இடுகைகள்

Kolak Kalai

படம்
  கோலக் கலையும் அதன் சில உண்மைகளும் சாந்திப்பிரியா கோலக் கலை என்பது இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தோன்றி உள்ளது என்பது தெரிகின்றது. கோலம் என்பது ஒரு விதத்தில் பார்த்தால் சித்திரக் கலையைப் போன்றதே. இன்றும் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் மலைகளிலும், பள்ளங்களிலும், குகைகளிலும் உள்ள பாறைகளைப் பார்க்கையில் அவற்றில் கோலங்கள் போன்ற பல உருவங்கள் உள்ளதைக் காணலாம். ஆகவேதான் கோலக் கலை ஆதி முதலேயே இருந்துள்ளது என்பதை நம்ப வேண்டி உள்ளது. வாயிலில் கோலங்களைப் போடுவது ஒரு பழக்கமாக இருந்துள்ளது என்றாலும் அதற்கும் சில காரணங்கள் இருந்துள்ளன. துஷ்ட தேவதைகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க, தர்ம தேவதைகளை உள்ளே அழைக்க, தூய ஆவிகளை உள்ளே அழைக்க மற்றும் லஷ்மி தேவியை உள்ளே அழைக்க என பல காரணங்களுக்காக பல விதமான கோலங்கள் போடப்பட்டன. அப்படியாக கோலங்களைப் போட்டபோது அதைப் போடும் பெண்கள் சில மந்திரங்களையும் உச்சரித்தவாறே போட்டு வந்தனர் என்பது கிராமியக் கதையாக உள்ளது. அதற்கு மேலும் சென்றால் கோலங்கள் போடுவது புழு பூச்சிகளுக்கு உணவாக இருக்கட்டும் என்பதற...

Random Thoughts

படம்
சாமி படங்கள்- சுவர் அழுக்காகாமல் பூ வைக்க ஒரு யோசனை சாந்திப்பிரியா நாம் பூஜை அறையில் மாட்டும் சாமி படத்தின் மீது பூ வைக்கின்றோம். அவற்றை தலைப் பகுதியில் பிரேமுகுப் பின்னால் சொருகி வைப்பதினால் நாளடைவில் அந்த இடத்தில் கறை ஆகி சுவர் அழுக்காகி விடும். பூக்களை வைக்காத நாட்களில் அந்த இடம் கருப்பாகத் தெரியும். ஆகவே சுவற்றை அசுத்தப்படுத்தாமல் இருக்க நான் பூஜை அறையில் உள்ள சாமிகளின் பிரேமின் தலைப் பகுதியில் ஒரு அங்குலம் நீளமும் அறை அங்குல அகலமுமான கெட்டியான (சிறிது தடிமனான ) வண்ண அட்டையின் ஒரு பக்கத்தில் சிறு ஓட்டை போட்டு (பஞ்ச் மிஷினினால்) பெவிகால் போட்டு ஒட்டி வைத்தேன். அட்டையை இப்போது அந்த அட்டையின் ஒட்டையில்தான் பூவை சொருகி வைக்கின்றோம். சுவர் கறை படுவது இல்லை. நாம் எந்த வீட்டுக்கு குடி சென்றாலும் சுவர்  அழுக்கு ஆகாது. பிரேமின் வண்ணத்துக்கு ஏற்ப அட்டையை வாடர் கலர் செய்து விட்டால் பிரேமுடன் அது ஒன்றி இருக்கும்.  அச்சிங்கமாகவும் தெரியாது.  கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். 

