Lord Muruga's Sister Jothi

ஸ்வரூப  வேல்
ஸ்கந்தனின் சகோதரியான ஜோதி


(Read Original Article in English in :-
Swarupa Vel - Skantha 's Sister Jothi - By Dr. Alagappa Alagappan )

Translated Into Tamil by :- சாந்திப்பிரியா)

 
ஜோதி சிவபெருமானின் குடும்பத்தை சேர்ந்தவள். சிவன்-பார்வதிக்கு விநாயகர் மற்றும் முருகன் எப்படிப் பிறந்தார்களோ அப்படித்தான் சிவன்-பார்வதி உறவில் வெளிவந்தவளும் ஜோதி என்பவள். சிவன் பார்வதி உறவினால் எழுந்த ஒளியின் ஒரு பக்கத்தில் இருந்து முருகனும், இன்னொரு பக்கத்தில் இருந்து ஜோதியும் வெளி வந்தார்கள். அதனால்தான் ஜோதியை முருகனின் சகோதரி என்கிறார்கள்.
ஒருவருடைய உடலே ஆலயம் போன்றது. அந்த உடலின் வலது மற்றும் இடதுபுற நாசித் துவாரங்களே சிவன் மற்றும் பார்வதி ஆவார்கள். விநாயகப் பெருமானோ முதுகுத் தண்டின் அடியில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார். அங்கிருந்துதான் குண்டலினி சக்தி வெளிப்படுகின்றது. அந்த சக்தி ஐந்து சக்கரங்களான அல்லது முருகனின் ஆறு யுத்த வீடுகளான மூலாதாரா, மணிபுரா, அனஹதா, ஸ்வாதிஷ்டானா, விசூதி போன்றவற்றைக் கடந்து மேலே எழும்பி வந்து நெற்றிப் பொட்டில் உள்ள அஜ்ன சக்கராவில் கலக்கும் போது அவளுடைய தாயாரின் சக்தி வெளிப்படுகின்றது. அப்போது அதை தன்னுடைய மகனுக்குக் கொடுத்து அவனுக்குள் அந்த சக்தியை அவள் ஊடுறுவ வைக்கின்றாள். முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு இணையான அந்த ஆறு சக்கரங்களையும் கடந்து செல்லும் ஜோதியானவள் அஜ்ன சக்கராவில்தான் தனது தாயாரை சந்திக்கிறாள் என்பது தாத்பர்யம்.
சிவபெருமானின் நெற்றிப் பொட்டில் இருந்து வெளியான ஆறு ஒளிக்கதிர்களில் இருந்து வெளியானவரே முருகப் பெருமான் என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டு உள்ளது . அதனால்தான் முருகனை சிவபெருமானின் அம்சம் என்றும், அவரைப் போலவே மிக சக்தி வாய்ந்தவர் என்றும் கருதுகிறார்கள். அது போலவே பார்வதியின் நெற்றிப் பொட்டில் இருந்து வெளியான ஒளிக் கதிர்களில் இருந்து வெளியானவளே ஜோதி . அரக்கன் சூரபத்மனை அழிக்கும் வேலையை முருகனுக்குக் கொடுத்தபோது, அவருடைய தாயார் பார்வதியானவள் அவருக்கு அந்த யுத்தத்திற்கு உதவிடும் வகையில், யாருமே அழிக்க முடியாத சக்தி வாய்ந்த வேல் ஒன்றை தன்னிடம் இருந்து வெளி வரச் செய்தது அதை முருகனுக்குத் தந்தாளாம். அது ஒரு ஆயுதம் அல்ல என்றும், அதுவும் பார்வதியிடம் இருந்து வெளிவந்த ஒரு சக்தி வாய்ந்த தெய்வமே* என்றும் தெரிய வருகின்றது.
