இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Village Deities - 31

படம்
கிராம தேவதைகள் - 31 சமண மலை ஐயனார் ஆலய முகப்பு கீழகுயில்குடி சமணமலை  ஐயனாரும் கருப்பசாமியும்  [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] மதுரை தேனீ சாலையில் மதுரையில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளதே கீழ்குயில்குடி கிராமம். சமண மலையின் அடிவாரத்தில் உள்ளது இந்த ஊர். அங்கு ஒரு காலத்தில் ஜைன மதம் தலை தூக்கி நின்றது . அவர்கள் சித்திரங்களை கொண்ட பல குகைகளை செய்து உள்ளனர். அதன் அருகில் உள்ளதே வடிவேல்கரை என்ற கிராமம். ஒரு காலத்தில் அந்த மலை அடிவாரத்தில் ஐயனார் ஆலயமும், மலைக்கு மேல் கருப்பண்ணசாமி ஆலயமும் இருந்தது. அந்த காலத்தில் மதுரையில் முகாமிட்டு இருந்த ஆங்கிலேயர்கள் தினமும் குதிரையில் ஏறிக்  கொண்டு செல்லும்போது அந்த ஆலயத்தை பற்றி அநாகரீகமாக எதையாவது உரக்கக் கூவிக் கொண்டு ரவுடிகளைப் போலச் செல்வார்கள். அதைக் கண்ட கருப்பண்ணசாமிக்கு கோபம் வந்தது. ஆகவே ஒருநாள் அவர்கள் குதிரையில் செல்லும்போது மலை பக்கத்தில்   அவர்களை வழுக்கி விழ வைத்து அடிபட வைத்தார் . முதலில் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட ஆங்கிலேயர்...

Village Deities - 30

படம்
கிராம தேவதைகள் - 30 காசன் கா டு  எனும் இடத்தில் உள்ள  ஒரு ஆலயத்தில் முனீஸ்வரர் சிலை  போர்பனைக் கோட்டை முனீஸ்வரர் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] தங்கப் பனை மரக் கோட்டை முனிவர் என்ற அந்த கடவுள் உள்ள ஆலயம் புதுகோட்டை மாவட்டத்தில் உள்ளது. அந்த ஆலயம் வந்த கதை சுவையானது. ஒரு முறை சிவனும் பார்வதியும் ஆகாயம் மூலம் தமிழ் நாட்டின் மீது சென்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கு குடை பிடித்தபடி அவர்கள் பின்னால் புஷ்பா தண்டன் என்ற அவர்களது உதவியாளர் சென்று கொண்டு இருந்தார். புதுக்கோட்டை வழியாக அவர்கள் சென்று கொண்டு இருந்த போது கீழே தெரிந்த குளத்தில் சில இளம் மங்கைகள் நீராடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் அழகில் மயங்கிய புஷ்பா தண்டன் அவர்களை பார்த்துக் கொண்டே நின்று விட தலைக்கு மேல் குடை இல்லாததைக் கண்ட சிவனார் திரும்பிப் பார்த்தார். புஷ்பா தண்டன் அங்கேயே நின்று கொண்டு இருந்ததைப் பார்த்து அவரை அந்த ஊரிலேயே ஒரு தங்க பனை மரமாகுமாறு சபித்து விட்டுச் சென்று விட்டார். அது  இருந்த இடம் நல்ல வனப் பிரதேசம் ஆகும்....

Village Deities - 29

படம்
கிராம தேவதைகள் - 2 9 உப்பாணி முத்தூர்   காட்டு சுடலை மாடன் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] சேரன்மாதேவியில் இருந்து ஒன்பது கிலோ தொலைவில் உள்ளது உப்பாணிமுத்தூர் கிராமம். அந்த கிராமம் ஊர்காட்டு ஜாமீன் பரம்பரையை சேர்ந்தது. சுடலை மடான் கேரளாவில் இருந்து அங்கு வந்தவர். அந்த காலத்தில் கேரளாவில் சில மந்திரவாதிகள் கடவுளைக் கூட கட்டிப் போடும் அளவுக்கு சக்தி பெற்றவர்களாக இருந்தனர். அப்போது சுடலை மடான் கேரள மக்களை பாதுகாத்து வந்தார். ஆகவே  மந்திரவாதிகள் சுடலை மடானை கட்டிப்போட எண்ணினார்கள் . சுடலை மடானினால் பலன் அடைந்தவர்கள் அவரை காப்பாற்றுவதற்காக அவரை ஒரு பனை ஓலை பெட்டியில் வைத்து நதிக்குள் விட்டு விட்டனர். அந்த பெட்டி தாம்பரபரணி நதி வழியே சென்று ஊர்காட்டு ஜாமீனில் இருந்த உப்பாணிமுத்தூர் எனும் ஊரை அடைந்தது. நதியில் மிதந்து வந்த பெட்டியை எடுத்து திறந்தனர் ஊர்காரர்கள். அதில் ஏழு அடி உயர, கருத்த மீசையுடன் கூடிய  முகத்தைக் கொண்ட சிலை இருந்தது. அது  கேரளா நாட்டை சேர்ந்தவரைப் போன்ற உர...

