இடுகைகள்

Vinayaga - Folk tale

படம்
விநாயக சதுர்த்திக்கு ஒரு நாடோடிக் கதை சாந்திப்பிரியா  ஒரு முறை விநாயகருக்கு பிறந்த நாள் வந்தது. அன்று தன மகனுக்குப் பிடிக்கும் என பார்வதி நிறைய தின்பண்டங்கள் செய்தாள். அவருக்குப் பிடித்த் கொழுக்கட்டையை செய்தாள். விநாயகருக்கு நல்ல சுவையான உணவைப் பார்த்தால் சாப்பிட ஆசை. ஆகவே அவர் அனைத்தையும் தின்றுவிட , வயிறு ஒப்பி விட்டது. அதனால் அவரை பார்வதி தொந்தி விநாயகா என அழைத்தாள் . அதுவே அவர் பெயராக நிலைத்து நின்றது. அடுத்து விநாயகரால் ஒரு இடத்தில் நிற்க முடியாமல் திணறினார். ஆகவே தனது வாகனத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு நடக்கத் துவங்கினார்.  நடந்து கொண்டு இருந்தவர் ஒரு மேடு இருந்ததைக் கவனிக்காமல் கீழே தலை குப்பற விழ வயிறு பூமியில் பதிந்து அமுங்க அவர் சாப்பிட்ட அனைத்தும் வாந்தியாயிட்று. அப்போது மாலை நேரம். விநாயகர் தொந்தியுடம் நடக்க முடியாமல் அசைந்து அசைந்து சென்று கொண்டு இருந்ததையும், விழுந்து வாந்தி எடுத்ததையும் கண்ட சந்திரன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். அப்போது அதக் கண்டு கோபமுற்ற விநாயகர் சந்திரனுக்கு சாபம் தந்தார். 'இனி என் பிறந்த நாள் அன்று உன்னை எவர...

Chinthamani Vinayagar and important message

படம்
மனக் குழப்பங்களை தீர்க்கும்  சிந்தாமணி விநாயகர் ஆலயங்கள் சாந்திப்பிரியா மகாராஷ்டிரத்தில் மிகப் பிரசித்தி பெற்றது அஷ்ட சித்தி விநாயகர் என்ற எட்டு விநாயகர் ஆலயங்கள். அதில் ஒன்றுதான் சிந்தாமணி கணேஷ் என்ற விநாயகர் ஆலயம். அது போலவே மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் மற்றும் உஜ்ஜயினியிலும் சிந்தாமணி கணேஷர் ஆலயம் உள்ளது. இந்தூரிலும் உஜ்ஜயினியிலும் உள்ள ஆலயங்கள் பரமார் மன்னர் காலத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை எனத் தெரிகின்றது.  ஜுனா  இந்தூர் விநாயகாரின் ஆலயம்  . அவருக்கு  செல்போன் மற்றும் கடிதம் மூலம்  தமது பிரச்சனைகளை கூறுகின்றனர்  ஜுனா இந்தூர் என்ற பகுதியில் உள்ள அந்த பெருமை வாய்ந்த கணபதிக்கு தமது குறைகளை ஒரு கடிதமாக எழுதி அவரிடம் வைக்கின்றனர். அதை வைத்து விட்டால் நாம் அந்த பிரச்சனையைக் குறித்து சிந்தனை செய்ய வேண்டாம், கணபதியே அந்த குறைக்கு நிவாரணம் தருவார் என்ற நம்பிக்கை பெருமளவு உள்ளதினால் இந்தியாவில் இருந்து மட்டும் அல்ல அந்த ஆலயத்தின் விஷேசத்தைப் பற்றி அறிந்துள்ள உலகெங்கும் உள்ள பக்தர்கள் அந்த ஆலயத்துக்கு கடிதம் எழ...

