இடுகைகள்

ஏப்ரல், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Greatness of Lakshmi Puja

படம்
புராணங்களின்  சில கதைகள் லஷ்மி விரத மகிமை சாந்திப்பிரியா  இது பத்மபுராணத்தில் காணப்படும் ஒரு கதை. இந்தக் கதையையும் சூதக முனிவரே நைமிஷாரண்யா வனத்தில் இருந்த முனிவர்களுக்குக் கூறினார். துவாபர யுகத்தில் சௌராஷ்டிரத்தை ஆண்டு வந்த ஒரு மன்னனின் பெயர் பத்ராஸ்வரஸ். அவனுக்கு சூரத்சந்தரிகா எனும் மனைவி இருந்தாள். அவள் மூலம் அந்த மன்னனுக்கு ஏழு மகன்களும், ஒரு பெண்ணும் பிறந்து இருந்தார்கள். அந்த மகளின் பெயர் ஸ்யாமபாலா என்பது. இளம் கன்னியான அவள் நல்ல பண்புகளைக் கொண்டவள். அவள் தனது தோழிகளுடன் நந்தவனத்தில் விளையாடிக் கொண்டு இருப்பாள். அப்படி அவள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ஒருநாள் அரண்மனை வாயிலில் ஒரு வயதான கிழவி வந்து நிற்பதைப் பார்த்து அவள் அருகில் சென்று அவள் எதற்காக வந்துள்ளாள் என்பதைப் பார்க்கலானாள். ஒரு மூதாட்டி உருவில் வந்து இருந்தது லஷ்மி தேவியே. அதை யாரும் அறிந்து கொள்ள முடியவில்லை. அரண்மனைக் காவலன் வந்திருந்த கிழவியை நோக்கி 'நீ யார், எதற்காக இங்கு வந்துள்ளாய்?' என்று கேட்டான். வந்த கிழவியோ தான் அரண்மனையில் உள்ள அரசியைக் காண வந்துள்ளதாகக் கூறினாள்...

Stories of Rishies and Saints

படம்
  ரிஷி முனிவர்களின்   சில கதைகள் சாந்திப்பிரியா  உத்தர பாரதத்தில் பாடலிபுத்திரம் எனும் நகரில் முன்னொரு காலத்தில் வித்யாசாகரா என்ற ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களை நன்கு கற்றறிய ஆவல் கொண்டார். ஆகவே அவர் நல்ல ஒரு குருவை தேடி அலைந்தார். பாடலிபுத்திரத்தில் அவர் மனதுக்கு ஏற்ற குரு எவருமே கிடைக்கவில்லை. இடம் இடமாக  தேடி அலைந்து விட்டு தனக்கு ஏற்ற குரு கிடைக்காததினால் மனம் வருந்தி களைப்படைந்தவர் விந்திய மலைசாரல் அருகில் சென்று ஒரு ஓடையில் குளித்து விட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு பெரிய புளிய மரத்தடியில் சென்று உறங்கலானார். அந்த மரத்தின் மீது ஒரு பிரும்ம ராக்ஷசன் வாழ்ந்து வந்தது. ஒரு மனிதன் அந்த மரத்தின் அடியில் உறங்குவதைக் கண்ட அந்த பிரும்ம ராக்ஷஷன், அவரை உண்ணுவதற்காக கீழே இறங்கி  வந்ததும்  வித்யாசாகராவின் மார்பில் பூணூல் இருப்பதைக் கண்டது.  ''ஓஹோ..இவர் ஒரு பிராமணர் போல உள்ளதே. இவரை சாப்பிட முடியாது''  என எண்ணிய பிரும்ம ராக்ஷசன் தூங்கிக் கொண்டு இருந்தவரை எ...

