இடுகைகள்

Tirupporur Murugan Temple ( 28)

படம்
தெரிந்த ஆலயம் , பலரும் அறிந்திடாத வரலாறு   - 28 திருப்போரூர்   முருகன் ஆலயம் சாந்திப்பிரியா சென்னையில் இருந்து நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் செங்கல்பட்டைத் தாண்டி உள்ளதே திருப்போரூர் முருகன் ஆலயம். அது பத்தாம் நூற்றாண்டை சார்ந்த பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம். அதில் உள்ள முருகனின் சிலை ஸ்வயம்புவாம். அந்த ஆலயத்துக்கு செல்ல நல்ல பாதை உள்ளது. அந்த ஆலயத்தின் வரலாறு சுவையானது. அது குறித்துப் பல கிராமியக் கதைகள் நிலவுகின்றன. சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1645 ஆம் ஆண்டு வாக்கில் அந்த இடத்தின் அருகில் இருந்த கிராமத்தில் சிதம்பர ஸ்வாமிகள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மதுரை மீனாஷி தேவியின் பக்தர். ஒரு நாள் தேவி அவர் கனவில் வந்து திருப்போரூரில் முருகனுக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கட்டளை இட்டாள். ஆனால் சுவாமிகளோ அந்த தேவி தன் முன்னால் வந்து தனக்கு தரிசனம் கொடுத்தால்தான் அதை செய்வேன் எனப் பிடிவாதமாக அவளைக் காண வேண்டும் என சாப்பிடாமலேயே விரதம் இருந்தார். ஆகவே ஒரு நாள் அவர் முன்னால் மீனாஷி தேவி தோன்றி அவர் தலையை தொட்டு ஆசி கூறினாள...

Route map for important Temples

படம்
தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,  அங்கு செல்லும் வழிதடம் சாந்திப்பிரியா   படத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்   பலரும் இந்த ஆலயம் செல்லும் வழி எது, அந்த ஆலயம் செல்லும் வழி எது, முக்கியமான ஆலயங்களுக்குச் செல்லும் வழி என்ன எனக் கேட்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு உதவியாக இருக்க சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் செல்லும் வழியையும் முக்கியமாக கும்பகோணத்தை சுற்றி உள்ள நவக்கிரக ஆலயங்கள் செல்லும் வழியையும் மேலே உள்ள படத்தில் தந்துள்ளேன். மேலும் நான் தந்துள்ளதைத் தவிர  வேறு பல ஆலயங்கள் வழியெங்கிலும் வரும். அவற்றில் பழமையான ஆலயங்களை அங்காங்கே வண்டியை நிறுத்திப் பார்க்கலாம்.  வெளியூரில் இருந்து எப்போதாவது செல்பவர்கள்  ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது இரண்டு நாளாவது ஹோடல்களில் தங்கி அனைத்து ஷேத்திரங்களையும்  ஒரு வாரத்தில் தரிசிக்கலாம். கும்பகோணத்தை சுற்றி மற்றும் கும்பகோணத்திலேயே காண வேண்டிய சில ஆலயங்கள் 1) திருவையாறு செல்லும் வழியில் ...

Thirumeeyachur- Sree Lalithambigai Temple

படம்
திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயம் சாந்திப்பிரியா   ஆலயம்  படம் நன்றி : -http://divinebrahmanda.blogspot.com மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சுமார் இருபது கிலோ தொலைவில் உள்ளது திருமீயச்சூர் என்ற சிறிய கிராமம். மயிலாடுதுறைக்கு பக்கத்தில் உள்ள நன்னிலம் மற்றும் பேரளத்தில் இருந்து மிகவும் அருகில் உள்ளது. இந்த ஆலயமும் சோழர்கள் காலத்தில் ராஜேந்திர சோழன் என்பவரால் கட்டப்பட்டதுதான். ஆலயத்தில் மேகநாதர் சமேதமாக லலிதாம்பிகை உள்ளார். இந்த ஆலய வரலாறும் சுவையானது.  லலிதாம்பிகை  படம் நன்றி : -http://divinebrahmanda.blogspot.com ஒருமுறை காஷ்யப முனிவர் அங்கு இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு. சிவபெருமான் பிரசாதமாகத் தந்த முட்டையில் இருந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர் . ஒருவளுக்கு கருடனும் மற்றவளுக்கு அருணனும் பிறந்தனர். ஆனால் ஒருநாள் மோகினி போல தன்னை உருமாற்றிக் கொண்டு திரிந்த அருணனை சூர்யா பகவான் கெடுத்து விட அருணன் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். ஆகவே கோபமடைந்த சிவபெருமானும் சூரியனாரின் ஓளி மறையுமாறு சாபமிட பயந்து போன சூரியனா...

