இடுகைகள்

Angala Parameswari

படம்
மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி சாந்திப்ரியா  மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஜிஞ்சி  தாலுக்காவில் விழுப்புரத்தில் உள்ளது . இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றே கூறுகிறார்கள்.தக்ஷ யாகத்தின் போது உயிர் துறந்த பார்வதியின் உடலை சிவபெருமான் சுமந்து கொண்டு ஆக்ரோஷமாக நடனமாடிக் கொண்டு அங்கும்  இங்கும்  அலைந்து கொண்டு இருந்தபோது அவருடைய கோபத்தை தணிக்க விஷ்ணுவானவர் பார்வதியின் உடலை பல துண்டுகளாக வெட்டி  எறிந்தார். அப்போது அவளது உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் அனைத்தும் சக்தி பீடங்களாக ஆயிற்று. அப்படி நடந்த நிகழ்ச்சியில் பார்வதியின் வலது கை விழுந்த இடமே இடத்தில் மேல்மலையனூரும் ஒன்றாம்.  அவளை அங்கு உருவமில்லாத நிலையில் இருக்குமாறும் தான் வந்து அவளை மனப்பதாகவும் சிவன் கூறியதாகவும் ஆகவேதான் பார்வதி புற்று உருவில் அங்கு வந்து தங்கினாள் என்ற ஒரு கதை உள்ளது. இன்னொரு  கதையின்படி  ஒரு முறை தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்த அசுரர்களை  அழிக்க விஷ்ணு பகவான் பார்வதியின் துணையை நாடினார். அப்போது புற்று உருவில் இருந்த பார்வதி அவர் வேண்டுகோளை ஏ...

An American Sadhu - Part: 4

படம்
 ஒரு அமெரிக்க சாது  In English : 'An American Sadhu' by Dolf Hartsuiker ( http://www.adolphus.nl/sadhus/stories/rampriya.html ) In Tamil  :- சாந்திப்பிரியா  Part-4 சுகதேவ் தாஸ்   முடிவுரை-1 ஹரித்வார் கும்பமேளா 1998 கும்ப மேளாவில் உங்களுடைய நண்பர்களை கண்டு பிடிப்பது கடினம். நானும் ஹரித்வார் கும்பமேளாவிற்கு சென்று இருந்தபோது சுகதேவ் தாஸ் எனும் பாபாவை தேடினேன். அவரை இதற்கு முன்னால் உஜ்ஜயினியில் சந்தித்துப் பேசி உள்ளேன். அவர் தனது பிரும்மச்சர்யாத்தைக் காப்பாற்றிக் கொள்ள எப்போதுமே தனது ஆண் பாகத்தின் மீது கட்டையினால் செய்த கற்பைக் காக்கும் பெல்டை அணிந்து இருப்பார். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதும் வணக்கத்தை பரிமாறிக் கொண்டோம்.  எங்களுடைய நண்பர்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அதன் பிறகு அவர் மறு பிறப்பை பற்றி என்னிடம் விளக்கிக் கூறிக் கொண்டு இருந்தார். இல்லற இன்பத்தை விரும்பாதவன் அல்லது அதை அனுபவிக்காதவன் பைராகியாக பிறப்பு எடுப்பாராம். இல்லை எனில் பைராகி இல்லாத பிறவியாக பிருந்தாவனத்தில் கிருஷ்ணருடைய நகரில் பிறப்பு எடுப்பாராம்...