Agneeswarar Temple- Kumbakonam (27)

படம்
தெரிந்த ஆலயம் , பலரும் அறிந்திடாத வரலாறு   - 27 அக்னீஸ்வரர் ஆலயம் சாந்திப்பிரியா  கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவில் கல்லணை செல்லும் பாதையில் உள்ளது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு உள்ள அக்னீஸ்வரர் ஆலயம். ஆலயம் உள்ள இடம் காவேரியின் வடக்குப் பகுதியான கஞ்சனூர் ஆகும். கும்பகோணத்தில் உள்ள சூரியனார் ஆலயத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த ஆலயம் உள்ளது. தான் பெற்ற சாபத்தில் இருந்து சாப விமோசனம் பெற அக்னி தேவர் இங்கு வந்து சிவனை வணங்கி வழிபட்டதாக் கதை உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள சிவ பெருமானை அக்னீஸ்வரர் என்றும் பார்வதியை கற்பகாம்பாள் என்றும் அழைக்கின்றார்கள்.  இந்த ஆலயத்தின் மகிமையைக் குறித்துப் மேலுள்ள கதையைத் தவிர வேறு பல கதைகள் நிலவுகின்றன. அதில் ஒன்று இது. ஏதோ ஒரு காரணத்தினால் பூமியில் அவதரித்து இருந்த பார்வதியை சிவ பெருமான் அந்த இடத்துக்கு வந்து மீண்டும் மணந்து கொண்டாராம். அப்போது அந்த திருமணத்தைக் கண்டு களிக்க பிரும்மாவும் அங்கு வந்ததும் இல்லாமல் சிவபெருமானை அங்கு வணங்கித் துதித்தாராம். இன்னொ...

An important deity in azhagar temple - Karuppaswaami

படம்
மதுரை அழகர் ஆலய காவல் தெய்வம் கருப்பஸ்வாமி சாந்திப்பிரியா  கருப்பஸ்வாமி சன்னதி உள்ள மதுரை  அழகர் ஆலயம்   படம் நன்றி: - http://en.wikipedia.org/wiki/Alagar_Koyil   சாதாரணமாக கருப்பஸ்வாமி எனும் கடவுளை கிராமத்தைக் காக்கும் கிராம தேவதையான கருப்பசுவாமி என்றே பலரும் நினைத்து இருப்பார்கள். ஆனால் அவர் சீதைக்குப் பிறந்தவர் என்ற ஒரு கதையும் அவர் கிருஷ்ணரின் அவதாரம் என்ற கதையும் உள்ளது. அவை அனைத்துமே வாய்மொழிக் கதைகள். புராணத்தில் அது குறித்துக் காணப் படவில்லை என்றாலும் அவரையும் ஒரு கடவுளாக ஏற்றுக் கொண்டு உள்ளதினால்தான் தமிழ்நாட்டில் கருப்பஸ்வாமிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவருக்கு மதுரை அழகர் ஆலயத்தில் தனி மரியாதையுடன் கூடிய சன்னதியே உள்ளது. அந்த சன்னத்திக்குச் செல்பவர்கள் ஒருவரும் அங்கு பொய் சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் அவர்களை கருப்பஸ்வாமி கடவுள் தண்டிக்காமல் விடமாட்டாராம். மேலும் அவருக்கு திருநெல்வேலியிலும் அம்பை தாலுக்காவில் உள்ள வீரவானல்லூரிலும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட ஒரு தனி ஆலயம...

Kumbakonam Athi Kumbeswarar Temple ( 26)

படம்
தெரிந்த ஆலயம்...பலரும் அறிந்திடாத வரலாறு - 26   ஆதி கும்பேஸ்வரர் ஆலயம்- கும்பகோணம் சாந்திப்பிரியா படம் நன்றி :- http://www.bing.com/reference/semhtml/Kumbakonam தமிழ் நாட்டில் உள்ள கும்பகோணம் இரண்டு காரணங்களுக்காக பெருமையாகப் பேசப்படும். ஒன்று சுவையான கும்பகோணம் டிகிரி காப்பி, இரண்டாவது மகாமகம். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வருவதே மகாமகத் திருவிழா. அப்படிப்பட்ட கும்பகோணத்தில் உள்ளதே ஆதி கும்பேஸ்வரர் ஆலயம். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு நாயகர் மன்னர்களால் மீண்டும் பழுது பார்க்கப்பட்டு பராமரிக்கப் பட்டது. ஆலயத்தின் உயரம் 128 அடி. அங்கு கும்பேஸ்வரர் மங்களாம்பிகை சமேதமாக அமர்ந்து அருள் பாலிக்கின்றார். அந்த ஆலயத்தின் வரலாறு இது. ஒரு முறை உலகெங்கும் பிரளயம் ஏற்பட்டது. அப்போது மேரு மலை மீது பகவான் பிரும்மா ஒரு குடத்தில் அமிர்தத்தையும் தமது மீதி படைப்புக்களையும் போட்டு மூடி வைத்து இருந்தார். அப்போது ஏற்பட்ட பிரளயத்தில் சிவபெருமான் அந்த குடத்தை எடுத்து வெள்ளத்தில் ஓட விட்டார். அது எங்கு சென்று நிற்குமோ அதுவே புண்ணிய பூமியாகும் எ...