சமீப காலம் வரை ஜோதியைப் பற்றிய எந்த செய்தியும் இல்லாமல் இருந்தது. ஆனால் 1978 ஆம் ஆண்டில் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை ஸ்வாமிகள் தன்னிடம் (இந்தக் கட்டுரை ஆசிரியரான டாக்டர் . அழகப்பா அழகப்பனிடம்) முருகன் கையில் உள்ளது வெறும் வேல் எனும் ஆயுதம் அல்ல, ஆதிபராசக்தி கொடுத்த ஜோதியே ( ஜோதி எனும் தேவதை) என்று தெரிவித்தாராம். ஆகவே ரூபமில்லாத உருவில் இருந்த ஜோதியை ஆலயங்களில் அதுவரை வழிபட்டார்கள். ஆனால் தற்போது அந்த ஜோதி ஒரு உருவ வழிபாட்டுக்குறிய தெய்வம் என்று தெரிய வந்துள்ளது.
ஸ்கந்தனின் வேல் எனும் ஆயுதமே அந்த ஜோதியானவள் . வேல் என்பது வெறும் உலோகம் அல்ல. அது பராசக்தியினால் சக்தி ஊட்டி அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதம். அந்த சக்திக்குள் உள்ளவளே ஜோதி என்பவள். ஜோதிக்கு பராசக்தியின் அனைத்து ஆற்றல்களும் இருந்தன. அந்த ஆயுதமான வேல் ரத்தினம் போல ஜொலிப்பதினால் அதை இரத்தின வேல் என்று அழைத்தார்கள். ஒருவருக்கு மன இருளையும் அஞ்சாமையையும் அழித்து ஞானத்தைத் தருவதினால் அதை ஞான வேல் என்கிறார்கள். ஞானிகள், ரிஷி முனிவர்கள் விட்டுச் சென்றுள்ள ஞானத்தின் பின்னே அவளே இருக்கின்றாள். ஆகவே ஞானமே எப்போதும் வெற்றி பெறுவதினால் அதை வெற்றி அல்லது வீர வேல் என்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் உள்ளே உள்ள அறியாமையை அழித்து அவர்களுக்குள் நடைபெறும் மனபோராட்டதினை ஒடுக்கி, கடவுளைத் தேடிச் செல்லும் பக்தி மார்கத்தில் செல்ல அவர்காளுக்கு அருள் புரியும் முருகப் பெருமானுக்கு துணையாக ஜோதி நிற்கின்றாள். அந்த வேல் உருவம் அற்றது. நெருப்புப் பொறியில் இருந்து அந்த வேல் வெளி வந்ததினால் அதற்கு அழிவும் இல்லை, அதை வெற்றி கொள்ளவும் முடியாது.
முருகனிடம் இருந்து பிரிக்க முடியாதவள் ஜோதி . ஜோதியை வேல் உருவில் வழிபடாத ஆலயங்களே இல்லை. சரவணன் என்ற ஸ்கந்தனுடன் பிணைந்து இருந்தபடி அவர் சார்பில் அவள் பக்தர்களுக்கு துணை புரிவதினால் அவளை சரவணபயை (சரவணரின் பெண்மை) என்கிறார்கள். அந்த வேலில் காணப்படும் கூறிய முனை அவளது கூர்மையான அறிவைக் குறிக்க தீமைகளை அழிக்கும் துர்கையாக அவளுடைய தாயாரான பராசக்தியிடம் இருந்து பெற்ற சக்தியுடன் அவள் இருப்பதை வேலின் கீழ் பகுதியான அதன் தண்டு பிரதிபலிக்கின்றது.
பழமுதிர்சோலையில் உள்ள அஜ்ன சக்கரத்தை குறிக்கும் ஆறுபடை வீடு ஒன்றில் அவள் காட்சி தருகிறாள். அந்த ஆலயம் மதுரையில் உள்ளது. முக்கியமாக பௌர்ணமி தினங்களில் கிராமங்களில் ஜோதியை ராக்காயி எனும் பெயரில் -ஒரு தலையில் கொழுந்து விட்டு எரியும் தீப்பந்து போன்ற காட்சியில்- அவளை வணங்கித் துதிக்கின்றார்கள். அந்த உருவம் ஜோதியின் அவதாரமான வேலைக் குறிக்கின்றது.
