இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Samba Puranam- 6

படம்
பாகம் - 6 உடல் பொலிவை இழந்தாலும் மன திடத்தை இழக்காத ஸாம்பாவும் உடனே மித்திர வானத்துக்குக் கிளம்பிச் சென்றான். அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பன்னிரண்டு வருடங்கள் தவம் இருந்து வர, சில காலத்துக்குப் பிறகு சூரியன் அவனுக்குக் காட்சி அளித்து அவன் சாப விமோசனம் அடைய வேண்டுமானால் பல்வேறு கடவுளரின் நாமாக்களை ஜபிக்குமாறு கூறினார். அதன்படியே அந்த நாமங்களை உச்சரித்து வந்த ஸாம்பா சூரியன் கூறிய தினத்தன்று சந்திரபாகா நதியில் மூழ்கி ஸ்நானம் செய்து, சாபம் நீங்கி, மீண்டும் பழைய இளமையையும் பொலிவையும் திரும்பப் பெற்றான். அப்போது அவன் முன்னால் தாமரை மீது நின்ற  நிலையில் சூரிய பகவான் காட்சியளித்தார். தாமரை இதழில் நின்ற நிலையில் எழுந்தருளிய சூரியனாரின் சிலையைக் கொண்டு போய் தனக்கு சாப விமோசனம் தந்து தனது பழையப் பொலிவைப் பெற அருள் புரிந்த சூரியனாருக்கு ஒரு ஆலயத்தை எழுப்ப ஏற்பாடுகளை செய்தான். ஆனால் அவன் கொண்டு சென்ற சிலையை வைத்து ஆலயத்தை எழுப்ப அங்கிருந்த பிராமணர்கள் ஒத்துழைக்கவில்லை என்பதினால், அவன் மீண்டும் மேகா தேசத்துக்கு சென்று அங்கிருந்து பல அந்தணர்களை அழைத்துக் கொண்டு வ...

Samba Puranam- 5

படம்
பாகம் - 5 நாரதர் கூறினார் 'கிருஷ்ணா, இதை நான் உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். அதுவரை நீ இதைப்  பற்றி யாரிடமும் பேசாதே. பேசினால் அவர்கள் எச்சரிக்கையாகி விடுவார்கள்' என்று கூறி விட்டு சென்றார். சில நாட்கள் சென்றன. கிருஷ்ணர் தனது பதினாறாயிரம் மனைவிகளுடனும் ஜலக்கிரீடை செய்து கொண்டு இருந்தார். அந்த இடம் இறைவதாக மலை என்பதின் அடிவாரத்தில் இருந்தது. பட்ஷிகள் ஆனந்தமாக ரீங்காரம் செய்து கொண்டு இருந்தன. அவருடைய மனைவிகள் அற்ப்புதமான நகைகளை அணிந்து கொண்டு வந்திருந்தார்கள். நீலோத்பலம் மற்றும் தாமரைப் போன்ற மலர்களின் வாசனையும் கமகமவென மூக்கைத் துளைத்தபடி இருந்தன. அனைவரும் மது மயக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் அங்கு வருவதற்கு முன்னர்தான் வேண்டும் என்றே நாரதர் அவர்கள் பருகி இருந்த பானத்தில் மயக்க மதுவைக் கலந்து கொடுக்க ஏற்பாட்டை செய்திருந்தார். அவர்கள் அனைவரும் கிருஷ்ணரை சுற்றி சுற்றியே வந்து கொண்டு தன்னை மறந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் முகங்களில் காமம் வழிந்தோடியது. அந்த நேரமே சரியான நேரம் என்பதை உணர்ந்து கொண்ட நாரதர் ஓடோடிச் சென்று ஸாம்பா...

