Angala Parameswari

மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி சாந்திப்ரியா மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஜிஞ்சி தாலுக்காவில் விழுப்புரத்தில் உள்ளது . இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றே கூறுகிறார்கள்.தக்ஷ யாகத்தின் போது உயிர் துறந்த பார்வதியின் உடலை சிவபெருமான் சுமந்து கொண்டு ஆக்ரோஷமாக நடனமாடிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தபோது அவருடைய கோபத்தை தணிக்க விஷ்ணுவானவர் பார்வதியின் உடலை பல துண்டுகளாக வெட்டி எறிந்தார். அப்போது அவளது உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் அனைத்தும் சக்தி பீடங்களாக ஆயிற்று. அப்படி நடந்த நிகழ்ச்சியில் பார்வதியின் வலது கை விழுந்த இடமே இடத்தில் மேல்மலையனூரும் ஒன்றாம். அவளை அங்கு உருவமில்லாத நிலையில் இருக்குமாறும் தான் வந்து அவளை மனப்பதாகவும் சிவன் கூறியதாகவும் ஆகவேதான் பார்வதி புற்று உருவில் அங்கு வந்து தங்கினாள் என்ற ஒரு கதை உள்ளது. இன்னொரு கதையின்படி ஒரு முறை தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்த அசுரர்களை அழிக்க விஷ்ணு பகவான் பார்வதியின் துணையை நாடினார். அப்போது புற்று உருவில் இருந்த பார்வதி அவர் வேண்டுகோளை ஏ...