இடுகைகள்

Vishnudattar and Dathatreya

படம்
விஷ்ணுதத்தரும் தத்தாத்திரேயரும் சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் விஷ்ணுததன் என்ற அந்தணர் ஒருவர் வாழ்ந்து கொண்டு இருந்தார். அவர் மிக்க சீலர் . கடவுள் பக்தி மிகுந்தவர். அவருடைய நல்ல நடத்தையைக் கண்ட அனைவரும் அவரிடம் மிக அன்புடன் பழகி வந்தார்கள். அவர் தினமும் பூஜை புனஸ்காரங்களை செய்து முடித்ததும் நைய்வித்தியம் செய்ததில் சிறுது எடுத்துப் போய் அவர் வீட்டின் அருகிலிருந்த புளிய மரத்தடியில் வைத்து விட்டு வருவார். ஏதாவது பிராணிகள் அதை தின்னட்டுமே என்பது அவர் விருப்பம். தினமும் அந்த புளிய மரத்தின் அடியில் வைப்பதை அந்த மரத்தின் மீது இருந்த ஒரு பிசாசு வந்து சாப்பிட்டுவிட்டு சென்றது. அது அந்த அந்தணனுக்கு தெரியாது. அதனால் அந்த பிசாசு அவரைத் தவிர மற்றவர்களை பயமுறுத்திக் கொண்டு தொந்தரவும் செய்து வந்தது. நாட்கள் செல்லச் செல்ல அந்த பிசாசு அவர் வைத்துச் சென்ற உணவை உண்டதினால் நல்ல குணத்தைப் பெற்றது. மற்றவர்களை தொந்தரவு செய்வதை நிறுத்தியது. அதன் மனதில் இருந்த தீய எண்ணமும் அழிந்தது. அது தனக்கு உணவு கொடுத்த விஷ்ணுததருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தது. ஒரு நாள் அது திடீர் என விஷ்ணு தாதர் முன் ...

Devi Bagavatham

படம்
சங்கர் குமார் இயற்றி உள்ள   தேவி பாகவதம் சாந்திப்பிரியா    திரு சங்கர் குமார் அமெரிக்காவில் மருத்துவத் தொழிலில் ஈடு உள்ளவர். அங்கிருந்தவண்ணம் அவர் தமிழ் மொழித் தொண்டாற்றி வருவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். அவர் இயற்றி உள்ள தேவி பாகவதத்தை அப்படியே வெளியிட்டு உள்ளேன். படித்து மகிழுந்து தேவியின் அருளைப் பெறுங்கள்.  தேவியின் கதை சங்கர் குமார்  [ நவராத்திரி தொடங்கி விட்டால் . ஒன்பது இரவுகள் ஒரு பகல் இனிக் கொண்டாட்டம்தான் ! இந்தக் காலத்தில் தேவி மஹாத்மியம் என்னும் திருக்கதையைப் படித்தலும், கேட்டலும் முறையாகப் பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. இதையொட்டி, நூலில் சொல்லப்பட்டிருக்கும் கதையை என் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறேன்.  அனைவருக்கும் தேவி ராஜ ராஜேஸ்வரியின் அருள் குறையின்றிக் கிடைக்க வேண்டி, இதைத் துவங்குகிறேன்.-சங்கர் குமார் ]  --காப்பு-- தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்! செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்! உலகாளும் அன்னையவள் ஒன்பது நாள் உலாவந்த உன்னதத்தைப் பாக்களிலே படித்திடவே துணிகின்றேன் என்னவிங...

Thinamalar News:

படம்
  தினமலர் நாளிதழ் செய்தி அதிசய சம்பவம்  இன்று ( 18.11.2011 ) தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை அப்படியே பிரசுரித்து உள்ளேன்.  படித்து  மகிழவும். ஒரு ஆடு கார்த்திகை முதல் மாதத்தில் ஆண்டவனை பூஜித்து உள்ளது அதிசயச் செய்தி இல்லாமல் வேறு என்னவாக இருக்கும் ? பூர்வ ஜென்மத்தில் பெற்ற சாபத்தினால் யாரோ ஒருவர் - மனிதர்களோ, அல்லது தேவர்களோ - இந்த ஜென்மத்தில் ஆடாகப் பிறந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற இதை செய்து உள்ளதோ என்று நம்புகிறேன்.  இந்த செய்தியை வெளியிட்டு உள்ள தினமலரை பாராட்ட வேண்டும். தினமலர் நாளிதழுக்கு நன்றி  சாந்திப்பிரியா ------------------------------------------------- கார்த்திகை 1ல் ஆடு செய்த பூஜை : காவிரிக் கரையில் நடந்த அதிசயம் ஈரோடு: ஈரோடு காவிரிக் கரையில் உள்ள மரத்தடி விநாயகர் கோவிலில், நேற்று ஆடு செய்த பூஜையால், பரபரப்பு ஏற்பட்டது. கார்த்திகை மாதல் முதல் நாளான நேற்று அதிகாலை முதலே, ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரியாற்றில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். காவிரியில் நீராடி, ஆற்றங்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலையணிந்து, விரதத்தைத் துவக்கினர...

Chennai- Periapalayaththamman Temple

படம்
பெரிய பாளையத்தம்மன் ஆலயம் சாந்திப்பிரியா சென்னை ராயபேட்டை பீட்டர்ஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு சிறிய ஆனால் மிகப் பழைய ஆலயம் உள்ளது பலருக்கு தெரிந்து இருக்க முடியாது. பரசுராமரின் தாயார் ஆன ரேணுகா தேவிக்கு கட்டப்பட்டு உள்ள அந்த ஆலயம் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். இந்த ஆலயத்தின் வரலாறு இதுதான். 1764 ஆம் ஆண்டு நல்ல தம்பி என்பவர் மூலம் ஒரு காணி நிலம் ஆங்கிலேயர் காலத்தில் ஒரு நிலம் பெறப்பட்டு அங்கு ரேணுகா தேவியின் ஆலயம் அமைக்கப்பட்டதாம். அந்த ஆலயத்தில் ரேணுகா தேவியின் சிலைக்கு அடியில் இரண்டு உருவங்கள் உள்ளன. மேலே உள்ள ரேணுகாதேவி சுயம்புவாக அங்கு வந்து அமர்ந்து உள்ளதான நம்பிக்கை உள்ளது. முதலில் அந்த பீடத்தின் கீழே காணப்படும் மூல விக்ரகங்கள் மட்டுமே இருந்துள்ளது என்றும் பின்னர் ரேணுகா தேவி தானே வந்து இங்கு அமர்ந்ததாகவும் நம்புகிறார்கள். புராண நம்பிக்கையின்படி இந்த ஆலயத்தில் உள்ள அம்மனின் தலையை பரசுராமர் வெட்டி எரிந்து விட்டதினால் உடம்பு முழுவதும் பூமியில் புதைந்து உள்ளதாகவும், தலைப் பகுதி மட்டும் வெளியில் உள்ளதாகவும் கூறுகிறார்கள். பரசுராமர் சரித்திரத்தில், அவருடைய தா...

Banergheta Anjeneya Temple.

படம்
வாசகர்கள் கவனத்திற்கு நான்  02.10.2011  அன்று  ''பெங்களூர் பனேர்கட்டாவில் ஒரு ஹனுமார் ஆலயம்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தேன் . அந்த ஆலயத்தில் உள்ள ஹனுமாரின் புகைப்படம் எதேற்சையாக நேற்று கிடைத்தது. அதை வெளியிட்டு உள்ளேன்.  ஆகவே கட்டுரையை படத்துடன் மறுபதிப்பு செய்து உள்ளேன்.  பெங்களூர்  பனேர்கட்டாவில் ஒரு ஹனுமார் ஆலயம் சாந்திப்பிரியா    சமீபத்தில் நான் என் குடும்பத்தினருடன் பெங்களூரில் பனர்கட்டாவில் உள்ள ஒரு ஹனுமார் ஆலயத்திற்கு சென்று இருந்தேன். இது என்னுடைய இரண்டாவது விஜயம். அந்த ஆலயம் அற்புதமானது. 2002 ஆம் ஆண்டுதான் ஆலயம் கட்டப்பட்டு உள்ளதாம். ஆனால் அதனுள் உள்ள ஹனுமார் சிலை 400 அல்லது 500 வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் காலத்தில் கர்நாடகாவில் பல இடங்களில் ஹனுமார் சிலைகளை பாறைகளிலும், கற்களிலும் வடிவமைத்து உள்ளார்கள். ஒரு வேளை அந்த காலத்தை சேர்ந்த சிலையாக இது இருந்திருக்கலாம். அங்குள்ளவர்களுக்கு அந்த சிலை பற்றிய முழு விவரம் தெரியவில்லை. ஏன் எனில் இந்த ஆலயம் உள்ள இடம் ஒரு கால...

