாம் உடல் கோளாறு கொண்டதினால் அரசாளத் தகுதி இன்றிப் போய்விட்டதாகவும், ஆகவே பல இடங்களுக்கும் சென்ற வண்ணம் குறைந்த பட்ஷம் முக்தி இன்பத்தையாவது பெறமுடியுமா என்பதற்காக  இடமிடமாகச் சென்று சிவபெருமானை தரிசனம் செய்து கொண்டு வருவதாகவும்,  இங்கும் முக்தி இன்பம் (மோட்ஷம் பெறுவதற்கான வழி முறை ) கிடைக்குமா என்பதை அறிந்து கொள்ளவே வந்ததாகவும் கூறினார். அதைக் கேட்...

Chithambara Manmiyam - 8

படம்
சாந்திப்பிரியா பாகம்-8 சிங்கவன்மர்  கதை இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காமல் இன்னொருவரும் தில்லைவனத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தார். இந்த பிரபஞ்சத்தை சிவபெருமான் படைத்தபோது சூரியனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் மனு மற்றும் யமன் என்பவர்கள் ஆவர். பாவங்கள் செய்தவரை பூமியிலே தண்டிக்க மனுவும், இறந்தப் பின் அவர்கள் செய்த பாவத்துக்கு தண்டனைத் தர யமனும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள். மனுவானவர் இமயமலையின் தெற்கே உள்ள கெளட தேசத்தில் ஆட்சியில் இருந்தார். அவர் வம்சத்தை சேர்ந்த நான்கு மனுக்கள் ஆட்சி புரிந்து மறைந்தப் பின் ஐந்தாம் மனுவிற்கு இரண்டு மனைவிகள் அமைந்தார்கள் . அவர்களில் மூத்தவளுக்கு உடல் முழுவதும் சிங்கம் போல இருக்க சிவந்த தேகத்தைக் கொண்ட சிங்கவர்மர் என்ற பிள்ளையும், இளையவளுக்கு பேரழகான பிள்ளையாக தேவவர்மனும் பிறந்தார்கள். உடல் முழுவதும் சிங்கம் போல தேகத்தைக் கொண்ட சிங்கவர்மர், அந்த உடல் கோளாறினால் ஆளுமைக்கு தகுதியானவனாக இல்லை என்பதினால், இனி இந்த ராஜ்யத்தில் இருந்து அவமானப்படக் கூடாது என எண்ணினான். ஆகவே ராஜ்யத்தில் அவமானமான தோற்...

Chithambara Manmiyam - 7

படம்
சாந்திப்பிரியா பாகம்-7 பிரும்ம தேவர் செய்த யாகம் வியாகிரதபாதா முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் போன்றோரும் முனி ரிஷிகளும் தில்லை வனத்திலே சிவபெருமானை தரிசனம் செய்து கொண்டிருந்த வேளையிலே பிரும்ம தேவர் கங்கைக் கரையில் ஒரு யாகத்தை செய்யத் துவங்கி இருந்தார். ஆகவே தில்லையில் வாழ்ந்து வந்த அந்தணர்களையும் முனிவர்களையும் அதற்கு அழைத்து வருன்மாறு நாரத முனிவரை அவர் தில்லை வனத்துக்கு அனுப்பினார். அங்கு சென்று அனைவரையும் அழைத்த நாரத முனிவரிடம் அந்தணர்களும், முனிவர்களும் 'மாபெரும் முனிவரே, நாங்கள் இந்த தில்லை வனத்திலே ஆனந்தமயமான அமிர்தம் பருகுவதைப் போல போன்ற காட்சியை ரசித்துக் கொண்டு இருப்பதினால், இதை விட மேலானது எதுவுமே இருக்க முடியாது  என்பது தெளிவாகிறதினால் , உங்கள் அவிர்பாகத்தை ஏற்க எம்மால் வர இயலாது'  எனப் பணிவோடு கூறியப் பின் நடந்த இனிய நிகழ்ச்சிகளை விவரமாக எடுத்துக் கூறினார்கள். அன்புடன் அவரை வழி அனுப்பினார்கள். 'அடடா...இவர்கள் கூறுவதைப் பார்த்தால் நானும் அல்லவா அந்த அற்புதத்தைக் காணாமல் இத்தனை நாளும் இருந்துள்ளேன்.  ஆகவே உடனே சென்று ...

Chithambara Manmiyam - 6

படம்
சாந்திப்பிரியா பாகம்-6 சிவபெருமான் தந்த தரிசனம் தைபூசம் வியார்கிழமை அன்று விஷ்ணு பகவான் ஆதிசேஷனுக்கு வாக்களித்திருந்தபடி மதிய வேளையில், ஆயிரம் முகத்தைக் கொண்டவர் எனக் கூறப்பட்ட பானுகம்பர் ஆயிரம் சங்கை ஊத, ஆயிரம் தோள் கொண்டவன் என வர்ணிக்கப்படும் வாணாசுரன் முரசொலிக்க, பஞ்ச துந்துபி ஒலியும் வேத கானமும் முழங்க ஞான சபையிலே சிவபெருமான் தனது இடப்புறத்தில் உமா தேவியோடு அனைவருக்கும் காட்சி தந்தார். வியாக்கரபாத முனிவர், பதஞ்சலி முனிவர், உபமன்யு முனிவர் மற்றும் பிரும்மா, விஷ்ணு என கடவுட்கள், ஆயிரமாயிரம் தேவர்கள், மூவாயிரம் அந்தணர்கள் என அனைவரது மத்தியிலும் தோன்றிய சிவபெருமானின் எழில் தோற்றத்தைக் கண்ட அனைவரும் மெய் சிலிர்த்து, நெஞ்சம் நெகிழ, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி ஓட சிவனந்தம் எனும் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள். அப்போது பதஞ்சலி முனிவர் கூறினார் 'எம்பெருமானே, இந்த ஞான சபையிலே உமாதேவியோடு இன்று முதல் எக்காலமும் பூவுலகில் உள்ள ஆன்மாக்களுக்கு (பூமியில் உள்ள மனிதப் பிறவிகளுக்கு) உம்முடைய ஆனந்த காட்சியை காட்டியவாறே வர வேண்டும்' என்று ...