இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Tirukoneeswar Temple , Sri Lanka - Part - 12

படம்
சாந்திப்பிரியா  பாகம் -12 சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி பண்டைய வரலாறு வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட ஆலயம் ஒன்று திரிகோண மலையில் கடற்கரையின் அடிவாரத்தில் இருந்ததாகவும், பின்னர் கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக அந்த ஆலயத்தின் ஒரு பகுதி கடலில் மூழ்கி விட்டதாகவும் அதில் ஒரு பகுதியே மலைக் குகை போன்று மலையின் அடிப்பகுதியில், யாராலும் போக முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறுகிறார்கள். அதுவே பல்லவர்கள் கட்டி இருந்த குகை ஆலயமாக இருந்திருக்க வேண்டும் என்றும் நம்புவதினால் தம்பலகமத்தில் மயில்வாஹனார் பார்த்ததாகக் கூறும் ஆலயம் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டிருந்த சிவன் ஆலயமாக இருந்திருக்க வேண்டும். என்றும், அந்த ஆலயமே தற்போது மலையின் அடிவாரப் பகுதியில் எங்கோ குகைக்குள் உள்ளதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. ஆகவே அதுதான் கோணேஸ்வரரின் மூன்றாவதான ஆலயம் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். திருகோணேஸ்வரர் ஆலயம் போர்துகீசியரால் அழிக்கப்பட்ட பிறகு அங்கிருந்த சிலைகளை பக்தர்கள் ரகசியமாக சென்று ஒழித்து வைத்து பூஜைகளை செய்தவாறு இருந்தார்கள். அதன் சில காலம் பொறுத...

Tirukoneeswar Temple , Sri Lanka - Part - 11

படம்
சாந்திப்பிரியா  பாகம்- 11 முன்னர் ஒருகாலத்தில் தம்பலகமத்தில் உள்ள இடங்களில் காணப்படும் வயல்வெளிகள் செழிப்பானவையாக இருந்தன. மழைக் காலங்களில் அந்த வயல்வெளிகள் அனைத்துமே தண்ணீரில் மூழ்கி அவை ஒரு வெள்ளக் காடாக இருக்குமாம். இதனால் தம்பலகமத்தில் வருடம் முழுவதுமே விளை நிலங்களில் தானியங்கள் பயிரிடப்பட்டது இல்லை. கோடை காலங்களில் மட்டுமே வயல்களில் தானியங்களை பயிரிடுவார்களாம்.  கோடைக் காலத்தை விடுத்து பிற காலத்தில் அதுவும் முக்கியமாக மழைக் காலங்களில் வேட்டை நாய்களை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள காடுகளில் சென்று காட்டு மான் மற்றும் சிறிய மிருகங்கள் போன்றவற்றை வேட்டை ஆடுவார்கள். அந்த வனப் பிரதேசங்களில் வேட்டை நாய்களின் துணை இல்லாமல் வேட்டை ஆடப் போகமாட்டார்கள் என்பதின் காரணம் வேட்டை நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பதினால் ஈரத் தரைகளில் வயல்களில் இருந்து ஓடிச் செல்லும் காட்டு மான்களின் பாத சுவடுகளை பின்பற்றிச் சென்று அவை ஒளிந்துள்ள இடத்தைக் கண்டு பிடித்து  கொடுக்கும்.  அவற்றை வேட்டையாடுபவர்கள் தமது  துப்பாக்கிகளினால் சுட்டு மிருகங்களை எடுத்து...

Tirukoneeswar Temple , Sri Lanka - Part - 10

படம்
சாந்திப்பிரியா   பாகம் -10 போர்த்துகீசியர் கோணேஸ்வரர் ஆலயத்தை அழிப்பது என்ற முடிவை தெரிந்து கொண்டதும், திரிகோண மலையில் இருந்த கோணேஸ்வரர் பக்தர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தார்கள். அந்த ஆலயத்தில் உள்ள செல்வங்களை அவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போனாலும் சரி தாம் வணங்கி வரும் கோணேஸ்வரர் விக்ரஹத்தை அவர்கள் எடுத்துச் சென்று விடக் கூடாது என்பதில் தீவீரமாக இருந்தார்கள். மாலையில் திருவிழா ஊர்வலத்தில் ஊர்வல மூர்த்திகளை பக்தர்கள் நகர் வலம் எடுத்துக் கொண்டு சென்று இருந்தபோது அந்த இருட்டை பயன்படுத்திக் கொண்டு ஆலயத்தின் உள்ளே புகுந்திருந்த போர்த்துகீசியர் தமது படையினருடன் ஆலயத்தில் சுவர்களை உடைத்தார்கள். கண்களில் பட்டதையெல்லாம் உடைத்தார்கள். அப்போது அந்த ஆலயத்தில் ஏழு அல்லது எட்டு  திரி விளக்குகள் மட்டுமே ஆலயத்துக்கு ஒளியை தந்து கொண்டு இருந்தது. அந்த காலங்களில் அத்தனை மின்வசதி கிடையாது. ஆலயத்தில் நுழைந்த போர்த்துகீசியர் தூண்கள் பிற வாயில்கள் என அனைத்தையும் உடைக்கத் துவங்கி அதன் பின் அவர்கள் அங்கிருந்த பெட்டிகளில் இருந்த விலை உயர்ந்த சீலைகள், தங்க வெள்ள...