Tirukkannamangai Vishnu Temple

படம்
திருக்கண்ணமங்கை  விஷ்ணு  ஆலயம்   சாந்திப்பிரியா ஒருமுறை சந்திரன் தனது நண்பரான குருவின் மனைவியுடன் தகாத உறவு கொண்டு ஒரு குழந்தைப் பெற்றுக் கொண்டார். அதனால் கோபமுற்ற தேவர்கள் அவருடைய உருவம் பொலிவு இழக்க வேண்டும் என சாபம் தந்தனர். ஆகவே வருத்தமுற்ற சந்திரன் பிரும்மாவிடம் சென்று ஆலோசனைக் கேட்க அவரும் அந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற தட்ஷிண புஷ்கரணி என்ற இடத்துக்குச் சென்று அங்குள்ள குளத்தில் நீராடினால் சாபம் போகும் என்றார். சந்திரனும் இப்போது திருக்கண்ணமங்கை ஆலயம் உள்ள இடத்துக்கு வந்து அந்த குளத்தில் நீராட இறங்கிய உடனேயே சாப விமோசனம் பெற்றாராம். அந்த குளத்தின் மகிமை அப்படியா ? ஆமாம் அந்தக் குளம் உள்ள இடம் திருக்கண்ணமங்கை ஆலயம். அதில்தான் மகாலஷ்மி குளித்து உள்ளாள். விஷ்ணுவை தான் திருமணம் செய்து கொண்ட போது அந்த குளத்து நீரை விஷ்ணுவின் கைகளில் ஊற்றி அவருக்கு அபிஷேகம் செய்தாள். அதன் கதை என்ன?   படம் நன்றி : https://www.trsiyengar.com ஒரு காலத்தில் பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்து அமிருதம் எடுத்தபோது அங்கிருந்த விஷ்ணுவின் அழகில் மயங்கிய ...

Kancheepuram Varatharaja Perumal Temple - (25)

படம்
தெரிந்த ஆலயம்...பலருக்கும் அறிந்திடாத வரலாறு - 25 வரதராஜப் பெருமாள் ஆலயம்- காஞ்சிபுரம் சாந்திப்பிரியா 1053 ஆம் ஆண்டில் பல்லவர்கள் காலத்தில் கட்டியதாக கூறப்படும் இந்த ஆலயம் சோழர்கள் காலத்தில் மேலும் புதிப்பிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரத்தில் ஹிமயகிரி    என்ற சிறு மலைக்  குன்றின் மீது உள்ள இந்த விஷ்ணு ஆலயம் திவ்ய தேசத்தின் முக்கியமான ஆலயமாகும். மலை மீது உள்ள ஆலயத்துக்கு சுமார் இருபத்தி நான்கு படிகள் ஏறிப் போக வேண்டும். ஆலயம் பிரும்மாண்டமானது. அதில் பகவானைத் தவிர முக்கியமாக தரிசிக்க வேண்டியது அங்கு உள்ள இரண்டு பல்லிகளின் சிலைகளையும் என்பது பொதுவான நம்பிக்கை. அதென்ன பல்லிகளின்  தரிசனம்? ஆலயத்தின் சுவையான பின்னணிக் கதை  இது . வரதராஜப் பெருமான்  முன் ஒரு காலத்தில் படைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பிருமாவுக்கு தன் மனைவியான சரஸ்வதியுடன் ஏற்பட்ட சண்டையினால் ஒரே மனக் குழப்பம் ஏற்பட்டதாம். என்ன முயன்றும் அவரால் நிதானமாக சிந்திக்க முடியாமல் போக அவர் கங்கை கரையில் சென்று த்யானம் செய்தார். அப்போது அவருக்கு ஒரு குரல் '' உங்கள் மன நிலை மாற வேண்...