இடுகைகள்

மார்ச், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Grama devathas and deities in Vedik temples - 2

படம்
 கிராம தேவதைகளும்  நகர தெய்வங்களும் - 2 ( வழிபாட்டுத் தலங்கள்     தோன்றிய  வரலாறு  )  சாந்திப்பிரியா  பல கிராமங்களில் காணப்படும்  அம்மன்  வழிபாட்டுத் தலங்கள்,  எல்லைக் காவல் தெய்வங்கள்     படம்:   http:// www.pbase/neuenhofer/naga cult in_tamilnadu [ இந்தப்  படங்கள் அனைத்துமே ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்' (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப் பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ] - II - ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகள் வடப் பகுதியில் இருந்த மக்களுடன் மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டு இருந்துள்ளன. தென் பகுதி மக்க...

Grama devathas and deities in Vedik temples

படம்
 கிராம தேவதைகளும்  நகர தெய்வங்களும்  ( வழிபாட்டுத் தலங்கள்     தோன்றிய  வரலாறு  ) சாந்திப்பிரியா  பல கிராமங்களில் காணப்படும்  அம்மன் வழிபாட்டுத் தலங்கள்,  எல்லைக் காவல் தெய்வங்கள்     படம்:   http:// www.pbase/neuenhofer/naga cult in_tamilnadu [ இந்தப்  படங்கள் அனைத்துமே ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்' (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப் பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ] - I- சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய ஒரு உறவினர் என்னிடம் சில விவரங்களைக் கேட்டார்.  அவர் கேட்ட சந்தேகங்களின் சாரம் :- கிராம தேவதைகள் எ...

Village Deities - 16

படம்
கிராம தேவதைகள் - 1 6 சலுப்பை  மேல் அழகர் ஆலய முகப்பு   சலுப்பை  துறவு மேல் அழகர் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] கும்பகோணத்தில் இருந்து 37 கிலோ தொலைவில் உள்ளது பெரம்பலூர். பெரம்பலூரில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே சலுப்பை  எனும் கிராமம்.  துறவு என்றால் உள்ளூர் பாஷையில் அழகு எனவும் துறவு மேல் அழகர் என்றால் மலை மீது உள்ள அழகான ஆண் என்று அர்த்தம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அந்த இடத்தில் பிராமணர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமாக ஒரு கிணறும் அங்கு இருந்தது. அதில் இருந்துதான் பிராமணக் குடும்பத்துப் பெண்கள் நீரை எடுத்துச் செல்வார்கள். ஒரு முறை அந்த கிராமத்துக்கு ஒரு துறவி வந்தார் . அங்கிருந்த மலை மீது அமர்ந்து கொண்டு அவர் தவத்தில் இருந்தார். அதை அறியாமல் அங்கு வந்த இரண்டு பெண்கள் கிணற்று நீரில் இருந்து தண்ணீர் எடுத்தபோது சிறிது தண்ணீர் துறவி மீது கொட்டி விட்டது. அதனால் கோபம் அடைந்தவர் அவர்களை உருவமில்லாமல் போய்விடுவார்கள் என சபித்...

Village Deities - 15

படம்
கிராம தேவதைகள் - 1 5 அறியக்குறிச்சி வெட்டுடையார் காளி ( படம் நன்றி : K Senthil Sivan, Blue Chip Technologies Pvt Ltd & Lite Technology Trainers Pvt Ltd.) அறியக்குறிச்சி  வெட்டுடையார் காளி [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] சிவகங்கை நகரில் இருந்து 15 கிலோ தொலைவில் உள்ளது அறியக்குறிச்சி கிராமம். அந்த கிராமத்தில் உள்ள ஆலயம் பற்றியக் கதை இது. ஒரு காலத்தில் அந்த இடத்தை சுற்றி நிறைய காடுகளே இருந்தன. ஒருமுறை கருப்ப வேலர் மற்றும் கரி வேலர் என்ற இரண்டு சகோதரர்கள் காட்டில் கிழங்குகளை பிடுங்கி வரச் சென்றார்கள். அவர்கள் ஒருமுறை தோண்டிய இடத்தில் அவர்களுக்கு ஒரு ஐய்யனார் சிலை கிடைத்தது. அதை அவர்கள் வெட்டுடைய ஐய்யனார் எனப் பெயரிட்டு அங்கேயே பிரதிஷ்டை செய்து வணங்கி வரலாயினர். பின்னர் கரி வேலர் கேரளாவுக்குச் சென்று மந்திரக் கலையை கற்று அறிந்து வந்தார். வந்தப் பின் ஐயனாருக்கு முன்னால் பூமியில் எதோ எழுதி உள்ளதைக் கண்டார். அவை காளியை ஆராதிக்கும் மந்திரங்கள் என்பதை புரிந்து கொண்டார். ஆகவே தனது மந்திர சக்தியி...