Tirukoneeswar Temple , Sri Lanka - Part - 9

படம்
சாந்திப்பிரியா  பாகம்- 9 திருக்கோணீ ஸ்வரர் ஆலயம் முன்னர் திருக்கோணமலை கோணீஸ்வரர் கோவில் என்றுதான் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இலங்கையின் கிழக்கு கோடியில் உள்ள திருகோணமலையில் சுவாமி பாறை (சுவாமி மலை என்றும் கூறுகிறார்கள்) எனும் மலை உச்சியில் திருகோணமலை பிரதேசத்தைப் பார்த்தவாறு கம்பீரமாக அமைக்கப்பட்டு இருந்த இந்த ஆலயம் கிறிஸ்து பிறக்கும் முன் காலத்தை சேர்ந்த 1580 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. ஆறாம் நூற்றாண்டில் இந்த கோவிலே மாபெரும் சிவாலயமாக இருந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சுவாமி மலையில் திருக்கோணீஸ்வரர் ஆலயத்தைத் தவிர இன்னும் இரண்டு ஆலயங்களும் இருந்துள்ளன. முதல் பராந்தக சோழ மன்னன் என்பவனுக்கு அஞ்சி தன் நாட்டில் இருந்து தப்பி இலங்கைக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த ஒரு பாண்டிய மன்னன் தம்பலகமத்தில் திருப்பணிகள் செய்ததாக சில வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன. அதன் பின் இந்தியாவில் திருப்பதியில் உள்ள ஆலய கோபுரக் கலசங்களை தங்கத் தகட்டில் அமைத்த ஜடவர்ம வீர பாண்டியன் என்ற அதே மன்னனே திருக்கோணீ ஸ்வரர் ஆலய கோபுரக் க...

Tirukoneeswar Temple , Sri Lanka - Part - 8

படம்
சாந்திப்பிரியா  பாகம்-8 இப்படியாக குளக்கோட்டான் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைத்தப் பின் ஆலய மேற்பார்வைக்காகவும், பூஜை புனஸ்காரங்கள் மற்றும் பிற காரியங்களுக்காகவும் பாதுகாப்புக்குமாக பல இனப் பிரிவினரை பல்வேறு இடங்களிலும் அழைத்து வந்து ஆலயப் பகுதியிலும் அதைத் தொட்டிருந்தப் பகுதியிலும் குடி அமர்த்தினார். பிற தானும் தனது மனைவியான ஆடகசௌந்தரியுடன் அடிக்கடி அந்த ஆலயத்துக்கு வந்து வணங்கிச் சென்றார். அவர்கள் திருகோணமலையையே தலை நகரமாகக் கொண்ட திரிகோணமலை ராஜ்ஜியம் எனும் நகரை உருவாக்கிக் கொண்டு அங்கு ஆண்டு வந்தார்கள். நாட்டின் வளத்தை நன்கு கவனிக்க வேண்டும் என்பதினால் அந்தப் பகுதியை வடக்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதி என மூன்றாகப் பிரித்து அதை உப ஆளுநர்களைக் கொண்டு நிர்வாகித்து வரலானார். அப்படி அவர் ஏற்படுத்திய மத்தியப் பகுதியில் இருந்ததே இன்னொரு திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைந்த தம்பலகமலம் எனும் ஊரும் ஆகும். தம்பலகாமம் கிராமத்துள் கால் பதித்ததும், நம் கண்ணில் முதலில் படுவது, பார்க்குமிடமெங்கும் காலத்துக்கும் பசுமை நிறைந்து மரகதக் கம்பளம் விரித்தது போலத் தோற்றமளிக...