Navagraha Sthoththiram

படம்
நவக்ரஹ ஸ்தோத்திரம்  சாந்திப்பிரியா நவகிரகங்களை நாம் தினமும் துதித்து வணங்குவத்தின் மூலம் நமக்கு அந்தந்த நவகிரக  நாயகர்களினால் ஏற்படும் தொல்லைகள் குறையும். அந்த ஒன்பது நாயகர்களும் அவர்களுக்கு இட்ட வேலைகளையே செய்கின்றார்களே தவிர வேண்டும் என்றே எவருக்கும் கெடுதல்களைப் புரிவது இல்லை. நாம் பூர்வ ஜென்மத்திலும், இந்த ஜென்மத்திலும் செய்துள்ள, செய்து வரும் பாவக் காரியங்களுக்கு  ஏற்ப நமக்கு விதிக்கப்பட்டு உள்ள தண்டனையையே அவர்கள் தருகிறார்கள். நாம் செய்துள்ள பூர்வ ஜென்ம பாப, புண்ணியங்களின் கணக்கின்படி  நமக்கு ஒரு குறிப்பிட்ட பிறப்பு தரப்படுகின்றது.  நமக்கு கொடுக்கப்பட்டு உள்ள அப்படிப்பட்ட பிறப்பில்  இன்ன  காலத்தில் இன்ன  தண்டனை, கீர்த்தி, சோதனை, போன்றவற்றை பெற வேண்டும் என  முடிவு  எடுக்கப்படுகின்றது. அதைத்தான் ஜாதகமாக கணித்து நம் ஜாதகத்தில் அந்த கிரக தோஷம் உள்ளது, இந்த கிரக தோஷம் உள்ளது எனக் கூறுவார்கள்.  கிரக தோஷம் என்ன என்றால் குறிப்பிட்ட  தண்டனையை  தரக்கூடிய நவகிரக நாயகர்கள் தரும் தண்டனை காலத்தையே கிரக தோஷம் என கூறப்படுகின்றத...

Tirupparaaithurai Siva Temple (Tiruchi )

படம்
திருப்பராய்துறை சிவன் ஆலயம் சாந்திப்பிரியா திருப்பராய்த்துறை என்ற சிறு கிராமம் திருச்சியில் இருந்து  கரூர்   செல்லும் வழித் தடத்தில் இருபது கிலோ தொலைவில் உள்ளது.  குளித்தலையில் இருந்தும் அந்த ஆலயம் செல்லலாம்.  அந்த கிராமத்தில் உள்ள மிகப் பெரிய சிவன் ஆலயம் சோழ மன்னர்கள் ஆண்ட ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தது. ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ஸ்வயம்பு லிங்கமாகும். முன்னொரு காலத்தில் இந்த தலத்தில் தம்மைப் பொறுத்தவரை கற்பில் சிறந்து விளங்கி வாழ்ந்து வந்து கொண்டு இருந்த தாருகாவன முனிவர்கள் என்பவர்கள் தான் என்ற அகந்தை கொண்டு அலைந்தனர். பல வரங்களையும் பல சக்திகளையும் பெற்று இருந்தவர்கள் தாம் பெற்ற அனைத்துமே தாம் செய்த வேள்விகள், யாகங்கள் மற்றும் தவத்தினால்தான் என்ற எண்ணத்தில் தம்மையே கடவுளுக்கு இணையாகக் கருதி வாழத் துவங்கினார்கள். அவர்கள் ஆலயங்களை மதிக்காமல் தாம் உள்ள இடங்களே ஆலயங்கள் எனக் கருதி வாழத் துவங்க அதைக் கண்ட மற்ற ரிஷி முனிவர்கள் சிவ பெருமானிடம் முறை இட்டனர். ஆகவே அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்த சிவ பெருமான் விஷ்ணுவை அழைத்து அந்த தாருகாவன முனிவர்க...

