Meru Narasimmar

ஸ்ரீ ஹரி வைகுண்ட ஷேத்திர ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் சமேத ஸ்ரீ ஆஞ்சநேய ஆலயம் சாந்திப்பிரியா நான் சமீபத்தில் பெங்களுர் ரூபன் அக்ரஹாரம் எனும் இடத்தில் இருந்த நரசிம்மர் ஆலயத்துக்கு சென்றேன். ஆலயம் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது. அதைப் பார்த்தபோதே அது மிகவும் புராதான ஆலயமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிந்தது. ஆலயத்தில் நுழைந்ததுமே மிகப் பெரிய அரச மரத்தின் அடியில் இருந்த நாக தேவதைகளும், ஒரு சக்தி தேவியின் சிலையும் அதை உறுதிப்படுத்தியது. தூண் ஆஞ்சநேயர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்குள்ள ஒரு பெரிய ஸ்தம்பத்தில் ஹனுமார் சிலை இருந்தது. அதுவும், நாக தேவதைகளும் அங்கிருந்த மக்களினால் வழிபடப்பட்டு வந்துள்ளன. அதுவே அங்கு இருந்த கிராமத்தின் ஆலயமாக இருந்துள்ளது. ஆனால் இன்று அந்த ஆலயம் ஸ்ரீ ஹரி வைகுண்ட ஷேத்திர ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் சமேத ஸ்ரீ ஆஞ்சநேய சன்னதி ஆலயமாகி உள்ளது. ஆலயம் பிரதான சாலையை விட்டு சற்று சற்று உள்ளே அமைந்து உள்ளதினால் பலருக்கும் தெரியவில்லை. மேரு நரசிம்மரின் இரண்டு தோற்றங்கள் இந்த ஆலய...