Vallakkoattai Murugan Temple

படம்
வல்லக்கோட்டை  முருகன் ஆலயம்  சாந்திப்பிரியா (Part of the temple story has been  adapted from the Tamil translated version   Vallakkottai Murukan Temple by Giridharilal Moorchand ) சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் வல்லக் கோட்டை முருகன் ஆலயம். இந்த ஆலயத்தைக் கட்டியவர் பகீரதன் என்று நம்புகிறார்கள். அந்த ஆலயத்தை ஒட்டி ஒரு குளமும் உள்ளது. அதை இழந்ததை மீட்டுத் தரும் குளம் என்கிறார்கள். அதாவது தொடர்ந்து ஏதாவது ஒரு கிழமையிலேயே ஏழு வாரங்கள் அதில் குளித்து விட்டு அங்குள்ள முருகனை வேண்டித் துதித்தால் இழந்து போன பொருட்கள், நிலபுலங்கள், பெருமை போன்ற அனைத்துமே மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதற்க்கான காரணத்தை கீழே தரப்பட்டு உள்ள ஆலய வரலாற்றில் படியுங்கள். இந்த ஆலயத்தில் கம்பீரமான தோற்றத்தில் முருகப் பெருமான் தனது மனைவிகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி தருகிறார். இந்த ஆலயம் சென்னையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சீபுரத்தின் அருகில் உள்ளது. வல்லகோட்டை என்ற இடம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது. வல்லக் கோட...

Siruvapuri Murugan Temple

படம்
சிறுவாபுரி முருகன் ஆலயம் சாந்திப்பிரியா  ''முருகப் பெருமான் வள்ளி தேவியை திருமணம் செய்து கொண்டப் பின் தம் மனைவியுடன் கிளம்பி தம்முடைய இடத்துக்குச் செல்லத் துவங்கினார். முருகப் பெருமானுக்கு எப்போதுமே சோலைகள் மிகுந்த இடம் மனதுக்கு பிடித்த இடமாக இருக்கும். அவர்  சென்று கொண்டு இருந்த நேரத்தில்  ராமாயண யுத்தம் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய ராமபிரானைப் பிரிந்து சீதையானவள் ஒரு வனப்பகுதியில் தனது இரண்டு குழந்தைகளான லவ-குசாவுடன் தங்கி இருந்தாள். அந்த நேரத்தில்தான் பாலக் குமாரராக இருந்த முருகப் பெருமானும் தனது மனைவியான வள்ளியுடன் அதே வனப் பகுதிக்கு வந்து தங்கி இருந்தார். அந்த இடமே சிறுவாபுரி என்பது. ஒருவகையில் பார்த்தால் வள்ளி தேவியும் மகாவிஷ்ணுவின் இரண்டாவது மகள் ஆனவள். அவள் முருகப் பெருமானை மணப்பதற்காக ஒரு வேடனின் மகளாகப் பிறந்து அவரை மணந்து கொண்டவள். ஆகவே முருகனுடன் தனது இளைய மகளான வள்ளி  புகுந்த வீட்டிற்குச் செல்வதைக் காண விரும்பிய மகாவிஷ்ணுவும் அதே இடத்துக்கு வந்திருந்தார். அது போலவேதான் சிவபெருமானும் திருமணம் ஆனப் பின் தம் வீட்டிற்குச் சென்று கொண்ட...

Thandikudi Murugan Temple

படம்
தாண்டிக் குடி முருகன் ஆலயம், திண்டுக்கல் மாவட்டம் சாந்திப்பிரியா தமிழ் நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது தாண்டிக் குடி என்ற மலைப் பகுதி. அந்த மலையை ஜோதி மலை என்கிறார்கள். தேனியின் தாமரைக் குளம் அல்லது ஊட்டி-கொடைக்கானல் எனப்படும் ஊரில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முருகப் பெருமானின் தாண்டிக் குடி ஆலயம் . இல்லை என்றால் திண்டுக்கல் நகரை அடைந்து அங்கிருந்து திண்டுக்கல் பெரியகுளம் சாலையில் அமைந்து உள்ள வத்தலக் குண்டு என்ற ஊரில் இருந்தும் செல்ல முடியும். அங்கிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். மலை மீது உள்ள இந்த ஆலயத்துக்குச் செல்ல நல்ல சாலை வசதி இல்லை என்பதினால் ஜீப் அல்லது பிற வாகனங்களில் இருந்தே அங்கு செல்ல முடியும்.    அகஸ்தியரின் பிரும்ம தண்டத்தில் அஷ்ட நாகங்களினால்  கட்டப்பட்ட மலைகலை சுமந்தபடி இடும்பன் சென்றான் முருகப் பெருமான் சூரபத்மனுடன் சண்டைப் போட்டு அவனை வதம் செய்தப் பின் அவனது படையினரையும் அழித்தார். ஆனால் அதில் இடும்பன் மட்டும் தப்பி உயிர் பிழைத்து அகஸ்தியரின் சிஷ்யனாகி விட்டான். ஒருமுறை கைலாயம...

