இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Badrinath - Ketharnath Temples - 7

படம்
கேதார்னாத் மான்மியம் பத்ரினாத்துக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கேதார்னாத்துக்கும் செல்லாமல் போக மாட்டார்கள். பத்ரி விஷ்ணு பகவான் அருள் புரியும் தலம் என்பதைப் போலவே கேதார்னாத் சிவபெருமான் அருள் புரியும் தலமாகும்.  திருமால் நரநாராயணராக கேதார்னாத்தில் சிவபெருமானை வேண்டித் தவம் இருக்க அவர் திருமாலுக்குக் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு நாராயணரும் சிவபெருமானை அந்த இடத்திலேயே ஜோதிர்லிங்கமாக  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டு இருக்க வேண்டும் என்ற தமது ஆசையை வெளிப்படுத்த, அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் தான் அங்கயே ஜோதிர் லிங்க வடிவத்தில் இருப்பேன் என்று அவருக்கு உறுதி கூறினார். அத்தகைய புனித தலத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் சிவபெருமானின் ஆலயத்தை ஸ்தாபனம் செய்தார். அங்கு சிவபெருமானை தியானித்தபடி விஷ்ணுவும் அமர்ந்து இருக்கிறார் என்பது ஐதீகமாகும். இன்னொரு கதையின்படி  பார்வதி சிவனுடன் ஐக்கியமாகி தானும் அவர் அவதாரத்தில் பாதியானவள் என்பதை உலகிற்கு  நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக கேதார்னாத்துக்குச்  சென்று தவம் இருந்து சிவபெருமானின் அருள...

Badrinath - Ketharnath Temples - 6

படம்
இத்தனை மகிமை வாய்ந்த பத்ரினாத் ஆலயம்  அமைப்பு எப்படியானது? அங்கு சென்று அவரை எப்படி வணங்குவது என்பதை எனக்கு விளக்குவீர்களா என அருந்ததி வசிஷ்டரிடம் கேட்க வசிஷ்டர் தொடர்ந்து கூறத் துவங்கினார்.   பத்ரினாத்  ஆலயத்தின் எதிரே அமைந்துள்ள இரண்டு பர்வதங்களில் நர மற்றும் நாராயணன் என்ற இரண்டு முனிவர்கள் தவம் இருந்தார்கள் அவர்கள் வேறு யாரும் அல்ல கிருஷ்ணரின் இரண்டு அவதாரங்களே. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணராக அவதரித்தவரும் அந்த யுத்தத்தில் பங்கு கொண்ட அர்ஜுனனுமே அவர்கள் ஆகும். அந்த இருவரும் தவம் இருந்த அந்த இந்த இரண்டு மலைகளையும் நர நாராயண மலையென்று அழைக்கின்றனர். நரநாராயணர்கள் என்பவர்கள் ஒருவரே ஆவார். அவரே விஷ்ணு பகவான். அவர் பத்ரினாத்தின் மலையின் அடிவாரத்தில் வெகு காலமாக தவத்தில் இருந்தபோது அவரை வெயிலும் மழையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தலை மீது ஒரு குடையைப்  பிடித்துக்  கொண்டு பாதுகாப்பாக நின்று கொண்டு இருந்தாள். ஒவ்வொரு யுகத்திலும்  நல்லவற்றைக் காக்க தாம் அவதாரம் எடுப்பேன் என பெருமாள் கிருஷ்ணாவதாரத்தில் கூறி இருந்தார்.  ஆகவே தானே...