Tirukoneeswar Temple , Sri Lanka - Part - 7

படம்
சாந்திப்பிரியா  பாகம்-7 உலகெங்கும் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காரணத்தில் வேறு எந்த ஆலயமும் திரிகோண மலையில் உள்ள  திருக்கோணேஸ்வரர்  ஆலயத்தைப் போல சிறப்பை பெற்று இருக்கவில்லை.  அதற்குக் காரணம் குளக்கோட்ட மன்னன் என்பவனால்  ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படும் திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் இரண்டு ஆலயங்களாக உருவாகி உள்ள  நிலையே ஆகும்.  ஆலயம் இரண்டாக உருவாகி உள்ளதா?  ஆமாம் திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயத்தைப் போலவே  அந்த  இடத்தின்  அருகில்  உள்ள தம்பலகமலம் எனும் இடத்திலும்  இன்னொரு  திருக்கோணேஸ்வரர் அமைந்திருந்ததே ஆகும்.  அந்த இரண்டு ஆலயத்திலுமே  ஒரே மாதிரியான விழாக்கள், நித்திய பூஜைகள் , அபிஷேகங்கள் போன்றவை நடைபெறுவதாக கூறுகிறார்கள். அவற்றின்  கதை என்ன? பண்டைய காலத்தில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த மன்னர்களும் பிற நாடுகள் மீது படையெடுத்து வந்து  நாட்டை பெரிதாக்கிக் கொண்ட நிலையில் குளக்கோட்டான் மட்டும் இலங்கையில் இருந்த  திரிகோணமலைக்கு...

Tirukoneeswar Temple , Sri Lanka - Part - 6

படம்
சாந்திப்பிரியா  பாகம்-6 அந்த அந்தணர் அவன் தேர் இருந்த இடத்தின் அருகில் காரியங்களை செய்து கொண்டு இருந்ததினால் அவர் காரியங்களை முடிக்கும் வரை அவன் அங்கேயே காத்திருந்தான். ஆனாலும் மனதில் இருந்த சந்தேகம் மறையவில்லை. காரியம் முடிந்து கிளம்பிய அந்தணர் அருகில் சென்று ராவணன் கேட்டான் 'அந்தணரே, நீங்கள் யாருக்காக இங்கு இறுதிக் காரியங்களை செய்துள்ளீர்கள்...இடை இடையே கைகேசி, கைகேசி  என்ற பெயரைக் உச்சரித்தீர்களே . அவர் யார்?' அதையே எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தணர் உருவில் இருந்த விஷ்ணு பகவான் கூறினார் ' ஐயா, நான் பல இடங்களுக்கும் சென்று சிவ தர்சனங்களை செய்து கொண்டு இருக்கிறேன். அப்போது திருகோனீஸ்வரர் ஆலய மகிமையைக் கேள்விப்பட்டு இலங்கை வழியாக இங்கு வந்து கொண்டு இருந்தபோது அங்கு யாரோ ராவணன் எனும் மன்னனாம், அவரது தாயாரான கைகேசி என்பவர் அவரது மகன் ராவணன் கடலில் விழுந்து இறந்து விட்டான் என கேள்விப்பட்டு அப்படியே மயக்கம் அடைந்து விழுந்து மரணம் அடைந்து விட்டாளாம். அவளுக்கு திதிகளை செய்ய அவளுடைய பிள்ளை இல்லை என்பதினால் திருகோனீஸ்வரர்கடலில் திதி செய்வது பெரு...

Tirukoneeswar Temple , Sri Lanka - Part-5

படம்
  சாந்திப்பிரியா  பாகம்- 5 அந்த பூமியை வெட்டிய உடனேயே அதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் மீண்டும் ஓடிச் சென்று நாராயணனிடம் அவர்களுடைய அச்சத்தை எடுத்துக்  கூற அவரும் உடனே அவர்களுடன் கிளம்பிச் சென்று திருகோணிஸ்வரர் மலையில் உமையுடன் இருந்த சிவபெருமானை சந்தித்து ராவணனின் செயலைக் கூறி அவன் அந்த லிங்கத்தை  எடுத்துச் சென்று விட்டால் பிறகு அவனை யாராலுமே அடக்க முடியாமல் போய் விடுமே என்று கூற அவர்களுக்கு ஆறுதல் கூறினார் சிவபெருமான். அந்த நேரத்தில்தான் அவன் பிளந்து எடுத்த பர்வதப் பகுதியுடன் இருந்த சிவலிங்கத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு நாடு செல்லக் கிளம்பினான் ராவணன். அவன் பர்வதத்தை தனது கைகளில் தூக்கியவுடன் அந்த மலையை தன் நுனிக் காலினால் அழுத்தினார் சிவபெருமான். அவ்வளவுதான், ராவணன் அருகில் இருந்த தேர் உடைந்து விழுந்தது. அவன் இடையில் வைத்திருந்த வாளும் இரண்டாக உடைந்து விழ, உடைந்து விழுந்த மலையின் அடிப்பகுதியில் அதை தாங்கிக் கொண்டு இருந்த ராவணனின் கைகள் சிக்கிக் கொள்ள,  கைகளை விலக்கிக் கொள்ள பிரயர்த்தனம் செய்தபோது அடிப்பட்ட கைகளில் இர...

