இடுகைகள்

Varagur Temple

படம்
வரகூர் ஆலயமும் நாராயண தீர்த்தரும் சாந்திப்பிரியா பூபதி ராஜன் என்ற சோழ மன்னனின் ஆட்சியில் இருந்த இடமே கீழ் தஞ்சாவூரில் உள்ள பூபதி ராஜபுரம் என்பது. அதுவே தற்போது வரகூர் என்று அழைக்கப்படுகிறது. வரகூர் தஞ்சாவூரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். இங்குள்ள வெங்கடேச பெருமான் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. பல ஆலயங்கள் ஸ்வயம்புவாகத் தோன்றியதாகக் கூறப்படும் தெய்வங்களின் சிலையை கொண்டுள்ளதாக உள்ளதினால் அவை புனித தீர்த்தங்களாக ஆகி உள்ளன. அவற்றில் காவேரியின் கிளை நதியான குடமுருட்டி நதிக்கரையில் அமைந்துள்ள, சோழர்கள் காலத்தை சேர்ந்த, எண்ணூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் புராதானமான ஆலயம் எனக் கூறப்படும் இந்தத் தலமும் ஒன்று.  இதை பூலோக வைகுண்டம் என்றும் கூறுகிறார்கள். இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் தனது மடியில் தாயாரை அமர்த்திக் கொண்ட கோலத்தில் உள்ளார்.  அற்புதமான சோழ மன்னர்கள் காலத்துக் கலையில் காணப்படும் அதை வீர நாராயணன் எனும் சோழ மன்னனே  பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.   இங்குள்ள வெங்கடேச பெருமான் ஸ்வயம்புவாகத் தோன்றியவர...

Thiruneermalai, Chennai

படம்
  திருநீர்மலை, சென்னை சாந்திப்பிரியா சென்னையில் இருந்து பல்லாவரம் சென்று அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சென்றால் வரும் திருநீர்மலையில் உள்ள சிறு குன்றின் மீது உள்ள வைஷ்ணவத் தலமே திருநீர்மலை என்ற ஆலயம் ஆகும். மலைப் பகுதியில் உள்ள ஆலயத்தின் கீழ் பகுதியில் உள்ளது நீர்வண்ணன் என்ற ஸ்ரீ ராமபிரான் ஆலயம் மலை மீதும், கீழுமாக உள்ள பெருமாள் விஷ்ணுவின்  ஆலயத்தில் வால்மீகி முனிவருக்கு விஷ்ணு பகவான் நான்கு தோற்றங்களில் காட்சி தந்ததாகக் கூறுகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயம் தோயகிரி சேஷ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. தோயா என்றால் தண்ணீர் என்று அர்த்தமாம். இந்த மலையை சுற்றி ஏரி போன்று தண்ணீர் தேங்கி இருந்ததினால் இதற்கு அந்தப் பெயர் வந்து இருந்துள்ளது.  சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்தது என்பதினால் அவர் ஆறு மாதங்கள் காத்திருந்து தண்ணீர் வடிந்ததும் அந்த ஆலயத்துக்கு சென்று உள்ளார் என்ற செய்தியில் இருந்து அன்று இருந்திருந்த நிலையைப் புரிந்து கொள்ள முடியும். ஆல...

Kengal Anjaneyar, Karnataka

படம்
கெங்கல் ஆஞ்சனேயர் ஆலயம்   சாந்திப்பிரியா  கனகதாசா மற்றும் புரந்தரதாசர் போன்றவர்களுக்கும் குருவான வியாச முனிவர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக வாழ்ந்தவர் . அவர் பல இடங்களிலும் ஹனுமான் ஆலயங்களைக் கட்டி உள்ளவர். அவரை பிரும்மா படைத்த ஸ்ரீ சங்கரகுமார்களின் வம்ச வழியில் வந்த முனிவர் என்றும், ஸ்ரீ சங்கரகுமாரர்களில் ஒருவரின் அவதாரம் என்றும் கூறுகிறார்கள். அந்த வியாச முனிவர் அதாவது வியாச ராயா எனவும் கூறப்படுபவர், நிறுவிய ஆலயமே கெங்கல் ஆஞ்சேநேயர் ஆலயம். ஹோசலா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படும் இந்த ஆலயம் பெங்களூரில் இருந்து மைசூருக்குச் செல்லும் வழியில் வரும் சென்னப்பட்டினத்திற்கு சுமார் ஐந்து கிலோ மீட்டர் முன்னதாகவே வரும் வண்டரகுப்பே எனும் கிராமத்தில் உள்ளது. ஆலயம் பிரதான சாலையின் சிறிது தூரத்திலேயே உள்ளது . யாரைக் கேட்டாலும் அந்த ஆலயத்திற்குச் செல்ல வழி காட்டுவார்கள். பெங்களூரில் இருந்து இந்த ஆலயம் உள்ள இடம் சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.   வியாச முனிவர்  சாதாரணமாக அனைத்து நகரங்களிலும் உள்ள அனைத்து ஹனுமா...