An American Sadhu - Part: 3

படம்
 ஒரு அமெரிக்க சாது  In English : 'An American Sadhu' by Dolf Hartsuiker ( http://www.adolphus.nl/sadhus/stories/rampriya.html ) In Tamil  :- சாந்திப்பிரியா  Part-3 ராமப்பிரியா  பிறகு நான் மீண்டும் அடுத்த முறை அங்கு சென்றேன். அப்போது குருஜி மட்டுமே தனியாக இருந்தார். அவர் டெண்டிற்குள் இருந்த படுக்கையில் படுத்து இருந்தார். நான் அங்கிருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தேன். 'ராமப்பிரியா தாஸ் குளிக்கின்றார். அவன் நல்ல பிள்ளை' என்றார். அப்படியானால் நான் நல்லவன் இல்லையா என யோசித்தேன். முன்னர் வந்த போதெல்லாம் என்னிடம் ஹாஷ் என்ற போதைப் பொருள் உள்ளதா எனக் கேட்பது வழக்கம்.  ஒரு நல்ல சாதுவாக இருந்தால் அதையெல்லாம் கேட்பாரா என யோசித்தேன். எனக்கு அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை.  அதற்குக் காரணம் முன்னர் ஒரு முறை நான் அங்கு சென்று இருந்தபோது ராமப்பிரியா அங்கு இல்லை. அப்போது லஷ்மண்  தாஸ் அவருடைய பெட்டியைக் குடைந்து கொண்டு  இருந்ததைக் கண்டேன்  . என்னைப் பார்த்ததும்  அசடு வழிந்தவாறு அவசரம் அவசரமாக பெட்டியை மூடிவிட்டு வெளியில் வந்தார். என் கைய...

Hyderabad Ujjayini Mahakali Temple

படம்
ஹைதிராபாத் உஜ்ஜயினி மகாகாளி ஆலயம்   சாந்திப்பிரியா  ஆந்திரப் பிரதேசத்தில் பல புராதான ஆலயங்கள் உள்ளன.  சாதாரணமாகக் கூறுவது என்றால்  அனைத்து மாநிலங்களை விட ஆந்திராவில் புராதான மற்றும் சரித்திரப் புகழ் பெற்ற ஆலயங்கள் மிக அதிகம் என்றே கூறலாம். அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றே மிகப் பழமையான உஜ்ஜயினி மகாகாளி ஆலயம் ஆகும்.  இது சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். இதன் வரலாறும் சுவையாகவே உள்ளது.  1813 ஆம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த சுருட்டி அப்பையா என்பவர் ஆங்கிலேய அரசின் ராணுவத்தில் பணி புரிந்து வந்தார். அவரை மத்தியப் பிரதேசத்தில் இருந்த உஜ்ஜயினி நகருக்கு மாற்றினார்கள். சில காலம் அவர் அங்கு இருந்தபோது ஒரு முறை உஜ்ஜயினியில் கடுமையான பிளேகு நோய் பரவி இருந்தது . பலர் மரணம் அடைந்தார்கள். ஆகவே சுருட்டி அப்பையாவும் அவருடைய நண்பர்களும் உஜ்ஜயினி மகாகாளியின் ஆலயத்துக்குச் சென்று தமது வேலைகள் விரைவாக முடிந்து தாம் நல்லபடியாக ஊருக்கு திரும்பிச் சென்று விட்டால் ஹைதிராபாத்தில் உஜ்ஜயினி காளிக்கு ஒரு ஆலயம் அமைப்பதாக வேண்டிக் கொண்டார்கள். 1815 ஆம் ஆண்டு அவர்கள் நல்லபடியாக ...

Anakapalli Nookallamma

படம்
அனகாபள்ளி நூக்கலம்மா  சாந்திப்பிரியா  ஆந்திரப்பிரதேச மானிலத்தின் விசாகப்பட்டினத்தின் அருகில் உள்ள ஒரு கிராமமே அனகாபள்ளி என்பது. அனகாபள்ளி வெல்லம் மிகவும் சுவையானது, அகில உலக அளவில் பெருமை வாய்ந்தது. காரணம் அங்கிருந்து பெருமளவில் வெல்லம் ஏற்றுமதி ஆகின்றது. அப்படிப்பட்ட அனகாபள்ளி கிராமத்தில் உள்ள ஒரு மிகப் பழமையான ஆலயமே பைடிதள்ளி   நூக்கலம்மா அம்மாவாறு ஆலயம் என்பது . ஆலயம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது.  நூக்கலம்மா யார் ? நூக்கலம்மா தேவி என்பவள் ஒன்பது சக்தி தேவிகளில் ஒருவராம். பண்டைய காலத்தில் அவளை அனகா தேவி என்றும் அழைத்து இருந்தார்கள். பொதுவாகவே அவளை கிராம தேவதை என்று பலர் கூறினாலும் இன்று நகரில் உள்ள அவள் ஆலயம் மிக அதிகமான மக்களை ஈர்க்கின்றது. அவளது அவதாரம் பற்றிய இரண்டு கிராமியக் கதைகள் உள்ளன.  முதலாம் கதையின்படி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கோதாவரி நதிக் கரையில் இருபுறமும் இருந்த இரண்டு நகரங்களை இரண்டு மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்களில் தர்ம கேது என்ற மன்னன் மிகவும் நேர்மையானவன். அவனது படையினர் பலம் ம...

