இடுகைகள்

Thiru Pullaboothangudi

படம்
திருப்புள்ளபூதங்குடி  வல்வில் ராமர் ஆலயம்  சாந்திப்பிரியா திவ்ய தேசங்களில் ஒன்பதாவதாக கூறப்படும் திருப்புள்ளபூதங்குடி அல்லது திருப்புல்லபூதங்குடி எனப்படும் ஆலயம் கும்பகோணத்தில் இருந்து ஸ்வாமி மலைக்குச் செல்லும் வழியில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  இந்த ஆலயத்தை நவகிரஹ பரிஹார ஸ்தலம் என்று கருதுகிறார்கள். எந்த ஒரு ஆலயத்திலுமே ராமபிரான் நின்று உள்ள நிலையிலும், அல்லது அமர்ந்து உள்ள நிலையிலுமே காணப்படுவார் . ஆனால் இந்த ஆலயத்தில்தான் ராமபிரான் படுத்துக் கொண்டு அனந்தசயன கோலத்திலான விஷ்ணுவைப் போல காட்சி தருகிறார் என்பது இந்த ஆலயத்தின் மிகப் பெரிய விசேஷம் ஆகும். அதாவது விஷ்ணுவே தன்னை ராமர் உருவில் தரிசித்துக் கொண்டாராம். இந்த ஆலயத் தலவரலாறு அற்புதமானது . ராமபிரான் வாழ்க்கையில் ஜடாயு அவருக்குப் பெரிய தந்தையைப் போல கருதப்பட்டவர். ஜடாயு பறவைகளில் ஒரு இனமான 'புல்ல' எனும் பிரிவை சேர்ந்தவர்.  நீண்ட நெருக்கமான தலை முடிகளைக் கொண்ட அவருடைய உயிரே அவரது இறக்கைகளில்தான் இருந்தது என்பார்கள். அப்படிப்பட்ட ஜடாயுவின் ஆதிக்கத்தில் இர...

Thirunindraur Vishnu Temple

படம்
திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் சாந்திப்பிரியா   சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருநின்றவூர் எனும் ஊரில் உள்ள விஷ்ணுவின் ஆலயம். இது வைஷ்ணவர்களின் 108 திவ்ய தேச ஆலயங்களில் ஒன்று. சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு  செல்லும் வழியில் திருமிழிசை எனும் இடம் வரும். அது வந்ததும் அங்கிருந்து வடக்குப் பக்கம் திரும்பிச் சென்றால் சுமார் 4 அல்லது ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநின்றவூரரை அடையலாம்.  திருநின்றவூருக்கு சென்னையில் இருந்து உள்ளூர் ரயிலிலும் செல்லலாம். இந்த ஊரில் உள்ள இன்னொரு முக்கியமான ஆலயம் சிவன் ஆலயம். இவை இரண்டுமே பிரபலமான ஆலயங்கள். திவ்ய தேச ஆலயங்களில் ஒன்றான திருநின்றவூரின் விஷ்ணு ஆலயத்தை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் ஆலயம் எனக் கூறுகிறார்கள். ஆலயம் பல்லவ மன்னார்களால் கட்டப்பட்டது என்பதினால் இது 1500 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயமாகும். இதன் வரலாறு என்ன என்றால், மகாலஷ்மியானவள் சமுத்திரராஜனின் மகளாக இருந்தாள். அப்போது அவள் ஆகாய மார்கமாக அங்கும் இங்கும் சென்று இயற்கையின் அற்புதங்களைக் கண்டு கழித்துக் கொண்டு இருந்தா...

