இடுகைகள்

Tirupparamkundram Temple, Madurai

படம்
திருப்பரங்குன்ற வரலாறு    ( தமிழ் பொழிபெயர்ப்பு  :   சாந்திப்பிரியா ) ( Read the Original Article in English in :   Legends of Tirupparankunram by R.K. Das ) மதுரை ரயில் நிலையத்தின் தென்மேற்குப் பகுதியில் சுமார் மூன்று மைல் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். சுப்பிரமணியர் தான் தங்குவதற்கு புனித இடமாக தேர்ந்து எடுத்துக் கொண்ட ஆறு இடங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் மகத்துவம் என்ன என்றால் இங்குதான் அவர் இந்திரனின் மகளான தெய்வயானையை மணந்து கொண்டார். பராசர முனிவரின் ஆறு புதல்வர்களும் ஒரு சாபத்தின் விளைவாக சரவணா பொய்கை நதியில் மீனாகப் பிறந்து இருந்தார்கள். அவர்கள் சாப விமோசனம் பெற வேண்டும் என்றால் சுப்பிரமணியரிடம் வேண்டிக் கொள்ளுமாறு கூறப்பட்டு இருந்தார்கள். அவருடைய தரிசனம் கிடைத்ததும் அவர்கள் சாப விமோசனம் பெறுவார்கள் என்றும் அதனால் அவர் அசுரனான சூரபத்மனை அழித்தப் பிறகு திருப்பரங்குன்றத்துக்கு வருவார் எனத் தெரிந்ததும் அவருடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்து அவர்கள் அங்கு காத்துக் கிடந்தார்கள். தம்முடைய  கடமையான சூரபத்ம சம்ஹாரத்தை திருச்செந்தூரில் ...

Deva Kumari- Divine Manifestation

படம்
நேபாள நாட்டின்  பெண் தெய்வம்    சாந்திப்பிரியா    ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறை உள்ளது. அதில் நமது அண்டை நாடான நேபால் நாடும் விதி விலக்கு அல்ல. நேபாளத்தில் நிறைய தெய்வங்கள், தேவதைகள், போதிசத்துவ பிறவிகள் என பலரும் வழிபடப்படுகிறார்கள். அங்குள்ள ஒரு வழிபாட்டில் ஒரு தேர்தெடுக்கப்பட்ட கன்னிப் பெண்ணை , தேவகுமாரி என்றப பெயரில் அவதார தெய்வமாக வழிபடுவதும் ஒன்று. அந்தக் கன்னிப் பெண்கள் துர்கையின் அவதாரம் எனப்படும் தலிஜூ பவானி எனும் தேவியின் அவதாரமாக கருதப்படுகிறார்கள். தலிஜூ பவானி என்பவளின் ஆலயம் காட்மாண்டுவில் உள்ளது. அந்த ஆலயம் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப் படுகின்றது. தலிஜூ பவானி தந்திர மந்திர சக்திகளைக் கொண்ட தேவி என்றும் அவள் தனது ஆலயம் உள்ள காட்மாண்டு பள்ளத்தாக்கை பாதுகாக்க தனது சக்திகளைக் கொண்ட ஒன்பது அவதாரங்களை படைத்து இருக்கின்றாள் என்றும் நம்புகிறார்கள். அந்த தலிஜூ பவானியின் அவதாரமாகவே ஒரு கன்னிப் பெண் நேபாலில் உருவாக்கப்பட்டு வணங்கப்படுகின்றாள். அவளை எதற்காக உருவாக்குகிறார்கள்? அதற்கு ஒரு கதை உள்ளது.    தலிஜூ ஆலயம்...