Lord Muruga's Sister Jothi

படம்
ஸ்வரூப  வேல் ஸ்கந்தனின் சகோதரியான ஜோதி (Read Original Article in English in :- Swarupa Vel - Skantha 's Sister Jothi - By Dr. Alagappa Alagappan ) Translated Into Tamil by :- சாந்திப்பிரியா )   ஜோதி சிவபெருமானின் குடும்பத்தை சேர்ந்தவள். சிவன்-பார்வதிக்கு விநாயகர் மற்றும் முருகன் எப்படிப் பிறந்தார்களோ அப்படித்தான் சிவன்-பார்வதி உறவில் வெளிவந்தவளும் ஜோதி என்பவள். சிவன் பார்வதி உறவினால் எழுந்த ஒளியின் ஒரு பக்கத்தில் இருந்து முருகனும், இன்னொரு பக்கத்தில் இருந்து ஜோதியும் வெளி வந்தார்கள். அதனால்தான் ஜோதியை முருகனின் சகோதரி என்கிறார்கள். ஒருவருடைய உடலே ஆலயம் போன்றது. அந்த உடலின் வலது மற்றும் இடதுபுற நாசித் துவாரங்களே சிவன் மற்றும் பார்வதி ஆவார்கள். விநாயகப் பெருமானோ முதுகுத் தண்டின் அடியில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார். அங்கிருந்துதான் குண்டலினி சக்தி வெளிப்படுகின்றது. அந்த சக்தி ஐந்து சக்கரங்களான அல்லது முருகனின் ஆறு யுத்த வீடுகளான மூலாதாரா, மணிபுரா, அனஹதா, ஸ்வாதிஷ்டானா, விசூதி போன்றவற்றைக் கடந்து மேலே எழும்பி வந்து நெற்றிப் பொட்டில் உள்ள அஜ்...

Two temples

படம்
ஸ்ரீ மகாலட்சுமி பத்மாவதி   ஸ்ரீனிவாசஸ்வாமி ஆலயம்    தேவாரகரே லேஅவுட்  ,   ISRO  லேஅவுட் ,  வசந்தபுரா, பெங்களூரு- 78 ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி, ஸ்ரீ முத்து மாரியம்மா,  ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி, ஸ்ரீ பாவனே ஸ் வரி,  ஸ்ரீ நீதி தேவதே ஆலயம்    உத்தரஹள்ளி ,   பெங்களூரு 

Palani Murugan - Some unknown facts

படம்
பழனி ஆண்டவர் சிலை விஞ்ஞான சோதனை (Read Original Article in English in :-    Palani Icon A Scientific Analysis - M.S. Saravanan ) ( Translated Into Tamil by :- சாந்திப்பிரியா  ) தண்டாயுதபாணியின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி பேதம் இன்றி பல்வேறு பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகிறார்கள் . பழனியின் பெருமையைக் குறித்து மெத்தப் பாண்டித்தம் பெற்ற ஒருவர் கூறினார் 'அபரீதமான பழங்காலத்துப் பொருட்கள், பழக்க வழக்கங்கள், சரித்திரம் , புராணக் கதைகள், வீர காவியங்கள் , மாபெரும் முனிவரின் கதைகள், இலக்கியங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு உள்ள இடமே பழனி மலை'. தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 அடி உயரத்தில் உள்ள  பெருமை மிக்க இடமான சிவகிரி மலையில் தண்டாயுதபாணி பழனி ஆண்டாவராக வீற்று உள்ளார்.  புராதான காலத்தின் துவக்கம் முதலே சித்தர்களும், முனிவர்களும் பழனி மலையில் தவம் இருந்ததினால் அந்த இடம் இன்னும் அதிகப் புனிதத் தன்மையை அடைந்தது.  பல மன்னர்களும் கொடையாளி...

