Village Deities- 25

  கிராம தேவதைகள் - 25

காடைப்  பிள்ளை ஐயனார்   ஆலயம்  மற்றும் அதில் உள்ள  ஐயனார்  சிலை 

மேலூர் காடைப் பிள்ளை  ஐயனார்

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]


ஸ்ரீரங்கத்தின் அருகில் உள்ளது மேலூர் எனும் சிற்றூர் . அந்த ஊரில் உள்ள இந்த ஆலயம் மிகவும் பழைமையானது என மக்கள் கூறுகின்றனர். அங்கு உள்ள காவேரி ஆற்றில் தினமும் ஒரு காரைக் குருவி குளித்து விட்டு ஒரு குறிப்பிட்ட மேட்டில் சென்று அமருமாம். பல நாட்களாக அதைப் பார்த்த மக்கள் அது சென்று அமரும் அந்த சிறு மண் குன்றில் என்னதான் இருக்கின்றது எனப் பார்க்க அங்கு சென்ற போது அந்த குன்றின் மீது ஒரு பெட்டியில் தபம் செய்யும் நிலையில் ஐயனார் உருவச் சிலை இருந்ததாம். அதை வெளியில் எடுத்து அங்கேயே பிரதிஷ்டை செய்து காடைக் குருவியின் பெயரையும் சேர்த்து அதன் பெயரை காடைப் பிள்ளை ஐயனார் என அழைத்து வணங்கினார்கள்.

அப்போது அந்த நதியில் கல்லணை கட்டப்படவில்லை. அந்த நாட்டை ஆண்டு வந்த கரிகால் சோழன் ஒரு முறை அந்த வழியே தன்னுடைய வாகனங்களுடன் ( குதிரை, யானை போன்றவை) வந்து கொண்டு இருந்தான். அந்த மிருகங்கள் ஆலயத்தின் அருகில் வந்ததும்  அப்படியே பூமியில் அமர்ந்து கொண்டு மேலே நடந்து செல்ல மறுத்தன. அப்போது ஐயனார் ஒரு படை வீரனின் உடலில் புகுந்து கொண்டு (சாமி ஏறியது போல) தனக்கு குதிரைகளையும், யானைகளையும்  பிடிக்கும் என்பதினால் அந்த குதிரை, மற்றும் யானை வாகனங்களில் சிலவற்றை தனக்குத் தந்தால் அவரது பிரச்சனையை தான் தீர்த்து வைப்பேன் என்று கூறினார்.   அதைக் கேட்ட மன்னனும் அதற்க்கு ஒப்புக் கொள்ள அந்த வாகனங்கள் எழுந்து நடக்கத் துவங்கின. ஆகவே சோழன் அந்த ஆலயத்தின் முன்னால் மிகப் பெரிய யானை சிலையும், பின்னால் இரண்டு குதிரை சிலைகளையும் செய்தது வைத்தான். அவை  இன்றும் அங்கு  உள்ளன.

மற்றும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சிவன்தியாண்டி கோனார் என்பவன் ஆடு மாடுகளை அங்கு வந்து மேய்ப்பான்.  ஒருநாள்  அவனிடம் ஐயனார் ஒரு மனித உருவில் சென்று தினமும் சாமிக்கு அபிஷேகம் செய்ய தனக்கு பால் தர வேண்டும் என்றார். அவன் அதற்கு  மறுக்கவே அவனை ஒரு அடி கொடுக்க சிவன்தியாண்டி கோனார் மரணம் அடைந்தார்.  அன்று இரவு கோனாரின் மனைவியின் கனவில் தோன்றியவர் தன் பேச்சைக் கேட்காததினால் தன்னுடன் கோனாரை வைத்துக் கொண்டு விட்டதாகவும், இனி அவன் வம்சத்தினரே ஆலய பூசாரிகளாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவு இட்டார். ஆகவே இன்றும் கோனார்களே அந்த ஆலயத்து பூசாரிகளாக உள்ளனர்  (அவர்களை தமிழ்நாட்டில் யாதவர் என்கிறார்கள்) .

ஆலயத்தில் ஐயனார் யோக கோலத்தில் காட்சி தருகிறார். அவர் கீழே கணபதியின் சிலை உள்ளது. ஆலயத்தின் முன்புறத்தில் மிகப் பெரிய யானை சிலை ஒன்று இருக்க, ஆலயத்தின் பின்புறத்தில் மூன்று பெரிய குதிரைகளின் சிலைகள் காணப்படுகின்றன. அவர்களின் இரு புறமும் காவலாளிகளும் உள்ளனர்.  ஐயனாரின் அருகில் மணவாள மாமுனி , ஏகாம்பர நாதர், காமாக்ஷி அம்மன், கதா பரிமானச்சாமி, சிவன்தியாண்டி கோனார், மதுரை வீரன் மற்றும் பெரியண்ணசாமி போன்றோரும் காணப்படுகிறார்கள். ஆலயத்தில் ஐய்யனாருக்கே பூஜை நடைபெறுகின்றது. சிவன்தியாண்டி கோனாரும் வழிபடப்படுகின்றார்.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாத இடையில் வரும் மாசி மாதத்தில் மூன்று நாட்கள் சிவராத்தரி உற்சவம் நடைபெறுகின்றது. ஐயனாருக்கு சைவ உணவும், கருப்பண்ணசாமிக்கு ஆடு, கோழி, பன்றி போன்றவையும் பலி தரப்படுகின்றன. விழா முடிந்ததும் சாமியாடிகள் மூலம் கருபண்ணசாமியிடமே அடுத்த விழா எப்போது நடத்தப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டு அதன்படி நடத்துகிறார்கள். ஆலயத்தில் உற்சவரின்  சிலைக்குப் பின்புறத்தில்  ஐயனாரின் மனைவிகளான பூர்ணாம்பிகை மற்றும் புஷ்பகாம்பிகைக்கும் சிலைகள் உள்ளன.

விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை வரம் வேண்டியும்  பக்தர்கள் ஐயனாரை வேண்டுகிறார்கள். ஒருமுறை காவேரியில் வெள்ளம் வந்து விட்டது. பக்கத்து கிராமங்களில் இருந்தவர்கள் வெல்ல நீர் ஊரில் நுழையாமல் இருக்க மண்ணால் ஆன தடுப்புச் சுவர்களை எழுப்பினார்கள் . ஆனால் மேலூர் மக்கள் ஐயனாரை மட்டுமே நம்பி அவரையே  வேண்டிக் கொண்டார்கள். ஆச்சர்யமாக மற்ற கிராமங்கள் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட, மேலூரில் மட்டும் காவேரி வெள்ள தண்ணீர் நுழையவே இல்லை என்றும் அங்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லையாம்.
 -----------------------
பின் குறிப்பு:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தை சேர்ந்ததாக கூறப்படும் இந்த ஆலயம் உள்ள  இந்த  ஊரில் ஓடும் காவேரி ஆற்று நீர் தெளிவான நீராக காட்சி தருகிறதாம். ஆலயம் ஸ்ரீரங்கத்தில் உள்ள மேலூர் எனும் சிற்றூரில் உள்ள   காவேரி ஆற்றின் கரையில் அமைந்து  உள்ளது  -  சாந்திப்பிரியா 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E