Thiru Pullaboothangudi

திருப்புள்ளபூதங்குடி வல்வில் ராமர் ஆலயம் சாந்திப்பிரியா திவ்ய தேசங்களில் ஒன்பதாவதாக கூறப்படும் திருப்புள்ளபூதங்குடி அல்லது திருப்புல்லபூதங்குடி எனப்படும் ஆலயம் கும்பகோணத்தில் இருந்து ஸ்வாமி மலைக்குச் செல்லும் வழியில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்தை நவகிரஹ பரிஹார ஸ்தலம் என்று கருதுகிறார்கள். எந்த ஒரு ஆலயத்திலுமே ராமபிரான் நின்று உள்ள நிலையிலும், அல்லது அமர்ந்து உள்ள நிலையிலுமே காணப்படுவார் . ஆனால் இந்த ஆலயத்தில்தான் ராமபிரான் படுத்துக் கொண்டு அனந்தசயன கோலத்திலான விஷ்ணுவைப் போல காட்சி தருகிறார் என்பது இந்த ஆலயத்தின் மிகப் பெரிய விசேஷம் ஆகும். அதாவது விஷ்ணுவே தன்னை ராமர் உருவில் தரிசித்துக் கொண்டாராம். இந்த ஆலயத் தலவரலாறு அற்புதமானது . ராமபிரான் வாழ்க்கையில் ஜடாயு அவருக்குப் பெரிய தந்தையைப் போல கருதப்பட்டவர். ஜடாயு பறவைகளில் ஒரு இனமான 'புல்ல' எனும் பிரிவை சேர்ந்தவர். நீண்ட நெருக்கமான தலை முடிகளைக் கொண்ட அவருடைய உயிரே அவரது இறக்கைகளில்தான் இருந்தது என்பார்கள். அப்படிப்பட்ட ஜடாயுவின் ஆதிக்கத்தில் இர...