Ponnandal Ramanathan writes-1

படம்
பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய  தெய்வீகத்தில் நான் படித்த மற்றும்  கேட்ட செய்திகள் சில -  பாகம் 1 (1) சத்குருனாதரின் காடாஷம் ஒருவர் மீது இருக்குமானால் அந்த அதிருஷ்டக்காரனின் வாழ்கை ஓடம் சலனமில்லாமல் அமைதியாக , நிம்மதியாக, பயமில்லாமல் சென்று கொண்டு இருக்க அந்த குருநாதனே ஓடத்தை ஏற்றிக் கரை சேர்ப்பார் என்பது சத்தியமான வாக்கு. ----------------------------- (2) சாதுக்களின் தரிசனம், அவர்கள் மீது நாம் வைக்கும் பக்தி மற்றும் தியானமுமே நமக்கு பல புண்ணிய பலன்களையும், புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனையும் தருகின்றது. -------------------------- (3) சத்சங்கம் கிடைப்பது அரிது. கிடைத்தாலும் அதில் கலந்து கொள்ள எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்காது, மனமும் வராது . ராவணன் சிறந்த சிவ பக்தன். ஆனால் அவனுக்கு சத்சங்கங்களில் கலந்து கொள்ள வாய்ப்பே கிடைக்கவில்லை. -------------------------- (4) ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கருணை கடாஷம் எல்லை அற்றது. ஒரு பாபமும் செய்யாத சீதையை தன் மனைவி என்ற உரிமையில் உலக நியதியை எடுத்துக் காட்டும் பொறுப்பில் அக்னியில் புடம் போட்டு ஏற்றுக...

Salanpur Hanuman Temple- Gujarat

படம்
குஜராத் சலன்பூர் ஆஞ்சனேய  ஆலயம் சாந்திப்பிரியா சாமிநாராயணன் சம்பிரதாயத்தினர் நிறுவி உள்ள அற்புதமான ஒரு ஹனுமான் ஆலயம் குஜராத் மாநிலத்தின் சாலன்பூர் என்ற சிறு நகரில் உள்ளது. அந்த சிறு நகரம் அகமதாபாத்தில் இருந்து சுமார் அறுபது மைல் தொலைவில் உள்ளது. அதைவிட சிறந்தது, ராஜ்கோட் அல்லது பவனகருக்கு சென்று அங்கிருந்து சுமார் ஒன்றரை மணி நேர டாச்சி அல்லது பஸ்சில் பயணம் செய்து போதத் ( Botad ) எனும் இடத்தை அடைய வேண்டும். அங்கிருந்து ஆட்டோ பிடித்து ஆலயத்துக்கு செல்லக் கூறினால் சுமார் முப்பது நிமிட நேரத்தில் அந்த ஆலயத்துக்கு சென்று விடலாம். அந்த ஆலயத்தின் மகிமை என்ன என்றால் பேய் , பிசாசு பிடித்தவர்கள் அங்கு சென்று அங்குள்ள ஹனுமாரை வணங்கினால் அவை ஓடி விடும் என்பதே. அவரைப் பொதுவாக துன்பங்களைக் களையும் ஹனுமார் என அழைக்கின்றனர். முன்னூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டது எனப்படும் அந்த ஆலயத்தை நிறுவியவர் 1850 ஆம் ஆண்டு மறைந்துவிட்ட கோபால்நாத் ஸ்வாமிகள் என்பவரே. அவர் மிமிம்சா மற்றும் வேதாந்தங்களை நன்கு கற்றறிந்தவர். பலரது வாழ்விலும் ஏற்படும் இன்னல்களைக் களைய அவர் ஆன்மீக பாடங்களைப் போதித்தவர்...

