இடுகைகள்

Navagraha Temples-- Guru

படம்
குரு ஆலயம் ஆலயத்தின் பெயர்: இராமனாதீஸ்வரர் சாந்திப்பிரியா     வழி : அடையார் - கிண்டி - செயின்ட் தாமஸ் மவுண்ட்-வழியே சென்று பூந்தமல்லி செல்லும் பாதையிலேயே (பெங்களூர் செல்லும் பாதை) சென்றால் போரூரை அடையலாம். போரூர் சாலையில் இடப்புறம் வரும் டுரூவு இன்போடெக், டி.எஸ்.ஆர்.பவுடர் கம்பனி , எஸ்எஸ்கியர்ஸ் மற்றும் இராமசந்திரா மெடிகல் காலேஜ் போன்ற கம்பனிகளைத் தாண்டிச் சென்றால் போரூர்-குன்றத்தூர் செல்லும் சாலை வரும். சாலை இருபுறமும் பிரியும் அந்த இடத்தை அடைந்ததும் இடப்புறம் திரும்பி போரூர்-குன்றத்தூர் செல்லும் சாலையின் செல்ல வேண்டும். அந்த சாலையின் இடது பக்கத்திலேயே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் மெயின் சாலையிலேயே தெரியும் நாகரத்னம்மா ஆலயம் அருகிலும் மின்சார வாரிய காரியாலத்துக்கு முன்பேயும் குருவின் ஆலயத்துக்குச் செல்ல வளைவு (ARCH) உள்ளதைக் காணலாம். வரலாறு:-     1000அல்லது 1200 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு உள்ள இந்த ஆலயம் குறித்து மிகவும் சுவாரஸ்யமான கதைகளை பண்டிதர்கள் கூறுகின்றார்கள். ஒருமுறை சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையே நடனப் போட்டி ஏற்பட்டது...

Navagraha Temples-- Raghu

படம்
இராகு ஆலயம் ஆலயத்தின் பெயர்: திருநாகேஸ்வரர் சாந்திப்பிரியா    வழி : புதன் ஆலயத்தில் இருந்து மீண்டும் மெயின் ரோட்டிற்கு வந்து (SH 113) அதே சாலையில் வலப்புறம் திரும்பி குன்றத்தூரை நோக்கிச் செல்ல வேண்டும். அதில் சென்றால் இடதுபுறம் சேக்கிழார் ஸ்கூல் மற்றும் தேவி மூகாம்பிகை ஆலயம் போன்றவை வரும். அடுத்து குன்றத்தூர் மெயின் பஸ் நிலையம் வரும். அங்கு சென்று பக்கத்து தெருவில் திரும்ப திரு நாகேஸ்வரர் எனும் இராகு ஸ்தலத்தைக் காணலாம். யாரைக் கேட்டாலும் கூறுவார்கள். வரலாறு:- குலோத்துங்க சோழன் தனது அரச சபையில் மிக்க புத்திசாலிகளையும்,  அறிவாளிகளையும்தான் வைத்தக் கொள்வாராம். அவர் அறிவானிகளைக் கண்டால் அவர்களை அழைத்து அவர்களுடைய அறிவை சோதிப்பது உண்டாம். அப்படிப் பட்ட நிலையில்தான் கவிஞர் சேக்கிழாரைப் பற்றி மன்னன் கேள்விப்பட்டார்.அவருடைய அறிவுத் திறனைக் கண்டு தம் அரசில் அவரை அமைச்சராக சேர்த்துக் கொண்டார். இராகு பகவான் தனி மனிதனின் ஆத்ம பலத்தை பெருக்கி வெற்றிகளைத் தருபவர். ஆத்ம பலம் இருந்ததினால்தான் அவரால் தேவர்களுக்குத் தெரியாமல் அமிருதத்தைக் கூட சிறிது உண்டு தன் ஆ...

Navagraha Temples-- Budan

படம்
புதன் ஆலயம் ஆலயத்தின் பெயர்: திருமேனீஸ்வரர்  அல்லது சுந்தரேஸ்வரர் சாந்திப்பிரியா    வழி : கேது ஆலயத்தில் இருந்து மீண்டும் மெயின் ரோட்டிற்கு வந்து (SH 113) அதே சாலையில் திரும்பி குன்றத்தூர் நோக்கிச் செல்ல வேண்டும். அதில் சென்றால் இடதுபறம் ஹோலி சர்ச் ஸ்கூல், வலப்புறம் சர்ச் போன்றவை வரும். அடுத்து சுமார் அரை அல்லது முக்கால் கிலோ தூர தொலைவில் வரும் கோவூர் பஸ் ஸ்டாப்பின் பக்கத்து தெருவில் திரும்ப புதன் ஆலயம் தெரியும். யாரைக் கேட்டாலும் கூறுவார்கள். வரலாறு:- பலவிதங்களிலும் சிறப்பு மிக்க இந்த ஆலயம் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு முன்பானது எத் தெரிகின்றது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பாக சுந்தர சோழன் துவக்கி வைத்த ஆலயத்தை பல்லவ மன்னன் முடித்ததாகவும் கூறுகிறார்கள். ஆலயம் ஏழு அடுக்கானது. தெற்கு நோக்கி அமைக்கப்பட்டு உள்ளது. சாதாரணமாக அனைத்து ஆலயங்களுமே கிழக்கை நோக்கித்தான் அமைந்து இருக்கும். ஆனால் இந்த ஆலயமோ தெற்கு நோக்கி அமைந்து உள்ளதின் காரணம் அந்த ஆலயத்தில் சௌந்திராம்பிகையாக அன்னை பார்வதி அமர்ந்து இருந்தார். சிவபெருமான் ஒரு முறை தவத்தில் இருந்தார். வெகு காலம் கண் ...