அகஸ்திய முனிவர் இயற்றிய ஷோடஷம் என்ற பக்தி நூல் பார்வதியுடன் முருகனின் ஆயுதமான வேலுக்கு உள்ள உறவை வெளிப்படுத்தும் விதத்தில் எழுதப்பட்டு உள்ளது. வளர்பிறை மற்றும் தேய்பிறை இரண்டிலும் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் சதாசிவமான சொககனாதருடன் உள்ள மனோன்மணி இருவரும் ஜோதியுடன் நெற்றிப் பொட்டில் உள்ள அஜ்ன சக்கரத்துடன் ஒன்று சேர இருக்கும்போது கிடைத்த தன்னுடைய அனுபவத்தையே அதில் விளக்கி உள்ளார். நெற்றிப் பொட்டின் நடுவில் உள்ள பொட்டில் இருந்து ஓம் என்ற பிரணவத்துடன் எப்படி ஜோதியானவள் வெளி வந்தால் என்று கூறி உள்ளார். பௌர்ணமியில் பூரணப் பொலிவுடன் ஒரு ஒளி வெள்ளம் போல ஜொலித்தபடி இருக்கும் அவள் எல்லாம் நிறைந்த பரப்பிரும்மமே என்கிறார்.
ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதமான கார்த்திகையில் திருவண்ணாமலையில் சிவபெருமான் தலத்தில் நடைபெறும் தீபத் திருவிழாவில் அங்கு ஏற்றப்படும் ஜோதியை கடவுளாகவே வழிபடுகிறார்கள். அந்த ஜோதியை அருட்பெரும் ஜோதி என்கிறார்கள். நடராசன் என்கின்ற சிவபெருமான் தன் இடக் கையில் ஜோதியை கையில் ஏந்திக் கொண்டவாறு நடனம் ஆடுகிறார். பொன்னம்பலத்தில் , தங்க மேடையில் நடனமாடும் சிவபெருமானுடன் இருக்கின்றாள் ஜோதி .
ஜுவாலை அல்லது ஜோதியில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. ஜோதி என்பது ஆலயங்களில் ஏற்றப்படும் விளக்கு. இறை அருளைக் கொடுப்பதே ஜோதி. நமது பேச்சைக் கட்டுப்படுத்துவதும் அதுவே. அந்த ஜோதி எனும் ஒளியையே நாம் நமது வாழ்வில் ஒளி தருமாறு வேண்டுகிறோம். ஜோதி ஏழு நிலைகளை தாண்டி நிற்பவள் (எழு வண்ணங்களான VIBGIOR என்பது) அவை அனைத்தும் மறைந்தப் பின்னரே அவள் தெரிகிறாள். அந்த ஜோதி ஒளியை அடையாளம் காட்டிய மற்றும் ஒருவர் திரு ராமலிங்க ஸ்வாமிகள் ஆவார் .
தன்னுடைய தாயாருடன் சேர்ந்து கன்யாகுமரியாக இருந்தவாறு, சாதுக்கள் சன்யாசிகளுக்கு அறிவை தந்தவள், அவர்களைக் காத்து வந்தவள் . நூற்றுக் கணக்கான வருடங்களாக அவளை ஜ்வால குமாரி என்றும், வடநாட்டில் ஜ்வால முகி என்றும் வணங்கப்பட்டவள். அவள் அறிவை தருபவள் என்பதினால் ஞானாம்பாள் என்றும் குழந்தை தெய்வம் எனும் வகையில் பாலாம்பா என்றும் கூறுவது உண்டு. ஜோதியைப் புகழ்ந்து பாடப்படும் சித்தர்கள் பாடல்கள் பல உண்டு. ஷண்முகனின் பெண்பாலே ஷண்முகி. அவளை கார்த்திகேயே எனவும், குமரி எனவும் அழைப்பது உண்டு.