Badrachalam Raamar Temple

படம்
பத்ராசலம் ராமர் ஆலயம் சாந்திப்பிரியா ஆந்திரப் பிரதேசத்தில் கம்மம் நகரின் அருகில் உள்ளது பத்ராசலம். அங்குள்ள ராமர் ஆலயம் மிகவும் பிரபலமானது. முன்னொரு காலத்தில் அந்த இடத்தில் இருந்த மலை உச்சியில் பத்ரா என்ற முனிவர் தவம் செய்து வந்தார். அவர் ராமரின் பக்தர். அவர் ராமபிரான் தனது தலை மீது வந்து அமர வேண்டும் என வேண்டிக் கொண்டு தவம் இருந்தார். அப்போது ராமன் சிதை மீட்க இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு இருந்த நேரம். திரும்பி வரும்போது உன்னுடைய ஆசையை நிறைவேற்றுவேன் என ராமர் கூறினார். ஆனால் அதை நிறைவேற்றும் முன் ராமர் மற்றொரு அவதாரமான மகா விஷ்ணு அவதாரத்தை எடுக்க வேண்டி வந்தது. ஆகவே அந்த முனிவரின் ஆசையை அப்போது நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் பின்னர் மகாவிஷ்ணு அவதாரத்தில் இருந்த ராமர் அங்கு வந்து அந்த முனிவருக்கு சீதா சமேத ராமபிரானாக காட்சி தந்தார் . அதனால்தான் அங்குள்ள ராமர் சிலையின் கையில் மகாவிஷ்ணுவின் சங்கு சக்கரம் உள்ளது. ஆனால் அந்த ஆலயம் வந்தது எப்படி? ராமரும் சிதை மற்றும் தனது தம்பி லஷ்மணருடன் அங்கு இருந்து மறைந்தனர். அப்போது அவர் தம்மை சிலையாக அங்கு விட்டுச் செ...

Tirumangalakudi Temple

படம்
திருமங்கலக்குடி ஆலயம்   (சூரியனார் ஆலயத்துக்குச் செல்லும் முன்  கண்டிப்பாக  வழிபடவேண்டிய  ஆலயம்) சாந்திப்பிரியா இந்த ஆலயம் கும்பகோணத்தில் இருந்து பதினைந்து கிலோ தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து இரண்டு கிலோ தொலைவிலும் உள்ளது.  அங்கிருந்து சூரியனார்  ஆலயம் ஒரு  கிலோ தொலைவில் உள்ளது.  இது  ஒரு முக்கியமான ஆலயம். அதன் பெயர் பிராணதீஸ்வரர் ஆலயம். நவகிரஹ தரிசனம் செய்யப் போகின்றவர்கள் சூரியனார் ஆலயம் செல்லும் முன்னால் முதலில் பிராணதீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்தப் பின்னரே சூரியனார் ஆலயம் செல்ல வேண்டும். இல்லை என்றால் அதற்குப் பலன் இல்லை என்கிறார்கள். திருமங்கலக்குடி கும்பகோணத்தில் இருந்து சுமார் எட்டு கிலோ தொலைவில் உள்ளது. அந்த ஆலயத்தை மங்களாம்பிகை ஆலயம் என்றும் கூறுகிறார்கள் அந்த ஆலயம் வந்த வரலாறு சுவையானது. பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த குலோத்துங்க சோழ மன்னன் அந்த இடத்தின் மன்னனாக இருந்தபோது அவருடைய அமைச்சரான அலைவாணர் என்பவர் மன்னனிடம் கூறாமல் அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்தி திருமங்கலக்குடியில் ஒரு சிவன் ஆலயத்தைக் காட...

Thiruneelakkudi Temple

படம்
திருநீலக்குடி சிவன் ஆலயம் சாந்திப்பிரியா திருநீலக்குடி என்கின்ற பெருமை வாய்ந்த இடம் கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு உள்ள திருநீலக்குடி என்கின்ற ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். ஆடுதுறைக்கு பஸ்சிலோ ரயிலிலோ சென்று விட்டால் அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள ஆலயத்தை அடையலாம். ஆலயத்தில் இரண்டு நுழை வாயில்கள் உள்ளன. இரண்டு நுழை வாயில்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளது. சன்னதியில் இறைவன் மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். ஆலயத்தில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஒரு அம்மனின் பெயர் பக்தபீஷ்டப்பிரதாயினி . அவள் தவக் கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணக்கோலத்தில் உள்ள இன்னொரு அம்மனின் பெயர் அனுபமஸ்திரி என்பதாகும். இங்குள்ள வில்வ மரத்தில் உள்ள இலையின் ஒரு தளம் ஐந்து இலைகள் கொண்டது என்பது விசேஷம். ஆலயத்தில் வந்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும், திருமணம் விரைவில் நடைபெறும், வியாதிகள் தீரும், ஆ...