இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Chandi Saptha Sathi - 6

படம்
சண்டி சப்த சதி -6 சாந்திப்பிரியா  சில ஸூக்தங்களுக்கு பெண்களே ரிஷிகளாக உள்ளார்கள். ரிக் வேதத்தில் இந்த மாதிரியான ஸூக்தங்கள் சில உள்ளன அவற்றில் ஒன்றே வாகாம்ருணீய ஸூக்தம். வாக் என்பவள் பிரும்ம ரிஷி என்பதாக அறியப்படுகிறது.  வாக் என்றால் வாக் எனும் பரப்பிரும்மம் என்று பொருள் கொள்ளலாம்.  அவளே பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து அநுபூதி நிலையைப் பெற்றவள். அந்த நிலையில் அவள் ஆத்மஸ்துதி செய்து கொள்ள முடியும். ஆகவேதான் தேவி ஸூக்தத்தில்   கூறப்பட்டு உள்ள  ஆத்மஸ்துதி  என்ன என்றால் ?    ''நான் உலகிற்குக் காரணமாய் வாசு ருத்திரர்களாகவும், அதித்ய விஸ்வ தேவர்களாகவும் சஞ்சரிக்கிறேன்.  பிரும்ம ஸ்வரூபமாய் இருந்து கொண்டு வருணன், இந்திரன், அக்னி என்ற அனைத்து தேவர்களையும் அவரவர் ஸ்தானத்தில் நிலைக்கச் செய்கிறேன்.  உலகின்  என்னுள்ளேயே அடக்கி வைத்துள்ளேன். த்வஷ்டா முதலிய தேவர்களை உரிய  ஸ்தானத்தில் அமர வைத்து தேவர்களுக்கு ஹவிஸ் மற்றும் சமரசத்தை தரும் என் எஜமானருக்கு நான் ஐஸ்வர்யத்தைத் தருவேன். பரபிரும்ம...

Chandi Saptha Sathi - 5

படம்
சண்டி சப்த சதி -5 சாந்திப்பிரியா  சண்டி சப்த சதியை படிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட சண்டி சப்த சதி மூன்று சரித்திரங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் பிரதம சரிதம், மத்தியம சரிதம் மற்றும் உத்தம சரிதம் என மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. பிரதம சரிதம் எனும் முதல் பாகத்தில் முதல் அத்தியாயத்தில் லோக மாயைப் பற்றியும் அத்கில் சிக்குண்டு தேவர்கள் முதல் மற்றவர் அனைவரும்  மாயையில் சிக்கி தவிப்பதையும் மாயையான அந்த லோக மாதாவை, அதாவது லோக மாதா எனும் மகா காளியையே  வழிபட்டு அவர்களது மாயையில் இருந்து விடுபட அவளைப் பிரார்த்திப்பதைக் கூறுகிறது. அதில் உள்ள லோக மாதாவான மாயைக்கு  விஷ்ணுவே  உட்படுகிறார். இதில் பிரும்மா லோகமாதாவை துதிக்கும் ஸ்தோத்திரமே மிக முக்கியமானது. மதுகைடப சம்ஹாரம் இதில் வருகின்றது.   மத்யம சரிதம் எனும் இரண்டாம் பாகத்தில் உள்ள அத்தியாயம் இரண்டு முதல் நான்குவரை  மகிஷாசுரமர்தனின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் தேவர்கள்...

Chandi Saptha Sathi - 4

படம்
சண்டி சப்த சதி -4 சாந்திப்பிரியா கீலகம் : கீலகம் என்றால் கொடுத்துப் பெறுதல் என்பது பொருளாகும். எதற்காக கீலகம் என்ற பெயரில் மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டியது அவசியம் என்றால் தன்னிடம் உள்ள அனைத்தையும்  தேவியிடம் தந்து விட்டு அவளை சந்தோஷப்படுத்தி  தன்னை  பற்றற்ற நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவளும் நமக்கு தேவையானதைத் தருவாள்.  'தன்னிடம் உள்ள அனைத்தையும்  தேவியிடம் தந்து விட்டு' என்று கூறுவது செல்வத்தை  குறிக்க அல்ல. தன்னையே என்பது  முழுமையான சரணாகதி என்ற தத்துவத்தையே இங்கு குறிப்பிடுகிறது.  சப்த சதியை பாராயணம் செய்யத் துவங்கும் முன்னர் கீலகம் எனும்  மந்திரத்தை ஓதி தேவியை தியானிக்க வேண்டும். ( அந்த ஸ்லோகங்களை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா ). ராத்திரி  ஸூக்தம்   உலக இயக்கம் அனைத்தும் தற்காலிகமாக மறைந்து இருக்கும் காலமே இரவு என்பது. அதுவே ஜீவராத்திரி அல்லது ஈஸ்வர ராத்திரி எனப்படும். அதாவது உயிருள்ள ஜீவன்கள் ஓய்வெடுக்கும் காலம் அந்த நேரம். அப்போது பரம்பொரு...