Village Deities - 14

படம்
கிராம தேவதைகள் - 1 4 கும்பகோணத்து அருகில் ஒரு கிராம தேவதை   ஆலயத்தில் காணப்படும் சிலைகள்  ( படம் நன்றி: www.indiamike.com  ) வத்தலக் குண்டு இடுமலை மகாலிங்க மாயக் கருப்பு [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது வத்தலக் குண்டு எனும் கிராமம். அங்குள்ள ஆலயத்தில் உள்ள மாயக் கருப்பு முதலில் தேனீ மாவட்டத்தில் உள்ள எட்டூர் கொட்டக் குடி என்ற கிராமத்தில் இருந்தவர் . அவரை அந்த ஊரில் இருந்தவர்கள் வணங்கி வந்தாலும் அவரை சரி வர வணங்கவில்லை என்ற கோபத்தினால்  அவர் அவர்களுக்குப் பல தொல்லைகளைத் தந்தார். ஆகவே கோபமுற்ற மக்கள் அவரையும் அவரை சார்ந்த இருபத்தி ஒரு சிறு கடவுட்களையும் , அதாவது சின்னக் கருப்பு, முன்னோடி கருப்பு, கழு உதயான், கனவே கருப்பு, அலத்திக்காரி, போன்றவர்களை ஒரு சிறிய பெட்டியில் வைத்து மூடி நதியில் தூக்கி எறிந்து விட்டார்கள்.  நதியில் மிதந்து வந்த அதை பார்த்த கட்டக்காமன்படியை சேர்ந்த ஒரு பிராமணன் அதை தனது வீட்டிற்கு எடுத்த...

Village Deities - 13

படம்
கிராம தேவதைகள் - 1 3   ஒரு கிராம தேவதை  ஆலயத்தில் மரத்தில் கட்டப்பட்டு  உள்ள  குழந்தைகளின் தொட்டில்கள்  பூதாங்குடி  தீ பாய்ந்த நாச்சியார் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ]   கடலூரில் உள்ள வடலூர் பகுதியின் அருகில் உள்ளது பூதாங்குடி கிராமம். இந்த ஊர் செட்டியார்கள் அதிகம் வாழும் இடம். அவர்கள் சோழ மன்னனின் படை வீரர்களாக இருந்தவர்கள். நாடு போர் இன்றி அமைதியாக இருக்கும் காலங்களில் அவர்களில் பெரும்பாலோனர் விவசாயம் செய்தும் காடுகளில் சென்று வேட்டை ஆடுவதையும் தொழிலாகக் கொண்டு இருந்தனர். ஒரு முறை செட்டியார் ஒருவர் காட்டில் வேட்டை ஆடிக்கொண்டு இருந்தபோது அழுது கொண்டு இருந்த அழகான சிறு பெண்ணைக் கண்டனர். ஆகவே அவளை கிராமத்திற்கு அழைத்து வந்து தமது பெண்ணாகவே அவளை வளர்த்து வந்தார். நாளடைவில் அவளை வளர்த்து வந்த செட்டியார் மரணம் அடைய அவள் தன்னையும் அவருடன் சேர்த்து எரித்து விடுமாறுக் கூறினாள். எலுமிச்சை, தேங்காய் பின்னிய பாய் மற்றும் வெற்றிலையை தன்னுடைய கையில் வைத்துக் கொண்ட...

