Siva Kavasam - 2

அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித், துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம் தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க (பிரபஞ்சத்தின் மூல நாயகர், ஞான வடிவம், ஆனந்த ஸ்வரூபிணி, பூமி முதல் விண்ணுலகம் வரை பறந்து கிடக்கும் உயிர் அணுக்களின் ஜீவன், மரணம் அடைந்தப் பின் எம்மை உம்முள் அட்கொள்பவரான சிவபெருமானே, இந்த பூமியில் எந்த தீமையும் என்னை சூழாமல் காத்து அருள வேண்டும் ) குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித் தரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடாவண்ணம் காப்போன் நிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்ய விரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க. (ஓஹ் என்ற ஒலியை எழுப்பி ஓடிவரும் நீரைப் போலல்லாது, மௌன நீரோடையாக பயிர்களில் பாய்ந்து, உணவைத் தந்து உயிர்களைக் காப்பவரே, அலையலையாக வரும் மேகக் கூட்டத்தின் வழியே மழையாக வந்து மலை மீது பொழி ய , பாய்ந்து வரும் அந்த நீரின் வெள்ளத்தில் விழுந்து இறந்து விடாமல் எம்மை நீங்களே காத்து அருள வேண்டும். ) கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள்தீ...