Samba Puranam- 4

படம்
பாகம் -4  பிரும்மாவின் மானசீகப் புதல்வராக இருந்தவர் நாரத முனிவர். அவர் எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி செல்வதுண்டு. கைலாசம், வைகுண்டம், பித்ருலோகம், பூலோகம் , பிரும்ம லோகம், சூர்யா லோகம் என அனைத்து லோகங்களுக்கும் தங்கு தடை இன்றி செல்வார். தேவலோகத்திலும் இருப்பார். பூலோகத்திலும் மன்னர்களுடன் இருப்பார். அப்படிப்பட்ட சக்தி பெற்ற நாரத முனிவர் ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க பூலோகத்தில் துவாரகாபுரிக்குச் சென்று இருந்தார். அங்கு ஸாம்பாவும் இருந்தான். ஸாம்பாவிற்கு தான் அதி சுந்தரமாக இருப்பதான எண்ணம் அதிகம் உண்டு. அந்த கர்வத்தினால் அவன் யாரையும் சட்டை செய்ததில்லை. ஆகவே தேவ முனிவரான நாரதர் அரண்மனைக்கு வந்ததும் எளிமையான தோற்றத்தில் இருந்த அவருடைய உருவைக் கேலி செய்தவாறு இருந்தான். கிருஷ்ணரே தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்று நாரதருக்கு அர்க்கியம் கொடுத்து உபச்சரித்து பூஜை செய்தபோதும் , ஸாம்பா அகம்பாவமாக இருந்தபடி தனது இருக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. நாரத முனிவரைப் பார்த்தும் அவரிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. மாறாக அகம்பாவத்துடன் தன் அழகைக் குறித்து பக்கத்தி...

Samba Puranam- 3

படம்
பாகம்-3 அதைக் கேட்ட பிருத்பலன் மீண்டும் வசிஷ்ட முனிவரிடம் கேட்டார் 'மகரிஷியே , நீங்கள் கூறியது எனது அறிவுக் கண்களை சற்றே திறந்துள்ளது. சூரியன் எனும் ஆதித்தியனின் பெருமை அத்தனை மேன்மையானதா? அப்படி என்றால் அவருக்கு ஆலயம் எங்காவது உள்ளதா ? அந்த விவரம் கூறினால் அங்கு சென்று பிரார்த்திக்க ஆசைப்படுகிறேன்'. வசிஷ்டர் கூறலானார் ' மன்ன, நீ கேட்பதினால் சூரியனாருக்கு ஆலயம் எழுந்த  ஒரு கதையை விவரமாக கூற ஆசைப்படுகிறேன். அதன் மூலம் உனக்கு சூரியனுக்கு ஆலயம் ஏற்பட்ட விவரத்தையும், அதை ஏற்படுத்தியவரின் விவரத்தையும் அறிந்து கொள்ள முடியும். இது கதை அல்ல. உண்மையில் நடந்த நிகழ்ச்சி. பூலோகத்தில் முன்னொரு காலத்தில் சந்திரபாகா எனும் இடத்தில் சம்பாபுரம் என்றோர் நகரம் இருந்தது. அதுதான் சூரிய பகவானின் நிரந்தரமான இடமாக இருந்தது. அங்குதான் இந்த உலகின் ஷேமத்திற்காக பன்னிரண்டு ரூபங்களில் சூரியன் வசிக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஸாம்பாவிற்கும் காட்சி தந்து அவனுக்கும் அருள் புரிந்தார். எல்லோரையும் ரஷிக்கிறார். அங்கு சென்று அவரை துதித்தால் நிச்சயம் அவருடைய பூரணமான அனுக்கிரகம் தவறாது...

Samba Puranam- 2

படம்
  பாகம்-2 நைமிசாரண்யத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யாகத்தில் ரிஷி முனிவர்கள் குமுழி இருந்தார்கள். அப்போது சௌனக முனிவர் சூதரைப் பார்த்துக் கேட்டார், 'சூதக முனிவரே, நீங்கள் இங்கு எமக்கு பல புராணங்களைப் பற்றிக் கூறினீர்கள். அதன் இடையே சில புராணங்களில் உப புராணக் கதைகளையும் கூடக் கூறினீர்கள். ஆனால் கிருஷ்ணருடைய புத்திரனான ஸாம்பாவைப் பற்றிய புராணத்தைக் கூறவில்லையே. அமிருதத்துக்கும் ஒப்பான அந்தக் கதையையும் எமக்கு கூறுவீர்களா?'. அதைக் கேட்டு புன்னகைத்த சூதக முனிவரும் 'தவப் பெரும் முனிவரே, உங்கள் ஆசை மெத்த சிறப்பானது. ஸாம்பா புராணம் என்பது சகல புராணங்களிலும் விசேஷமானது என்பதின் காரணம் தவறு செய்தவர் யாராகிலும் அவர்களுக்கு தண்டனை நிச்சயம், அதில் பேதம் கிடையாது என்பதை கண்ணபிரான் மீண்டும் தமது சொந்த மகனுக்கு கொடுத்த தண்டனை தந்ததின் மூலம் விளக்கி உள்ளார். இதில் சூரிய பகவானின் மேன்மையையும் விளக்கி உள்ளார். பல தத்துவ பொருட்கள் நிறைந்தது இந்தப் புராணம் . இப்படியாகப் பிறந்த சாம்பா புராணம் பற்றி நான் கூறுவதை விட, வசிஷ்ட முனிவர் அதை பிருத்பலன் எ...