Village Deities - 12

படம்
கிராம தேவதைகள் - 1 2  படம்: http://www.pbase.com/neuenhofer/image/121939169 தமிழ்நாட்டில் சேலத்தில்  ஒரு கிராம தேவதை  ஆலயத்தில் காணப்படும்  கருப்பண்ணசாமியின் ஒரு  சிலை [இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்' (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப் பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ] வீ. களப்பட்டி  வேண்டி முத்துக் கருப்பு  [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ]   மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ளதே வீ. களப்பட்டி என்கின்ற சிறிய கிராமம். அங்கு ஒரு பெரிய ஏரியை மக்கள் உருவாக்கி இருந்தனர். அங...

Village Deities - 11

படம்
கிராம தேவதைகள் - 1 1    படம்: http://www.pbase.com/neuenhofer/image/140990329 தமிழ்நாட்டில் சேலத்தில்  ஒரு கிராம தேவதை  ஆலயத்தில் காணப்படும்  கருப்பண்ணசாமியின் சிலை [இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்' (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப் பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ] காட்டுப் பாளையம்  மலைக் கருப்பச்சாமி [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆண்டியூர் கிராமத்தின் அருகில் உள்ள மலைப் பகுதியில் உள்ளதே காட்டுப் பாளையம். ஒரு காலத்தில் அங்கு வெள்ளாய கௌண்டர் என்ற செல்வந்தர் வசித்து வந்தார்....

Village Deities - 10

படம்
கிராம தேவதைகள் - 10   தமிழ்நாட்டில் தூத்துக்குடியில்   ஒரு  கிராம தேவதை  ஆலயத்தில் காணப்படும் சிலை கலையாற் குறிச்சி  கூடமுடையார் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது  கலையாற் குறிச்சி  எனும் கிராமம். அங்கு  அர்ஜுனா மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கின்றன. அவை சதுரகிரி மலையில் உற்பத்தியாகி அங்கு வருகின்றன.  சதுரகிரி மலையில் ஆடுமாடு மேய்ப்பவர்கள் பலர் உண்டு.  ஒரு முறை சிவபெருமான் அவர்களுடன் விளையாட நினைத்தார். ஆகவே அவர் ஒரு கன்று போல உருமாறி அனைத்து மாடுகளின் மடியில் இருந்தும் பாலைக் குடித்து விட்டார். அந்த இடையர்களுக்கு மாடுகளின் பால் வற்றி விட்டதின் காரணம் தெரியவில்லை. குழம்பினார்கள் . ஆகவே என்ன நடக்கின்றது என அவர்கள் கண்காணிக்கத் துவங்கினார்கள். ஒருநாள் அந்தக் கன்று அனைத்து மாடுகளின் பாலையும் குடிப்பதைக் கண்டு பிடித்தனர். அதைப் பிடிக்கத் துரத்தினார்கள். சிவபெருமான் ஓடிப் போய் ...

Village Deities - 9

படம்
கிராம தேவதைகள் - 9 படம்:   http://www.pbase.com/neuenhofer/image/140291497  தமிழ்நாட்டில் ஒரு கிராம தேவதை ஆலயத்தில் காணப்படும் சுடலை மாடனின் சிலை [இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்' (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப் பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ] சீவலப்பேரி சுடலை மாடன்  [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது சீவலப்பேரி எனும் கிராமம். அங்குதான் சுடலை மாடனின் ஆலயமும் உள்ளது. சுப்பிரமணியர் (முருகன்) பழநிக்குச் சென்று விட்டதும் பார்வதிக்கு இன்னொரு குழந...