Lakshmi Varaha Swami Temple - Kallidaikurichi (29)

படம்
தெரிந்த ஆலயம் , பலரும் அறிந்திடாத வரலாறு   - 29  இலஷ்மி  வராஹஸ்வாமி   ஆலயம் சாந்திப்பிரியா திருநெல்வேலி மற்றும் பாளயம்கோட்டைக்கு இடையில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ளதே கல்லிடைக்குறிச்சி என்ற சிறு கிராமம். கிராமம் சிறியது என்றாலும் அங்கு பல புராதானமான ஆலயங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஆலயம் லஷ்மி வராஹா ஆலயம். அங்குள்ள விஷ்ணு, வராஹா அவதாரத்தில் லஷ்மி தேவியை மடியில் அமர்த்தி வைத்தவாறு காட்சி தருகின்றார். ஆலயம் 1478 ஆம் ஆண்டை சேர்ந்தது என்கிறார்கள். ஆலய வரலாறு என்ன? அங்கு கூறப்படும் கதை இது. அந்த புராணக் கதையின்படி இந்த ஆலயம் உள்ள இடத்தில் ஆட்சி செய்து கொண்டு இருந்தவர் கிருஷ்ண பகவானின் தேவலோகத்து பக்தர். அந்த தேவலோகத்து மன்னன் அடிக்கடி பல யாகங்களையும் வேள்விகளையும் செய்து வந்தானாம். அப்போது அவன் ஒரு முறை அஸ்வமேத யாகம் செய்தான். அந்த யாகத்தைப் பார்க்க சிவன், பிரும்மா மற்றும் குபேரன் போன்ற பலரும் வந்தனர். அவர்களைத் தவிர பல தேவர்களும் தேவேந்திரனுடன் வந்தனர். ஆனால் விஷ்ணு மட்டும் வரவில்லை. ஆகவே அந்த யாகத்தில் பங்கேற்ற ரிஷி முனிவர்கள் அந்தக் குறையைத் தீர...

Kathaayee enum Valli's marriage with Murugan

படம்
காத்தாயி அம்மன் எனும்  வள்ளி தேவி முருகனை   மணந்த   கதை சாந்திப்பிரியா வள்ளி மற்றும் தெய்வயானையுடன் முருகன் வள்ளி வளர்ந்து பெரியவளாகத் துவங்கினாள். அவளுக்கு வயல்வெளிகளில் பாதுகாக்கும் வேலையை அந்த வேடுவர்கள் தந்தனர். அவள் வயலில் உள்ள பரண் மீது அமர்ந்து கொண்டு அங்கு தானியங்களை தின்ன வந்த பறவைகளையும் மிருகங்களையும் விரட்டி அடித்தாள். இப்படியாக அவள் அப்படிப்பட்ட வாழ்கையில் இருந்தபோது அந்த இடங்களில் சுற்றித் திரிந்து கொண்டு இருந்த முருகப் பெருமான் தற்செயலாக ஒருநாள் அவளை பார்த்தார். அவளுடைய அழகில் அவர் மயங்கினார். அவள் மீது தான் ஒருதலை பட்சமாக காதல் கொண்டு அங்கு ஒரு வேடன் போன்ற உருவில் அடிக்கடி வரத் துவங்கினார். அப்போது ஒரு நாள் ஒரு பிராணியை துரத்திக் கொண்டு வந்ததைப் போல வள்ளியிடம் சென்றார். முன்பின் அறியாதவர் வந்துவிட்டாரே என திகைப்புற்று அவரை யார் எனக் கேட்டாள் வள்ளி. அவர் தான் ஒரு வேடன் எனவும் அங்கு வேட்டை ஆட வந்தவர் எனவும் கூறிக் கொண்டார். இப்படியாக வேட்டை ஆடும் சாக்கில் அவர் தினமும் அங்கு வந்து ஏதாவது பேச்சுக் கொடுக்க இருவரும் நண்பர்கள் ஆய...