Miracle Cure- Bangalore Saniswarar Temple

படம்
ஒரு அதிசயம் சாந்திப்பிரியா  நேற்று ஒரு அதிசயமான நிகழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. சனிக்கிழமை என்பதினால் பெங்களூரில் சனீஸ்வரர்  ஆலயத்துக்கு செல்லக் கிளம்பினோம். சாதாரணமாக நாங்கள் ஜெய நகரில் உள்ள சனிஸ்வரர் ஆலயத்துக்கு செல்வது பழக்கம்.  எனக்கு வலது கை தோள்பட்டைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒரே வலி. நேற்று கையை தூக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டேன். காலை முதலே பல வலி நிவாரணியை போட்டுக் கொண்டும் வலி குறையவில்லை. வண்டியில் அமர்ந்து இருந்தவாறு கையை பிடித்து விட்டுக் கொண்டே இருந்தேன்.  பிலகஹல்லியைத் தாண்டி JP நகர் சிக்னல் அருகில்  சிக்னலை தாண்டியதும்  பஸ் ஸ்டாப்பிற்கு  பக்கத்தில்  வந்த  வண்டிக்காரன் திடீரென 'சார் இங்கே ஒரு சனி ஆலயம் உள்ளது, போகலாமா என்று கேட்க நாங்கள் அங்கு சென்றோம். ஆலயம் மிகச் சிறிய அளவில்தான் இருந்தது. ஆலயத்தின் அளவு சுமார் 30 அடிக்கு 40 அடி இருக்கலாம். JP நகர் 3 ஆம் Phase அருகில் உள்ள சிக்னலுக்கு அருகில் மூலையில் இருந்தது ஆலயம்.  நாங்கள் இத்தனை ஆண்டுகளாக அதே வழியாக  சென்று இருந்தும் அந்த ஆலயத்தைப் பார்க்கவில்ல...

Tiruvanmiyur Marutheeswarar Temple

படம்
திருவான்மியூர் மருதீஸ்வரர் ஆலயம் சாந்திப்பிரியா  சென்னை திருவான்மியூரில் உள்ள மரூதீஸ்வரர் ஆலயம் மிகப் பழமையானது. ஆலயம் அடையாரில் இருந்து சுமார் மூன்று கிலோ தொலைவில் திருவான்மியூர் செல்லும் சாலையின் பிரதான சாலையில் திருவான்மியூர் பஸ் நிலையத்தின் அருகிலேயே உள்ளது. ஆலயத்துக்கு இரண்டு நுழை வாயில்கள் உள்ளன. ஆலயத்தின் பிரதான தெய்வம் மருந்தேஸ்வரர் எனும் மருதீஸ்வரர் ஆவார். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கங்களில் ஒரு சிவலிங்கம் ஆஞ்சநேயரால் வழிபடப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆலயத்தில் உள்ள சுமார் ஒரு அடி உயர  சுயம்பு சிவலிங்கம் சற்றே சாய்ந்து காணப்படுகின்றது. இங்கு பல ரிஷி முனிவர்களும், தேவர்களும் வந்துள்ளதாக கருதப்படுகின்றது.  அதன் தல வரலாறும் சுவையானது. இந்த ஆலய மகிமை மற்றும்  திவான்மியூர் மற்றும் மருந்தீஸ்வரர் ஆலயம் என பெயர் வந்தக் காரணக்  கதைகள் பல இருந்தாலும் முக்கியமாக நான்கு  கதைகளையே கூறுகிறார்கள். மருதீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி  முதல் கதை சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் திருமணம் நடைபெற தீவீரமாக ஏற்பாடுகள் செய்யப்பட...