An American Sadhu - Part : 2

படம்
 ஒரு அமெரிக்க சாது  In English : 'An American Sadhu' by Dolf Hartsuiker ( http://www.adolphus.nl/sadhus/stories/rampriya.html ) In Tamil  :- சாந்திப்பிரியா  Part-2     ஒரு சாது  ''இனி எனக்கு அது தேவை இல்லை'' என்றவர் தான் தனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் ராம ஜெபம் செய்வதாகக் கூறினார். அவர் தன்னிடம் இருந்த ஒரு துளசி மணி மாலையைக்  காட்டினார். அதை வைத்துக் கொண்டு தினமும் அந்த மாலையில் உள்ள மணிகளின் எண்ணிக்கைகளைப் போல ஆயிரம் மடங்கு ராம ஜெபம் செய்வாராம்.  அதை மேலும் அதிகம் ஆக்கிக் கொள்ள முடிவு செய்து உள்ளாராம். இருபத்தி நான்கு மணி நேரமும் தன் மனதிலும் ராம நாம ஜெபத்தை செய்து கொண்டு இருக்க திட்டமிட்டு உள்ளாராம்.  'ஒருவனுக்கு நல்ல நடத்தையே முக்கியம்' என்றவர் தனது தந்தை இப்போது தன்னைப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்றார். அவருடைய தந்தை அமெரிக்காவின் ராணுவத்தில் ஒரு அதிகாரி. மிகவும் கண்டிப்பானவர் என்பது மட்டும் அல்லாமல் அவருடைய குடும்பத்தினரை ராணுவ கட்டுப்பாட்டுடன் வளர்த்தவர். என்றார். ஆகவே ராமப்பிரியா தாஸ் தனது தந்தையை எதிர்த்தார், ...

Kanaga Mahalashmi Temple

படம்
கனக மகாலஷ்மி ஆலயம்   சாந்திப்பிரியா    ஆந்திரப்பிரதேசத்தில் விசாகப்பட்டினம் என்பது மிகப் பெரிய நகரம். அந்த நகரத்தின் மத்தியப் பகுதியான புருஜுபெடா எனும் இடத்தில் உள்ளது  இந்த ஆலயம். சுஇந்த ஆலயத்தில் அம்மாவாறு என்று மக்களால் அழைக்கப்படும் கனகலஷ்மியின் சிலை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு  முற்பட்டது என்கிறார்கள். இந்த ஆலய தேவியின் ஸ்தல புராணம் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கவில்லை. அனைத்தும் வாய்  மொழிக் கதையாகவே உள்ளன. ஆனால் இந்த ஆலயம் 1917 ஆம் ஆண்டுகளில்  இந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றிக் கூறப்படும் கதை இது. 1912 ஆம்  ஆண்டு வாக்கில் ஒரு கிணற்றில் இந்த தேவியின் சிலை கிடைத்ததாகவும் அங்கு வசித்து வந்த மக்கள் அதை வெளியில் எடுத்து அந்த சாலையிலேயே ஆலயம் அமைத்தார்களாம்.  ஆனால் சில  ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1917 ஆண்டுவாக்கில் உள்ளூர் நகராட்சியினர்  அந்த சாலையை விஸ்தரித்துக் கொண்டு இருந்த போது சாலையின் நடுவில் இருந்த அந்த தேவியின் ஆலயத்தை அகற்றிவிட்டு அந்த சிலையை வேறு ஒரு இடத்தில் கொண்டு சென்று வைத்து விட்டார்களாம்....