Sree Seetha kalyaanap paththirigai- Ammankudi aalayam

படம்
அம்மன்குடி ஸ்ரீ லஷ்மி நாராயணாப் பெருமாள் சன்னதியில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் ஸ்ரீ ராமநவமி-- ஸ்ரீ சீதா கல்யாணம்  சாந்திப்பிரியா இன்றைக்கு எனக்கு கும்பகோணம் வட்டம் அம்மன்குடி ஸ்ரீ லஷ்மி நாராயணாப் பெருமாள் சன்னதியில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் ஸ்ரீ ராமநவமி-- ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்சவப் பத்திரிகை வந்துள்ளது. பல பக்தர்களுக்கு இந்த விவரம் கிடைக்காது என்பதினால் இதனை  அனைவரும் தெரிந்து கொண்டு இந்த புண்ணிய விழாவில்  பங்கேற்கலாம் என்பதற்காக  எனக்கு வந்த பத்திரிகையை அப்படியே வெளியிட்டு உள்ளேன். இதை ஒரு  தெய்வ சேவையாகவே கருதி இந்த   புண்ணியக் காரியத்திற்காக என்னால் ஆன இந்த சிறிய சேவையை செய்ய நினைத்து மஹோத்சவப் பத்திரிகையை அப்படியே வெளியிட்டு உள்ளேன்.  மற்றபடி இந்தப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டு உள்ள விவரங்களுக்கோ அல்லது  காணிக்கைகளுக்கோ நான் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்கவில்லை. இதை நான் வெளியிட்டு உள்ளது  தெய்வ சேவை எனக் கருதிதான்.  மற்றபடி அது விளம்பர அல்லது வியாபார நோக்கத்திற்காக செய்யப்பட்டது அ...

Unforgettable incident

படம்
மறக்க முடியாத சில  விசித்திர அனுபவங்கள்  ( உண்மை சம்பவம் )   சாந்திப்பிரியா அது 2003 அல்லது 2004 ஆம் வருடம் இருக்கும் என்று நினைக்கின்றேன். நாங்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்த தேவாஸ் எனும் இடத்தில் இருந்தோம் ( இந்தூர் மற்றும் போபாலுக்கு இடையிலான ஊர் ) . நான் அரசாங்கப் பணியில் இருந்ததினால் நாங்கள் அலுவலகத்தின் காலனியில்  தனி பங்களாவில் வீடு இருந்தது. வீடு  ஒதுக்குப் புறமாக இருந்ததினால் பக்கத்தில் பள்ளிக்கூடமும்  அதன் பெரிய விளையாட்டு மைதானமும் இருந்தது.  ரம்யமான சூழ்நிலை. அந்த வீட்டை இன்றும் மறக்கவே முடியாத  இயற்கை காட்சி. எங்கள்  பங்களாவை சுற்றி  நான்கு பக்கமும் பெரிய தோட்டம். பெரிய பெரிய கொய்யா, மாமரம், சபோடா என பலப் பழங்கள் மற்றும் பூத்துக் குலுங்கும் பலவிதமான  மலர் செடிகள்  என இருந்தன. அவற்றைத் தவிர நிறைய காய் கறிகள் மற்றும் சோளமும் போட்டு இருந்தோம்.  அவ்வப்போது சிறுவர்கள் வந்து  வேலிகள் மீது ஏறி பழங்களைப் பறிக்க முயலுவார்கள். அவர்கள் தொந்தரவு போதாது என்று  மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமு...