இடுகைகள்

Kathirkaman Temple, Sri Lanka - Pictures

படம்
    இலங்கை கதிர்காம      ஸ்கந்த முருகன்  ஆலய படங்கள்      சன்னதிக்கு முன்னால்  உள்ள திரை  சீலையில் உள்ள  உருவம்   படம் நன்றி :   http://www.panippulam.com   ஆலயத்துக்கு  முன்னால்  உள்ள வேல்   படம் நன்றி :   http://www.panippulam.com     சன்னதிக்கு  உள்ளே உள்ள  பேழையில்   உள்ளதாக நம்பப்படும்  சட்கோண யந்திரம்    படம் நன்றி :   http://www.panippulam.com    கதிர்காம ஆலயத்தை  சுற்றி உள்ள  இடத்தின் அமைப்பு   படம் நன்றி :   http://kataragama.org/tamil/pathmanathan.htm       சன்னதிக்கு  முன்னால்  அலமாட்டி  அம்மாக்கள்  செய்யும்  விளக்கு பூஜை   படம் நன்றி :   http://kataragama.org/tamil/pathmanathan.htm

Kathirkaman Temple, Sri Lanka -7

படம்
இலங்கை கதிர்காம  ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு சாந்திப்பிரியா பாகம்-7 கதிர்காமனில் நடைபெறும் வருடாந்தர கொடியேற்ற விழாவின்போது ஸ்ரீ லங்காவின் ஜாப்னா பிராந்தியத்தில் உள்ள மற்றொரு மிகப் பழைய ஆலயமான செல்வசன்னதி ஆலயத்தில் இருந்து முருகனை -வேல் வடிவிலானவர்- கதிர்காமனுக்கு எடுத்துச் செல்வார்கள். அங்கு நடைபெறும் கடைசி நாள் விழாவான தீர்த்த விழா முடிவடைந்ததும், அதை மீண்டும் திரும்ப எடுத்துச் செல்வார்கள்.  கதிர்காமனில் தினை மாவில் தேனைக் கலந்து  செய்த மாவைக் கொண்டு மாவிளக்கை படைக்கின்றார்கள். அந்த மாவின் மீது சிறு விளக்கை ஏற்றி வைத்து வழிபட்டப் பின் அந்த விளக்குகள் அணிந்ததும் அந்த மாவை பிரசாதமாக அங்குள்ள பக்தர்களுக்குத் தருவார்கள். தினை மாவை அதற்கு எதற்காக உபயோகிக்கிறார்கள் என்றால்  தினை நிலத்தில்தான் வள்ளி அம்மையுடன் முருகப் பெருமானின்  காதல் துவங்கி அது திருமணத்தில் முடிந்தது. அதனால்தான் வள்ளி அம்மனின் ஆறுகள் கிடைக்க  அதை பயன் படுத்துகிறார்கள். பெரிய அளவிலான விளக்கை ஏற்றினால் அது பன்னிரண்டு திரிகளைக் கொண்ட விளக்காக இருக்குமாறு பார்த்த...

Kathirkaman Temple, Sri Lanka- 6

படம்
இலங்கை கதிர்காம  ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு சாந்திப்பிரியா பாகம்-6   அந்த ஊர்வலத்தில்தான் பரம ரகசியமாக பெட்டியில் வைக்கப்பட்டு உள்ள யந்திரத்தை யானையின்  முதுகில் ஏற்றி   எடுத்துச் செல்கிறார்கள். அதுவே முருகனாக பாவிக்கப்படுகிறது. பௌர்ணமிக்கு முதல் நாள் அன்று எடுத்துச் செல்லப்படும் அந்தப் பேழை வள்ளி அம்மனின் ஆலயத்தில் இரவு முழுவதும் வைக்கப்படுகிறது.  அன்று இரவு முருகப் பெருமான் வள்ளியுடன் கணவன்-மனிவியாக ஆனந்தமாக இருப்பதாக ஐதீகம் உள்ளது. அடுத்த நாள் காலையில் மணமக்கள் இருவரும் -முருகனும் வள்ளியும்- மேனிக் கங்கை நதியில்  நீராடுவதான ஐதீக சடங்கு நடத்தப்பட்டு முடிந்தவுடன் வள்ளி ஆலயத்துக்கு மீண்டும் சென்றப் பின் அங்கிருந்து அந்தப் பேழை மீண்டும் கதிர்காமன் ஆலயத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அந்த பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்தி வாய்ந்ததாக கூறப்படும்  அந்த யந்திரத்தைக் கொண்ட பேழை வெண் வஸ்திரத்தால் மூடி வைத்திருந்து யானையின்  மீது வைத்...

Kathirkaman Temple, Sri Lanka- 5

படம்
இலங்கை கதிர்காம  ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு சாந்திப்பிரியா பாகம்-5   ஆனால் இன்றுவரை அந்தப் பேழை வைத்தது யார், அதில் யந்திரத்தை வைத்தது யார், எதற்காக அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற எந்த விவரமும் யாருக்கும் தெரியவில்லை. அதன் காரணமும் எங்குமே எழுதி வைக்கப்படவில்லை. கூறப்படுவது அனைத்துமே வாய்மொழிக் கதைகள்தாம். ஒரு வேலை கல்யாணகிரி ஸ்வாமிக்கு அடுத்தடுத்து வந்த வழித் தோன்றல்கள் அவற்றை அறிந்து இருக்கலாம். அவர்கள் மூலமே வாய்மொழிக் கதைகளும் தொடர்ந்திருக்கலாம். கல்யாணகிரி ஸ்வாமியின் காலம் முதலாகச் சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த தசநவமிப் பிரிவிலுள்ள வட இந்தியத் துறவிகளே தெய்வயானை அம்மன் கோயிலைப் பரிபாலனம் செய்கின்றனர். அவருக்குப் பின்பு கேஸபுரி ஸ்வாமிகள், சுராஜ்புரி ஸ்வாமிகள் மற்றும் பாலசுந்தரி என்ற பெண் துறவியும்  ஆலயத்தை பரிபாலித்து வந்துள்ளார்கள்.  அவர்களில் பாலசுந்தரி எனும் பெண் துறவி பற்றிக் கூறப்படும்  கதையும் அற்புதமானது. 1814-ம் ஆண்டுகளில்  வட இந்திய நாட்டை சேர்ந்த அரசன் ஒருவன் தனக்கு பிள்ளை இல்லாக் குறையைப் நீ...

Kathirkaman Temple, Sri Lanka- 4

படம்
இலங்கை கதிர்காம  ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு சாந்திப்பிரியா பாகம்-4 கல்யாணகிரி என்பவர் இந்தியாவின் வடநாட்டில் இருந்து கதிர்காமனுக்கு  வந்த பெரும் தபஸ்வி. அவர் இந்தியாவின் வட பகுதியில் இருந்த பத்து சன்யாச வம்சத்தினர்களில் ஒரு சன்யாச வம்சத்தை சேர்ந்தவர். தன்னை தவிக்க விட்டு  கதிர்காமத்துக்குச் சென்று வள்ளியுடன் தங்கி இருந்த ஸ்கந்தன் எனும் முருகனை திரும்பவும் தன்னிடம் (இந்தியாவுக்கு) அழைத்து வர வேண்டும் என்று முருகப் பெருமானின் மனைவியான தெய்வானை கல்யாணகிரி எனும் அந்த தபஸ்வியை கேட்டுக் கொண்டதினால் அவர் அவளுடைய தூதுவராக முருகனை தேடிக் கொண்டு இங்கு வந்தார் என்று கூறுகிறார்கள்.  ஆகவே தெய்வானையின் தூதுவராக கதிர்காமனுக்கு  வந்தவர் எங்கு தேடியும் முருகனை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே ஸ்கந்தனை வேண்டிக் கொண்டு அவரை நேரில் காண வேண்டும் என்பதற்காக சட்கோண யந்திரம் ஒன்றை அமைத்து சடாக்ஷரா என்ற மந்திரத்தை பிரயோஹித்து ஸ்கந்தனை வேண்டிக் கொண்டு பன்னிரண்டு ஆண்டு காலம் பெரும் தவத்தில் அந்த வனத்தில் அமர்ந்திருந்தார். சட்கோண யந்திரம் என்பது முருகப் ...

