இடுகைகள்

Adhi Kesava Perumaal Temple

படம்
தெரிந்த ஆலயம்....அறிந்திடாத ஆலய செய்திகள்   மயிலை ஆதிகேசவப்  பெருமாள் ஆலயம் சாந்திப்பிரியா  சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்ற மயிலையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை கபாலீஸ்வரர் ஆலயமும் ஆதிகேசவர் ஆலயமும் ஆகும்.  அந்த ஆலய தெப்பக் குளங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ஒரு காலத்தில் அந்த இரண்டு குளங்களிலும் நீர் நிரம்பி வழிந்தது. மக்கள் நீராடுவார்கள். ஆலய விழாக் காலங்களில் அங்கு நடக்கும் தெப்ப உற்சவங்கள் சிறப்பாக இருக்கும்.  தற்போது மயிலாப்பூர்  என்று அழைக்கப்படும்   பகுதியின் அந்த காலப் பெயர் மயூரபுரி  என்று இருந்தது. காரணம் இங்கு மயில்கள் நிறைய இருந்தன. அது மயூரங்கள் (மயில்கள்) நிறைந்து இருந்தப் பகுதி என்பதினால்  மயூரபுரி என்ற  பெயர் பெற்று இருந்தது. இங்கு சிவன், பார்வதி, லஷ்மி மற்றும் விஷ்ணு என்ற நான்கு பேரும் பல்வேறு காரணங்களினால் சபா விமோசனம் அடைந்து மீண்டும் ஒருவரை ஒருவர் மணந்து கொண்டு அங்கு ஆலயங்களில் குடி அமர்ந்தார்கள், பிருகு முனிவர், பேயாழ்வார் போன்றவர்கள் அனுக்கிரகம் பெற்ற இடம் போன்ற பல காரணங்...

Kattu Veera Anchaneya Temple, Krishnagiri

படம்
கிருஷ்ணகிரி ஸ்ரீ காட்டு வீர  ஆஞ்சனேயர் ஆலயம் சாந்திப்பிரியா தமிழ்நாட்டில் உள்ள கிஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க இடம். இங்கு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் நிறைய உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தருமபுரியுடன் இணைந்து இருந்தபோது அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அது கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் இருந்தது. கிருஷ்ண தேவராயர் ஆட்சியில்தான் ஹனுமான் பக்தி இயக்கம் பெரிய அளவில் இருந்தது. அவருடைய ஆட்சியில் தான் மலைகள் மீது இருந்த பாறைகளிலும், வேறு பெரிய பாறைகளிலும் கடவுளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டனவாம். முக்கியமாக ஹனுமாரின் சிற்பங்கள் பெரிய அளவில் செதுக்கப்பட்டு உள்ளன. அப்படிப்பட்ட நேரத்தில் உருவானதே தேவ சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயம் சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையிலான சாலையில் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ளது. முன்னர் தேவசமுத்திரத்தில் அந்த ஆலயம் இல்லை. அந்த இடத்தில்  பெரிய விளை நிலமே இருந்தது. அருகில் சிறிய மலை. அந்த விளை நிலங்கள் திரு வெங்கட்ராம செட்டியார் என்பவருக்கு சொந்தமானது. அந்த நிலத்தில் இருந்த ஒரு ...