Tiruvaikkavur Siva Temple- Kumbakonam

படம்
திருவைகாவூர்  சாந்திப்பிரியா     ஆலயத்தில் மூலவர்    கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் இருபது கிலோமீட்டர்  தூரத்தில் திருவைகாவூர் எனும் ஊர் உள்ளது. ஆனால் இங்கு செல்வதற்கு குறைந்த அளவு பஸ் வசதியே உயல்லை என்பதினால் ஏதாவது தனி வாகனத்தில் செல்வது வசதியாக இருக்கும். அது போல ஸ்வாமி மலையில் இருந்தும் இங்கு செல்லலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் எனக் கூறப்படும் இந்த சிவபெருமானின் ஆலயம் தனி வரலாற்றைக் கொண்டு உள்ளது.  இதை வில்வ வனம் என்றும் கூறுகிறார்கள்.  ஆலய வரலாறு என்ன என்றால் ஒரு முறை கொள்ளிடம் ஆற்றுக் கரையில் இருந்த இடத்தில்  வேட்டை ஆடிக் கொண்டு இருந்த வேடன் ஒருவன் ஒரு மானைக் கண்டு அதைப் பிடிக்க அதைத்  துரத்தினான். ஆனால் அதுவோ மிகவும் வேகமாக ஓடி அருகில் இருந்த காட்டிற்குள் சிவபெருமானை வேண்டியவாறு  துதித்தவாறு தவத்தில் அமர்ந்து இருந்த முனிவரின் பின்னால் சென்று அவர் பர்ணசாலையில் ஒளிந்து கொண்டது. அதன் மீது அம்பை எய்ய எடுத்தவன் அந்த முனிவரின் பர்ணசாலையில்  அது பதுங்கிக் கொண்டதைக் கண்ட...

Thirupampuram Temple, Kumbakonam

படம்
திருப்பாம்புரம் சாந்திப்பிரியா  ஆலயத்தின் மூலவர்  கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பாதையில் பேரளம் எனும் ஊரில் இருந்து சுமார் ஆறு அல்லது ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது  இன்னொரு அதிசயமான ஆலயம். அந்த ஆலயத்தின் பெயர் திர்பாம்புரம் என்பது.   திரு பாம்பு சுற்றிய  புறம் என்பதே  பெயர் மருவி திருப்பாம்புரம் என ஆகிவிட்டது.  இந்த தலத்தை உரசுபுறம், ஷேஷபுரி,  பாம்புரன்னகர் போன்றப் பெயர்களிலும் அழைக்கின்றார்கள். ஆலயத்தின் மூல தெய்வமான சிவலிங்கத்தை ஷேஷபுரீஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர், மற்றும் வன்னீஸ்வர் போன்றப் பெயர்களிலும் அவர் நாயகியான அம்பிகையை பிராமராமிகை அல்லது வண்டுசேர் பூங்குழலி  என்றும் அழைக்கின்றார்கள்.  ராகுவையும், கேதுவையும் இணைத்துக்  காட்டும் அஷ்டமகா  நாகம் எனும் சிலை  இந்த ஆலயத்தில் உள்ள சில சிறப்புக்களில் ராகுவும், கேதுவும் இணைந்து ஒரே உருவமாக காட்சி தருவதும், அம்பிகை கிழக்கு நோக்கி நின்று கொண்டு இருப்பதையும் கூறலாம். இந்த ஆலயத...

Thiruvidaimaruthur Siva Temple

படம்
திருவிடைமருதூர் ஆலயம் சாந்திப்பிரியா அன்றைய சோழநாட்டின் ஒரு பகுதியான கும்பகோணத்தின் அருகில் உள்ளது திருவிடைமருதூர். கும்பகோணத்தில் இருந்து சுமார் ஆறு அல்லது ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும் மாயவரத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்த ஊரில் காவேரி ஆற்றின் கரையில் உள்ள மிகப் பிரபலமாக ஆலயமே மகாலிங்கேஸ்வரர் எனும் சிவன் ஆலயம். இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதிகளின் பொறுப்பில் உள்ளது. இந்த ஆலயத்தில் பல்வேறு பெயர்களைக் கொண்ட 27 சிவலிங்கங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் பல சிறப்புக்கள் உள்ளன. இந்த உலகில் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுனா, புட்டார்ஜுனா மற்றும் திருவிடைமருதூர் போன்ற மூன்று இடங்களில் மட்டுமே மருத எனும் மரம் உள்ள விருஷத்தை தல விருஷமாகக் கொண்ட சிவன் ஆலயங்கள் உள்ளதாகவும் உள்ளதாகவும் அவற்றின் மத்தியில் திருவிடைமருதூர் ஆலயம் உள்ளதினால் இதை இடைமருதூர் என்று அழைக்கின்றார்கள். இந்த ஆலயம் உண்மையில் ஏழு பிராகாரங்களைக் கொண்டது என்கிறார்கள். அதில் முக்கியமானவை வீதிக்கு அடுத்த தேர் ஓடும் பிராகாரம் , அடுத்தது அஸ்வமேத பிராகாரம், அடுத்து பிரணவ பிராகாரம் அ...