Kathirkaman Temple , Sri Lanka- 3

படம்
இலங்கை கதிர்காம  ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு சாந்திப்பிரியா பாகம்-3 உலகிலேயே விக்ரஹ ஆராதனை இல்லாமல், முருகனை வேல் வடிவிலும், ஜ்யோதி ஸ்வரூபமாகவும் வழிபடுவது இந்த ஆலயத்தின் விசேஷம் என்பது மட்டும் அல்ல, அங்குள்ள கதிர்காமனின் சன்னதியின் உள்ளே உள்ளதை வருடத்துக்கு ஒரு முறைதான் நமது கண்களினால் பார்க்கவே முடியும் என்பது ஆச்சர்யமூட்டும் செய்தியாகும். இந்த ஆலயத்தின் இன்னொரு அற்புதம் என்ன என்றால் கதிர்காம முருகனை தமிழர்கள் முருகன் என்று வழிபட, சிங்களவர்கள் மற்றும் புத்த மதத்தினர் அவரை கதிர்காம தேவியோ என்ற பெயரில் வழிபடுகிறார்கள். ஆகவே மூன்று சமூகத்தினரும் -தமிழர்கள், சிங்களவர் மற்றும் புத்த மதத்தினர்- ஒன்றிணைந்து போற்றும் கடவுளாக கதிர்காமன் உள்ளார். கதிர்காமனில் உள்ள முருகனை கலியுக வரதன் என்றும் கதிர்காமர் என்றும் கூறுவார்கள். மேலும் கதிர்காமனைப் பொறுத்தவரை அந்த ஆலயத்தில் வள்ளி தேவிக்கே அதிக முக்கியத்துவத்தையும் பெருமையும் கொடுக்கிறார்கள். காரணம் வள்ளியை கதிர்காமனில் இருந்த வேத்தா என்ற வேடுவ குலத்தவர்கள் வளர்த்து முருகனுக்கு மணமுடித்துக் கொடுத்ததினால் ...

Kathirkaman Temple- Sri Lanka-2

படம்
இலங்கை கதிர்காம  ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு சாந்திப்பிரியா பாகம்-2 முருகப் பெருமான் பிறந்த கதை அனைவரும் அறிந்ததே. சிவபெருமானின் முகத்தில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகளை வாயு பகவான் ஏந்திக் கொண்டு போய் கங்கை நதியில் போட, கங்கையோ அதைக் கொண்டு போய் சரவணப் பொய்கை எனும் குளத்தில் தள்ளி விட, முருகன் ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாகப் பிறந்தார். அவரை ஆறு கிருத்திகை தேவதைகள் எடுத்து வளர்த்து பார்வதியிடம் கொண்டு சென்று கொடுக்க, அவள் அந்த ஆறு குழந்தைகளையும் தன்னுடன் அணைத்துக் கொள்ள அவை அனைத்தும் ஒன்றாகி ஆறு முகத்தைக் கொண்ட ஒரு குழந்தை ஆயிற்று. அதுவே முருகன் அவதரித்த வரலாறு. அதன் பின் நாரதர் கொண்டு வந்து கொடுத்த மாம்பழத்தை உலகை மூன்று முறை சுற்றி விட்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே கொடுப்பேன் என்று கூறிய சிவபெருமானையும் பார்வதியையும் மூன்று முறை சுற்றி விட்டு வந்த விநாயகர் தாய் தந்தையை சுற்றுவது உலகை சுற்றியதற்கு சமம் ஆகும் என்று விளக்கி விட்டு தான் வெற்றி பெற்றதாகக் கூறி பழத்தைப் பெற்றுக் கொள்ள, அதனால் தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணிய முரு...