Chandi Saptha Sathi -3

படம்
சண்டி சப்த சதி -3 சாந்திப்பிரியா    மேதஸ் ரிஷி கூறலானார் '' மன்னனே கேள் . சப்த சதியை பாராயணம் செய்ய சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும். அதை பாராயணம் செய்யும்போது உச்சஸ்தாயியில் பாராயணத்தை செய்யாமல் மிகவும் மெதுவாகவும், நமக்குள் மட்டும் கேட்கும் குரலிலும் மட்டுமே படிக்க வேண்டும். இதை பாராயணம் செய்யும் முன்னால் சில அத்தியாயங்களை முதலில் படிக்க வேண்டும். இதை பாராயணம் செய்ய நித்திய கர்மாவை முடித்துக் கொண்டு  பரிசுத்தமான இடத்தில் அமர்ந்து கொண்டு  ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு அதன் பின்னரே கீழ் கூறி  உள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் பாராயணதைக் கைக்கொள்ள  வேண்டும்.  ஆனால் அதே நேரத்தில் தேவி மகாத்மியத்தை பாராயணம் என்று  செய்யாமல் நேரடியாகப் படிப்பதும் வாழ்க்கைக்கு தேவையான பலவிதமான நல்ல பலனையே தரும் என்றாலும், ஒருவனுக்கு உலகத்தில் இருந்து - அதாவது மாயையில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் நல்ல குருவிடம் தீட்ஷை பெற்றுக் கொண்டு முறைப்படி அதை மந்திர பாராயணம்...

Chandi Saptha Sathi -2

படம்
சண்டி சப்த சதி -2 சாந்திப்பிரியா  சண்டி சப்த சதிக்கு துர்கா சப்த சதி என்று பொருள். துர்கா என்றால் அணுகுவதற்கு அறியவள் என்பதும் ஒரு பொருள் ஆகும். துர்கா என்றால் துர்கதி அடையாமல் நம்மை காப்பாற்றுபவள் என்றும் அர்த்தம். தேவி சூக்தத்தில் அம்பிகை கூறுகிறாள் ''எவன் என்னை தியானிப்பானோ, எவன் என்னிடம் சரண் அடைகிறானோ அவனை நான் ரிஷியாகவும், பெரும் மேதையாகவும் ஆக்கிடுவேன்'' அதனால்தான் கூறுவார்கள் இந்த உலகம் என்ற மாயையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். அன்னை கூறுவாள் '' இந்த உலகில் நான் ஒருவளே இருக்கிறேன். என்னைத் தவிர என்னைப் போன்ற இரண்டாமவர் கிடையாது. அனைத்தையுமே படைத்தவள் நான். ஒன்றாகி இருந்த பிரும்மமான  நான் இரண்டாகி என்னைப் பெருக்கிக் கொண்டேன் என்பதின் காரணம் உங்களைக் காக்கவே''. ஆக்குவதும், காப்பதும் மற்றும் அழிப்பதும் தன் முக்குணத்திலான சத்வ, ரஜஸ், தமஸ் என்றவற்றால் நடத்தி வைக்கும் மகா சக்தி அவள். மகா காளி, மகா லஷ்மி மற்றும் மகா சரஸ்வதி  என மூன்று ரூபங்களை மும்மூர்த்திகளைப் போல  எடுத்து உலகைக் காத்தவள் அவளே நம்மையும் இந்த உலகின் மாய...

