Tirupparamkundram Temple, Madurai

திருப்பரங்குன்ற வரலாறு ( தமிழ் பொழிபெயர்ப்பு : சாந்திப்பிரியா ) ( Read the Original Article in English in : Legends of Tirupparankunram by R.K. Das ) மதுரை ரயில் நிலையத்தின் தென்மேற்குப் பகுதியில் சுமார் மூன்று மைல் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். சுப்பிரமணியர் தான் தங்குவதற்கு புனித இடமாக தேர்ந்து எடுத்துக் கொண்ட ஆறு இடங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் மகத்துவம் என்ன என்றால் இங்குதான் அவர் இந்திரனின் மகளான தெய்வயானையை மணந்து கொண்டார். பராசர முனிவரின் ஆறு புதல்வர்களும் ஒரு சாபத்தின் விளைவாக சரவணா பொய்கை நதியில் மீனாகப் பிறந்து இருந்தார்கள். அவர்கள் சாப விமோசனம் பெற வேண்டும் என்றால் சுப்பிரமணியரிடம் வேண்டிக் கொள்ளுமாறு கூறப்பட்டு இருந்தார்கள். அவருடைய தரிசனம் கிடைத்ததும் அவர்கள் சாப விமோசனம் பெறுவார்கள் என்றும் அதனால் அவர் அசுரனான சூரபத்மனை அழித்தப் பிறகு திருப்பரங்குன்றத்துக்கு வருவார் எனத் தெரிந்ததும் அவருடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்து அவர்கள் அங்கு காத்துக் கிடந்தார்கள். தம்முடைய கடமையான சூரபத்ம சம்ஹாரத்தை திருச்செந்தூரில் ...