Tirukoneeswar Temple , Sri Lanka - Part-4

படம்
சாந்திப்பிரியா  பாகம்- 4 மீண்டும் கைலாயத்துக்கு சென்றவன் அதன் வாயிலில் அமர்ந்து கொண்டு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். இந்த முறையும் அவன் தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அவனும் நடந்ததைக் கூறி  தான் எப்படி ஏமாற்றப்பட்டேன் என்பதையும் கூறியப் பின்  மீண்டும் அது போன்ற சிவலிங்கமே தனக்கு வேண்டும் எனக் கேட்க சிவபெருமானும் வேறு வழி இன்றி அவனுக்கு ஒரு சிவலிங்கத்தை கைலாயத்தில் இருந்து தந்தப் பின்  மீண்டும்  முன்னர் கூறியபடியே அதை அவன் எடுத்துச் செல்லும் வழியில் பூமியில் எங்குமே வைக்கக் கூடாது என்றும், மீண்டும் தவறாக எந்த இடத்திலாவது அந்த ஆத்ம லிங்கத்தை பூமியில் அதை வைத்து விட்டால் அதை திரும்ப எடுக்க முடியாது என்றும் எச்சரித்து அனுப்பினார். அதை எடுத்துக் கொண்டு நாடு திரும்பத் துவங்கிய ராவணனை நினைத்து தேவர்கள் அஞ்சினார்கள். அதை எடுத்துக் கொண்டு சென்று அதை பூஜித்தால் பிறகு ராவணனை யாருமே அடக்க முடியாதே என அஞ்சியவர்கள் மீண்டும் நாரதரிடம் சென்று அதை தடுத்து ந...

Tirukoneeswar Temple , Sri Lanka - Part-3

படம்
சாந்திப்பிரியா  பாகம்- 3 இமயமலையின் ஒரு பகுதியே கோணேஸ்வர பர்வதம் என்ற நம்பிககை காரணமாகக் கோணேஸ்வரத்திற்கு தட்சண கைலாயம் என்ற பெயர் உருவாகியது. திருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம் என்ற பெயரும் உருவாகியதாக தட்சணகைலாய புராணம் எனும் நூலில் குறிப்பு உள்ளது. விஷ்ணு பகவான் மீன் உருவம் எடுத்தக் கதைக்கான காரணத்தை பின்னர் கூறுகிறேன். தமிழ் மொழிப் புலவர்களான திருஞான சம்மந்தம், திருமூலர் மற்றும் அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடப்பட்ட தலம் திருக்கோணேஸ்வரம் என்பதில் இருந்து இதன் மேன்மை புரியும். கி.மு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை ராவணன் பூஜித்து வந்ததாக மட்டக்கிளப்பு மானியத்தில் குறிப்புக்கள் உள்ளன. அதற்கு ஆதாரமாக அனைவரும் குறிப்பிடுவது அங்குள்ள ராவணன் வெட்டு என்ற ஒரு பாறை இடுக்கு ஒன்றைத்தான் . கோணேஸ்வர மலையில் ஒரு பெரிய பாறைப் பிளவு உள்ளது. அந்த பிளவிற்குக் காரணம் ஒரு விசேஷ லிங்கத்தை அவரது தாயாரின் பூஜைக்காக எடுத்து வருவதற்காக கைலாசத்துக்கே சென்று சிவபெரும...