Evil Spirits- Part- 6

படம்
தீய ஆவிகள் , ஏவல்கள் சாந்திப்பிரியா பாகம்-6 இந்த பிரபஞ்சத்தில் நல்ல ஆவிகள், தீயவை மற்றும் துர்தேவதைகள் என மூன்று  பிரிவு உள்ளது என்று கூறினேன் அல்லவா. அவற்றின் தடங்களை கீழுள்ள படத்தில் காணலாம்.    மந்திரவாதிகள் பிடித்து வைத்துக் கொள்ளும் தீய  தேவதைகள் மூலம் நடைபெறும் நிகழ்வுகளை  பார்த்தோம்.  அது போல விண்வெளியில் சுற்றி அலையும் துர் தேவதைகள் அல்லது தீய ஆவிகள் என்ன செய்கின்றன? அவைகளே மந்திரவாதிகளை விட இன்னும் ஆபத்தானவை. முன்னரே நான் கூறினேன் அல்லவா, இந்த விண்வெளியில் சுற்றித் திரியும் துர்தேவதைகள் அல்லது தீய ஆவிகள் யாருடைய உடலிலாவது சென்று புகுந்து கொண்டு அவர்கள் மூலமாக தீமைகளை விளைவிக்கும். அவை  மனதில் ஒரே ஒரு நினைவு மட்டுமே இருக்கும். தான் பூமியில் இல்லாமல் பிரபஞ்சத்தின் வெளியில் சுற்றித் திரிவதினால் தானும் ஒரு கடவுளுக்கு சமம்.  ஆகவே தன்னையும்  மனிதர்கள் கடவுளை வணங்குவதைப் போலவே வணங்க வேண்டும்.  அப்படி தனக்கு உரிய மரியாதையைத் தராவிடில் அவர்களை நிம்மதியாக வாழ விடக்கூடாது.  அதனால்தான் அது பூமியில் உள்ள மனிதர்கள் எவருடைய உடலிலாவத...

Evil Spirits- Part- 5

படம்
தீய ஆவிகள் , ஏவல்கள் சாந்திப்பிரியா பாகம்-5 பில்லி சூனியம் என்பதெல்லாம் உண்மையா? அது உண்மை அல்ல வெறும் கட்டுக்கதை என்று நினைப்பவர்களும் உண்டு. இப்படி செய்யப்படுபவை மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள். ஆனால் அந்தக் கூற்று உண்மை அல்ல. பில்லி சூனியங்களினால் அவதிப்பட்டவர்களில் மாபெரும் மகான்களும் உண்டு என்கிறார்கள். அவர்களில் ஆதி சங்கரர், ராமானுஜர் போன்றவர்கள் உண்டு. மேலும் பாண்டிச்சேரி அரபிந்தோ  ஆஸ்ரமத்தின் அன்னை மற்றும் காஞ்சி மகாபெரியவாள் எனும் பரமாச்சாரியார் போன்றவர்கள் வாழ்கை  சரித்திரங்கள் மூலமும் பில்லி சூனியன்களைப் பற்றி அறிய முடிகின்றது. பரமாச்சாரியார் அப்படிப்பட்ட ஒரு மந்திரவாதியை கடிந்து கொண்ட நிகழ்ச்சி அவர் வாழ்கை சரித்திரத்தில் உள்ளது. ஒருமுறை பரமாச்சாரியாரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்து இருந்தாள். நெற்றி நிறைய  குங்குமம். பழுத்த சுமங்கலிப் போல இருந்தாள். ஆனால் அவள் செய்வினை செய்பவள். அவள் வந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தவுடன்  பரமாச்சாரியார் அங்கிருந்தவர்களிடம் ஒரு கூடை நிறைய எலுமிச்சம் பழங்களைக் கொண்டு வருமாறு கூறினார்கள். ஒர...

Evil Spirits -- Part - 4

படம்
தீய ஆவிகள் , ஏவல்கள் சாந்திப்பிரியா பாகம்-4 பில்லி-சூனியங்கள் மற்றும் துர்தேவதைகள், தீய ஆவிகள் போன்றவை எப்படி உருவாகின்றன என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அதுவும் முக்கியமாக துர்தேவதைகளைப் பற்றிக் கூறுவதற்கு முன்  சில தகவல்களைக் குறிப்பிட வேண்டி உள்ளது என்பதினால்தான் அவ்வப்போது இந்தக் கட்டுரையில் இதனுடன் சம்மந்தப்பட்ட பல மறைமுக, மற்றும் நேரடித் தொடப்பு தகவல்களைக் கூற வேண்டி உள்ளது.  அதைத் தொடர்ந்தே மூல கட்டுரையின் தகவல்களை எழுத  வேண்டி உள்ளது. ஒவ்வொரு ஆத்மாவும் பன்னிரண்டு பாதைகளைக் கடந்து  யமலோகத்துக்கு சென்றப் பின்னர்தான் அவற்றின் பாவ புண்ணியங்கள் கணக்கிடப்பட்டு அவற்றுக்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்கின்றன. ஆனால் அதில் ஒரு துணை பிரிவு உள்ளது.  ஆத்மாவாக மாறி மேலுலகம் சென்று கொண்டிருப்பதின்  இரண்டு ஜென்ம காலத்தின் முந்தையது காலத்தின் குற்றத்திற்காக ஒரு குறிப்பிட்ட தண்டனையை (பூர்வ ஜென்மத்தில்) பெற்றிருந்த சில ஆத்மாக்கள், பதிமூன்றாவது பாதைக்குள் உள்ள யமலோகத்துக்குள் நுழையவே முடியாது. அங்கு செல்வதற்கு முன்னரே அவை தீய ஆவிகளாகி அல்லல்படுகின்றன.  அத...