Divya Desa Temples

படம்
இரண்டு திவ்ய தேச ஆலயங்கள் -காஞ்சீபுரம் பச்சை வண்ண மற்றும்  பவள வண்ணப் பெருமாள் ஆலயங்கள் சாந்திப்பிரியா காஞ்சிபுரத்தில் இரண்டு வைஷ்ணவ ஆலயங்கள் எதிரும் புதிருமாக உள்ளன. பச்சை வர்ண பெருமாள் ஆலயம் மற்றும் பவள வர்ணப் பெருமாள் ஆலயம் எனும் அவை இரண்டையும் சேர்த்தே 108 திவ்ய தேசங்களில் ஒரே திவ்ய தேசம் என வைஷ்ணவர்கள் போற்றி வணங்குகிறார்கள். இரண்டு ஆலயத்திலுமே விஷ்ணு பகவானே மூல தெய்வமாக உள்ளார். இந்த இரண்டு ஆலயங்களையும் ஒரே நாளில் சென்று தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம் . ஒருமுறை பிருகு முனிவர் தனக்கு மகளாக லஷ்மி தேவி பிறக்க வேண்டும் என்ற ஆசைக் கொண்டதினால் காஞ்சீபுரத்தில் உள்ள இந்த ஆலயப் பகுதியில் வந்து அங்கு தனது வேண்டுகோள் நிறைவேற யாகம் ஒன்றை செய்தாராம். அவருடைய யாகத்தை மெச்சிய லஷ்மி தேவியும் அவருக்கு மரகதவல்லி எனும் பெயர் கொண்ட மகளாக அந்த ஊரிலேயே பிறந்தாள். அதன் பின் பல காலம் பொறுத்து பிருகு முனிவர் மீண்டும் விஷ்ணுவை தனது மகளாகப் பிறந்துள்ள லஷ்மி தேவியை இந்த ஆலயம் உள்ள இடத்திலேயே வந்து மணக்க வேண்டும் என வேண்டி துதிக்க விஷ்ணுவும் இங்கு வந்து லஷ்மி தேவியை மீண்டும் மணந்து ...

Sree Sanjeeva Raayar Temple

படம்
காஞ்சீபுரம் ஸ்ரீ சஞ்சீவி ராயர் ஆலயம் சாந்திப்பிரியா   சமீபத்தில்தான் காஞ்சீபுரத்தில் இருந்து கலவை செல்லும் சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீ சஞ்சீவி ராயர் குளம் என்ற கிராமத்தில் உள்ள ஹனுமார் ஆலயம் பற்றிய செய்தி ஒருவர் மூலம் கிடைத்தது. இந்த ஆலயம் மிகப் பழமையானது என்றும், ஹனுமார் சஞ்சீவ மலையை தூக்கிக் கொண்டு சென்றபோது இங்கு வந்து இளைப்பாறியதாகவும், அப்போது அந்த மலையில் இருந்து ஒரு சிறு பகுதி இங்கு விழுந்ததாகவும் ஒரு கிராமியக் கதை உள்ளது. அதனால்தான் இந்த ஆலயத்தின் பெயரும் சஞ்சீவராயர் ஆலயம் என அமைந்ததாம். இந்த கிராமத்தை அய்யங்கார் குளம் என்றும் கூறுகிறார்கள். அதற்குக் காரணம் இந்த ஆலயத்தைக் கட்டியது ஸ்ரீ தாத்தாச்சாரியார் என்பவராம். ஸ்ரீ தாத்தாச்சாரியார் என்பவர் 1586-1614 A.D காலங்களில் ஆந்திராவை ஆண்டு வந்த விஜயநகர மன்னரான வேங்கட ராயர் என்பவரிடம் தலைமைப் பொறுப்பாளராக பணி புரிந்து வந்ததாகவும், காஞ்சீபுர மாவட்டத்தில் இருந்த காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் , நிலபுலன்களையும் பிற இடங்களையும் அவர் அந்த மன்னர் சார்ப்பில் நிர்வாகித்து வந்ததாகவும் கூறுகிறார்கள். அந்த நேரத...