ஜோதி மந்திரங்கள்
1982 ஆம் ஆண்டில் குமாரி ஹில்டா சார்ல்டன் என்பவர் நியூயார்க் நகரில் உள்ள பிளஷிங் எனும் இடத்தில் உள்ள மகா கணபதி ஆலயத்தில் ஓதப்படும் இந்த மந்திரத்தை நமக்கு அருளினார்கள்:

ஓம் ஜெயா ஜெயா மஹா வீர பகவான் ஸ்ரீ ஸ்கந்தா நமஹா
ஓம் ஜெயா ஜய மஹா ஜோதி சக்தி சரவணபயாயை நமோ நமஹா

ஸ்கந்தன் அவளுக்கு அளித்த உபதேசத்தின்படி பக்தியோடு இதை உச்சரித்தால் நமக்குள் உள்ள சிவ-சக்தி அல்லது யிங்- யாங் எனும் சக்தி உயிர் பெறும் என்றாராம்.
ஸ்கந்தன் அவளுக்குக் கூறினாராம் ''வேல் என்பது முதுகெலும்பைப் போன்றது. மேல் தலையில் குண்டலினி உள்ளது போல அதற்குள் ஜ்யோதி ஒளியாக இருக்கின்றாள். நானே முதுகெலும்பின் கீழ் இருந்து குண்டலினி சக்தி மேல் எழும்பிச் செல்ல வழி காட்டுகிறேன். அப்படி மேல் எழும்பும் குண்டலினி சக்தி மேலே சென்று வெடிக்கும்போது தெய்வமாக ஜோதி அங்கே தோன்றுகிறாள்''.
ஜோதியை முதலில் வேல் ஒன்றை பார்ப்பது போல பார்த்துக் கொண்டு இருக்கும்போது, நமது மனதில் அந்த நினைவு தீவீரம் அடைய, அடைய அவளை நாம் அங்கு ஒளிபோலக் காண முடியும். தெய்வீகத்தையும், அதன் கருணையும் உணரும் வகையிலான நிலைக்கு நம்மை அது அழைத்துச் சென்று விடுவதையும் பார்க்கலாம். அவை அனைத்தையும் நம் உள்ளத்துக்குள்ளே உணரலாம்.

''நானே தலைவன். இந்த செயல்களை முதுகு எலும்பின் மேல் பகுதி வரை நடத்திச் செல்லும் தளபதி.
எவருக்கு விடுதலை வேண்டுமோ அவர்கள் என் சொல்படி நடந்தால் வெற்றி நிச்சயம்.
எவர் ஒருவர் படைத் தலைவரின் கட்டளைகளை மீறிச் செல்வாரோ அவர்கள் வெற்றி அடைவது இல்லை.
யுத்த பூமியில் தளபதியின் கட்டளையை மட்டுமே ஏற்று நடக்க வேண்டும்''.

இத்தனை யுகங்களாக செயலற்று இருந்த ஜோதி இனி புத்துயிர் பெற்று புது சக்தி யுகத்தில், கலி உலகில் உள்ள தீமைகளை அழிக்க எழப் போகின்றாள் என்பதை உணர்த்தும், வகையில் இந்த மந்திரங்கள் அமைந்து உள்ளன.

ஓம் ஷ்ரீம் ஆதி பிருமேஸ்வரியை நமஹா
ஓம் ஷ்ரீம் ஹிரீம் கிரீம் க்லீம் ஜுவோதிஸ்வரியாயை நமஹா

முதல் மந்திரம் அவளைப் படைப்பவளாகவும், அடுத்ததில் பிரகாசிக்கும் ஒழி வெள்ளம் சூழ்ந்த, தெய்வீகமும் செல்வமும் தரும் மகாலஷ்மிக்கு இணையானவளாகவும் , உலகையும், கிரஹங்களையும் பிரதிபலிக்கும் புவனேஸ்வரியாகவும் , அழிவில்லா அன்னையான துர்க்கையாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. அகஸ்தியரோ, ஜ்யோதியை அற்புதமானவள், ஆனந்தத்தைத் தருபவள் மற்றும் உருவம் அற்றவள் என்றும் வர்ணித்து உள்ளார்.
குண்டலி யோகா மூலம் ஜோதியை ஆராதிக்கலாம். திருமூலர் கூறினார்:-

''வடக்கு தெற்குப் பக்க மக்கள் அவர் பின்னால் அலைந்தவாறு இருந்து கொண்டு நிற்கையில், கிழக்கிலும், மேற்கிலும் உள்ளவர்கள் அவரைத் தேடி அலைய, ஓம் என்ற மூலாதார மந்த்திரத்தைக் கூறி குண்டலினியைத் தட்டி மேல் எழுப்ப எழுப்ப, ஒளியைப் போல நீ தோன்றுகிறாய்''.