Village Deities - 28

படம்
கிராம தேவதைகள் - 2 8 ஐந்து ஊர் நல்லதங்காள் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] மதுரை- உசிலம்பட்டி சாலையில் இருபத்தி ஏழு கிலோ தொலைவில் உள்ளதே கோடைக்குளம் கிராமம். அதை சார்ந்த பிற கிராமங்கள் வடுகபட்டி, உடன் காட்டுப்பட்டி, பிரவியான்பட்டி மற்றும் அகிலாண்டபுரம் என்பவை. அங்கெல்லாம் ஐந்து ஊர்  நல்லதங்காளே கிராம தெய்வமாக இருக்கிறாள். ஒரு காலத்தில் அந்த இடங்களில் பஞ்சம் தலை விரித்தாடியது. பலரும் வேலை தேடி ஊரை விட்டு வெளியேறினார்கள். அதில் ஒருவரே  படிவு தேவன் என்பவர் ஒருவர். அவர் நல்லதங்காள் தன்னுடைய குழந்தைகளாய் கிணற்றில் போட்டுக் கொன்ற ஊரான வதிராப்பூக்கு சென்றார். அந்த ஊரில் அவளுக்கு சிறு ஆலயம் இருந்தது.  ஆனால் அது சரிவரப் பராமரிக்கப்படாமல் இருந்தது.  அவன் ஒரு பணக்காரன் வீட்டில் மாடு மேய்ப்பவனாக வேலைக்கு சேர்ந்தான். ஒரு நாள் அவன் காட்டில் அவற்றை ஓடிச் சென்றபோது அவனுடைய கூடையில் சிறு பெண் புகுந்து கொண்டு உறங்கி விட்டது. திரும்பி வரும் வழியில் அதை பார்த்து திடுக்கிட்டவன் அதை வழியிலேயே  இறக்கி வி...

Village Deities - 27

படம்
கிராம தேவதைகள் - 2 7 வீரப்பூர் பெரியகாண்டி அம்மன் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ]   திருச்சியில் உள்ள மணப்பாறையில் இருந்து பதினான்கு  கிலோ தொலைவில் உள்ளது வீரப்பூர். அந்த ஊரில் உள்ள பெரிய காண்டி அம்மனின் ஆலயம் பற்றிய கதை சுவையானது. ஒரு முறை ஐந்து தலை நாகம் ஒன்று தனக்கு பார்வதி மகளாகப் பிறக்க வேண்டும் என்று கடும் தவம் புரிந்தது. அவளும் அதற்கேற்ப அதற்கு பிறந்தாலும் அவள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத அலியாகப் பிறந்தாள். அவள் தன்னுடைய அந்த நிலையை மாற்றுமாறு சிவ பெருமானிடம் வேண்டிக் கொள்ள அவரும் அவளை ஊசி முனையில் நின்று கொண்டு தவமிருக்குமாறு கூறினார்.  அதன் பின் இரண்டு சகோதரர்கள் அந்த இடத்தில் சண்டையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களின் சகோதரியான அருக்காணி அவளுக்கு அந்த நிலையில் இருந்து விடுதலை தருவாள் என்றும் கூறினார். அவளுக்கு துணையாக இருக்க ஆறு கன்னிகளையும் அவர் அனுப்பினார். அவள் செய்த தவம் அங்கு தவத்தில் இருந்த வீரம்ஹா முனிக்கு இடையூறாக இருந்தது. அதன் பின் அவருக்கு அங்கு தவத்தில் இருந்தவள்...

