Adhi Kesava Perumaal Temple

தெரிந்த ஆலயம்....அறிந்திடாத ஆலய செய்திகள் மயிலை ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் சாந்திப்பிரியா சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்ற மயிலையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை கபாலீஸ்வரர் ஆலயமும் ஆதிகேசவர் ஆலயமும் ஆகும். அந்த ஆலய தெப்பக் குளங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ஒரு காலத்தில் அந்த இரண்டு குளங்களிலும் நீர் நிரம்பி வழிந்தது. மக்கள் நீராடுவார்கள். ஆலய விழாக் காலங்களில் அங்கு நடக்கும் தெப்ப உற்சவங்கள் சிறப்பாக இருக்கும். தற்போது மயிலாப்பூர் என்று அழைக்கப்படும் பகுதியின் அந்த காலப் பெயர் மயூரபுரி என்று இருந்தது. காரணம் இங்கு மயில்கள் நிறைய இருந்தன. அது மயூரங்கள் (மயில்கள்) நிறைந்து இருந்தப் பகுதி என்பதினால் மயூரபுரி என்ற பெயர் பெற்று இருந்தது. இங்கு சிவன், பார்வதி, லஷ்மி மற்றும் விஷ்ணு என்ற நான்கு பேரும் பல்வேறு காரணங்களினால் சபா விமோசனம் அடைந்து மீண்டும் ஒருவரை ஒருவர் மணந்து கொண்டு அங்கு ஆலயங்களில் குடி அமர்ந்தார்கள், பிருகு முனிவர், பேயாழ்வார் போன்றவர்கள் அனுக்கிரகம் பெற்ற இடம் போன்ற பல காரணங்...