Deva Kumari- Divine Manifestation

நேபாள நாட்டின் பெண் தெய்வம் சாந்திப்பிரியா ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறை உள்ளது. அதில் நமது அண்டை நாடான நேபால் நாடும் விதி விலக்கு அல்ல. நேபாளத்தில் நிறைய தெய்வங்கள், தேவதைகள், போதிசத்துவ பிறவிகள் என பலரும் வழிபடப்படுகிறார்கள். அங்குள்ள ஒரு வழிபாட்டில் ஒரு தேர்தெடுக்கப்பட்ட கன்னிப் பெண்ணை , தேவகுமாரி என்றப பெயரில் அவதார தெய்வமாக வழிபடுவதும் ஒன்று. அந்தக் கன்னிப் பெண்கள் துர்கையின் அவதாரம் எனப்படும் தலிஜூ பவானி எனும் தேவியின் அவதாரமாக கருதப்படுகிறார்கள். தலிஜூ பவானி என்பவளின் ஆலயம் காட்மாண்டுவில் உள்ளது. அந்த ஆலயம் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப் படுகின்றது. தலிஜூ பவானி தந்திர மந்திர சக்திகளைக் கொண்ட தேவி என்றும் அவள் தனது ஆலயம் உள்ள காட்மாண்டு பள்ளத்தாக்கை பாதுகாக்க தனது சக்திகளைக் கொண்ட ஒன்பது அவதாரங்களை படைத்து இருக்கின்றாள் என்றும் நம்புகிறார்கள். அந்த தலிஜூ பவானியின் அவதாரமாகவே ஒரு கன்னிப் பெண் நேபாலில் உருவாக்கப்பட்டு வணங்கப்படுகின்றாள். அவளை எதற்காக உருவாக்குகிறார்கள்? அதற்கு ஒரு கதை உள்ளது. தலிஜூ ஆலயம்...