ஜோதியை பௌர்ணமியில் மாலை மற்றும் இரவு வேலைகளில் ஆராதிக்கலாம். அவளை சரவணபாவையை அல்லது வேல் உருவில் அனைத்து தினங்களிலும் முருகனுடன் சேர்த்து ஆராதிக்கலாம். அவளை ஆராதிக்க கார்த்திகை தினங்கள் விசேஷமானவை. மே மாதம் வைகாசி நட்ஷத்திரத்தில் தனது நேற்றுப் பொட்டில் இருந்து வெளிவந்தவலை வேலாக்கி பார்வதியானவள் தனது மகன் முருகன் சூரபத்மனுடன் போருக்கு புறப்பட்டபோது கொடுத்த அந்த நாளில் அவளை வழிபடுவது விசேஷம்.

ஜோதி இயக்கம்
வட அமெரிக்க நாட்டில் உள்ள வல்லப கணபதி தேவஸ்தானம் இந்து தத்துவத்தை இந்தியாவிருக்கு வெளியில் பரப்புவதற்கான அவசியத்தையும் அந்த முயற்சிக்குத் தேவையான கடமையும் உணர்ந்ததினால் நியூயார்க் நகரில் ரூபம் அற்று இருந்த ஜோதிக்கு நான்கு சிலைகளை செய்து மற்ற இடங்களில் அவளுக்கு ஆலயம் அமைத்தால் அவர்களுக்கு அதைத் தர தீர்மானித்து இருந்ததின் மூலம் ஜோதி இயக்கத்தின் முதல் வழிபாட்டைத் துவக்கினார்கள்.
1983 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருபத்தி ஏழாம் தேதியன்று ஹூஸ்டன் நகரில் திரு அனந்த ராதஷேஷன் என்பவர் தலைமையில் முதல் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிளஷிங் நகரில் உள்ள கணேஷர் ஆலயத்தில் ஸ்கந்தனுக்கு பக்கத்து சன்னதியில் ஜோதிக்கும் சிறிய ஆலயம் அமைக்கப்பட அங்கும் நிறைய பக்தர்கள் சென்று அவளை வழிபடுகிறார்கள்.
கலிபோர்னியா நகரில் கலபசாஸ் என்ற ஊரில் லாஸ் வெர்ஜீனியாவின் கனான் சாலையில் உள்ள வெங்கடேஸ்வரர் ஆலயத்திலும் ஜோதிக்கு தனி சன்னதி உள்ளது. அந்த இடத்தையே தன்னுடைய இருப்பிடமாக ஜோதி கொண்டு உள்ளாள். கபில முனிவர் ஜோதியை தனது நெற்றிப் பொட்டில் வைத்தவாறு தவம் செய்கிறாராம். ஜோதியின் மற்றொரு விக்கிரஹத்தை வாஷிங்டனில் உள்ள முருகன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய உள்ளார்கள்.
இந்தியாவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை வீட்டில் ஜோதிக்கும் ஒரு ஆலயம் எழுப்பப்பட உள்ளது. ஆறுபடை வீடான ஆறு சக்கரங்கள் சூழ்ந்து உள்ளபடி உள்ளார் மூலாதார கணபதி. ஆறாவது வீட்டில் வேலாக ஜோதி இருப்பாள். வழிபாட்டு முறையினையும் வழி வகுக்கும் இந்த இடத்தில் தியான மண்டபமும் அமைக்கப்பட உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Goddess Samayapuram Mariamman (E)