Badrinath - Ketharnath Temples - 5

படம்
'ஸ்வாமி நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு பயமாக உள்ளது. எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் வர வேண்டும். அவை வராமல் தடுக்க என்ன உபாயம் உள்ளது?' என்று ஜனமேஜயன் கேட்டதும் வியாசர் கூறினார் 'ஜனமேஜயா உன் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் நீ பெற்று உள்ள சாபங்கள்தான். உன்னால் அவற்றை தடுத்து நிறுத்திக் கொள்ள முடியாது. அதற்குக் காரணம் நீ அழித்த சர்பங்களில் மகாவிஷ்ணுவிற்கு படுக்கையாக உள்ள ஆதிசேஷனின் வம்சாவளியினரும் அடக்கம். ஆகவே மகாவிஷ்ணுவின் சாபமும் உனக்கு உள்ளது. அது போலவே உன் சந்ததியினரால் விரட்டி அடிக்கப்பட்டு காயமுற்ற நாயும் பூர்வ ஜென்மத்தில் மஹா விஷ்ணுவின் உண்மையான பக்தையாக இருந்து சில காரணங்களினால் நாயாகப் பிறந்து இருந்தது.  விஷ்ணுவின் பரம பக்தையான அதன் தாய் கொடுத்த சாபமும் சேர்ந்து உள்ளதினால் உனக்கு சாப விமோசனமும் மகாவிஷ்ணுவின் அவதாரமான பத்ரினாதர் மூலமே கிடைக்கும் என்பது விதியாகும். ஆகவே நீ எச்சரிக்கையாக இருந்து பிராமணரைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷத்தை ஒரு பெண்ணால் அடையாமல் இருக்க முடியுமா என்று முயன்று பார். ஆனால் அது மிகவும் கடினம். நீ ஒரு காட்டுக்குச் சென்று அங்கு ஒரு பெண்ணின் மோக...

Badrinath - Ketharnath Temples - 4

படம்
இந்த பத்ரினாத்  தலத்தின் மகிமையைக் கூறும் இன்னொரு கதையும்  உண்டு.  அது என்ன? மகாபாரத யுத்தம் முடிந்து அனைவரும் ஊருக்குத் திரும்பினார்கள். பீஷ்மர், யுதிஷ்டர், தருமர், அர்ஜுனன் என அனைவரும் மறைந்து  விட்டார்கள்.  அவர்களின் சந்ததியினர் ஒவ்வொருவராக அரியணை ஏறிக் கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் பரீட்சித்து மன்னனின் மகனும், அர்ஜுனனின் பேரனுமான ஜனமேஜெயன் என்பவர் ஆட்சிக்கு வந்தார்.  அவர் அவ்வப்போது தானே தனக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டு அதனால் தவிப்பது உண்டு. தன் தந்தையைக் கொன்ற பாம்புகளின் வம்சத்தையே அழிக்க முடிவு செய்து சர்ப்ப யாகம் செய்து பாம்புகளை அழித்தார். நாக அரசன் தக்சகனையும் கொன்றபோது அவனது ராஜகுருவான அஸ்திகா என்பவரே அவனது வெறித்தனமான செயல்களை தடுத்து நிறுத்தி அவனுக்கு புத்திமதிகளைக் கூறி அதை தடுத்து நிறுத்தினார். ஜனமேஜெயன் அடிக்கடி யாகங்கள் மற்றும் வேள்விகளை செய்வது உண்டு. இந்தப் பழக்கம் அந்த கால ராஜாக்களுக்கு நிறையவே இருந்தது. இப்படி இருந்த நிலையில் ஒருமுறை ஜனமேஜயன் குருக்ஷேத்திரத்தில்  ஒரு பெரிய யாகத்தை  நடத்திக் கொண்டு...

Badrinath - Ketharnath Temples - 3

படம்
வசிஷ்டர் தொடர்ந்து கூறலானார். 'விஷ்ணுரதி எனும் நாரதர் வாழ்ந்திருந்த பூமிக்கு தென் பகுதியில் இருந்த இன்னொரு நகரத்தில் சங்கரகுப்தன் எனும் வைசியன் வாழ்ந்து வந்தான். அவன் வியாபாரம் செய்து பெரும் பொருள் சம்பாதித்தான். குணத்தால் நல்லவன் யாருக்கும் தீங்கு இழைக்காதவர் என்ற நற்பெயருடன் இருந்து வந்தார். அவனுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு எதுவும் இல்லை என்பதினால் மனம் புழுகினான். அவனுடைய மனைவியும் வாழ்கையை வெறுத்து வாழ்ந்து வந்தாள். ஒருநாள் இருவரும் சேர்ந்து தமது சந்தானங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்குக் கொடுத்து விட்டு  துறவறம் போய்  விடலாம் என முடிவு செய்தார்கள். ஆகவே ஒருநாள் அவர்கள் தமது வீட்டில் பெரிய பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அதில் அந்த ஊரில் இருந்த பண்டிதர்கள் அனைவரையும் அழைத்து போஜனம் செய்விக்கச் சொன்னார்கள். அதன் பின் கணவனும் மனைவியும் சேர்ந்து அனைவரிடமும் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் பட்டியல் போட்டுக்  கொடுத்து அவற்றை விற்றும், வேறு ஏற்பாடு செய்து கொண்டும் சமமாக பங்கு செய்து கொள்ளுமாறு கூறினார்கள். திடீர் என அவர்கள் செய்ய முன்வந்த க...

