Vishnudattar and Dathatreya

விஷ்ணுதத்தரும் தத்தாத்திரேயரும் சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் விஷ்ணுததன் என்ற அந்தணர் ஒருவர் வாழ்ந்து கொண்டு இருந்தார். அவர் மிக்க சீலர் . கடவுள் பக்தி மிகுந்தவர். அவருடைய நல்ல நடத்தையைக் கண்ட அனைவரும் அவரிடம் மிக அன்புடன் பழகி வந்தார்கள். அவர் தினமும் பூஜை புனஸ்காரங்களை செய்து முடித்ததும் நைய்வித்தியம் செய்ததில் சிறுது எடுத்துப் போய் அவர் வீட்டின் அருகிலிருந்த புளிய மரத்தடியில் வைத்து விட்டு வருவார். ஏதாவது பிராணிகள் அதை தின்னட்டுமே என்பது அவர் விருப்பம். தினமும் அந்த புளிய மரத்தின் அடியில் வைப்பதை அந்த மரத்தின் மீது இருந்த ஒரு பிசாசு வந்து சாப்பிட்டுவிட்டு சென்றது. அது அந்த அந்தணனுக்கு தெரியாது. அதனால் அந்த பிசாசு அவரைத் தவிர மற்றவர்களை பயமுறுத்திக் கொண்டு தொந்தரவும் செய்து வந்தது. நாட்கள் செல்லச் செல்ல அந்த பிசாசு அவர் வைத்துச் சென்ற உணவை உண்டதினால் நல்ல குணத்தைப் பெற்றது. மற்றவர்களை தொந்தரவு செய்வதை நிறுத்தியது. அதன் மனதில் இருந்த தீய எண்ணமும் அழிந்தது. அது தனக்கு உணவு கொடுத்த விஷ்ணுததருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தது. ஒரு நாள் அது திடீர் என விஷ்ணு தாதர் முன் ...