Sankaranarayanar Temple

படம்
ஹரியும் சிவனும் ஒன்றே - சங்கரநாராயணன் ஆலயம் - சாந்திப்பிரியா   படம்  நன்றி : http://thanksforseeing.blogspot.com/ திருநெல்வேலி மாவட்டத்தில் பல முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே சங்கரநாராயணர் ஆலயம். இந்த ஆலயத்தில் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் ஒன்றாக இணைந்து காட்சி தருகிறார்கள் என்பது மட்டும் அல்ல அந்த ஆலயத்தின் மகிமை, அவர்கள் ஒன்றாக காட்சி தர ஏற்பாடு செய்தவரே சிவபெருமானின் மனைவியும், மகாவிஷ்ணுவின் சகோதரி என கருதப்படும் பார்வதி தேவியும் அங்கு உள்ளார் எனும் போது இன்னும் ஆலயத்தின் மகிமை கூடுகின்றது. இந்த ஆலயத்தையும் உக்ர பாண்டியன் என்ற மன்னனே AC 900 ஆம் ஆண்டில் கட்டி உள்ளதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.   படம் நன்றி: http://www.srisankaranarayanar.org/ இந்த ஆலயத்தில் ஏன் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் ஒன்றாக தோற்றம் தந்தார்கள்? அர்த்தநாரீஸ்வரர் என சிவன்-பார்வதி அவதாரத்தைதான் பார்த்து உள்ளோம் . அதுபோல இங்கு அர்த்தநாராயநீஸ்வரராக  சிவனும் விஷ்ணுவும் அவதரித்தார்கள் .   அதன் கதை இது:- ஒரு காலத்தில் பார்வதி சிவபெருமானுடன் தானும் ஐக்கியமாக ...

Kazhugumalai Murugan Temple

படம்
  கழுகுமலை முருகன் ஆலயம் சாந்திப்பிரியா   கழுகு மலை முருகன் ஆலயம் கோவில்பட்டியில் இருந்து சுமார் 20 அல்லது 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள இந்த ஆலயம் சங்கரன் கோவிலில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திலும் , மதுரையில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது .  இது அருணகிரிநாதர் பாடல் பெற்ற தலம்.  மலையை தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு பறவையைப் போல காட்சி அளிப்பதினாலும்,  இங்கு நிறையவே கழுகுகள் வந்து அமருவது உண்டு  என்பதினாலும் அந்தக் காலத்தில் இதை கழுகு மலை  என்று அழைத்து இருக்க வேண்டும் என்கிறார்கள் என்றாலும்  கழுகு மலை எனப் பெயர் வந்ததின் காரணத்திற்கு கூறப்படும் இராமாயண காலத்து வாய்மொழிக் கதையும் உள்ளது. அந்தக் கதையை கடைசியில்  தந்து உள்ளேன். இந்த ஆலயம் கல்பாறயைக் குடைந்து அமைக்கப்பட்டு உள்ளது. ஆலயம்  கல்பாறயை குடைந்து அமைக்கப்பட்டு உள்ளதினால் ஆலயத்தை சுற்றி பிராகாரம் அமைக்கப்படவில்லை. இதனால் இது அஜந்தா மற்றும் எல்லோராவைப் போல குகை ஆலயமாகவே உள்ளது. ஆலயத்துக்கு உள்ளே செல்...

Sree Nagaraja Temple, Kerala

படம்
மானரசாலா ஸ்ரீ நாகராஜர் ஆலயம்  சாந்திப்பிரியா  இந்தியாவின் பல மாநிலங்களிலும் நாகங்கள் வணங்கி பூஜிக்கப்படுகின்றன. இதற்கு முன்னால் 2010 ஆம் வருடத்தில் ஜூன் மாதம் நாகர்கோவிலில் உள்ள ஒரு நாகராஜர் ஆலயம் பற்றிய கட்டுரையை வெளியிட்டு இருந்தேன். அதைத் தொடர்ந்து இந்தக் கட்டுரை வெளியாகின்றது. நாகர்கோவிலில் உள்ள ஆலயத்தைப் போல கேரளாவில் உள்ள மானரசாலா ஸ்ரீ நாகராஜர் ஆலயம் புகழ் பெற்ற ஆலயம். அந்த ஆலயத்திலும் நாகங்கள் பூஜித்து வணங்கப்படுகின்றன. கேரளத்து ஆலயம் எழுந்ததைப் பற்றிய சுவையான கதை உள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபட் எனும் இடத்தில் உள்ள இந்த நாகராஜர் ஆலயம் எழுவதற்கு மூல காரணமாக இருந்தவர் பரசுராமரே என்கிறார்கள். தத்தாத்திரேயர் சரித்திரத்தில் பரசுராமர் எப்படி சினம் கொண்டு தனது தந்தை ஜமதக்னியை வஞ்சகமாகக் கொன்ற ஷத்ரியர்களை இருபத்தி ஒருமுறை பூமியெங்கும் சென்று துரத்தித் துரத்திக் கொன்று குவித்தார் என்ற கதை உள்ளது . ஆனால் எத்தனை மனிதர்களைத்தான் கொன்று குவிப்பது என மனம் வெறுப்பு அடைந்த பரசுராமர் தத்தாத்திரேயரிடமே மீண்டும் சென்று சரண் அடைந்தார். அவரிடம் தீஷை பெற்று வனத்த...