Badrinath - Ketharnath Temples - 2

படம்
வசிஷ்டர் தனது மனைவி அருந்ததிக்குக் கூறினார் '' தன் மீது உண்மையான பக்தி கொண்டவர்களுக்கு மகாவிஷ்ணு எப்படி பரிபூரணமான அருளைத் தருகிறார் என்பதை விளக்கும் விஷ்ணுரதியின் கதை பத்ரிநாத் எத்தனை புண்ணிய இடம் என்பதை தெளிவாகக் கூறும். அதைக் கேள் ''. வசிஷ்டர் தன்  மனைவி அருந்ததிக்கு   பத்ரிநாத்தின் மகத்துவம் பற்றிக் கூறினார்  முன் ஒரு காலத்தில் இந்த பூமியில் விஷ்ணுமனஸ் எனும் ஒரு ஏழை பிராமணன், சாஸ்திர சம்பிரதாயங்களைக் நன்கு கற்றறிந்திருந்தவர் வசித்து வந்தார்.  அவர் வைஷ்ணவ பக்தர்.  வாழ்வதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தவரினால் பிட்சை எடுத்தே  குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.  அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவர் மிகப் பெரிய வைஷ்ணவ பக்தர் என்பதினால் தனக்குப் பிறந்த மகனுடைய பெயரையும் விஷ்ணுரதி என வைத்திருந்தார். பிறந்த மகன் வளரத் துவங்கியதும், விஷ்ணுமனஸ் அவனுக்கு  விஷ்ணுவின் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும்  கற்றுக் கொடுத்து வளர்த்தார். தன்னைப் போலவே தன்  மகனும் வறுமையில் வாடிக் கொண்டு பிட்ஷை எடுத்தே வாழ்வ...

Badrinath - Kedarnath Temples - 1

படம்
தற்போது உத்திராஞ்சலில் உள்ள பத்ரினாத் மற்றும் கேதார்நாத் ஆலயங்கள் உள்ள பல இடங்கள் நிலச் சரிவாலும், பேய் மழையினாலும் சிதைந்த நிலைக்குப் போய் விட்டன. இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதி வழிபடும் பத்ரினாத் விஷ்ணு ஆலயம் மற்றும் கேதார்நாத் சிவன் ஆலயம் என்ற இரண்டுமே இன்று இடிபாடுகள் அடைந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு அங்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலைக்கு சென்று உள்ளது மிகவும் துக்ககரமான நிகழ்ச்சியாகும் என்றாலும் இந்த நேரத்தில் இந்த ஆலயங்களின் தல வரலாறு மற்றும் அவற்றின் மகிமைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இமயமலையின் அடிவாரத்தில் உள்ள கர்வால் எனும் மலைப் பிரதேசத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ளது பத்ரினாத் ஆலயம். மேலே உள்ள  மலை பிரதேசத்தில் உள்ள இரண்டு ஆலயங்களும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், பத்ரிநாத் ஆலயத்தில் உள்ள சிலையை நிறுவியவர் ஆதி சங்கரர் என்றும், கேதார்நாத்தில் உள்ள சிவன் சிலை பாண்டவர்களால் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டாலும்,திருமால் நர-நாராயணராக (அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணராக) இங்கே தவம் செய்து சிவபெருமானை ...

Sarangapani Temple

படம்
சாந்திப்பிரியா கும்பகோணத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீ சாரங்கபாணி ஆலயம். இதை சார்ரங்கபாணி ஆலயம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் சார்ரங்கபாணி என்பதே சரியான பெயர் என்பதின் காரணம் சார் என்றால் வில் என்று பொருள். இந்த ஆலயத்தில் உள்ள பெருமாளிடம் சங்கு மற்றும் சக்கரத்தைத் தவிர வில்லும் உள்ளதினால் இந்த ஆலயத்தின் பெயர் ஸ்ரீ சார்ரங்கபாணி ஆலயம் என ஆயிற்றாம். இந்த ஆலயம் திருப்பதி ஆலயத்துக்கு நிகரானது என்பார்கள். அதன் காரணம் திருப்பதி ஏழுமலையானின் திருமணத்துடன் ஒருவிதத்தில் சம்மந்தப்பட்டது இந்த ஆலயம். திருப்பதி வெங்கடசலபதி கதைக்கும் இந்த சாரங்கபாணி ஆலய கதைக்கும் என்ன சம்மந்தம் என்று யோசனை செய்யத் தோன்றுகிறது அல்லவா? திருப்பதி வெங்கடசலபதி லஷ்மியை பிரிந்த சோகத்தில் சில காலம் கும்பகோணத்தில் வந்து தங்கி இருந்ததான நம்பிக்கைக் கதை ஒன்று உள்ளது. அதனால் இங்கு வந்த அந்த நேரத்தில் இங்கு மகாவிஷ்ணு பிருகு முனிவரின் மகளாக இருந்த லஷ்மியை மணந்து  கொண்டதற்கான ஐதீகக் கதை உள்ளது. இந்தப் படத்தை வரைந்து  அனுப்பியவர் திரு திரு பட்டாபிராமன்  அவ...

Thanks Mr Pattabiraman

படம்
நன்றி இதுவரை எனக்கு அறிமுகம் இல்லாதவரான திரு பட்டாபிராமன் ( Pattabi Raman <vijayakoti33@gmail.com) என்பவர் மரகதம் அம்மையாரைப் பற்றி நான் எழுதி இருந்த கட்டுரைக்கு பதிலாக கீழ் உள்ள கவிதையை அவர்  எனக்கு அனுப்பி உள்ளார்.  அதை அனுப்பி உள்ள அதே படத்துடன் அப்படியே வெளியிடுகிறேன். அவருக்கு என் நன்றி.   - சாந்திப்பிரியா    திரு பட்டாபிராமன்     மரகதவல்லி மீனாட்சி மாங்காட்டில் உறையும் காமாட்சி காசியில் வதியும் விசாலாட்சி தந்தைக்கு உபதேசம் செய்தான் முருகன் சுவாமிநாதனாக தாயோ வல்லியாய் உருவெடுத்து வந்தாள் தணிகை நாதனிடம் வந்தமர்ந்து தத்துவ உபதேசம் பெற்றாள் போலும் பாட்டினிலே வருவான் முருகன் பல்லவியாய் வந்தமர்ந்தான் என்று பாட்டினிலே வந்தான் முருகன் மரகத வள்ளிக்கு அவளின் உள்ளம் முருகனை குறித்து உருகியதைப்போல் உள்ளம் உருகுதையா என்ற பாடலை பலமுறை கேட்டதுண்டு நானும் முருகனின் நினைவில் திளைத்து இன்புற்றதுண்டு. பக்தி பரவசம் அடைந்தேன் முருகனின் அடியாளின் சரிதை படித்து TR Pattabiraman

Sikkal Singaravelar Temple - 2

படம்
சிக்கல் சிங்காரவேலர்  ஆலயம் - I I      சாந்திப்பிரியா  இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை நவநீதேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். அதனால் அந்த சிவன் தலத்தில் விஷ்ணுவும் வெண்ணை பெருமானாக அமர்ந்தார். இது ஸ்ரீ வாமனப் பெருமாள் வரலாற்றுக் கதையில் காணப்படுகிறது.   ஸ்ரீ வாமனப் பெருமாள் கதையின்படி தேவர்களை துன்புறுத்தி வந்த மகாபலி சக்கரவர்த்தி என்பவற்றின் கொடுமைகளை தேவர்கள் திருமாலிடம் சென்று கூறினார்கள் . ஆகவே திருமாலும் வாமனாக அவதாரம் எடுத்துக் கொண்டு சிக்கலை அடைந்து அங்கு கயா தீர்த்தம் என்ற தீர்த்தத்தை உருவாக்கினார் . அதன் பின் அதில் ஸ்நானம் செய்துவிட்டு நவநீதேஸ்வரரை வணங்கித் துதித்து மகாபலி சக்கரவர்த்தியை அழிக்க தமக்கு சக்தியைத் தருமாறு வேண்டினார். நவநீதேஸ்வரரும் அவர் மூன் தோன்றி அவர் கேட்ட வரத்தை அருள அந்த பலத்தைக் கொண்டு விஷ்ணு யுத்தம் செய்து மகாபலி சக்கரவர்த்தியைக் கொன்று தேவர்களைக் காத்தார். இப்படியாகவே சிக்கல் ஆலயத்தின் உள்ளேயே சிவபெருமானுடன் சேர்ந்து விஷ்ணுவிற்கும் ஒரு ஆலயம் அமைந்தது. இப்படியாக அங்கு அமர்ந்த விஷ்ணுவே கோலவாமனப் பெ...