Samba Puranam -1

படம்
  பாகம் - 1 ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற புராண காவியங்களில் கதைகளுக்குள் பல உப கதைகள் உள்ளன. நம் நாட்டில் பதினெட்டுக்கும் மேற்பட்ட புராணங்கள் உள்ளன என்றும் அவற்றில் காணப்படும் சில உப புராணங்களைப் படிப்பதின் மூலம் நமது வாழ்க்கையில் மேன்மை அடைய முடியும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. துரதிஷ்டவசமாக சமிஸ்கிருத மொழிகளிலேயே எழுதப்பட்டு உள்ள புராணங்களை தற்கால மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் தமிழில் விரிவாக யாரும் எழுதவில்லை. புராணங்கள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன என்றாலும், அவற்றை அப்படியே தொடர்ந்து வெளியிட்டு வருவதாலும், தற்கால மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் இல்லாததினால் அவை பலரையும் சென்று அடையவில்லை.  தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டு உள்ள சில புத்தகங்களில் உள்ள சொற்கள் பலவற்றிலும் சமிஸ்கிருத வாடை வீசுவதினால் அவற்றை அனைவரும் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆகவே கூடுமானவரை   சுவையான புராணங்களில் காணப்படும் உப புராணங்களை சுருக்கியும், அதே நேரம் அவற்றை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் கொடுக்க நான் முயன்று வருகிறேன். அதில் ஒர...

Sisupala Charitam -6

படம்
  சாந்திப்பிரியா பாகம்- 6 கண்ணபிரானின் அரண்மனைக்கு சென்ற தூதுவனும் சிசுபாலன் கூறியவற்றை கண்ணனிடம் தெரிவிக்க, அவர் அருகில் நின்றிருந்த விருட்ஷினி மரபிலே வந்த சத்தியகன் என்பவனின் மகனான சாத்தகி என்பவனைப் பார்த்து கண்ணன் கண்களைக் காட்ட சாந்தகி சிசுபாலன் அனுப்பிய தூதுவனிடம் கூறினான், 'நீ கூறிய வார்த்தைகள் சிலேடையாக உள்ளன. பழித்தாலும், புகழ்ந்தாலும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வது பெருந்தன்மை உடையோரின் பண்பு. தருமர் கண்ணனுக்கு செய்த அக்கிர பூஜையைக் கண்டு சிசுபாலன் பொறாமைக் கொள்வதேன்? பொறாமைக் கொள்ளும் மனிதர் பெரியவரா, சிறியவரா? பிறர் பெறும் பெருமைகளைக் கண்டு மனம் மகிழ்வார் பெரியோர்கள் எனப்படுவோர். சிறியோரோ அதைக் கண்டு பொறாமைக் கொள்வார். பொறாமையிலே மனம் புழுங்குவார். பிறர் பிழைகளை புரியும் போது பெரியோர்கள்கள் குருடராய் இருப்பார். அது போல கூறும் பழி மொழியைக் கேட்டு செவிடர்களாக இருப்பார். ஆனால் சிறியோரோ எப்போதுமே பிறர் காரியத்தில் கண் வைத்து இருந்து பிறர் குற்றங்களைக் கண்டு பிடிக்க முயல்வர். பழி மொழியைக் கேட்டு பிற மொழியிலே சாடுவார். பெரியோர்கள் தமது வாய...