Chandi Saptha Sathi - 1

படம்
சண்டி சப்த சதி -1 சாந்திப்பிரியா  சண்டி சப்தசதி என்பது என்ன? தேவி உபாசனைகளைக் குறிக்கும் தேவி மகாத்மியம் எனும் மந்திர நூலாகும். 400- 500 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு உள்ள இந்த மகாத்மியம் மார்கண்டேய முனிவரால் இயற்றப்பட்டது. பதிமூன்று அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டு உள்ள இந்த பாராயண நூலில் உள்ள 700 ஸ்லோகங்களில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும் சக்தி மிக்கது. மந்திர சக்தி வாய்ந்தது. சப்த சதி என்பதற்கு எழுநூறு என்ற அர்த்தம் உண்டு. சப்தசதி என்பது ஏழு சதி எனும் தேவதைகளையும் குறிக்கும். இதை முறைப்படி துதித்து ஸ்தோத்திரம் செய்தால் வேண்டியப் பலனை அடையலாம் என்ற நம்பிக்கை உண்டு. இந்த ஸப்த சதியை முறைப்படி படித்து பாராயணம் செய்தால் படிப்பவர்களுக்கு ஏழ்மையில் இருந்து விடுதலை கிடைக்கும், பகைவர்களை வெல்லும் திறமை உண்டாகும். மனதில் தம்மையே அறியாமல் ஏற்படும் பீதி மற்றும் அச்சம் விலகும். தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டு ஒன்பது நாட்கள் ஊசி மீது தவத்தில் இருந்த பராசத்தியானவள்  தானே மஹிஷாசுரமர்தினியாகவும் அடுத்த மூன்று நாட்கள் மகாலஷ்மியாகவும் கடைசி மூன்று ...

Village Deities- 24

படம்
  கிராம தேவதைகள் - 2 4   சுந்தரபாண்டியம் ஆலயத்தில்  உள்ள சிலை  சுந்தரபாண்டியம்  வைகுண்டமூர்த்தி  [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] மதுரையில்  இருந்து  ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் மதுரையில் இருந்து பதினைந்து கிலோ தொலைவில் உள்ளதே சுந்தரபாண்டியம் எனும் கிராமம். அந்த இடத்தை மூன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாரவர்ம பாண்டியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஒரு முறை அந்த ஊரின் அருகில் இருந்த காட்டின் வழியே ஒரு வயதான தம்பதியினர் நடந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்களது எதிரில் திடீரென ஒரு எரும்புப் புற்று தோன்றியது மட்டும் அல்லாமல் அது வளரவும் துவங்கியது. ஆகவே ஆவலினால் அதற்குள் என்ன உள்ளது என்பதைப் பார்க்க அந்த வயதானவர் தனது வாளை புற்றில் நுழைத்துப் பார்க்க அது ஒரு கல்லில் மோதி அதில் இருந்து ரத்தம் வந்ததாம். ஆகவே ஊருக்குள் சென்று கிராமத்தினரை அழைத்து வந்து அந்த புற்றை விலக்கி விட்டுப் பார்த்தபோது அங்கு வைகுண்ட மூர்த்தி அவர் மனைவிகளுடன் சிலையாக இருந்தார். அதை வெளியில் எடுத்...

Village Deities - 23

படம்
  கிராம தேவதைகள் - 23 படம் : http://www.pbase.com/neuenhofer/image/122496671  தமிழ்நாட்டில் சேலத்தில் ஒரு கிராமத்தில் காணப்படும்  அங்காள பரமேஸ்வரியின் சிலை  [இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்' (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப் பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள்  என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய  புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.   அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ] ஏனாடி செங்கோட்டை  அங்காள பரமேஸ்வரி [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானா மதுரையில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது ஏனாடி செங்கோட்டை என்ற கிராமம். இங்குள்ள ஆலயத்தில் அங்காள பரமேஸ்வரி தன்னுடன் 21 து...