Village Deities- 26

படம்
  கிராம தேவதைகள் - 2 6 கறுப்பரின் ஒரு உருவம். ஒரு கிராமத்தில் உள்ள ஒரு சிலை    அரண்மனை சந்தனக் கருப்பு [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] திண்டுக்கல் மாவட்டத்தில்  நாதம் என்ற ஊரில்  உள்ளது இந்த ஆலயம். அந்த இடத்தை லிங்கம்மா நாயக்கர் என்பவர் ஆண்டு வந்தார். அவர் அடிக்கடி பல இடங்களுக்கும்  சென்று அங்குள்ள நல்ல திட்டங்களைப் பார்த்து விட்டு வந்து தம்முடைய ராஜ்யத்திலும் அவற்றை செய்வார். அப்போது திருமயம் என்ற இடத்தை அழகன் நம்பி ராஜா என்பவர் ஆண்டு வந்தார். அவர் கர்வம் பிடித்தவர். அவர் ஆண்டு வந்திருந்த நாட்டில் அவரைத் தவிர வேறு எவரும் தலைபாகை அணியக் கூடாது, ரதத்தில் ஏறிச் செல்லக் கூடாது என்ற சட்டம் இருந்தது. அவர் நாட்டுக்கு விஜயம் செய்த லிங்கம்மா நாயகரை தலைப்பாகையை கயற்றுமாறும், தேரை விட்டு   கீழே இறங்கிச் செல்லுமாறும் கூற அவர் அதை செய்ய மறுத்தார். மன்னனிடம் அவரை அழைத்துச் சென்றதும் இருவருக்கும் இடையே யார் சிறந்த மன்னன் என்ற வாக்குவாதம் நடந்தது. . ஆகவே நம்ம்பி ராஜா தான் ஒரு ...

Village Deities- 25

படம்
  கிராம தேவதைகள் - 2 5 காடைப்  பிள்ளை ஐயனார்   ஆலய ம்  மற்றும் அதில் உள்ள  ஐயனார்  சிலை  மேலூர் காடைப் பிள்ளை  ஐயனார் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] ஸ்ரீரங்கத்தின் அருகில் உள்ளது மேலூர் எனும் சிற்றூர் . அந்த ஊரில் உள்ள இந்த ஆலயம் மிகவும் பழைமையானது என மக்கள் கூறுகின்றனர். அங்கு உள்ள காவேரி ஆற்றில் தினமும் ஒரு காரைக் குருவி குளித்து விட்டு ஒரு குறிப்பிட்ட மேட்டில் சென்று அமருமாம். பல நாட்களாக அதைப் பார்த்த மக்கள் அது சென்று அமரும் அந்த சிறு மண் குன்றில் என்னதான் இருக்கின்றது எனப் பார்க்க அங்கு சென்ற போது அந்த குன்றின் மீது ஒரு பெட்டியில் தபம் செய்யும் நிலையில் ஐயனார் உருவச் சிலை இருந்ததாம். அதை வெளியில் எடுத்து அங்கேயே பிரதிஷ்டை செய்து காடைக் குருவியின் பெயரையும் சேர்த்து அதன் பெயரை காடைப் பிள்ளை ஐயனார் என அழைத்து வணங்கினார்கள். அப்போது அந்த நதியில் கல்லணை கட்டப்படவில்லை. அந்த நாட்டை ஆண்டு வந்த கரிகால் சோழன் ஒரு முறை அந்த வழியே தன்னுடைய வாகனங்களுடன் (...

Statistics on Santhipriya's pages

படம்
Statistics on Santhipriya's pages சாந்திப்பிரியா  வலைத்தளத்தைப்   பற்றிய  சிறு புள்ளி விவரம் இது

Badrinath - Ketharnath Temples - 9

படம்
சிவபெருமான் பார்வதிக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் காலம் கனிந்து வந்தபோதுதான் பாண்டவ சகோதரர்கள் சிவபெருமானின் தரிசனத்திற்காக  கேதார்னாத்துக்கு வந்தார்கள். அங்கு வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்து வழிபட்டபடி அவரைத்  தேடிக் கொண்டு இருந்தார்கள். பாண்டவர்கள் சிவபெருமானைத் தேடிக் கொண்டு அங்கு வந்தபோது அவர்களால் கண்டு பிடிக்க முடிகிறதா என்று அவர்களை சோதனை செய்து பார்க்க  விரும்பிய சிவபெருமான் ஒரு மாடாக உருமாறி திரிந்து வந்தார். ஆனால் பாண்டவ சகோதரர்கள் சிவபெருமான் அங்கு வந்து தங்கி இருப்பது உண்டு என்றும் உண்மையான பக்தி கொண்டு அவரைத் தேடி அலைந்தால் அவரைக் கண்டு பிடிக்க முடியும் பிடிக்கலாம் என்பதையும்  கிருஷ்ணர் மூலம் ஏற்கனவே அறிந்து இருந்தார்கள் என்பதினால் உண்மையான பக்தி கொண்டு சிவபெருமானை வழிபாட்டு வந்த பாண்டவ சகோதரர்களினால் சிவபெருமானே அந்த மாட்டின் உருவில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆகவே அவர்கள் அந்த மாட்டை வணங்கியபடி அதன் அருகில் சென்றார்கள். மாட்டு உருவத்தில் இருந்த சிவபெருமான் அவர்கள் தாம் அருகில் வருவதைக் கண்டவுடன் வேண்டும் என்றே அவர்கள...