Sikkal Singaravelar Temple 1

படம்
 சிக்கல் சிங்காரவேலர்  ஆலயம் - I     சாந்திப்பிரியா  முருகனின் ஆலயங்களில் மிகப் பழமையானதும்  புகழ்  பெற்றதும்  எது என்றால் அந்த ஆலயங்களில் ஒன்று  சிக்கல் சிங்காரவேலவன் ஆலயம் என்பதை தயங்காமல் கூற முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழ்நாட்டில்  நாகப்பட்டினத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிக்கல் எனும் கிராமம்.  அங்கு உள்ளதே புகழ் பெற்ற சிங்காரவேலர் ஆலயம்.  இந்த முருகனுக்கு பெருமை சாற்றும் ஆலயம் கட்டப்பட்டபோது சிவன் ஆலயமாகவே இருந்தாலும் பின்னர்  முருகனே முக்கியமானவராகக் கருதப்பட்டார்.  சோழ மன்னன் காலத்தில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.  இந்த ஆலயத்தைக் குறித்த கதைகள் சில உண்டு. அவற்றில் முக்கியமானவை இரண்டு ஆகும். இந்த ஆலயம் ஏற்பட்ட இடத்தில் ஒரு காலத்தில் முழுமையாக மல்லிகை பூக்களைக் கொண்ட செடிகள் படர்ந்திருக்க அது மல்லிகை வனம் என அழைக்கப்பட்டு வந்திருந்துள்ளது. ஆகவே இந்த தலத்தின் பெயரையும் மல்லிகாரண்யம் என அழைக்கலானார்கள். அந்த மல்லிகை மணத்தின் வாசனையினால் ஈர்க்கப்பட்டே...

Is Maragatham ammaiyaar Valli devi's reincarnation ?

படம்
ஆண்டவன் பிச்சை  மரகதம் அம்மையார்   வள்ளி தேவியின் மறு அவதாரமா? ஆங்கிலத்தில் : வீ. எஸ் . கிருஷ்ணன் தமிழில் : சாந்திப்பிரியா பிரபலமான வழக்கறிஞரும் பெரும் கல்விமானுமான சங்கரநாராயண சாஸ்திரி ஒருநாள் தனது வாசகசாலையில் அமர்ந்து கொண்டு இருந்தபோது யாரோ  தம் அறையில் நுழைவதை உணர்ந்தார்.  சாதாரணமாக அவர் தனது வேலையில்  மும்முரமாக இருக்கும்போது அவர் அறையில் யாரும் நுழைய மாட்டார்கள். வந்தது யார் என அவர் திரும்பிப் பார்த்தபோது தனது மகள் மரகதம் தன் பக்கத்தில் நின்று கொண்டு இருப்பதைக் கண்டார். எப்போதுமே சிரித்த முகத்துடனும் விளையாடிக்கொண்டும் இருக்கும் மரகதம் அன்று ஏனோ சற்று இறுக்கமான முகத்துடன் இருப்பதைக் கண்டு வியந்து அதற்கான காரணத்தை அவளிடம் கேட்டார். ஆனால் அவளோ அதற்குப் பதிலாக முருகன் மீதான பாடல் ஒன்றைப் பாடினார். அந்த  பாடலின் கருத்தாழத்தைக் கண்ட சங்கரநாராயண சாஸ்திரி  வியந்தார். பல விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் பல நாட்களாகத் விடை தேடிக் கொண்டு இருந்த சாசுவதமான வாழ்க்கை என்பதற்கு விளக்கத்தைக் தந்த பாடலாக அது அமைந்து இருந்தது. அ...