Village Deities - 22

படம்
  கிராம தேவதைகள் - 22 மாடப்புரம் பத்ரகாளி  ஆலயத்தில்  காணப்படும்  சிலையின் இரு தோற்றம்  மாடப்புரம்  பத்திரக்காளி   [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தின் அருகில் உள்ளதே மாடப்புரம் என்கின்ற கிராமம். ஒரு முறை உலகில் பிரளயம் தோன்றியது. அனைத்தும் முழுகி விட மதுரை மீனாக்ஷி தன்னுடைய கணவரான சிவபெருமானிடம் மதுரையின் எல்லை எது என்பதை காட்டுமாறு கேட்டுக் கொண்டாள். ஆகவே அவர் தன்னை ஒரு மிகப் பெரிய பாம்பாக்கிக் கொண்டு அந்த நீரை அப்படியே வளைத்துப் பிடிக்க அவருடைய நாக்கு வாலை தொட்ட இடமே மாடப்புரம் என்பதை புரிந்து கொண்டாள். ஒரு முறை அவளும் சிவனாரும் வேட்டையாடச் சென்றனர். மதுரை மீனாக்ஷி களைத்து விட்டாள். ஆகவே சிவனார் அவளை அங்கேயே (மாடப்புரத்தில்) தங்குமாறு கூறி விட்டு துணைக்கு ஐயனாரையும் நிற்க வைத்து வைத்து விட்டுச் சென்றார். ஐயனார் அவளுக்கு துணையாக அங்கு உள்ளார். எவர் ஒருவர் வைகை நதியில் நீராடுகிறார்களோ அவர்களுக்கு கங்கையில் குளித்த புண்ணிய...

Village Deities- 21

படம்
கிராம தேவதைகள் - 21 ஒரு  கிராம   ஆலயத்தில் காணப்படும்  இந்த  கிராம தேவதை    பத்திரகாளியா அல்லது பைரவியா    என்பது தெரியவில்லை  தகத்தூர்  மாப்பிள்ளை வீரன்  [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ]   நாகையில் வேதாரண்யத்தின் அருகில் உள்ளது தகத்தூர் கிராமம். மாப்பிள்ளை வீரன் என்றால் மாப்பிள்ளை என்று அர்த்தம். அந்த ஊரில் உள்ள அந்த ஆலயத்தில் சிலை கிடையாது. ஒரு கல்லை மட்டுமே கடவுளாக வணங்குகிறார்கள். அந்த ஆலயத்தின் கதை இது. ஒரு காலத்தில் அந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் திருமேனி அம்மன் என்ற பெயரில் காளி சிலையை வணங்கி வந்தார். அவர் அதன் எதிரிலேயே மரணம் அடைந்தார். ஆகவே அவருக்கு அங்கேயே சமாதி எழுந்தது. அந்த ஊரில் சாமி வழிபாடுகள் எதுவும் இல்லாததினால் திருடர்கள் அட்டகாசம் அதிகரித்தது. மக்கள் துன்பம் அடைந்தனர். அந்த கிராமத்தின் அருகில் இருந்த அதியங்காடு என்ற இடத்தில் ஒரு சிவன் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தின் அனைத்து நகைகளையும் திருடர்கள் திருடி...

Village Deities - 20

படம்
கிராம தேவதைகள் - 20 சங்கிலிக் கறுப்பர்  கீழவயல்  சங்கிலிக் கறுப்பர்  [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] சிவகங்கை மாவட்டத்தில் சிங்கண்ணம்புரியின் அருகில் உள்ள கிராமமே கீழவயல் என்பது. அதன் அருகில் நாத கலை பட்டினம் என்ற வளர்ச்சி அடைந்த ஊர் உண்டு. அந்த ஊரில் இருந்தவர்கள் வசதியான வாழ்க்கையை மேற்கொண்டு உள்ளனர் என்பதினால் பொறாமை கொண்ட சில மந்திரவாதிகள் அந்த ஊர் மக்களுக்கு தொல்லை தரத் துவங்கினார்கள். அந்த கிராமத்தில் ஒளி விடை ஐயனாரின் ஆலயம் இருந்தது.  ஆகவே மக்கள் அங்கு சென்று ஐயனாரிடம் முறையிட்டனர். அவர் தந்து சகோதரியான மதுரை மீனாஷியை சந்தித்து அவளுடைய ஆலோசனைக் கேட்டார். அவள் தன்னிடம் உள்ள 121 படையினரில் எவரை வேண்டுமானாலும் அழைத்துப் போகுமாறு கூறினாள். ஐயனாருக்கு சங்கலிக் கறுப்பர் மீதே அதிக நம்பிக்கை இருந்ததினால் அவரையே அழைத்துச் சென்றார். சங்கிலிக் கறுப்பர் அங்கு சென்று மிகப் பெரிய உருவை எடுத்து மந்திரவாதிகளை கல் சிலைகளாக்கி விட்டார். அதை முடித்தப் பின் தனக்கு என்ன வெகுமதி தர உள்ளாய் என ஐயனார...

