Mathurai Sayayapuram Maariamman temple

மதுரை சமயபுரம் மாரியாத்தாள் ஆலய வரலாறு சாந்திப்பிரியா சமயபுரம் ஆலயத்தின் சமயபுரத்துக்கு மதுரையிலும் இன்னொரு ஆலயம் உள்ளது என்பது மதுரை நகருக்கு வெளியில் உள்ள பல பக்தர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மதுரையின் மேற்குப்பகுதியில், மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்கு போகும் வழியில், ஐந்தாவது கி.மீ.ல் மதுரையின் மேற்கு எல்லையான அங்கயற்கண்ணி அலங்கார வளைவு அருகில் அமைந்து இந்த ஆலயத்தின் மகிமைகள் பல உண்டு. குறை தீர்க்கும் சமயாள் குடில் எனும் ஆலயத்தை சமயபுரம் மாரியம்மனுக்காக மதுரையில் ஸ்தாபித்தவர் ஸ்ரீ ஸ்வாமி சக்தி அடிமை என்பவர். அந்த ஆலயம் குறித்தக் கட்டுரை இது. ஸ்ரீ ல ஸ்ரீ ஸ்வாமி சக்தி அடிமை வாழ்க்கை குறிப்பு சமயயாள் குடில் எனும் ஆலயத்தை நிறுவிய இந்த ஸ்வாமிகள் அவர் 1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதியன்று கேரளாவில் பிறந்தவர் என்றாலும் மதுரையில் வந்து குடியேறியவர். அன்னாரின் இயற்கைப் பெயர் திரு ஏ.சுப்பிரமணியன் என்பதாகும். அவருடைய குடும்பத்தில் எட்டாவது குழந்தையாக அவதரித்தவர். மதி நுட்பம் நிறைந்தவராகவும், சுறுசுறுப்புக்கு...