Sisupala Charitam-5

படம்
    சாந்திப்பிரியா பாகம்- 5 அதைக் கண்ட சிசுபாலன் அடங்காத கோபம் கொண்டான். அவனால் கண்ணபிரானுக்கு கொடுக்கப்பட்ட பெருமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தான் அவமானப் படுத்தப்பட்டு விட்டோம் என்று எண்ணினான். தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை கன்னபிரானுக்குச் சென்றதை ஏற்க முடியாமல் அவன் உள்ளம் கொதித்தது. முகம் கறுத்தது. வேர்வை தாரையாக உடல் முழுதும் வடிய பூமியே பிளந்ததோ என்பது போன்ற சப்தத்தை தருவது போல தனது தொடையில் ஓங்கி அடித்துக் கொண்டு எழுந்து கனலைக் கக்கும் வார்த்தைகளைக் கொட்டினான். 'குந்தியின் புதல்வரே, பட்டங்களும் மகுடங்களும் நிலையாகப் பெற்றுள்ள மன்னர்களும், அரசவழி உறவினர்களும் கூடி இருக்க பெரியவர்களின் மதிப்பைப் பெறாதவரான கிருஷ்ணருக்கு அர்க்கிய பூஜை செய்து இங்குள்ளவர்களை அவமதித்து விட்டீர்கள். தேவர்களுக்குக் கொடுக்கும் அவிர்பாகத்தை சேரியிலே உழலும் நாய்க்குத் தரலாமா? கண்ணபிரான் உமக்கு நண்பர் என்பதால் நிலை தவறி விட்டீர்கள். சத்தியம் தவற மாட்டோம் என்று நித்தம் கூறுகின்ற நீங்கள் கரை படிந்தவர் ஆகிவிட்டீர்.கண்ணபிரானுக்கு அக்கிர பூஜை செய்ததின் மூலம்...

Sisupala Chartam-4

படம்
    சாந்திப்பிரியா பாகம்- 4 கண்ணபிரான் உத்தவருடையக் கருத்தே சரியானக் கருத்து என்று முடிவு செய்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதைப் போல யாகத்துக்கு செல்ல வேண்டும், அங்கு வரும் சிசுபாலனின் அவதூறுப் பேச்சு அல்லது அவன் வெளிப்படுத்தும் தடித்த வார்த்தைகள் என்பன அவனுடைய தாயாருக்கு கண்ணன் கொடுத்த நூறு என்ற எண்ணிக்கையைத் தாண்டினால் அதுவே அவனைக் கொல்ல முடிவெடுக்கும் தக்க சமயமாக மாறும் என்பதை புரிந்து கொண்டார். ஆகவே முதலில் தருமரின் யாகத்துக்குச் செல்லக் கிளம்பினார். வில்லு, தண்டு என அனைத்து ஆயுதங்களையும் ஏந்திய படையினர், சாமரம் வீசுவோர், குடைகளைப் பிடிப்போர், அமைச்சர்கள், புரோகிதர்கள், மித்ருக்கள் என அனைவரும் சூழ்ந்து செல்ல கண்ணபிரான் சிங்காரித்து வைக்கப்பட்டு இருந்த சிப்ரபம் என்ற அலங்காரத் தேரில் ஏறிக் கொண்டு தர்மரின் யாகசாலையை நோக்கிச் சென்றபோது வீதி முழுவதும் நிறைந்திருந்த வீடுகளின் உள்ளிருந்தவர்கள் வெளியில் வந்து கண்ணனுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பினார்கள். அற்புதக் கண்ணனை, ஆனந்தமயமான கிருஷ்ணரைக் காண வழி முழுவதும் ஜனங்கள் நிறைந்து நின்றதினா...