Village Deities - 8

படம்
கிராம தேவதைகள் - 8 சேலம் மாவட்டத்தில் ஒரு கிராம தேவதை ஆலயத்தில் காணப்படும் காளியம்மனின் சிலை [இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்' (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப் பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ] கீழ்காத்தி கடா மறவர் காளி [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] புதுக்கோட்டை அறந்தாங்கி ஜில்லாவில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே கீழ்காத்தி கிராமம். ஒரு காலத்தில் அந்த ஊரில் சின்ன மறவர் மற்றும் பெரிய மறவர் எனும் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். கருப்பருக்கு விழா எடுக்கும் காலங்களில் அவர்கள் கருப்பருக்கு பலி தந்தப் பின் மிச்சமாகும் இறைச்ச...

Village Deities - 7

படம்
கிராம தேவதைகள் - 7 பட்டுக்கோட்டை நாடியம்மனின்  சிலை பட்டுக்கோட்டை நாடியம்மன்   [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] தஞ்சாவூரில் உள்ள ஒரு சிறிய நகரமே பட்டுக்கோட்டை. ஒரு காலத்தில் அதில் காடுகளே அதிகம் இருந்தன. அப்போது அந்த பிரதேசத்தை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஒருநாள் அந்த நாட்டு மன்னன் காட்டில் வேட்டை ஆடவந்த போது காட்டின் நடுவில் அழகான ஒரு மங்கை தன்னைப் பார்த்தவாறு பெரியதாக சிரித்தப்படி நின்று கொண்டு இருப்பதைக் கண்டான். ஆகவே அவளை பின் தொடந்து சென்றான் மன்னன். அவன் அவளை துரத்திக் கொண்டு செல்ல ஓடிய அவள் ஒரு புதருக்குள் சென்று மறைந்து விட்டாள். ஆகவே அவள் புதரை விலக்கிப் பார்த்தான். ஆனால் அவள் அதில் இல்லை என்பதினால் மக்களை அழைத்து அந்த இடத்தை தோண்டுமாறு ஆணையிட்டான். ஆனால் தோண்டிய இடத்துக்குள் அந்தப் பெண்ணுக்குப் பதில் ஒரு அம்மன் சிலையே கிடைத்தது. அதை வெளியில் எடுத்து வந்து பட்டுக்கோட்டை சிவன் ஆலயத்தில் இருந்த பண்டிதர்களைக் கொண்டு பட்டுக்கோட்டையில் ஒரு ஆலயம் அமைத்து அதில் பிரதிஷ்டை செய்...

Village Deities - 6

படம்
கிராம தேவதைகள் - 6   3 மேலே உள்ள படம்  ஒரு கிராமத்தில்  காணப்படும் மாரியம்மன் என்ற  கிராம தேவதையின் சிலை   மாங்குடி வேப்பிலைக்காரி [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] தஞ்சாவூரில் உள்ள திருவாரூரில் உள்ள ஒரு கிராமமே மாங்குடி. ஒரு முறை அந்த கிராமத்தில் இருந்த அனைவரது கனவிலும் ஒரு பெண் கடவுள் தோன்றி தான் அந்த ஊருக்கு வரப் போவதாகக் கூறினாள். எவருக்குமே அவள் யார் என்பதோ, எப்போது வரப் போகின்றாள் என்பதோ தெரியவில்லை. மீண்டும் அவர்கள் கனவில் தோன்றியவள் தான் நதி வழியே வரப்போவதாகக் கூறினாள். ஆகவே அனைத்து கிராமத்தினரும் நதிக்குச் சென்று அவள் வரவுக்குக் காத்து இருந்தனர். பல நாட்கள் காத்து இருந்தும் அவள் வருவதற்கான  எந்த  அறிகுறியும் தோன்றாததினால் அவர்கள் சலிப்பு அடைந்தார்கள். ஒன்றுமே நிகழவில்லை. ஆனால் ஒரு நாள் பெரும் மழை வந்தது. நதியில் தண்ணீர் ஓடிப் பெருகி வெள்ளம் வர கிராமத்தினர் அன்னையை வேண்டிக் கொண்டு அவள் பெயரில் பிராத்தனை பாடல்களைப் பாடிக்கொண்டு நின்றனர். சற்று ...