Village Deities - 19

படம்
கிராம தேவதைகள் - 19 தமிழ் நாட்டில் ஒரு கிராம  எல்லையில்  உள்ள காவல் தெய்வங்கள்  காப்பாத்தம்பட்டி  பச்சை மலையான்  [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] சேலம் மாவட்டத்தில் ஜலகண்டபுரத்தில் உள்ளது சிறிய கிராமமான கப்பாத்தம்பட்டி என்பது. அது வறண்ட பூமி. ஒரு முறை அந்த கிராமத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டது. தண்ணீர் இல்லை. ஆகவே அங்கிருந்து எண்பது கிலோ தொலைவில் இருந்த பச்சை மலை என்ற இடத்துக்கு சிலர் சென்று குடியேறினார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த நான்குபேர் அந்த மலை உச்சிக்குச் சென்று அங்கு கடவுளுக்காக ஒரு குடுசையில் தண்ணீர் வைத்து இருந்த மூன்று பானைகளில் இருந்த தண்ணீரை தாகம் தாங்காமல் குடித்து விட்டனர். அவர்கள் நால்வரும் குருடாகி விட்டனர். அதன் பிறகு அந்த மலை ஜாதியினர் தம் கிராமத்துக்கு வந்து நடந்ததைக் கூற அவர்கள் அங்கு மீண்டும் சென்று அங்கிருந்த ஆலய பூசாரியிடம் மன்னிப்புக் கேட்க அவரும் அவர்களுக்கு ஆலயத்தின் வீபுதியைக் கொடுக்க அவர்கள் இழந்த கண் பார்வையை திரும்பப் பெற்றார்கள்....

Village Dieties - 18

படம்
கிராம தேவதைகள் - 18   மேலாரப்பனூர்  தவசி ஆண்டி ஆலயம்  மேலாரப்பனூர்  தவசி ஆண்டி [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] மதுரை அருகில் உள்ளதே திருமங்கலம் என்கிற கிராமம். ஒரு காலத்தில் தவசி ஆண்டி என்பவர் உயர் ஜாதியினரால் வணங்கப்பட்டு வந்திருந்தார். ஆனால் இன்றோ அவரை தலித்துக்களே வணங்குகின்றனர். அந்த தேவதைக்கு ஆலயம் இல்லை. அலங்கரிக்கப்பட்டு உள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ள கல்லையே தவசி ஆண்டி என வணங்குகின்றனர். அவர் சக்தி வாய்ந்த கடவுள் என்ற நம்பிக்கையும் உள்ளது. தவசி ஆண்டி அந்த ஊருக்கு எப்படி வந்தார் என்பதோ அல்லது அந்த ஆலயத்தின் பண்டிதரும், ஆலயத்தின் சாமியாடியும் ஏன் தலித்துக்களாகவே உள்ளனர் என்பதோ யாருக்கும் தெரியவில்லை. அவருடைய அருளினால்தான் தம் நிலங்களில் நல்ல விளைச்சல் ஏற்படுகின்றது என கிராமத்தினர் நம்புகின்றனர். ஆகவே தமது விளைச்சலில் ஒரு பகுதியை அவருக்கு காணிக்கையாக அர்பணித்து விடுவார்கள். யார் எவ்வளவு கொடுத்தனர் என்ற விவரம் எழுதி வைக்கப்பட்டு விடுகின்றது. கார்த்திகை மாத மூன்றாம் வெள்ளிக்...

Village Deities - 17

படம்
கிராம தேவதைகள் - 17 பெங்களூரில் ஒரு ஆலயத்தில் முனீஸ்வரர்  கோபால சமுத்ரம்  அடைக்கலம் காத்தார் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ]   உப்பூர் கோபாலசமுத்திரம் என்பது திருவாரூர் மாவட்டத்தின் முத்துப் பேட்டையில் இருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு பெரிய முனீஸ்வரன் ஆலயம் உள்ளது. அவரே ஊரின் அடைக்கலம் காத்தாரின் காவல் தெய்வம். அடைக்கலம் என்றால் காப்பவர், மற்றும் சரண் அடைந்தவர் என்ற அர்த்தம் உண்டு. ஒரு காலத்தில் கோபால சமுத்திரம் சமுத்திரத்தின் கரைப் பகுதியாக இருந்துள்ளது. நாகப்பட்டினம் மற்றும் அந்த காலத்தில் கொலம்போ என அழைக்கப்பட்ட ஸ்ரீ லங்காவுக்கு கப்பல் மூலமே வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு முறை நாகப்பட்டினத்தில் இருந்து கொலோம்போவுக்கு சரக்கு கப்பல் போய் கொண்டு இருக்கையில் கடலில் பயங்கரமான சூறாவளி ஏற்பட்டது. கடல் கொந்தளித்தது. கப்பல் முழுகி விடும் போல இருக்க அந்த கப்பலின் சொந்தக்காரன் கடவுளை வேண்டிக் கொள்ள அந்த கப்பல் எதன் மீதோ மோதி நின்று விட்டது. ஆகவ...