Sisupala Charitam- 3

படம்
    சாந்திப்பிரியா பாகம்- 3 அவர்களைப் பார்த்து கிருஷ்ணர் கூறினார் 'மூத்தோர்களே, நான் இப்போது சொல்வதை கவனமாகக் கேளுங்கள். அதன் பின் உங்கள் கருத்தை எனக்குக் கூறுங்கள். எனக்கு ஒரே நேரத்தில் எனக்கு இரண்டு காரியங்கள் வந்துள்ளன. முதலாவது தேவர்களுக்கு நன்மை பயக்கும் காரியமான சிசுபால வதம். இரண்டாவது தருமருக்கு மதிப்பு அளிக்கும் மித்ர காரியம். இவற்றில் எதை விடுவது, எதை செய்வது என்பதில் குழப்பமாக உள்ளது. தருமபுத்திரர் தனது பலமிக்க பீமன் போன்ற சகோதரர்களை அனைத்து திக்குக்களிலும் அனுப்பி அந்த திக்குக்களில் உள்ள நாட்டு மன்னர்களை அடக்கி வைத்து உள்ளார். ஆகவே அவர் செய்யும் யாகத்துக்கு யாராலும் எந்த விதமான இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதினால் அதில் நான் கலந்து கொள்ளவில்லை என்றாலும் ஒன்றும் ஆகப் போவது இல்லை. ஆகவே அதை மித்ரகாரியம் என்று இரண்டாம் பட்சமாக எடுத்துக் கொள்ளலாமா? சிசுபாலனோ எனது தந்தையின் சகோதரியின் மகனாவார். எனக்கு மைத்துனன் என்பதினால் அவன் செய்யும் முறைக் கேடுகளைப் கண்டு கொள்ளாமல் இருப்பது தவறாக அமைந்து விடும். அவனோ ஒருவனுக்கு வந்துள்ள நோய் முற்றிப...

Sisupala Charitham -2

படம்
    சாந்திப்பிரியா பாகம்- 2 முன்னொரு காலத்தில் பூ உலகில் பாரத கண்டம் என்றொரு பூமி இருந்தது. அங்கு வாசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாக நாராயண பகவானான கிருஷ்ணர் பிறந்தார். அதன் பிறகு சில காலம் பொறுத்து வாசுதேவரின் சகோதரியான சாத்துவதி என்பவருக்கும் தமகோஷன் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார் சிசுபாலன் என்பவர்.  முந்தைய ஜென்மத்தில் ராவணனாக பிறந்து இருந்து ராமரால் வதம் செய்யப்பட்டவர் சிசுபாலன். அவருக்கு பூர்வ ஜென்மத்தில் மறுபிறப்பிலும் ராமரின் ஒரு அவதாரத்தினால் மரணம் கிட்டும் என்ற விதி இருந்தது. பிறந்த குழந்தை பெரியவனாகி சிசுபாலன்  எனப் பெயர் கொண்டு சேதி எனும் ஒரு நாட்டின் மன்னரானார். அப்போது ஒரு முறை நாரதரை தேவலோகத்துக்கு அழைத்த இந்திரன் அவரிடம் கூறினார் ' ஸ்வாமி, வர வர சேதி நாட்டை ஆண்டு வரும் சிசுபாலனின் தொல்லைகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. தேவர்களை துன்புறுத்துகிறான்.  பிறரையும் துன்புறுத்துகிறான். அவனுடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஆகவே அவரை அடக்க வேண்டும், அல்லது அவரை கொல்ல வேண்டும் என்றால் அது கிருஷ்ணரால் மட்டுமே முடியும் என்று ராஜ பண...

Sisupala Charitam-1

படம்
  சாந்திப்பிரியா சமிஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு உள்ள ரகுவம்சம், குமார சம்பவம், சிசுபால வதம், நைடதம், மற்றும் கிராதர்ஜீனியம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச காவியம் என்று கூறுவார்கள். அவற்றில் சிசுபால சரிதம் என்பது எட்டாம் நூற்றாண்டில் மகா எனும் கவிஞரினால் இயற்றப்பட்டுள்ளது. இது மகாபாரதத்தில் வரும் ஒரு கதை ஆகும் .  மகா என்பவர் முன்னர் குஜராத்தின் பகுதியில் இருந்த ஆனால் தற்போது ராஜஸ்தான் மானிலத்தில் உள்ள பகுதியை ஆண்டு வந்த வர்மாலதா என்ற மன்னனின் அரசவைக் கவிஞராக இருந்தவர். அவர் இழற்றிய இந்த சிசுபால வதம் அல்லது சிசுபால சரிதம் எனப்படும் இந்த நூல் 20 காண்டங்களைக் கொண்டு 1800 செய்யுள்களாக இயற்றப்பட்டு உள்ளது. அவர் இயற்றி உள்ள இந்த பாடலில் உள்ள வார்த்தைகள்  முன் பின் இருவழியிலும் ஒத்த அதாவது ஒரே எழுத்துக் கோப்பைக் கொண்டுள்ள செய்யுளாக எழுதப்பட்டு உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் இந்த பாடல். सकारनानारकासकायसाददसायका । रसाहवावाहसारनादवाददवादना ॥    மொத்தம் பதினாறு அட்ஷரங்களைக்  கொண்டு  உள்ள இந்த செய்யுளின் (பாடல்) இரண்டு வ...