Evil Spirits- Part --3

படம்
தீய ஆவிகள் , ஏவல்கள் சாந்திப்பிரியா பாகம்-3  விண்வெளியில் பந்தங்களின் பாதையை  சுற்றி பெரும்  விண்வெளியே உள்ளது. அந்த விண்வெளியிலும் நல்ல ஆவிகள், தீய ஆவிகள், நல்ல தேவதைகள், துர் தேவதைகள்  என பலவாறான ஜீவன்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். ஆனால் அவற்றினால் அந்த வெற்றிடத்தில் ஒருவரை ஒருவர் தொட முடியாது. அங்குள்ள தீய ஆவிகள் அங்கு சுற்றித் திரியும் துர்தேவதைகளுடன் மட்டுமே தொடர்ப்பு கொள்ள முடியும். அது போல அடுத்த பிறவியை எடுக்க காத்துக் கொண்டு இருக்கும் அங்குள்ள நல்ல ஆவிகள் அங்குள்ள நல்ல தேவதைகளுடன் மட்டுமே தொடர்ப்புக் கொள்ள முடியும். இதுவும் தெய்வ நியதி. அதே சமயத்தில் தீய ஆவிகள் மற்றும், தேவதைகள் போன்றவர்கள் மட்டும்  அவரவர்களின் பந்தப் பாதையிலும் செல்ல முடியும்.  ஆனால் அடுத்தப் பிறவியை எடுக்கக் காத்திருக்கும் நல்ல ஆவிகளினால் அந்த பந்தப் பாதை எவற்றிலும் நுழைய முடியாது. ஆகவே நல்ல தேவதைகள், மற்றும் தீய ஆவிகள் போன்றவை  சில  பந்தப் பாதையில் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கும். அனைத்து தீய ஆவிகளுமே அந்த பந்தப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் என்ப...

Evil Spirits -- Part- 2

படம்
தீய ஆவிகள் , ஏவல்கள் சாந்திப்பிரியா பாகம்-2 மந்திரங்களின்  இப்படிப்பட்ட  ஊடுருவும்  சக்தியையே அதாவது மந்திர ஒலிகளுக்கு கட்டுப்பட்டு அதனால் மகிழ்வுற்று  அருள் புரியும் தெய்வங்களைப் போலவே, பல்வேறு தேவதைகளைப் தம்மிடம் பிடித்து வைத்துக் கொண்டே மந்திர சக்தியைப் ஒருவர் பெறுவார். அப்படி மந்திர சக்திகளைப் பெறுபவர் எதற்காக அவற்றை பெற நினைக்கின்றார்? சிலர் தாம் சித்தி அடைய வேண்டும் என்பதற்காக தெய்வங்களை ஆராதிக்கின்றார்கள் சிலர் தனக்கு தனிப்பட்ட  முறையில் ஆன்மீக  சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக சக்தி தேவதைகளை   ஆராதிக்கின்றார்கள்  சிலர் சில ஆன்மீகவாதிகள் மனித குல மேம்பாட்டிற்கான வழி முறைகளுக்குப் பயன்படுத்த அந்த தேவதைகளை ஆராதிக்கின்றார்கள் சிலர் தீய வழிகளில்  பயன்படுத்த (வியாபார நோக்கம்) தேவதைகளை வசியம் செய்கிறார்கள் ஆமாம் ஒருவருக்கு சக்தியைத் தருவது தெய்வமா இல்லை அவரது ஆவாஹன - அடிமை தேவதைகள்- அணுக்கள் போன்ற தேவதையா? எந்த ஒரு தெய்வமும் எவருக்குமே நேரடியாக தானே வந்து அவர்களுக்குள் அமர்ந்து கொண்டு சக்தியை தருவது இல்லை. அப்படி நடக்கும் என்ற...