Grama devathas and deities in Vedik temples - 4

படம்
 கிராம தேவதைகளும்  நகர தெய்வங்களும் - 4 ( வழிபாட்டுத் தலங்கள்     தோன்றிய  வரலாறு  )  சாந்திப்பிரியா  - IV - நான் முன்னரே எழுதியது போல கிராமப்புறங்களில் இருந்த மக்களினால் வணங்கப்பட்டு வந்திருந்த தெய்வங்கள் அதாவது சுடலை மாடன் (பார்வதியினால் மயானத்தில் படைக்கப்பட்டவர் என்பது கதை) , ஐய்யனார், இசக்கி அம்மன், மாரி அம்மன் முதல் வினாயகர், முருகன், வள்ளி போன்றவர்கள் பிற்காலத்தில் படித்தறிவு பெற்று நகர்ப்புறங்களுக்கு சென்று குடி அமர்ந்த கிராம மக்களின் குல தெய்வம் ஆயின. இன்னொன்றையும் கூர்ந்து கவனியுங்கள் ஆகம வழிபாட்டு முறையிலான ஆண் தெய்வங்களில் கூட வெங்கடாசலபதி, முருகன் மற்றும் வினாயகரை தவிர அதாவது ஒரு குடும்பத்தில் ஆண்டாண்டு காலமாக அவர்களுடைய மூதையார்கள் தொடர்ந்து வழிபாட்டு வந்திருந்த ஆலய தெய்வம் வெளி இடங்களுக்குச் சென்று குடி அமர்ந்த அந்த குடும்பத்தை சார்ந்த சந்ததியினரால் குல தெய்வமாக ஏற்கப்பட்டது. அதில் ஒரு விசேஷம் என்ன என்றால் ஒரு கட்டத்தில், அப்படிப்பட்ட கிராம ஆலயங்கள் பிற இனங்களை சேர்ந்த மக்களைப் போலவே ஆச்சாரமான பிராமண குடு...

Grama devathas and deities in Vedik temples - 3

படம்
 கிராம தேவதைகளும்  நகர தெய்வங்களும் - 3 ( வழிபாட்டுத் தலங்கள்     தோன்றிய  வரலாறு  )  சாந்திப்பிரியா    - III - ஒரு விஷயத்தை மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  கிராம ஆலயங்களில் உள்ள தெய்வங்கள்  மற்றும் கிராம தேவதைகள் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்றால் கிராம தேவதைகள்  என்பவர்கள் இரண்டாம் நிலைக் கடவுட்கள் .  அவர்கள்  மூல தெய்வங்களின் அதாவது சிவன், விஷ்ணு, பார்வதி போன்றவர்களின் பூத கணங்கள் அல்லது அவர்களுடைய பரிவார தேவதைகள் எனக் கருதப்பட்டன. அதாவது கிராம தேவதைகளை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலைக் கடவுட்கள் என்று கூடக் கூறலாம். முதலாம் கட்ட காலத்தில் வழிபடப்பட்ட கிராம தேவதைகள்- பாறைகள், விலங்குகள், சூலம், போன்ற உருவங்கள்  பூதகணங்களில் அடக்கம் இல்லை. முதலாம் கட்ட கிராம தேவதைகள் ஒரு விதத்தில் ஆவி உலக வழிபாட்டுடன் சம்மந்தப்பட்டது. அந்த கால மக்கள் இனம் தெரியாத சக்திகளை ஆவிகள் என நம்பியதினால்தான்  அப்படிப்பட்ட உருவ வழிபாடு இரு...