Clarification

படம்
சிறு விளக்கம் சாந்திப்பிரியா  நான் துலா புராணத்தை எழுதியபோது ஒருமுறை என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியையும்  அதற்கான விளக்கத்தையும் கீழே தந்துள்ளேன்.  கேள்வி:- ஒருவர் இறந்தப் பின் அவருடைய ஆத்மா மட்டுமே மேல் உலகம் செல்லும். அவர்களுடைய உடல் பூமியில் புதைக்கப்படுகிறது அல்லது எரித்து விடப்படுகிறது எனும் போது, யம லோகத்தில் அவர் கைகளை வெட்டினார்கள், அவர் உடலை நாய்கள் தின்றது,  யமதர்மராஜர் தர்மலனை ஸ்யாமா மற்றும் சபள என்ற வெறி நாய்கள் கடித்துக் குதறுமாறு ஆணை இட்டார், அவரை கொதிக்கும் எண்ணையில் போட்டார்கள் என்றெல்லாம் கூறப்படுவது அபத்தமாக உள்ளதே. பதில்:- கேள்வி நியாயமானதுதான். ஆனால் உண்மை நிலை வேறானது. ஒருவர் இறந்தப் பின் அவர்களது ஆத்மா மட்டுமே யம லோகத்துக்கு செல்கிறது என்பதும் உண்மையே. ஆனால் பதிமூன்று ஜென்ம காலத்துக்கு பிறவி எடுக்கும் அந்த  ஆத்மா  மேல் உலகிற்கு சென்றதும், முதலில் அந்த ஆத்மாவிற்கு அதன் சுய உருவத்தையும், அதன் உணர்வுகளையும், அது பூமியில் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில்  கொடுக்கிறார்கள்.  அதாவது பூமியில் இருந்த ...

Thula Puranam -20

படம்
துலா புராணம்- 20 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா பாகம்- 21 காவேரி கிளம்பியபோது தேவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள் சாரணர், கிங்கர்கள், பித்ருக்கள், மகாத்மாக்கள் போன்ற அனைவரும் வானத்தில் குமுழி இருந்து பத்து திக்குக்களையும் பிரகாசப்படுத்திக் கொண்டு காவேரியின் பிரவாஹத்தைப் பாத்துக் கொண்டு நின்றார்கள். அப்ஸரைகள் ஆகாயத்தில் ஆடினார்கள். இந்திரனும் தேவர்களும் புஷ்பமாறி பொழிந்தார்கள். தேவ கணங்களால் துதிக்கப்பட்ட பிரும்மா, விஷ்ணு, மகேஸ்வரர் என அனைவரும் அங்கு வந்து காவேரியை வாழ்த்தினார்கள். இங்ஙனம் வரம் பெற்றவளும், மும்மூர்த்திகளின் வடிவமானவளும், ஜ்யோதி ஸ்வரூபவானவளுமான காவேரி சந்தோஷமாக வேதாரண்யத்துக்கு சென்று அங்கு அவள் சமுத்ரராஜனுடன் கலந்த வைபவத்துக்கும்  சென்று அந்த விவாஹத்தை சிறப்பாக நடத்தி வைக்க அங்கு சமுத்ரராஜனுடன் திருமணம் செய்து கொண்ட காவேரியை பிரும்மா கன்னிகாதானம் செய்து கொடுத்தார். அந்த உற்சவமும் வெகு சிறப்பாக நடந்தேறியது. அந்த வைபவத்தில் அவர்களை ஆசிர்வதித்த மகாவிஷ்ணு 'பத்தாண்டு என் கதையைக் கேட்டால் கிடைக்கும் புண்ணியத்தை உன் சரித்திரத்தைக் ...