Samba Puranam- 6

பாகம் - 6 உடல் பொலிவை இழந்தாலும் மன திடத்தை இழக்காத ஸாம்பாவும் உடனே மித்திர வானத்துக்குக் கிளம்பிச் சென்றான். அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பன்னிரண்டு வருடங்கள் தவம் இருந்து வர, சில காலத்துக்குப் பிறகு சூரியன் அவனுக்குக் காட்சி அளித்து அவன் சாப விமோசனம் அடைய வேண்டுமானால் பல்வேறு கடவுளரின் நாமாக்களை ஜபிக்குமாறு கூறினார். அதன்படியே அந்த நாமங்களை உச்சரித்து வந்த ஸாம்பா சூரியன் கூறிய தினத்தன்று சந்திரபாகா நதியில் மூழ்கி ஸ்நானம் செய்து, சாபம் நீங்கி, மீண்டும் பழைய இளமையையும் பொலிவையும் திரும்பப் பெற்றான். அப்போது அவன் முன்னால் தாமரை மீது நின்ற நிலையில் சூரிய பகவான் காட்சியளித்தார். தாமரை இதழில் நின்ற நிலையில் எழுந்தருளிய சூரியனாரின் சிலையைக் கொண்டு போய் தனக்கு சாப விமோசனம் தந்து தனது பழையப் பொலிவைப் பெற அருள் புரிந்த சூரியனாருக்கு ஒரு ஆலயத்தை எழுப்ப ஏற்பாடுகளை செய்தான். ஆனால் அவன் கொண்டு சென்ற சிலையை வைத்து ஆலயத்தை எழுப்ப அங்கிருந்த பிராமணர்கள் ஒத்துழைக்கவில்லை என்பதினால், அவன் மீண்டும் மேகா தேசத்துக்கு சென்று அங்கிருந்து பல அந்தணர்களை அழைத்துக் கொண்டு வ...