Tirukoneeswar Temple , Sri Lanka -Part-2

படம்
சாந்திப்பிரியா  பாகம்- 2 நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். அதுவே தென் கயிலையிலும் நடந்தது. 'திருகோணீஸ்வரர் மலை எழுந்து விட்டது. அது தட்ஷினக் கைலாயம் என்றப பெயரையும் பெற்று சிவபெருமான் மற்றும் உமையவள் தங்கும் இடமாகவும் ஆகி விட்டது. ஆனால் அதில் ஒரு குறை உள்ளது. அதை எப்படி கவனிக்காமல் விட்டீர்கள்  ?' என நாரதர் பிரும்மாவிடம் கேட்டார். பிருமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவர் நாரதரிடம், தான் படைத்த கைலாய மலையில் என்னக் குறை உள்ளது என்று கேட்டார். நாரதார் அமைதியாகக் கூறினார் ' என்னைப் படைத்த பிரும்மனே , கைலாயம் என்றாலே கங்கை உற்பத்தி ஆகி ஓடும் இடம் ஆகும். நீங்கள் படைத்த  தென் இமய மலையில்  கங்கை எங்கே உள்ளது? கங்கை இல்லாத இடம் கைலாயம் ஆகுமா? ' என்று கேட்டார். பிரும்மாவுக்கு தான் செய்திருந்த தவறு தெரிந்தது. ஆனால் அதை எப்படி சிவபெருமானிடம் சென்று இப்போது  கூறுவது? இப்போது அதைக் கூறினால் அவர் கோபம் அடைவாரே என்பதினால் இங்கும் கங்கையின் கிளைக் கொண்டு வர  என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்தார்கள். அவர்கள் விஷ்ணுவிடமும் சென்று சென...

Tirukoneeswar Temple , Sri Lanka -Part-1

படம்
சாந்திப்பிரியா பாகம்-1 இலங்கையின் கிழக்கு திசையில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க நகரம் திருகோணமலை. இலங்கையின் மிகப் பெரிய நதியும் புனிதமானதுமான மகாவலிகங்கை அவ்விடத்தில் கடலுடன் கலப்பதால் அப்பிரதேசம் இயற்கை வளத்துடன் சிறந்து விளங்குகின்றது. அங்கு சுவாமிமலை என்று வழங்குகின்ற உயர்ந்த குன்றம் ஒன்றின் உச்சியிலே திருக்கோணேஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமானின் ஆலயம்  உள்ளது. இது அண்மைக் காலத்தில் பழைய ஆலயத்தின் மீது எழுப்பப்பட்ட புதிய ஆலயம் ஆகும் . ஸ்ரீ லங்காவில் திரிகோண மலைப் பகுதியில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு சுமார் 4000 அல்லது 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதை த்ரிகூடம் என்றும் திரிகூடம் என்றும் கூறுவார்கள். அதாவது  திருக்கோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெரிய ஆலயங்கள் இருந்துள்ளன என்பதைக் குறிக்கும் வகையில் அப்படி அழைக்கப்பட்டு இருந்திருக்கலாம். அல்லது தென் பகுதியில் சிவபெருமான் ஏற்படுத்திய மூன்று மலைகளின் காரணமாகவும் அமைந்து இருக்கலாம். மூன்று மலைகள் வந்த அந்தக் கதை பின்னர் வரும் .  இலங்கை...

Tirukoneeswarar Temple

படம்
சாந்திப்பிரியா  ஆலய வரலாற்றைப் பற்றி எழுத நிறைய செய்திகளை கண்டறிய வேண்டி உள்ளது.  அந்த இடங்களுக்கு விஜயம் செய்திருந்த சிலரிடம் நேரில் கேட்டும், சிலவற்றை படித்தும் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.  ஒரு காலத்தில் இந்தியாவை விட சிறப்பான இந்துக்களின் புராதான ஆலயங்கள் இலங்கையில் இருந்துள்ளன என்பதைக் கேட்கும்போது ஆச்சர்யமே மேலோங்குகின்றது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சிலர் அதற்குக் காரணம் ஒரு காலத்தில் இலங்கையும் இந்தியாவின் தென் பகுதியும் நடந்து செல்லும் வகையிலும், படகுகளில் செல்லும் அமைப்புடனும் இருந்ததாகக் கூறுகிறார்கள். அதனால்தானோ என்னவோ பல புராதான வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்கள் அங்கு அமைந்துள்ளன.  மேலும் இராமாயண காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்ப்பும் இருந்துள்ளது. அதன் தாக்கத்தினால் கூட இந்த நிலை எழுந்திருக்கலாம். ஆகவே அதற்கெல்லாம் செல்வது எளிதல்ல என்பதினால் குறைந்தபட்ஷம் அவற்றைப் பற்றிய வரலாற்று சிறப்பையாவது  தெரிந்து கொள்ளலாமே என  நெடுநாட்களாக நான் நினைத்து இருந்த திரிகோண மலையில் உள்ள திருக்கோனேஸ்வர ஆலய மான்மியம...

Invitation

படம்