Village Deities- 21

கிராம தேவதைகள் - 21

ஒரு  கிராம  ஆலயத்தில் காணப்படும்  இந்த 
கிராம தேவதை  பத்திரகாளியா அல்லது பைரவியா   
என்பது தெரியவில்லை 


தகத்தூர் 
மாப்பிள்ளை வீரன் 

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
 
நாகையில் வேதாரண்யத்தின் அருகில் உள்ளது தகத்தூர் கிராமம். மாப்பிள்ளை வீரன் என்றால் மாப்பிள்ளை என்று அர்த்தம். அந்த ஊரில் உள்ள அந்த ஆலயத்தில் சிலை கிடையாது. ஒரு கல்லை மட்டுமே கடவுளாக வணங்குகிறார்கள். அந்த ஆலயத்தின் கதை இது.
ஒரு காலத்தில் அந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் திருமேனி அம்மன் என்ற பெயரில் காளி சிலையை வணங்கி வந்தார். அவர் அதன் எதிரிலேயே மரணம் அடைந்தார். ஆகவே அவருக்கு அங்கேயே சமாதி எழுந்தது. அந்த ஊரில் சாமி வழிபாடுகள் எதுவும் இல்லாததினால் திருடர்கள் அட்டகாசம் அதிகரித்தது. மக்கள் துன்பம் அடைந்தனர். அந்த கிராமத்தின் அருகில் இருந்த அதியங்காடு என்ற இடத்தில் ஒரு சிவன் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தின் அனைத்து நகைகளையும் திருடர்கள் திருடிக் கொண்டு சென்று விடுவார்கள் என பயந்த மக்கள் அதை எடுத்து வந்து அந்த சாமியாரின் சமாதி இருந்த இடத்தில் புதைத்து வைத்து விட்டார்கள். அதன் மீது ஒரு வேப்ப மரத்தையும் நட்டு அதன் பெயரை மாப்பிள்ளை வீரன் என அழைத்தார்கள். சமாதியை சுற்றி தடுப்பும் கூரை மீது பனை ஒலையினால் ஆன தடுப்பையும் செய்து வைத்தனர். ஒரு நாள் அந்த மேல்கூரைத் தடுப்பு விளக்கினால் ஏற்பட்ட தீயில் அழிந்து போக மரமும் சிறிது சேதம் அடைந்தது. அவை என்றும் காணப்படுகின்றது. ஆகவே அவர்கள் அங்கு கல்லினால் ஆன தடுப்பை அமைக்க விரும்பி பூமியை தோண்டியபோது அவர்கள் கோடாலி ஒரு கல்லின் மீது வேகமாகப் பட்டது . கோடரி கல்லின் மீது பட்டதினால் கல்லில் இருந்து ரத்தம் வந்ததாம். ஆகவே அந்த கல்லை தெய்வமாக பாவித்து அதை ஒரு மூலையில் வைத்து மண்டபத்தைக் கட்டினார்கள். அந்த கல்லின் மீது ஓம் என்ற எழுத்தை பொறித்து வைக்க அதையே இன்றும் மாப்பிள்ளை வீரனாக வணங்குகிறார்கள். அவரே சிவனாரின் சொத்துக்களை அங்கு பாதுகாத்து வருவதாக நம்புகிறார்கள்.

 மாப்பிள்ளை வீரன் ஆலய நுழை வாயில் 

பங்குனி மாதத்தில் (மார்ச்- ஏப்ரலில் ) பதினெட்டு நாள் விழா நடைபெறும். அதியங்காட்டில் பைரவர் ஆலயம் உள்ளது. அங்கிருந்து சாமியாடிகள் இங்கு புறப்பட்டு வந்து மாப்பிள்ளை வீரனுக்கு பூஜைகளை செய்வார்கள். அதன் பின் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் தருவார்கள்.
தமது உடலில் எந்தப் பகுதியிலாவது நோய் வந்தால் அதைப் போல ஒரு உருவச் சிலையை செய்து வந்து அங்கு வைத்தால் நோய் குணமாவதாக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் அங்கு அத்ததகைய பொம்மைகள் நிறையவே அங்கு கிடக்கின்றன.

--------
பின்குறிப்பு:
வேதாரண்யத்தில் இருந்து இங்கு செல்ல பேருந்துகள் உள்ளன. மற்றும் தஞ்சாவூரின் சேதுபாவ சத்திரத்தில் இருந்தும் இங்கு பேருந்தில் செல்லலாம். தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருவிழாவில் , ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற சிலைகளை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தமது வேண்டுதல்களை நிறைவற்றிக் கொள்ள மண் குதிரைகள், மனித உருவ சிலைகளை கொண்டு வந்து கோவில் வளாகத்தில் நேர்த்திக் கடனாக வைக்கிறார்கள். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட பக்தர்கள் குலைக் குழியாக வாழைப்பழம் தார்களை கொண்டு வந்து கூட்டத்தினருக்கு விநியோகிப்பார்கள். அப்படி தானம் தரப்படும் பழத்தை பெறுவதன் மூலம் பெண்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை - சாந்திப்பிரியா 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E