Isakki Amman

படம்
  இசக்கி அம்மன் சாந்திப்பிரியா      இசக்கி அம்மன்  இசக்கி அம்மன் என்பவள் ஒரு கிராம தேவதை. சாதாரணமாக கிராம தேவதைகளை கிராமத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் போற்றி வணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் தமது கிராமத்தையும் காப்பதாக நம்புகிறார்கள். அது போல சில கிராம தேவதைகளை ஆராதிப்பத்தின் மூலம் தாமும் தமது குடும்பமும் நலமாக இருப்பார்கள், வேண்டியது கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். முதலில் கிராம தேவதைகள் தம்மையும்  தமது சக்தியையும்  வெளிக் காட்ட கிராம மக்களை ஏதாவது ஒரு விதத்தில் பயமுறுத்துவார்களாம். பின்னர் அந்த கிராம மக்கள் யாராவது ஒருவரின் கனவில் அவர்கள் தோன்றி தான் இன்ன இடத்தில் புதைந்து உள்ளதாகவும், தன்னை வெளியில் எடுத்து வழிபட்டால் அந்த ஊரைக்  காத்தபடி இருப்பேன் எனவும் கூறுவார்களாம். அதன்படி அந்த கிராம மக்கள்  கனவில் வந்தபடியே அந்த தேவதைகளைக் கண்டறிந்து சிறு ஆலயம் எழுப்பி வழிபடுவார்கள். அந்த தேவதையும் அந்த ஊரைக் காத்தபடி ஊர் எல்லைகளில் அமர்ந்து இருப்பார்களாம். அப்படிப்பட்ட கதையின்படியே மாரியம்மனும் தன்னை  வெளிக்காட்ட  அம்மை நோயை...

Ezhur Chetti Temples

படம்
ஏழூர்  செட்டி  சமுதாயத்தினர்   ஆலயங்கள் அம்மன் ஆலயத்தில் கொழுக்கட்டை விழா சாந்திப்பிரியா      நம்முடைய கிராமங்களில் உள்ளவர்கள் கிராம தேவதை என்று அம்மன்களையும், சில வீரர்களையும் வணங்குகிறார்கள். அத்தகைய தெய்வங்கள் அவர்களுக்கு நல்ல அருள் புரிகிறார்கள் என்பது வாழையடி வாழையாக வளர்ந்து வரும் நம்பிக்கை. ஒரு விதத்தில் பார்த்தால் அந்த ஆலயங்களின் தன்மையும், பூஜை முறைகளும் ஆகம விதிகளுக்கு மாறாக இருந்தாலும், அங்குள்ள தெய்வங்கள் சக்தி வாய்ந்தவையாகவே உள்ளன என்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருந்தது. ஒரு காலத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி இருந்தபோது தற்போது அழிந்து  விட்ட காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த வியாபாரிகளான ஒரு  சமூகத்தினர் கடல் கடந்து வியாபாரம் செய்து செழிப்பான நிலையில் இருந்தவர்கள். அந்த காலத்தில்  பணக்காரர்களையும் பெரிய  மனிதர்களையும் சேட்ஜி என்றே அழைப்பார்கள். சேட்ஜி என்பது சமிஸ்கிருத சொல். மரியாதைக்குரிய  பெயர். சேட்ஜி என்றால், பெரிய மனிதரே என்று பொருள் வரும்.  அதுவே வியாபாரிகளான அவர்களை சேட்ஜி.... செட்டிஜி......